முகப்பு

samedi 28 novembre 2015

anou



athikam



malai


alum


anpu


i,dru


பிறர் மீது வீண் பழி சுமத்துவதால் பலன்


    குறுஞ்சி என்ற ஊரில் முனுசாமி என்ற ஒருவன் இருந்தான். அவன் ஒரு முறை தேவையில்லாமல் ஒரு கிராமவாசி மீது பழி சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டினான்.
    பஞ்சாயத்திலும் கிராமவாசிக்குத் தண்டனை கிடைத்தது. பின், வீட்டிற்கு வந்த முனுசாமியின் மனசாட்சி அவனை உறுத்தியது. கிராமவாசி மீது தான் பழி சொன்னதை எண்ணி வருந்தினான். எனவே, தன் பாவத்திற்கு ஏதாவது பிராயச்சித்தம் உண்டா என்று தேடினான்.
    என்ன பிராயச்சித்தம் செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. எனவே, அந்த ஊரிலிருந்த ஒரு துறவியிடம் சென்றான். “துறவியாரே! நான...் இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் மீது வீண் பழி சொல்லிவிட்டேன். அது என் மனத்தை உறுத்துகிறது. அந்தப் பழி சொன்ன பாவத்தில் இருந்து தப்பிக்க எனக்கு வழி கூறுங்கள்!” என்று கேட்டான்.
    துறவி சிறிது யோசித்துவிட்டு, “இன்று இரவு ஐந்து கிலோ இலவம்பஞ்சை எடுத்துப் போய் அந்த கிராமவாசியின் வீட்டுக்கு முன்பு பரப்பிப் போட்டுவிட்டு வந்து விடு. நாளை வந்து என்னைப் பார்,” என்று கூறினார்.
    முனுசாமியிடம் பஞ்சைக் கொண்டு சென்று கிராமவாசியின் வீட்டின் முன் பரப்பி விட்டான். பின் மறுநாள் சென்று துறவியைப் பார்த்தான். “துறவியாரே! என் பாவம் போய் இருக்குமா இந்நேரம்?” என்று கேட்டான்.
    உடனே துறவி, “முனுசாமி! நீ இப்போது அந்த கிராமவாசியின் வீட்டிற்குச் செல். அவன் வீட்டு முன் நீ நேற்றிரவு பரப்பி வைத்த பஞ்சை மீண்டும் பொறுக்கிக்கொண்டு வா,” என்று கூறினார்.
    முனுசாமி மிகுந்த ஆவலுடன் ஓடினான். ஆனால், ஒரு விரல் அளவு பஞ்சு கூட அங்கு இல்லை. எல்லாம் காற்றில் பறந்துபோய் விட்டிருந்தது. அதனைக் கண்ட முனுசாமி திடுக்கிட்டான். மீண்டும் துறயிடம் ஓடி வந்தான்.
    “துறவியாரே! நேற்றிரவு நான் கிராமவாசி வீட்டின் முன்னால் போட்டுவிட்டு வந்த பஞ்சில் ஒரு துளிப் பஞ்சாவது இப்போது அங்கு இல்லை. என்ன செய்வது?” என்று கேட்டான்.
    துறவி சிரித்துவிட்டு, “முனுசாமி! நீ விரித்துப் போட்டுவிட்டு வந்த பஞ்சை இப்போது மீண்டும் எப்படி அள்ள முடியாதோ, அதே போல, நீ ஒருவர் மீது கூறிய பழியையும் அதனால் உனக்கு ஏற்பட்ட பாவத்தையும் மாற்ற முடியாது. திருப்பி வார முடியாத பஞ்சைப் போன்றது தான் உன் பழிச் சொற்களும். அவற்றையும் இனித் திருப்பி வார முடியாது. இறைவனிடும் உன் தவறுக்காக மன்னிப்பு கேள்,” என்று கூறினார்.
    முனுசாமிக்கு உண்மை புரிந்தது. அன்று முதல் மற்றவர்கள் மீது பழி சொல்லும் குணத்தையே விட்டுவிட்டான். பிறர் மீது வீண் பழி சுமத்துவதால் பலன் ஏதும் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்தான் முனுசாமி.

நம்பிக்கை


    அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், ‘அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்’ என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.
    அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. ‘எல்லாம் காசு கிடைத்த நேரம்’ என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பை...யில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன.
    பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், ”அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது” என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!
    அந்தக் காசில் துளையே இல்லை. ‘என்ன ஆயிற்று?’ என்று குழப்பத்துடன் பார்த்தான். அவன் மனைவி சொன்னாள், ”என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன்” என்றாள்.
    ”இது எப்போது நடந்தது?” என்று கேட்டான். ”அந்தக் காசு கிடைத்த மறுநாளே” என்றாள். அவன் அமைதியாக சிந்தித்தான்.
    …………………………………………………………………………………………………………………………………
    ‘உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான்.’ என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்

உறவையும் நட்பையும் மதிக்க கற்று கொள்ளுங்கள்!!!

