முகப்பு

vendredi 18 août 2017

நம் பலமே தனி!!!



நீங்கள்
ஒரு கல்லை எடுத்து
நாயை பார்த்து அடியுங்கள், அந்த நாய் பயந்து ஓடிவிடும்...

அதே கல்லை கொண்டு தேன் கூட்டில் உள்ள ஈக்களின் மீது அடியுங்கள், உங்களை
ஒரு கை பார்த்து விடும்...

தேனீக்களை விட வலிமையானது
நாய் தானே?

அப்படியானால்
நாய் ஏன் பயந்து ஓடியது?

தேனீக்கள் ஏன்,
நம்மை ஓட வைத்தது?

காரணம் நாய் தனியாகவும்,
தேனீக்கள் கூட்டாக இருந்ததால்...!

நாம் எவ்வளவு தான் சக்திவாய்ந்த தனிமனிதனாக
இருந்தாலும்,

ஒற்றுமையாக இருந்தால் நம் பலமே தனி!!!

வலி



என்னை காயபடுத்திய எந்தவொரு வலியையும் பிறருக்கு நான் தந்துவிடக் கூடாது என்றே விரும்புகிறேன்.....

போதும்



சிலரை சந்தோஷப்படுத்த ரொம்ப சிரமப்பட தேவையில்லை. நம்ப கஷ்டத்தைச் சொன்னாலே போதும்

நம்பிக்கை



வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது.
நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது.
ஒவ்வொரு மனிதனின் கையிலும்  அழகான வாழ்க்கை இருக்கிறது.
அதை வளப்படுத்தும் நம்பிக்கை எனும் வானவில் தான் தோன்ற மறுக்கிறது.

மற்றவர்களாக அல்ல.



மற்றவர்களைப்பார்த்து அவர்களைப்போல் வாழமுடியவில்லையே என்று நீ வருந்துகிறாயா? நீ.... நீயாக வாழத்தான் பிறந்திருக்கிறாய்... மற்றவர்களாக அல்ல.