முகப்பு

vendredi 10 février 2012

வரம் கொடு

விரிந்த மலரிடம்
  விசாரித்தேன்
 ... வாழ்க்கை என்றால் என்ன ?
  ஒரு நாளில் எல்லோர்க்கும்
  ஒளி வீசும் புன்னகை காட்டி
  தும்பிக்கு தேன் கொடுத்து
  துடியிடையாளின் கூந்தலிலோ
  தூங்கா இறை சிலையிலோ
  தூரிகையாய் தூங்கி முடித்துக் கொள்வது வாழ்க்கை என்றது
  வாயடைத்து நின்றேன்
  வாய் பேசாத பூ வாழ்க்கை கண்டேன்
  எத்தனை இனிமை இதனிடம் ?
  மனிதனை மட்டுமல்ல
  கடவுளையும் மணக்க வைக்கும்
  மலரே உன் வாழ்க்கை எனக்கு வேண்டும் -
வரம் கொடு என்றேன்
 
(படித்ததில் பிடித்தது........)
 
 


Aucun commentaire:

Enregistrer un commentaire