படித்ததில் பிடித்தது
""""""""""""""""""""""""""""""""""
ஒரு உல்லாச கப்பல் கடலில் சென்ற போது அடித்த புயலினால் கப்பல் உடைந்தது. அதில் இருந்த இரு ஆண்கள் மட்டுமே தப்பி நீந்தி வந்து அருகில் உள்ள ஒரு சிறிய தீவை சென்று அடைந்தனர்.
அந்த இருவரும் அந்தஸ்த்தில் வேறுபட்டவர்கள், ஒரே நிறுவனத்தில் ஒரே இடத்தில் பணிபுரியும் சூழ்நிலையால் நண்பர்கள் ஆனவர்கள்.
அந்த தீவில் வெறும் புற்களும் புதர்களும் மட்டுமே இருந்தது. சாப்பிடவோ ஒதுங்க நிழலுக்கு மரம் கூட இல்லாதிருந்தது..!
அவர்களுக்கு என்ன செய்வது என்பதே தெரிய வில்லை. முடிவில் இருவரும் கடவுளை வேண்டிக் கொள்வது என்று முடிவு செய்தனர்.
அப்போது யாருடைய பிரார்த்தனைக்கு அதிக சக்தி இருக்கிறது பார்ப்போம் என்றும் முடிவு செய்தனர்.
அதன்படி அந்த தீவின் இருகரைகளிலும் தனி தனியாக தங்குவதற்கு உடன்பட்டனர். முதலில் இருவரும் உணவுக்காக பிரார்த்தனை செய்தனர். அவர்களின் பிரார்த்தனை படி வசதியானவன் இருந்த பகுதிக்கு சில பழங்கள் மிதந்து வந்தன. அதை அவன் சாப்பிட்டான் ஆனால் ஏழையோ சாப்பிட ஏதும் கிடைக்காமல் பசியோடு இருந்தான்.
பசியாறிய மனிதனுக்கோ போரடித்தது, தனக்கு அருகில் மனைவியாக ஒரு பெண் இருந்தால் நன்றாக இருக்குமே என்று வேண்டினான். ஆச்சர்யமாக அவன் வேண்டுதல் படியே அந்த தீவுக்கு அருகில் வந்த சிறிய கப்பல் உடைந்து அதில் இருந்த ஒரு அழகிய இளம் பெண் மட்டும் உயிர் தப்பி ஒரு உடைந்த பலகை உதவியுடன் அந்த தீவிற்கு வந்து சேர்ந்தாள்.
அவளைப் பார்த்ததும் அவள் அழகில் சொக்கி போய் அவளையே தெய்வ சாட்சியாக திருமணம் செய்து கொண்டான். தீவின் மற்றொரு பக்கம் இருந்தவன் இன்னும் பசியால் தனிமையில் இருந்தான்.
முதல் மனிதன் செய்த வேண்டுதல் படி நல்ல உணவுகள், துணிகள், எல்லாம் அவன் இருந்த பகுதிக்கு மட்டுமே மந்திரம் செய்தது போல கரை ஒதுங்கின. ஆனால் அவன் நண்பனுக்கோ ஒன்றும் கிடைக்கவில்லை. அவன் உருக்குலைந்து போனான்.
ஆனால், புது ஜோடிகளோ வந்த பழங்கள் உணவுகளுடன் இருவரும் ஒரு வாரகாலம் உல்லாசமாக களித்தனர். இப்படியாக ஒரு வாரம் கழிந்தது.....
இறுதியாக முதல் மனிதன் தன் புது மனைவியுடன் தன் சொந்த இடத்துக்கு போவதற்கு வேண்டி ஒரு படகுக்காக வேண்டினான். அதுவும் அதிசயம் போல அடுத்த நாளே கரை ஒதுங்கியது.
முதல் மனிதன் தனது பிரார்த்தனையின் சக்தி கண்டு மிகுந்த மகிழ்ச்சியில், துரதிஷ்டம் மிக்க தன் நண்பனை அழைக்காமல் தன் புது மனைவியுடன் அதில் ஏறி அந்த தீவை விட்டு செல்ல ஆயுத்தமானான். இது ஏதும் அறியாத அந்த இன்னுமொருவன் இன்னும் பசியாறாமல் வேதனையில் வாடினான்..?
எல்லாம் கிடைத்த நண்பன் நினைத்தான்,
தன் நண்பன் ஓன்றுக்கும் உதவாதவன் கடவுளின் ஆசிர்வாதம் கூட அவனுக்கு கிடைக்க வில்லை, ஒரு சிறு பிரார்த்தனையை கூட கடவுள் நிறைவேற்றி வைக்க வில்லை. ஏற்கனவே ஏழை வேறு.. அதானல், அவனை அழைத்து செல்ல இவனுக்கு இஷ்டமில்லை என்றான் சுயநலம் பிடித்த அந்த நண்பன்..!!
படிக்கும் நமெக்கெல்லாம் கடவுள் மேல் கோபம் வருகிறது அல்லவா...!! அப்போது அந்த படகு கிளம்ப தொடங்கியதும் வானத்தில் இருந்து ஒரு குரல் ஒலிக்க தொடங்கியது...!
ஏன் உன் நண்பனை தனியாக இந்த தீவில் விட்டு செல்கிறாய்..? என்று அந்த குரல் கேட்டது...!
அதற்கு அந்த மனிதன் சொன்னான் நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன் அவர் என்னை ஆசிர்வாதித்து இது எல்லாம் எனக்கு மட்டும் கிடைக்க செய்தார். என் நண்பனின் பிரார்தனை ஓன்றுக்கும் கூட கடவுள் செவி சாய்க்கவில்லை. அவன் ஓன்று கூட பெற தகுதி இல்லாதவன் என்று சொன்னான்.
அந்த குரல் அவனிடம் மறுபடியும் பேசியது மகனே நீ நினைப்பது தவறு. நான் தான் கடவுள்...!!
உன்னை உயிராக நேசிக்கும் உன் நண்பன் பிரார்த்தனையில் ஒன்றே ஓன்று மட்டும் கேட்டான். நான் அந்த ஒரு பிரார்த்தனையை நிறைவேற்றி வைத்தேன். அது மட்டும் அவன் கேட்கவில்லை என்றால் உனக்கு எந்த வித ஆசிர்வாதமும் பலனும் கிடைத்து இருக்காது.
அந்த மனிதன் என்ன கேட்டான் பிரார்த்தனையில்? அவனுக்கு நான் ஏதாவது கடமை பட்டு இருக்கிறேனா என்றான்..?
அந்த குரல் மேலும்,
உன் நண்பன் பிரார்த்தனையில் என் நண்பன் மிகவும் வசதியானவன், நல்லவன்,
வாழ்க்கையில் சுகம் மட்டுமே அனுபவித்து பழகியவன், அவன் கஷ்டமே அறியாதவன். ஆகவே, என் பிரார்த்தனையெல்லாம் அவன் வேண்டுவதை மட்டும் நிறைவேற்றுங்கள்...
அது போதும், நான் ஏற்கனவே ஏழை தான், இதுமாதிரி சூழ்நிலைகள் எனக்கு புதியதல்ல....
ஆகவே எனக்கென்று கேட்க எதுவும் இல்லை என்று தான் வேண்டினான்.
அதை கேட்ட அந்த சுயநலம் பிடித்த நண்பன் வெட்கி, மனந் திருந்தி தன்னலமற்ற தன் நண்பனை தேடி ஓடினான்..!!
கதையின் நீதி:
நம்முடைய பிரார்த்தனைகளால் மட்டுமே நமக்கு எல்லாம் கிடைத்து விடுவதில்லை. அதற்கு மற்றவர்களின் வேண்டுதல்களும் உதவி புரிகின்றன என்பதை மறந்து விட வேண்டாம். நம்மை நேசிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஓதுக்கி வைத்து விட வேண்டாம், சந்தேகப்பட வேண்டாம். உறவையும் நட்பையும் மதிக்க கற்று கொள்ளுங்கள்!!!
படித்ததில் பிடித்தது!!!
பிடித்திருந்தால் அனைவருக்கும் பகிரவும்!!!!!

என்னதான் வசதி கிடைத்தாலும் ஏழ்மையிலுருந்து விடுதலை கிடைக்காது…!

    ஒரு பணக்காரன் தன் மகனுக்கு ஏழ்மை என்றால் என்ன என்று சொல்லிக் கொடுக்கக் கிராமத்தில் உள்ள ஒரு ஏழையின் வீட்ற்கு அழைத்துச் சென்றான். இரு தினங்கள் தங்கிவிட்டுப் பின்னர் வீட்டிற்குத் திரும்பினதும் ஏழை எப்படி வாழ்கிறான் என கேட்டதும் மகன் கூறினான்…
    அப்பா நம் வீட்டில் ஒரேயொரு நாய் இருக்கிறது, கிராமத்தில் பத்து பதினைந்து நாய்கள் உள்ளன. நம் தோட்டத்தில் ஓன்று இரண்டு விளக்குகள்வைத்துள்ளோம், அந்த கிராமத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் மின்னுகிறது. நமது வீட்டின் முன் வரவேற்பு அறை பெரிது, அவ...ர்களின் வீட்டுக்கு முன்னே எல்லையே இல்லாமல் விரிந்து இருக்குறது. நாம் ஒரு நாள் கழிந்த பாலை பருகிறோம், அவர்கள் உடனடிப் பாலைக் கறந்து சாபிடுகிரர்கள். நாம் வாடிய காய்கறிகளைச் சாப்பிடுகிறோம், அவர்கள் செடியில் இருந்து பறித்துப் பச்சை பசேல் என இருக்கும் காய்கறிகளை உண்ணுகிறார்கள் . நாம் வீட்டைச் சுற்றி மதில் கட்டிப் பாதுகாக்கிறோம், அவர்களுக்கு அந்த ஊரே காவல் செய்கிறது என்று மகன் சொல்லிக்கொண்டே சென்றான்…
    மகனின் பதில் தந்தையை அதிர்ச்சியடைய செய்தது.. தந்தை சிந்திக்க ஆரம்பித்தார் யார் உண்மையான ஏழை என்று…
    ஏழ்மை என்பது நம் எண்ணத்திலேயே குடி கொண்டால் என்னதான் வசதி கிடைத்தாலும் ஏழ்மையிலுருந்து விடுதலை கிடைக்காது…!

mercredi 25 novembre 2015

ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ?


தமிழ் பெண்கள் தாலி அணியும்
வழக்கம் சங்ககாலத்தில் இல்லை .
அந்தப்பழக்கம் இடைக்காலத்தில் தான்
புகுத்தப்பட்டது என்பது உண்மை
தான்.
நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள்
கயிற்றில் தாலி அணிய வேண்டும் ?
இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது ?
ஒவ்வொரு இடத்தின் தட்பவெட்ப
நிலையை பொறுத்தே பழக்க
வழக்கங்கள் அமைகின்றன.
மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து
குளிக்கும்போது தினமும்
தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர்.
மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த
கிருமி நாசினி..
அப்போதெல்லாம் மணமான பெண்
அடுத்த மூன்று மாதங்களில் ஒரு
கருவை சுமக்க தயாராகிறாள்.
அப்போது அப்பெண் பல்வேறு நோய்
தொற்றுகளுக்கு உள்ளாகும்
அபாயம் உள்ளது . .கிருமி
நாசினியான மஞ்சள் தாயையும்
அவள் வயிற்றில் வளரும் சேயையும்
நோய் தொற்றிலிருந்து
பாதுகாக்கிறது.
பத்து இருபது ஆண்டுகளுக்கு
முன்பு வரை கூட மஞ்சள்கயிறு
தாலியில் கோர்த்து
போட்டிருந்தனர். அப்போதெல்லாம் நம்
தமிழகத்தில் எவ்வளவு
சுகபிரசவங்கள் நடந்தது என்றும், தங்க
செயினில் தாலி அணியும்
இப்போது எவ்வளவு சுகபிரசவங்கள்
நடை பெறுகிறது என்பதையும்
கணக்கிட்டுப் பார்த்தால் இந்த உண்மை
நமக்குப் புரியும் .
அது போல் 10 ஆண்டுகளுக்கு
முன்பு வரை எத்தனை
பெண்களுக்கு மார்பகப் புற்று
நோய் இருந்தது, இப்போது எத்தனை
பெண்களுக்கு இருக்கிறது என்றும்
கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு
நன்கு புரியும்.
இப்போதும் கூட கிராமங்களில்
கர்ப்பம் தரித்த பெண்கள்
வெளியூர்களுக்கு செல்லும்
போது தலையில் வேப்பிலை
இலையை செருகி வைப்பார்கள்
அது எதற்காக ? வேப்பிலை ஒரு
சிறந்த கிருமிநாசினி. கர்ப்பிணிகள்
தலையில் இருக்கும்
வேப்பிலையானது அவர்கள்
செல்லும் வழியில் சுவாசிக்கும்
காற்றில் இருக்கும் கிருமி
தொற்றிலிருந்து காக்கிறது .
மேலைநாட்டினர் அவற்றின்
மகிமையைப் புரிந்துக்கொண்ட
ு மஞ்சளுக்கும், வேப்பிலைக்கும்
உரிமை கொண்டாடுகின்றனர்.
பகுத்தறிவு என்று நாம் நமது
முன்னோரின் சம்பிரதாயங்களில்
இருக்கும் விஞ்ஞான அறிவைப்
புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து
கேவலப்படுத்துகிறோம் .
நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள்
இல்லை..!
நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை
நம்மால் நடைமுறைப்படுத்த
முடியாவிட்டாலும் பரவாயில்லை...
அவற்றைக் கேலி செய்யாமல்
இருந்தாலே போதும்..!




திருமணமான ஆண்களுக்கு


வாய மூடிட்டு இருக்க வேண்டியது தான ...........

ஒரு அதிகாலைப்பொழுது! கணவன் மனைவியை எழுப்பி கேட்டான்.

"டியர்... யோகா பண்ணப்போறேன்... நீயும் வர்றியா?"

கணவனை வித்தியாசமாக பார்த்த அந்த மனைவி, "ஓ... அப்படின்னா நான் fat-ஆ இருக்கேன்! உடம்பை குறைன்னு சொல்றீங்க?" என்றாள்.

கணவன்: "அதுக்கில்லைம்மா! யோகா பண்றது ஹெல்த்துக்கு நல்லது!"

மனைவி: "அப்போ என்னை sick-ன்னு சொல்றீங்களா?"

கணவன்: "இல்லை இல்லை! நீ வரவேணாம். விடு!"

மனைவி: "அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க!"

கணவன்: "ஐயோ இல்லை! ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?"

மனைவி: "இவ்வளவு நாளா புரிஞ்சுக்காம தான் இருந்தேனா?"

கணவன்: "மறுபடி பாரு.. நான் அப்படி சொல்லலை!"

மனைவி: அப்படிதான் சொன்னீங்க! அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?"

கணவன்: "தயவு செஞ்சு விடு! காலங்காத்தால ஏன் சண்டை?"

மனைவி: "ஆமாங்க... நான் சண்டைக்காரிதான்!"

கணவன்: "Ok! நானும் போகலை. போதுமா?"

மனைவி: "உங்களுக்கு போக அலுப்பு! அதுக்கு என்னை blame பண்றீங்க!"

கணவன்: "சரி, நீ தூங்கு! நான் தனியா போய்க்கிறேன்! சந்தோஷமா?"

மனைவி: "அதானே... உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் enjoy பண்ணனும்! அதுக்குதானே இவ்வளவும் பேசுனீங்க?"

வெறுத்துப்போன கணவன் எவ்வளவு யோசித்தும், தான் என்ன தவறு செய்தோம் என்று விளங்கவே இல்லை! டயர்டாகி படுத்துவிட்டான்.

திருமணமான ஆண்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்!

mardi 24 novembre 2015

முதன்முதலில்

முதன்முதலில்

-நாகரீகத்தை தோற்றுவித்தவன் தமிழன்.
- மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்தவன் தமிழன்.
- மொழிக்கு இலக்கணம் வகுத்தவன் தமிழன்.
- அரசாட்சிமுறை வழங்கியவன் தமிழன்.
- நீர் தேக்கத்தை(DAM) அமைத்தவன் தமிழன்.
-விவசாயம் செய்தவன் தமிழன்.
- கப்பல் போக்குவரத்தை தொடங்கியவன் தமிழன்.
- வணிகமுறையை கொண்டு வந்தவன் தமிழன்.
- கடவுளை வணங்கியவன் தமிழன்.
- அறநெறி நூல்களை உலகிற்கு வழங்கியவன் தமிழன்.
- செடி கொடிக்காக செல்வத்தை அழித்தவன் தமிழன்.
- பெண்ணுக்கு மதிப்பளித்தவன் தமிழன்.
- தாயை தெய்வமாக்கியவன் தமிழன்.
- நட்பை கற்புபோல் காத்தவன் தமிழன்.
-' நீதிக்காக உயிர் நீத்தவன் தமிழன்.
- கலைகளை வளர்த்தவன் தமிழன்.
- எகிப்து பிரமிடுகளை கட்டியவன் தமிழன்.
- ஒற்றைக்கல்லிலும் சிற்பம் செதுக்கியவன் தமிழன்.
- எதிரிகளையும் மன்னித்தவன் தமிழன்.
- வீரத்தை உலகிற்கு கற்றுக்கொடுத்தவன் தமிழன்.
- பெண்களுக்கும் வீரத்தை ஊட்டி வளர்த்தவன் தமிழன்.
- உலகின் பெரும் நிலப்பரப்பை ஆண்டவன் தமிழன்.
- துரோகத்தால் மட்டுமே வீழந்தவன் தமிழன்.

வாழ்க தமிழ் வளர்க தமிழ்.


தமிழனடா நாங்கள்
-தமிழில் டீக்கு "தேநீர்',
காபிக்கு "குளம்பி' என்று
பெரும்பாலோருக்குத் தெரியும்.
மற்ற சில முக்கியமான உணவு
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!

சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

கிச்சடி - காய்சோறு, காய்மா

கேக் - கட்டிகை, கடினி

சமோசா - கறிப்பொதி, முறுகி

பாயசம் - பாற்கன்னல்

சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு

பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி

பொறை - வறக்கை

கேசரி - செழும்பம், பழும்பம்

குருமா - கூட்டாளம்

ஐஸ்கிரீம் - பனிக்குழைவு

சோடா - காலகம்

ஜாங்கிரி - முறுக்கினி

ரோஸ்மில்க் - முளரிப்பால்

சட்னி - அரைப்பம், துவையல்

கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு

பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்

போண்டா - உழுந்தை

ஸர்பத் - நறுமட்டு

சோமாஸ் - பிறைமடி

பப்ஸ் - புடைச்சி

பன் - மெதுவன்

ரோஸ்டு - முறுவல்

லட்டு - கோளினி

புரூட் சாலட் - பழக்கூட்டு14:29
🌏68 - ஆண்டுகளாய் தான் நீ இந்தியன்,,,.

🌏800 - ஆண்டுகளாய் தான் நீ இந்து.

🌏400 - ஆண்டுகளாய் தான் நீ கிறித்தவன்.

🌏200 - ஆண்டுகளாய் தான் நீ இஸ்லாமியர்.

🌏உலக மொழிகள் தோன்றியே வெறும் 2000 ஆண்டுகள் தான் ஆகின்றது.

🌏சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி தமிழ்.....

🌏சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இனம் தமிழ் இனம்...

🌏100000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனம் தோன்றியிருக்களாம்...
குமரிகண்டம் மற்றும் லேமனியகண்டம் ....

மாபெரும் இரண்டு கண்டங்களையும் 13 தேசங்களையும் கட்டி ஆண்ட வீர தமிழனடா நீ!!!!!!!!!

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!!!

தமிழன்டா..........
எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!

கண்டிப்பாக படித்து பகிரவும் ....

தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!

அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம்..!
வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

சிந்திப்பீர் மனிதர்களே!!!


ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... இது ஜப்பானில் நடந்த உண்மை கதை !
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.
வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.
அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 10 வருடம் ஆகி இருக்கும்.எப்படி இந்த பல்லி 10 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்கானித்து கொண்டு இருந்தார்
சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார்.அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார்.அவருக்கு தூக்கி வாரிப்போடது 10 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது.
ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 10 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது.
ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா...
உன்னை 10 மாதம் சுமந்த உன் தாய்க்கு அவர்கள் முடியாத காலக்கட்டத்தில் உணவளிக்க முடியாதா,உன் தாரம் ஊணமாயின் அவளுக்கு உன்னால் உணவளிக்க முடியாதா...
சிந்திப்பீர் மனிதர்களே!!!

நம் கடமை.


ஒரு அரசன் தன் நாட்டில் வசிக்கும் முதியவர்களால் எந்த பயனும் இல்லை என்பதால்,சுமார் 70 வயது நிறைந்தவர்களை கண் காணதா இடத்தில் கொண்டு விடச்சொல்லி உத்தரவு இட்டான்.
மக்களின் பெரும் கண்ணீருக்கு இடையில் உத்தரவு நடைமுறைப் படுத்தப்பட்டது.சில மாதங்கள் கழித்து,நாட்டில் கடும் மழை.ஊர் வெள்ளத்தில் சிக்கியது.மக்கள் பெறும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
இந்த நிலைமையை சாமாளிக்க சரியான தீர்வு கொடுப்பவர்களுக்குப் பெரும் பரிசு வழங்குவதாக அரசன் அறிவித்தான்.முருகன் என்பவன் கொடுத்த யோசனை, மற்ற எல்லோர்களின் யோசனைகளையும் விட மிகச்சிறந்ததாக இருந்தது.அரசன் அதை அமுல்ப்படுத்தி, வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பற்றினான்.
இன்னும் சில மாதங்கள் கழித்து,நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது.அப்போதும் முருகன் கொடுத்த யோசனைதான் அரசனுக்கு கை கொடுத்தது.
சில நாள் கழித்து நாட்டில் மிகவும் தொற்று நோய் பரவியது.
இந்த முறையும் முருகன் சொன்ன ஆலோசனை நல்ல பலனைக் கொடுத்தது.மக்கள் நோயில் இருந்து தப்பினர்.
அரசனுக்கு ஒரே ஆச்சிரியம்.எப்படி முருகனால் மட்டும் இப்படி சரியான தீர்வு கொடுக்க முடிகிறது என்று எண்ணி,முருகனை அழைத்து விவரம் கேட்டார்.
அதற்கு,முருகன்,"அரசே,தாங்கள் முதியவர்களை நாடு கடத்தீனீர்கள்.ஆனால் நான் என் தந்தையை விட்டு பிரிய மனம் இடம் கொடுக்கவில்லை.அதனால் நான் அவரை என் வீட்டுப் பரணில் ஒளித்து வைத்து,யாருக்கும் தெரியாமல் பராமரித்து வந்தேன்.
உடலால் இயலாமல் போனாலும் அவரின் பழுத்த அனுபவத்தால்தான் நம் நாட்டில் பிரச்சனைகள் வந்தபோது எல்லாம் அவரின் யோசனைதான் தீர்வு சொன்னது" என்றான்..
அரசன் தன் தவறை உணர்ந்து,நாடு கடத்திய முதியவர்களை சகல மரியாதையோடு தன் நாட்டுக்கு மீட்டுவந்து அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க செய்தான்..
இந்த கதை சொல்லும் பாடம் என்னவெனில்,
"வயதானவர்கள் மொத்தமாகப் பயனற்றவர்கள் அல்ல.
இளமையின் காரணமாக நமக்கு யாரையும் சார்ந்திருக்க அவசியம் இல்லாமல் இருக்காலம். இயலாமையும், தள்ளாமையும் முடக்கிவைத்து விட்டதால்,அவர்களால் இப்போது முடியாமல் இருக்கலாம்.
அதற்காக நாம் அவர்களை ஒதுக்கி வைக்கலாமா..?
அவர்கள் யார்.......?
இன்றைக்கு நீங்கள் இந்த நிலைமைக்கு வந்ததற்கு நம் பெற்றோர்கள் நம்மை நன்கு பராமரித்துத் தந்ததால் தானே..?
நாம் இந்த பூமியில் வந்த நாளில் இருந்து நமக்காக உணவை தேடிக்கொள்ளக்கூட நம்மிடம் எந்தத் திறனும் இல்லை.
முற்றிலும் கையாலாகாமல் கிடந்த நம்மை நம் அம்மா எடுத்து மார்போடு அணைத்துப் பாலூட்டவில்லை என்றால்,நாம் இந்நேரம் என்னவாகி இருப்போம்..?
உணவு மட்டுமல்ல..மொத்த உலகமே நமக்கு அவள்தானே...
உலகம் தோன்றிய நாளில் இருந்து இதுநாள் வரை யாரவது கடவுளை பார்த்ததுண்டா..? ஆனால் நாம் நம் கற்பனயில் எண்ணும் அந்த கடவுள் தன்மைக்கு நெருக்கமாக நாம் அனைவரும் உணர்ந்த உலகில் ஒரே ஒருவர் நம் தாய்தானே..
அவர்களால்தான் நாம் என்ற எண்ணம் நம் மனதில் என்றும் நிலைத்து இருக்க வேண்டும்.
ஆம்,நண்பர்களே.,
நமக்கு நடக்க கற்றுக் கொடுத்த பெற்றோர்கள்,அவர்கள்
வயதான காலத்தில்,ஒரு கௌரவமான வாழ்க்கை வாழ எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டியது நம் கடமை.

சுகமாகிவிடுவான்


    அது ஒரு மனநல மருத்துவமனை...அங்கே அழகன் என்கிற ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார் , ஒரு நாள் புத்திரன் என்கிற சக மன நோயாளி ஒருவன் கிணற்றில் குதித்திவிட.., தன் உயிரை துச்சமென நினைத்து கிணற்றுக்குள் குதித்து அந்த நோயாளியை காப்பாற்றி விட்டார் அழகன். அவரின் இந்த வீரதீரச் செயல் மருத்துவமனை முழுக்க பரவிவிட்டது. அதைக் கேள்விப்பட்ட மருத்துவ நிபுணர் அழகனை அழைத்து “உனக்கு ஒரு நல்ல செய்தியும், ஒரு துக்கமான செய்தியும் சொல்லப் போகிறேன்” என்றார். உடனே இரமேஷ் “சொல்லுங்க டாக்டர்” என்றான். “நீ உனத...ு நண்பனைக் காப்பாற்றியபடியால் நீ சுகமடைந்து விட்டாய் என நினைக்கிறேன். நீ வீடு செல்லலாம். இது நல்ல செய்தி” “துக்கமான செய்தி நீ கிணற்றில் இருந்து காப்பாற்றிய உனது நண்பன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துவிட்டான்” டாக்டர் பேசி முடித்த உடன் அழகன் ஆர்வமுடன் சொன்னார்.., “டாக்டர் … அவன் சாகவில்லை. கிணறில் விழுந்து நனைந்தவனை ஈரம் காயட்டும் என்று நான் தான் அவனது கழுத்தில் கயிற்றினைக் கட்டி மரத்தில் தொங்க விட்டிருக்கிறேன். ஈரம் காய்ந்ததும் அவன் சுகமாகிவிடுவான்”….......

பெண்மையின் சிறப்பு தாய்மையில் இருக்கு

    தாயும்_தாரமும்
    தாய் - கருவில் சுமப்பவள்!
    தாரம் - கழுத்தில் சுமப்பவள்!!
    தாய் - பெத்தெடுப்பவள்!
    தாரம் - தத்தெடுப்பவள்!!...
    தாய் - இதயத் துடிப்பு தந்தவள்!!
    தாரம் - இயக்கத்தில் துடிப்பு தருபவள்!!
    தாய் - அனைவருக்கும் முதல் தொட்டில்!
    தாரம் - இரண்டாவது தொட்டில்!!
    தாய் - உலகில் முதல் தெய்வம்!
    தாரம் - தாய்க்கு நிகரான தெய்வம்!!
    தாய் - பந்தய களம்வரை அழைத்து வருபவள்!
    தாரம் - பந்தயத்தில் பங்கு பெறுபவள்!!
    தாய் - உயிர்!
    தாரம் - உடலும் உயிரும்!!
    தாய் - நேற்று இன்று!
    தாரம் - இன்று நாளை!!
    தாய் - உலகின் தோற்றம்!
    தாரம் - உலகின் வளர்ச்சி!!
    தாரம் - இல்லாமல் அமையாது
    சிறந்த தாய்மை!!!
    தாய்மை - இல்லாமல் அமையாது
    சிறந்த பெண்மை!!!
    இயற்கையின் சிறப்பு பெண்மையின் படைப்பு!!!
    பெண்மையின் சிறப்பு தாய்மையில் இருக்கு !!!...........

அது மட்டுமே நிரந்தரம்


    உன் இறுதிக் காலத்தில் நீ எ
    அது மட்டுமே நிரந்தரம்
    தையும் உன்னுடன் கொண்டு போக முடியாது....
    ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.
    கடவுள்: "வா மகனே..........
    நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......."
    ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா?
    இவ்வளவு சீக்கிரமாகவா?
    என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"
    "மன்னித்துவிடு மகனே........
    உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........."
    "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
    "உன்னுடைய உடைமைகள்........."
    "என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?"
    "இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........."
    "என்னுடைய நினைவுகளா?............."
    "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........"
    "என்னுடைய திறமைகளா?..........."
    "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........
    அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......."
    "அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......"
    "மன்னிக்கவும்...........
    குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........."
    "அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"
    "உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............"
    "என் உடல்?..........."
    "அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று........."
    "என் ஆன்மா?"
    "இல்லை........அது என்னுடையது.........."
    மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு..........
    கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எனக் கேட்க,
    கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை.
    நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.
    வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.
    ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய்.
    எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........"
    -- ஒவ்வொரு நொடியும் வாழ்
    -- உன்னுடைய வாழ்க்கையை வாழ்
    -- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே......

    .அது மட்டுமே நிரந்தரம்.......
    -- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது....

ithu


manithan


unara


maruinthu



dimanche 22 novembre 2015

பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என..........!.


பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என..........!.
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா?
அதன் விளக்கம் பின்வருமாறு:-
1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)
2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)
3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)
5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)
6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)
9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத குழந்தைகள்)
10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)
11.மாறாத வார்த்தை (வாய்மை)
12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)
14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)
15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)
இந்த பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும்

samedi 14 novembre 2015

அகதியாய் வந்த எனை அரவணைத்த அன்னை இன்று அழுகின்றாள்

அகதியாய் வந்த எனை அரவணைத்த அன்னை இன்று அழுகின்றாள்

mardi 10 novembre 2015

maranam


depavali


ஆசிரியை....கல்லூரி.மாணவர்.... உரையாடல்..



    ஆசிரியை....கல்லூரி.மாணவர்.... உரையாடல்..
    ஆசிரியை , ஒரு மாணவனைக் கூப்பிட்டு BOARD ல்
    அவனுக்குப் பிடித்த 3O பேர்களின் பெயர்களை எழுதச்சொன்னார்.
    அவனும் எழுதினான். அப்பா, அம்மா, மகன்,மகள், மனைவி, நண்பர்கள், தோழர்கள்,
    உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், போன்ற பெயர்களை....
    அதில் மூன்று பேர்களை எடுத்துவிடச் சொன்னார்.
    அவனும் எடுத்துவிட்டான்.மீண்டும் சில பெயர்களை எடுக்கச் சொன்னார் பக்கத்து வீட்டுக்காரர்கள், நண்பர்கள்
    போன்ற பெயர்களை எடுத்து விட்டான்....இப்படி ஆசிரியர் சொல்ல சொல்ல , எல்லா
    பெயர்களும் எடுத்த பின் மீதம் இருந்தது அப்பா, அம்மா, மகன், மகள், மனைவி, தான்...
    அதிலும் இரு பெயர்களை எடுக்கச் சொன்னார்.
    மிகவும் வேதனையுடன் தன் அப்பா, அம்மா பெயர்களை எடுத்தான். இப்போ இருப்பது BOARD ல் மகனும், மகளும், மனைவியும் தான்..
    மீண்டும் ஆசிரியர் இதில் ஒரு பெயரை எடுக்கச் சொன்னார்....
    கல்லூரி வகுப்பறையே TENSION ஆகி விட்டது. அவன்
    என்ன செய்யப்போகிறான் என்று. ஏன் என்றால் இருப்பதோ
    மகன், மகள் மற்றும் மனைவிதான்......
    மாணவனும் மிகவும் வருத்தப்பட்டு, மனம் கலங்கி
    தன் மகன், மகள், பெயரை எடுத்து விட்டான்...
    ஆசிரியை ஆடிப்போய் விட்டாள்....என்ன செய்கிறாய் நீ.. என்று...
    அப்பா, அம்மா இருவரும் வாழ்ந்து முடித்தவர்கள் , மகனோ, மகளோ, உன்னால் பிறந்தவர்கள் , வாழ்வை எதிர் பார்த்து இருப்பவர்கள் அதையும் எடுத்துவிட்டு மனைவி பெயர் மட்டும் வைத்திருக்கிறாயே ஏன்.....என்று மனம் கலங்கி கேட்டாள்........அந்த மாணவன் சொன்னான்:::::::
    அப்பா, அம்மா வாழ்ந்து முடித்தவர்கள், என் மகனோ ,வளர்ந்து,
    திருமணம் செய்து கொண்டு மனைவியுடனும், குழந்தைகளுடனும், பிறகு தன் தொழிலைப்பார்த்துக் கொண்டும்
    இருந்து விடுவான்.........அதனால் அதுவும் சரி...மகளும் திருமணம் ஆன பின் வேறு ஒருவருக்கு சொந்தம்.,.ஆனால்
    என் மனைவி பெயர் எடுக்காத காரணம்.......
    எனக்கு எல்லாமே அவள்தான். என் சகல வாழ்விலும் பங்கு கொள்கிறாள்....உறுதுணையாகவும் இருக்கிறாள்...அவள் வாழ்க்கையே
    எனக்காகத்தானே.. ...................என்றான்....
    மொத்த வகுப்பறையும் எழுந்து நின்று கை தட்டியது...
    நண்பர்களே இது ........... கணவர்களுக்கும், ..........
    மனைவிகளுக்கும்......... பொருந்தும்.......

samedi 7 novembre 2015

amma


tharmam




aa




தமிழை விற்று



    தமிழை விற்று
    பிழைப்போரும் உண்டு.
    தமிழை போற்றி
    பிழைப்போரும் உண்டு.
    தமிழை தூத்தி வலம் ...
    வருவோரும் உண்டு.
    தமிழை மதிப்போரும் உண்டு.
    தமிழை மதியாது மதி
    கெட்டவனும் உண்டு.
    தமிழை மிதிப்போரும் உண்டு.
    தமிழின் புகழ் பாடியே தன்
    உயிரன தமிழின் மரவின் வழி
    வாழ்வோரும் உண்டு.
    தமிழ் தமிழாக இருக்க அந்த தமிழை
    தலை கீழாக மாற்றி தனக்கு
    சாதகமாக்கும் சுய நல
    வாதிகள்தான் அதிகம் உண்டு.
    ஓட்டுக்கு தமிழனை கூட்டு
    சேர்க்கான். ஒலி பெருக்கி
    முன் நின்று அழகிய தமிழில்
    குரல் கொடுக்கான்.
    தன் வீட்டுக்கு வந்து விட்டால்
    பிற மொழியில் பிழந்து கட்டுகிறான்.
    ஆங்கில பாட சாலையை தேடி
    ஒடுகிறான் தன் மக்களின் படிப்பை
    பெருக்க.
    பச்சோண்டிகளால்
    பச்சைத்தமிழும் நோண்டியாகி
    தமிழனும் ஆண்டியானான்.

mercredi 4 novembre 2015

நம்பிக்கை!



