முகப்பு

mercredi 15 février 2012

வார்த்தைகளால் சமாதானத்தையும் உருவாக்கவும் முடியும்

அன்பான வார்த்தைகள்
தன்னம்பிக்கையை கொடுக்கும்,
அறுதலான வார்த்தைகளால்
தற்கொலையையும் தவிர்க்கலாம்.
 இனிமையான வார்த்தைகள்
நற்சூழலை வளர்க்கும்,
எழுச்சியான வார்த்தைகள்
வெற்றியைத் தரும்.
ஊக்கமான வார்த்தைகள்
சோகத்தை விரட்டும்.
கனிவான வார்த்தைகள்
உயிரையே காப்பாற்றும்.
காலமறிந்து சொன்ன வார்த்தைகள்
கஷ்டத்தைத் தவிர்க்கும்.
தன்னம்பிக்கை வார்த்தைகள்
மனச்சோர்வை விரட்டும்.
தன்மையான வார்த்தைகள்
மனச்சலிப்பை நீக்கும்.
 நகைச்சுவையான வார்த்தைகள்
இறுக்கத்தை; தளர்த்தும்.
ஒரு யுத்தத்தை வார்த்தைகளால்
தொடங்க முடியும். அதுபோல வார்த்தைகளால்
சமாதானத்தையும் உருவாக்கவும் முடியும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire