முகப்பு

vendredi 30 mai 2014

சிந்தனைக்கு..!!!



சிந்தனைக்கு..!!! 

மேல் சாதி மனிதன்
கையை அறுக்கும்போது இரத்தம்
சிவப்பாகவும்...
தாழ்த்தப்பட்ட சாதி மனிதன் 
என்று சிலர் குறிப்பிடும் மனிதன் 
கையை அறுக்கும்போது இரத்தம்
கருப்பாகவும்....
வந்தால் நான் நம்புகிறேன்
சாதி உள்ளது என்று.....

மாற்றுத்திறனாளி



கண் தெரியாதவர் - நான் தோற்றத்தை பார்த்து ஏமாந்தது கிடையாது..

காது கேளாதவர் - நான் ஒட்டு கேட்டதே கிடையாது...

வாய் பேசாதவர் - நான் பொய் பேசியதே கிடையாது..

குள்ளமானவர் - நான் யார் முன்னும் தலை குனித்து நின்றது கிடையாது..

கை இல்லாதவர் - நான் யார் குறையையும் பார்த்து கை கொட்டி சிரித்தது கிடையாது..

கால் இல்லாதவர் - நான் காசு பணம் வந்ததும் கால் மேல் கால் போடுவது இல்லை...

அதனால் தான் எங்களை மாற்றுத்திறனாளி என்கிறார்கள்..
நீயோ ஊனம் என்கிறாய்

நம்புவதில்லை."



குழந்தை வெகுளித்தனமாக 
தன் தாயை கேட்டது, 

"அம்மா! நம் வீட்டு வேலைக்காரியிடம்
உன்னுடைய பர்ஸையும்,
நகைகளையும் கொஞ்ச நேரம்
குடுத்து பார்த்துக்கொள்ள சொல்வாயா?"

அம்மா : "அதெப்படி முடியும்...?
அவளை நான் நம்புவதில்லை."

குழந்தை : "அப்பறம் ஏன் என்னை
மட்டும் அவளிடம் விட்டு செல்கிறாய்...?"

கண்ணீரால் நனைக்காதே.........



வாழ்க்கை புத்தகத்தில் 
முதல் பக்கம் "கருவறை" 
கடைசி பக்கம் "கல்லறை" 
இடையில் உள்ள பக்கங்களை 
புன்னகையால் எழுது.
இடையில் உள்ள பக்கங்களை 
புன்னகையால் எழுது.

கண்ணீரால் நனைக்காதே.........

உண்மை



பொய் சொல்லி தான் தப்பிக்க வேண்டும்
என்றால் , பொய் சொல் !

ஆனால்!
உண்மை சொல்லி மாட்டிக்க வேண்டும் என்றால்
உண்மையை சொல்லி மாட்டி கொள்!

பொய் உன்னை வாழ வைத்து சாகடிக்கும்!
உண்மை உன்னை சாகடித்து வாழ வைக்கும் !

திருமணப் பொருத்தம்



திருமணப் பொருத்தம்

இன்று திருமணம் என்ற உடன் பல இடங்களில் பொருத்தம் பார்ப்பது மிக அவசியம் என்று ஆகிவிட்டது அப்படி இருக்க என் சாதம் தோஷம் அவர் ஜாதகம் தோஷம் இல்லை எப்படி திருமணம் செய்வது என்று அனைவரும் குழம்பி கொண்டு வாழ்கிறார்கள் ஆனால் உண்மையில் பொருத்தம் என்பது அந்த காலத்தில் இல்லவே இல்லை இன்றுதான் இப்படி பத்து பொருத்தம் வேண்டும் பத்தில் ஆறு இருந்தால் பொருந்தும் என்று சொல்கிறார்கள் இதில் மிக முக்கியமாய் இரண்டு பொருத்தம் வேண்டும் அது மாங்கல்யம் அல்லது யோனி இந்த பொருத்தம் இல்லை என்றால் திருமணம் பண்ண கூடாது அது சரி இல்லாதவர்கள் வாழ்வில் இனிக்கத்தான் செய்கிறார்கள்

ஒருவருடைய ஜாதகத்தில் இயற்க்கையாக திருமண தோஷம் இருப்பின் அவர்கள் என்னதான் பொருத்தம் பார்த்து ச்திருமணம் செய்தாலும் அத்திருமணம் தோற்றுத்தான் போகும் அப்படி இருக்கையில் இந்த பொருத்தம் எப்படி  பொருந்தும் யோசிக்கவேண்டிய விசியமே ஆம் அப்படி பொருத்தம் இல்லாமல் எப்படி அந்த காலத்தில் ஜாதகத்தை இணைத்து இருப்பார்கள் ஆமா நாம் பொருத்தம் பார்க்கிறோம் என்று மற்றவர் போல இல்லாமல் அவருகளுடைய ஜாதகத்தில் ப்ராப்தம் என்னும் பொருத்தம் அமைய வேண்டும் ஆம் அப்போருதம் இல்லையேல் திருமண நிகழ்வே நடக்காது ஒருவருடன்

ப்ராப்தம் என்பது இறைவன் வகுத்த ஒன்று அதை யாராலும் தடுக்க முடியாது பிரிக்க முடியாது ஆம் ஒரு பெண் ஜாதகத்தில் லகனத்தின் அதிபதி மற்றும் அவற்றின் சாரம் கொண்ட கிரகமும் இராசியின் அதிபதி அந்த கிரகத்தின் சாரம் அமைப்பை கொண்ட கிரகமும் ஆண் ஜாதகத்தில் லக்னாதிபதியின் அமைப்பை அல்லது அந்த ஜாதகரின் தசா புத்திகளின் அமைப்பை பெற்று இருக்க வேண்டும் அல்லது ராசிநாதனின் தொடபுகளை பெற்று வலுவாக அமர்ந்து இருந்தால் அவர்கள் மனமொத்த தம்பதியினர் அதனால் இன்று அவ்வாறு பொருத்தம் பார்ப்பது இல்லை காரணம் இன்றைய சோதிடர்களுக்கு வருமானம் இல்லாமல் போய்விடும் என்று கூட இருக்கலாம்

ஆம் ஒரு பெண் ஜாகத்தின் அமைப்பை நன்றாக ஆராய வேண்டும் அந்த பெண் அமைப்பு என்றும் கெட கூடாது அப்படி கேட்டு இருந்தால் இந்த ஆணின் அமைப்பும் கேட்டு விடும் அதாவது சக்தி இல்லையேல் அதனுள் சிவமும் இல்லாமல் போகும் ஒரு பெண்ணின் அமைப்பு அந்த சாதகரை திருமணம் செய்தால்அந்த குடும்பம் விருத்தி அடையும் அமைப்பு இருக்கவேண்டும் இல்லாத யோகத்தை கூட ஒரு சக்தி என்னும் பெண் வந்தால் தானாக வந்து விடும் அந்த சக்தியை தேர்ந்து எடுப்பதில் மிகுந்த கவனம் வேண்டும்

பெண் என்பவர் மண்ணுடன் ஒப்பிடுவார்கள் ஆண் என்பவர் விதையுடன் ஒப்பிடுவார்கள் மண்ணில் எந்த விதை வேண்டுமானாலும் விதைக்க முடியும் ஆனால் விதை நன்றாக அமைய வேண்டுமே அப்படி ஆணின் பங்கும் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது அவ்வாறு பெண் என்னும் மண் அமைப்பை பெற்று இருப்பதால் அவர்கள் எவ்வித விதை விதைத்தாலும் அந்த விதை நன்றாக வளர அந்த மண்ணின் அமைப்பும் கேட்டு இருக்க கூடாது இப்படி காரகதுவதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் ஏனோ தானோ என்று திருமணம் செய்தாலோ நான் பத்துக்கு பத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்தேன் என்றாலும் பின்பு இல்லற வாழ்க்கை வினாகி போகும்

திருமணத்தில் முக்கியமாக காதல் திருமணம் இன்று சில காதல் மற்றும் திருமணம் பணம் வசதி மற்றும் வேலை படிப்பு இப்படியே தகுதிகள் அடிப்படையிலே அமைகிறது அப்படி அமைகிற திருமணம் எவ்விதத்திலும் மனோ திருப்தியை தராது அதனால் துக்கமும் தவறுகள் அதிகம் நடக்க வாய்ப்புக உண்டாகும் மனமொத்த தம்பதி இல்லாத சூழ்நிலையில் வேற்று ஒருவரை தேர்ந்து எடுத்து மறைமுக வாழ்கையை நடத்த வேண்டி வந்து விடும் அவ்வாறான பொருள் பணம் வீடு வசதியை பார்த்து திருமணமும் இக்கட்டான சூழ்நிலையில் நம்மை நிறுத்தி விடும் என்பது பலரும் அனுபவித்த உண்மையே

ஆம் ஒரு திருமணம் வைபோகம் என்பது இன்று காதல் திருமணம் என்றால் கூட அங்கும் பொருத்தம் என்கிற சாதகத்தை தூக்கி கொண்டு அலைகிறார்கள் அப்படி பொருத்தம் பார்க்க முனைந்து விட்டல் அந்த காதல் அமைப்பு துண்டித்து விடுகிறது அதனால் அங்கு காதல் திருமணம் என்னும் நிலை மாறி விடுகிறது அதலால் காதலரை தேர்ந்து எடுக்கும் முன்பே பொருத்தம் பார்த்து காதலிப்பதும் எவ்விதத்திலும் சாத்தியம் ஆகாது அதனால் அவரவர் அமைப்பை அறிந்து கொண்டு அதன் சூச்சமா அமைப்பின் படி நடத்தி கொள்வதே சாத்தியம் இல்லையென்றாலும் அந்த திருமணத்தால் பதிப்பே வரும்

சாதக பொருத்தம் சரியாக இந்த ஜாதகத்தோடு பொருந்தி வரவேண்டும் என்று பார்த்தல் எப்படி முடியும் ஒரே அமைப்பு உடைய ஒருவருடைய சாதகம் போல இன்னொருவர் சாதகம் இருக்காது ஒவ்வொருவருடைய பிறப்பும் ஒவ்வோரு நோக்கத்திற்காக அமைக்க பட்ட ஒன்று ஒவ்வொரு ஆன்மாவும் வெவ்வேறு செயலுக்க படைக்க பட்ட ஒன்று அப்படி இருக்கையில் எப்படி ஒரே அமைப்பு உடைய ஜாதகம் அமையும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம் தோஷ அமைப்பு என்பது மட்டும் அல்லாமால் ப்ராப்தம் என்னும் அமைப்பையும் சரி வர  ஆராய்ந்து அந்த கிரக சாராம்சம் சரி வர பொருந்தி அமைந்தால் அந்த சாதகர் இல்லறத்தில் நல்லறம் காண்பார்கள்

உறவில் விரிசல்



உறவுகளிடம் பேசும் போது கண்களில் அன்பை காட்டுங்கள். அவ்வப்போது மன்னிப்பையும், நன்றியையும் சிறு வார்த்தைகளால் சொல்லி பாருங்கள் உறவில் விரிசல் ஏற்படாது.

மன்னிப்பு



எந்தத் தவறுக்காகவும் எவரையும் ஒருமுறை மன்னித்துப் பாருங்கள். மன்னிப்பு என்பது அன்பைத் திறந்து வைக்கிற சாவி. மன்னிப்பு என்பது மற்றவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் தேவைப்படுவது. மற்றவை மன்னிப்பது போலவே உங்களையும் நீங்கள் மன்னித்துக் கொள்ள முடியும். இது உங்கள் உடலுக்குக் கேடு தரும் எல்லா உணர்வுகளுக்கும் எதிரி.

இருக்கத்தான் செய்யும்.



ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும், ஓராயிரம் தோல்விகள், இழப்புகள், அவமானங்கள்,ஏமாற்றங்கள் இருக்கத்தான் செய்யும்.

போடுபவன்,



வேலையை ஒத்தி போடுபவன் வெற்றியை ஒத்திப் போடுகிறான்; விதைப்பதை ஒத்தி போடுபவன், விளைச்சலை ஒத்திப் போடுகிறான்.

கிழவர் சொன்னார்,



வீட்டை அழகாக வைத்திருக்க விரும்பிய ஒருவர் நிறைய செடிகொடிகளை நட்டு வைத்தார். உரமிட்டார். நீர் பாய்ச்சினார். 

செடிகள் பெரிதாக வளரவில்லை. பக்கத்தில் ஒரு பூங்காவைப் பராமரிக்கும் கிழவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். இரண்டே மாதங்களில் செடி கொடிகள் செழித்து தழைத்து வளரத் தொடங்கின.

வீட்டின் உரிமையாளருக்கு வியப்பு.

அதே தண்ணீர். அதே உரம்.
அதே இடம். இது எப்படி சாத்தியம்? கிழவர் சொன்னார்,

“அய்யா! நீங்கள் அலுவலகத்திற்குப் போகும் அவசரத்தில் நீர்பாய்ச்சுகிறீர்கள். நான், குழந்தைக்கு உணவு தரும் அன்னையின் மனநிலையில் இருந்து நீர்பாய்ச்சுகிறேன்” என்று.

சிவ பூஜையில் கரடி என்றால் என்ன?


சிவ பூஜையில் கரடி என்றால் என்ன?

பூஜை செய்யும்போது தடங்கல் வந்தால், சிவ பூஜையில் கரடி வந்த மாதிரி என்று சொல்வார்கள். இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது. கரடி என்பது ஒரு வகை வாத்தியம். முற்காலத்தில் மன்னர்கள் சிவபூஜை செய்யும் போது, கரடி வாத்தியம் வாசிக்கச் செய்வர். இதைத்தான், சிவபூஜையில் கரடி என்பர். ஆனால், பிற்காலத்தில் இதுவே பூஜைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறி விட்டது.

தேடித்தரும்



தன்னம்பிக்கையும் விடா முயர்ச்சியும் ஒருவனுக்கு வெற்றியை தேடித்தரும்.

நண்பர்கள்



நண்பர்களிடம் பாராட்டுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த உலகில் நண்பர்கள் இல்லை என்றால் ஊக்கம் இழந்து பூமியும் தான் சுற்றுவதை என்றோ நிறுத்தியிருக்கும்.

mardi 27 mai 2014


அன்பு


"அம்மா"


வீரன் ஒரு தடவை மட்டுமே இறக்கிறான்.



கோழைகள் மரணத்திற்கு முன் பல தடவைகள் இறக்கிறார்கள், வீரன் ஒரு தடவை மட்டுமே இறக்கிறான்.

குறையற்ற முழுமையான அன்பு அச்சத்தை வெளியே தள்ளுகிறது.

பகவத் கீதை சொல்கிறது : உன்னாலேயே உன்னை உயர்வாக்கிக்கொள்ள முடியும், உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே.. ஏனெனில் நீதான் உனது சொந்த நண்பன், அதுபோல நீயே உனது விரோதி.

கன்பூசியஸ் சொன்னார் : தன்னால் செய்யக்கூடிய மிகமிகச் சிறந்த போதனை எதுவென்றால்… ” உங்களது எண்ணங்களில் தீமை இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் ” என் றபோதனையாகவே இருக்குமென்றார்.

அழுத்தத்தை



இருப்பதை இழந்துவிடுவோமோ என்ற அச்சமும், எதிர்பார்த்ததை அடையமாட்டோமோ என்ற அச்சமுமே மனிதனை வாட்டாமல் வாட்டி அழுத்தத்தைக் கொடுக்கிறது.

mercredi 14 mai 2014

வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பது எப்படி ?



வாய் துர் நாற்றம் , வாயில் குடியிருக்கும் (Anaerobic gram negative bacteria) நுண் கிருமிகள் பிராணவாயு இல்லாத சூழ் நிலையிலும் பெருகும். நுண்கிருமிகள் வெளியேற்றும் கழிவுகளால் துர் நாற்றம் உண்டாகிறது.
சாதாரணமாக வாயிலுள்ள நுண்கிருமிகளால் வெளியேறும் கழிவுகளில் ஆவியாகக் கூடிய கந்தக (Sulfur) கூட்டுப் பொருட்கள் உள்ளன. அழுகிய முட்டையிலிருந்து வெளியேறும் Hydrogen sulfide, குப்பைக் கிடன்கிலிருந்து வரும் Methyl mercaptan, கடல் புறங்களிலிருந்து வெளியாகும் Dimethyl sulfide ஆகிய கழிவுகள் வாயிலுள்ள நுண் கிருமிகளிலிருந்து வெளியேறுகின்றன. இவைகள் Volatile Sulfur Compound (VSC) என்றழைக்கபடுகின்றன.
வாயிலிருக்கும் நுண்கிருமிகளால் வெளியேறும் இன்னும் வேறு பல கழிவுகளும் துர் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
Cadaverine – இறந்த உடலிலிருந்து வெளியேறும் நாற்றம்,
Putrescine – அழுகும் இறைச்சியிலிருந்து ஏற்படும் நாற்றம்.
Skatole – மனிதக் கழிவிலிருந்து ஏற்படும் நாற்றம்.
Isovaleric acid – வியர்க்கும் பாதத்திலிருந்து ஏற்படும் நாற்றம்.
கிருமிகள் பெருகுவதற்கு தேவையான உணவு நாம் உண்ணும் மீன், இறைச்சி, முட்டை, பால் போன்ற புரத உணவிலிருந்தும், உமிழ் நீர், வாயின் உட்புறத்தில் கழியும் திசுக்களிலிருந்தும் கிடைக்கிறது. வாயை, சாப்பிட்ட ஒவ்வொரு முறையும் நன்றாக கொப்பளிக்காததால் உணவுப் பொருட்கள் வெண்மையான காரையாக பற்களின் இடுக்குகளில், பற்களின் மேல், ஈறுகளுக்கு உட்புறம் மற்றும் நாக்கின் பிற்பகுதியில் மாவு போன்ற வெண் படலமாக படிந்து விடுகிறது. வெண்படிமம் 0.1 – 0.2 மி.மீ அளவில் இருந்தாலும் கிருமிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் பெருகி கழிவுகளை வெளியேற்றுகின்றன.
பற்கள் கட்டியிருந்தால், அதற்கும், வாய்க்கு இடையிலும் உணவுப் பொருட்கள் தங்கி கிருமிகள் வளர ஏதுவாகிறது. வாயிலும், நாக்கிலும், பற்களின் இடுக்குகளிலும் உள்ள இடத்தில் குடியேறி கழிவுகளை வெளியேற்றும் கிருமிகளுக்கும், பிற கிருமிகளுக்கும் நிரந்தர போட்டி நடந்து கொண்டேயிருக்கிறது. இக்கிருமிகளும், அதன் கழிவுகளும் எல்லோரின் வாயிலும் இருக்கின்றன. வாயையும், பற்களையும் சுத்தமாக வைத்திருப்பவர்கள் பலருக்கு நாற்றம் இல்லாமல் இருக்கிறது. வாயையும், பற்களையும் சரியாக பராமரிக்காதவர்களுக்கு நாற்றம் மிகுந்து இருக்கிறது.
அடுத்து, வாயின் உட்பகுதியில் ஈறு நோய் (Gum disease – Chronic Periodontitis) பாதிப்புள்ளவர்களுக்கும் வாயில் துர் நாற்றம் ஏற்படலாம். குறிப்பாக நாக்கின் பின் புறத்திற்கு அருகிலுள்ள பற்கள் மற்றும் ஈற்றின் இடைவெளிகளில் உணவுப் பொருட்களின் படிமம் தேங்குகிறது. இந்த இடங்களிலும் நுண் கிருமிகள் தங்கி பற்களைச் சுற்றியுள்ள எலும்புப் பகுதியை அரித்து, பற்களில் குழியை (Periodontal pockets) ஏற்படுத்துகிறது. இந்த குழிகளிலும் மேலும் உணவுப் பொருட்களும், கிருமிகளும் தங்கி, கழிவுப் பொருட்களை உற்பத்தி செய்து வாய் துர் நாற்றத்தை அதிகரிக்கிறது.
வாய் துர் நாற்றத்திற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது?
1. நாக்கை சுத்தம் செய்வது மிகவும் முதன்மையானதும் அவசியமானதுமாகும். நாக்கின் முன் பாதி சாப்பிடும் போதும், பேசும் போதும் அடிக்கடி வாயின் மேல்புறத்தில் (Hard palate) உராய்வதால் இயற்கையாகவே சுத்தமாகிறது. ஆனால் நாக்கின் பின் பகுதி மிருதுவான Soft palate ல் உராய்வதால் போதுமான அளவில் சுத்தமாவதில்லை. வாயில் உற்பத்தியாகும் கிருமிகளையும், கந்தக காம்பௌன்ட் கழிவுகளையும் நீக்கக் கூடிய குளோரின் டை ஆக்ஸைடு அல்லது Cetylpyridinium குளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்த வேண்டும். Tooth brush மற்றும் பிளாஸ்டிக் ஸ்பூன் அல்லது Tooth scaraper உபயோகித்து நாக்கின் பின்பகுதியையும், பற்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
2. முறையான இடைவெளியில் பல் மருத்துவரிடம் ஈறு பரிசோதனையும், பற்களை சுத்தம் செய்வதும் மிக அவசியம். பற்களின் நிலைமையும், ஈறு நன்றாக வீக்கமின்றி இருக்கிறதா என்பதையும் பல் மருத்துவரிடம் முறையாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பற்களில் காரை படிந்தும், எலும்பு தேய்ந்து பற்குழிகள் ஏற்பட்டிருந்தாலும் தகுந்த சிகிட்சை அளித்து பற்களைக் காப்பாற்றி, துர் நாற்றத்தையும் தவிர்க்க உதவுவார்.
3. புரதச்சத்துள்ள ஆகாரத்தை குறைத்தும், அதே நேரத்தில் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துள்ள உணவைச் சாப்பிட்டு வந்தால், வாயில் நுண் கிருமிகள் வளர வாய்ப்பிருக்காது. இத்துடன் புரதச் சத்துள்ள உணவைச் சாப்பிட்ட போது முறையாக நாக்கின் பின் பகுதியை சுரண்டி வழித்தும், பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள புரத உணவுத் துகள்களை Floss உபயோகித்து நீக்கியும், வாய் கொப்பளிக்கும் கிருமி நாசினி மருந்து (Chlorhexidine, Povidone 2% Gargle) திரவத்தால் வாய் கொப்பளித்தும் வாய் துர் நாற்றத்தைப் போக்கலாம்
4. வாயில் எப்பொழுதும் ஈரப்பதம் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரவில் தூங்கும் போது உமிழ் நீர் சுரப்பது குறைந்து, தூங்கி எழும் போது காலையிலும், நீண்ட நேரம் பேசினாலும், பேசிய பின்னும் ஈரப்பதமின்றி வாய் உலர்ந்து விடும். வாயில் ஈரப்பதம் இல்லையென்றால் துர் நாற்றம் வீசும். இதை தவிர்க்க தினமும் நிறைய நீர் குடிக்க வேண்டும். இது உமிழ் நீர் சுரக்க உதவி, வாய் ஈரப்பதத்துடன் இருக்கும். அடிக்கடி நல்ல நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால் ஈரப்பதத்துடன், வாயிலுள்ள கிருமிகளையும் அதன் கழிவுகளையும் அகற்றலாம். சர்க்கரையில்லாத மிட்டாய்கள் சுவைப்பதாலும் வாயிலுள்ள ஈரப்பதத்தை அதிகமாக்கி துர் நாற்றத்தை போக்கலாம்.
5. கிருமி நாசினியாக வாய் கொப்பளிக்கும் மருந்தையும் (Mouth wash) பயன்படுத்த வேண்டும். வாய் கொப்பளிக்கும் மருந்து 1. நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையது, 2. வாய் நாற்றம் தரும் கந்தக கூட்டுப் பொருட்களை சமன் செய்வது என இரண்டு வகைப்படும். Listerine, Cetylpyridinium Chloride mouth wash ஆகிய இரண்டும் நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையுடையது. Zinc ions உள்ள Mouth wash வாயில் நுண் கிருமிகளால் உற்பத்தியாகும் கந்தகம் கலந்த கழிவுப் பொருட்களை சமன் படுத்தும் தன்மையுடையது. இரண்டு தன்மையும் உடைய Chlorine dioxide அல்லது Sodium chlorite கலந்த Mouth wash ம் உபயோகிக்கலாம்.
சில பற்கள் அல்லது முழுவதும் (Full denture) பல் கட்டியிருந்தால், சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் அவைகளையும் கழற்றி நன்றாக கழுவிய பின் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இரவில் தூங்கும் போது பல் செட்டை கழற்றி, பற்பசை கொண்டு பிரஷ்சால் செட்டின் உட்புறமும் வெளியிலும் தேய்த்து தனியாக ஒரு கப்பில் வைத்து விட வேண்டும். பல் செட்டில் இயற்கையாகவே நுண் துளைகள் இருக்கும். எனவே துளைகளுக்குள் சென்று சுத்தம் செய்யக் கூடிய கிருமி நாசினி யை உபயோகித்து இரண்டு வேளையும் பல் செட்டை சுத்தம் செய்ய வேண்டும். மேற் கூறிய எல்லா முறைகளையும் பின் பற்றினால்தான் வாய் துர் நாற்றத்தை முழுமையாக நீக்கலாம்.

mardi 13 mai 2014




நிறுத்த முடியாது



உலகில் இரண்டு விடயங்களை மட்டும் நிறுத்த முடியாது ஒன்று நேரம் இன்னொன்று மரணம். எனவே மரணத்திற்குப் பயந்து நேரத்தை இழந்துவிடாதே.

நேரம்,



உன் வாழ்க்கைதான் இறைவன் உனக்குத்தந்துள்ள நேரம், அந்த நேரத்தில் நீ செய்ய வேண்டியதில் கோடான கோடியில் ஒரு பகுதியைக்கூட செய்யாமலே வாழ்வை முடிக்கிறாய்.. அப்படிப்பட்ட மனிதன் சொர்க்கத்தைத் தா என்று ஆண்டவனிடம் கேட்க தனக்கு அருகதை இருக்கிறதா என்று தனக்குத்தானே சிந்திக்க வேண்டும்.

தன்னைத்தானே ஏமாற்றுகிறான்..



நீ பிறக்க முன்னர் இந்த உலகம் உனக்குத் தெரியாது.. பிறந்த அக்கணமே இந்த உலகத்தைக் காண்கிறாய்.. பிறந்த நாள் என்றால் உலகத்தைக் காணும் நாள் என்று இறைவன் உனக்கொரு செய்தி சொல்கிறான். ஒவ்வொரு பிறந்த நாளிலும் நீ உலகத்தைப் பற்றி எவ்வளவு அறிந்தாய் என்ற கேள்வி உனக்காக காத்திருக்கிறது.. அதற்குப் பதில் கூறாமல் அன்றைய தினத்தில் போதையை சுவைக்கும் மனிதன் தன்னைத்தானே ஏமாற்றுகிறான்..

வாழ்க்கை என்பது



வாழ்க்கை என்பது பொன்னாலோ பொருளாலோ அல்ல நேரத்தாலேயே அளவிடப்படுகிறது நேரம் முடிந்தால் வாழ்க்கை முடிந்துவிடும்.. வாழ்க்கையை தருவதும் நேரம், அதை பறிப்பதும் நேரம்.. வாழ்க்கையை தொடக்கவும், முடிக்கவும் பொன்னாலும் பொருளாலும் இயலாது.

samedi 10 mai 2014

காதலு‌க்கு‌ம், ‌திருமண‌த்‌தி‌ற்கு‌ம் உ‌ள்ள ‌வி‌த்‌தியாச‌ம்:



காதலு‌க்கு‌ம், ‌திருமண‌த்‌தி‌ற்கு‌ம் உ‌ள்ள ‌வி‌த்‌தியாச‌ம்:



காதலு‌க்கு‌ம், ‌திருமண‌த்‌தி‌ற்கு‌ம் உ‌ள்ள ‌வி‌த்‌தியாச‌ம்:



* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.

* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.



* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.

* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்



* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.

* அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்



* காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.

* டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.



* எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.

* நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.



* உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.

* ஆறிப்போன பார்சல் உணவு தான் கல்யாணம்



* நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.

* கல்யாணம் என்பது பழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்



* உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.

* ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.



* காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.

* திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரேப் பேசும்.



* குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.

* அவர்களின் முரட்டுப் பிடிவாதம் கல்யாணம்.



* ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்

* செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.



* எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.

* எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.



* அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.

* கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.



* பல மணி நேர தொலைபேசி உரையாடல்

* திருமணத்திற்குப் பின்பும்தான், அவரவர் நண்பர்களுடன்.



* போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.

* போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.

ஏழைகளுக்கு



ஏழைகளுக்கு உதவப்போகிறேன் என்று நிதி திரட்டாதே தான் ஏன் ஏழையாக இருக்கிறேன் என்ற இரகசியத்தை கண்டு பிடிக்கத் தெரியாத ஏழைக்கு நீ எவ்வளவு உதவி செய்தாலும் அவன் இறுதிவரை ஏழையாகவே இருப்பான். பலர் வெளிநாடு வந்தும் கடனாளியாக இருப்பது போல..

அதுதான் அவன்.



பேசியபிறகு வருந்துவதை விட
பேசுவதற்கு முன் யோசனை செய்வது மிகவும் நல்லது

உண்மையை நேசியுங்கள் , ஆனால் பிழையை மன்னித்து விடுங்கள் 
நீங்கள் உயர்ந்த மனிதனாகி விடுவிங்க

நற்செயலுகளுக்கு அடிப்ப்டையே நல்லெண்ணம்தான்

வார்த்தைகள் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் வாழ்வில் வெற்றிகரமான இனிமை நிலவும் எனபதில் சந்தேகமில்லை.

விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா................

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை .புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை .

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?

வார்த்தைகள் பூப்போன்றவை.அவற்றைத் தொடுக்கும் விதத்தில் தொடுத்தால் மதிப்பைப் பெற முடியும்.

எண்ணங்களால் நாம் எழுகிறோம்… எண்ணங்களால் நாம் விழுகிறோம்.. ஒரு நாள் முழுவதும் ஒருவன் எதைச் சிந்திக்கிறானோ.. அதுதான் அவன்.


வந்தது போல.




உழுகிற நாளில் ஊருக்குப் போய், அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு
வந்தது போல.

பெண்சாதி.



அரைக்காசை ஆயிரம் பொன்னக்குகிறவளும் பெண்சாதி , ஆயிரம் பொன்னை அறைக்காசு ஆக்கு கிறவளும் பெண்சாதி.

தமிழா!



கடல்கடந்து திரவியங்கள் தேட - நீ கடல்கடந்து செல்வதெல்லாம் சரியே; உடல்சுமந்து உனையீன்ற தாயை - நீ உணர்விழந்து மறப்பதுதான் முறையோ? தாயை மறப்பதுவும் சரியோ? - அன்னை தமிழை மறப்பதுவுன் நிலையோ? பேச இனியமொழி தமிழ்தான்! - அதனைப் பேசிப் பழகிவிடு தமிழா!

சொந்தமாக்கும்



பூக்களில் விதையிருந்தால் அது பல கோடி பூக்களை உருவக்கும் மனிதனில் அன்பு இருந்தால் பல கோடி மனிதர்களை சொந்தமாக்கும்

முடியும்.



உங்களால் என்ன முடியும், உங்களுக்கு என்ன தெரியும் என்பதை நிதானமாகவே கணித்துக் கொள்ளுங்கள். உங்கள் தவறுகளை ஒப்புக் கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களை நீங்களே திருத்திக்கொள்ள முடியும்.

சரி என்று ஆகிவிடாது



எல்லோரும் செய்வதால் ஒரு விடயம் சரி என்று ஆகிவிடாது. ஒரு சிற்பி எல்லோரும் சொல்வதற்கேற்ப ஒரு சிலையை செய்தான்.. மறைவாக அதே சிலையை தனது விருப்பிற்கேற்ப செய்தான்.. சந்தையில் அவன் விருப்பிற்கேற்ப செய்த சிலையே அதிக விலைக்கு விற்றது. மற்றையதை வாங்க நாதியில்லாமல் வீசி எறிந்தான்.

மாற்றி சிந்திக்கப் பழக வேண்டும்.



ரயில் தண்டவாளத்தில் சிக்குப்பட்டுவிட்டான் ஒருவன். நள்ளிரவு நேரம்..! காப்பாற்ற எவரும் வரவில்லை. தூரத்தே ரயில் வண்டி வருகிறது. மரணம் ஏறத்தாழ நிச்சயமாகிவிட்டது. என்ன செய்யலாம்.. பாக்கட்டை பார்த்தான் சிகரட் கொழுத்தும் லைட்டர் மட்டும் இருந்தது. அதை கொழுத்தி கையில் பிடித்து அங்கும் இங்கும் ஆட்டினான்… யாரோ நிற்பது தெரிந்து ரயில் நின்றது. சிகரட் பற்ற மட்டும் பயன்படும் என்ற லைட்டரின் பாவனையை மாற்றி சிந்தித்த காரணத்தால் அவன் உயிர் தப்பியது. ஆகவே எப்போதும் மாற்றி சிந்திக்கப் பழக வேண்டும்.

இணைத்துப் பாருங்கள்…



இணைத்துப் பாருங்கள்…
பெஞ்சமின் பிராங்கிளின் பார்வைக்கு தனிக் கண்ணாடியும், படிப்பதற்கு தனிக் கண்ணாடியும் இருப்பதையும் மாற்றி இரண்டையும் பாதி பாதியாக்கி மேலே பார்க்கின்ற கண்ணாடியையும், கீழே படிக்கின்ற கண்ணாடியையும் இணைத்து முதன் முதலாக இரண்டுக்கும் பயன்படுத்தும் விதத்தில் ஒரே மூக்குக் கண்ணாடியை தயாரித்தார்.

பயன் படுத்திக் கொள்ளுங்கள்.


முதுமைக்கு முன் இளமையையும்
நோய்க்கு முன் உடல் நலத்தையும்
வறுமைக்கு முன் செல்வத்தையும்
வேலையில் ஈடுபடுமுன் ஓய்வையும் 
மரணம் வருமுன் வாழ்க்கையையும்
அரிதாகக் கருதி நன்றாகப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

மனித ஜென்மங்களுக்கு



உணவுக்காக ஒரு குரங்கை கொல்கிறது ஒரு சிறுத்தை, 
கொன்ற பிறகு தான் சிறுத்தைக்கு தெரிகிறது அதன் அடிமடியில் அன்று பிறந்த அதன் குட்டி ஒன்று இருப்பது. 
ஒரு தாயை கொன்றுவிட்டோமே, குட்டியை அநாதை ஆக்கிவிட்டோமே என்ற வேதனை பசியை மறக்கசெய்கிறது. ஒரு தாயாக குட்டி குரங்கை அரவணைக்க முயல்கிறது.

செய்த பாவங்களுடன் குற்ற உணர்வே இல்லாமல் திரியும் மனித ஜென்மங்களுக்கு இந்த விலங்குகளே மேல் என்று தோன்றுகிறது.