 
ஓர் உணவுவிடுதியில் ஒரு வயதான தகப்பனும் இளம் வயது மகனும் உணவருந்த வந்தனர்!
தந்தைக்கு வயதானதால் அவரால் கைநடுக்கம் கட்டுப்படுத்த முடியவில்லை! இதனால் உணவை எடுத்து சாப்பிட இயலவில்லை! அதனால் மகன் ஊட்டி விட முயற்சித்தான்! அதையும் அவர் அனுமதிக்கவில்லை!
தானே சாப்பிட முற்பட்டு உணவை மேலேயும் கீழேயும் சிந்திக்கொண்டு அந்த பகுதியையே அசுத்தப்படுத்திக்கொண்டு இருந்தார்! வாயில் ஜொள் வேறு! ஆனால் அந்த மகனோ சற்றும் அருவெறுப்பு இன்றி பொறுமையை இழக்காமல் அவரது வாயை, உடையை எல்லாம் சுத்தம் செய்ததும் இல்லாமல் கழிவறைக்கும் பொறுப்பாக கூட்டி சென்று சுத்தம் செய்து அழைத்து வந்தான்!
இதையெல்லாம் அங்கிருந்த கூட்டம் அருவெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்ததும் இல்லாமல் சிலர் வெளிப்படையாக முணுமுணுக்கவும் செய்தனர்! சிலரோ அந்த பையனை கேலியுடன் பார்த்து சிரித்தவாறு இருந்தனர்!
இதையெல்லாம் பொருட்படுத்தாத பையன் பில் தொகையை செலுத்திவிட்டு கிளம்பினான்! வாசல் வரை வந்த போது ஒரு கணீரென்ற குரல் தடுத்து நிறுத்தியது!
"தம்பி! நீ சிலவற்றை இங்கே விட்டு செல்கிறாய்!"
என்று
ஒரு நடுத்தர வயதை தாண்டிய ஒரு நபர் தான் அவ்வாறு அழைத்தது!
பையனோ குழப்பத்துடன் சொன்னான்!
"நான் எதுவும் விட்ட மாதிரி தெரியலையே!"
அதற்கு அவர் சொன்னார்!
"இரண்டு விசயங்களை நீ விட்டு செல்கிறாய்!
முதலாவது இங்கே இருக்கும் இளைஞர்களுக்கு படிப்பினை!
இரண்டாவது இங்கே இருக்கும் என்னை போன்றவர்களுக்கு நம்பிக்கை! "
அங்கிருந்த அத்தனை பேரும் வாயடைத்து நின்றனர்!

யார் முட்டாள்?




~~~~~~~~~~~~
சலூன் கடை காலை வழக்கம் போல இயங்க ஆரம்பித்தது.
ஒரு சிறுவன் கடைக்குள் நுழைந்தான்.
உடனே கடைக்காரர் வாடிக்கையாளர் காதில் ரகசியமாக “உலகத்திலேயே முட்டாள் இந்தப் பையன் தான்” என்றான்
“எப்படி சொல்கிறாய்?”
“இப்போது பாருங்கள்” என்று சொல்லி தன் ஒரு கையில் 5 ரூபாய் நாணயமும் இன்னொரு கையில் இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களையும் வைத்து அச்சிறுவனிடம் “எந்தக் கையில் இருப்பது வேண்டுமோ எடுத்துக் கொள்” என்றான்.
அந்த சிறுவன் உடனே இரண்டு ஒரு ரூபாய்களையும் எடுத்துக்கொண்டு போய் விட்டான்.
“நான் சொன்னேன் பார்த்தீர்களா?” என்றான்.
உடனே வெளியே வந்த வாடிக்கையாளர் அச்சிறுவன் ஐஸ்கிரீம் சாப்பிடுவதைப் பார்த்தார். அவனிடம் வந்து “ஐந்து ரூபாயை எடுக்காமல் ஏன் இரண்டு ரூபாயை எடுத்தாய்?” என்றார்
அவன் கிளம்பிக்கொண்டே சொன்னான், “ஐந்து ரூபாயை எடுத்தால் அன்றோடு விளையாட்டு முடிந்து விடுமே”
இப்போ சொல்லுங்க !... யாருங்க முட்டாள் !....

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை.



 
1) வண்ணங்களில் இல்லை வாழ்க்கை.
மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !!!!
2) தனியாக இருக்கும்பொழுது சிந்தனையிலும்.
கூட்டத்தில் இருக்கும்பொழுது வார்த்தையிலும்
கவனமாக இருக்க வேண்டும் ....!
3) பணத்திற்காக அன்பு வைக்காதே அது பாதியிலே விலகி விடும்.
அழகுக்காக அன்பு வைக்காதே அது அர்த்தமின்றி போய்விடும்.
அன்புக்காக அன்பு வை அது அஜந்தா ஓவியம் போல் நிலைத்திருக்கும்...
4) அழகை நேசிக்காதே அறிவை நேசி,
பணத்தை நேசிக்காதே பாசத்தை நேசி,
ஆடம்பரத்தை நேசிக்காதே அடக்கத்தை நேசி,
ஆணவத்தை நேசிக்காதே அன்பை நேசி
ஏனெனில் ஆணவம் அழிவுப்பாதையை விரைவில் நோக்கி செல்லும்...!!
5) துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு.
ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.
6) அலட்சியமாக விடும் சிறு சிறு தவறுகள்
நேசிக்கும் ஒருவர் உறவையே பிரித்திடும்...
7) துடிக்கும்போது யாரும் கவனிக்கமாட்டார்கள்
நின்றுவிட்டால் பலரும் துடிப்பார்கள்.......
8) கனவுகளை நேசியுங்கள். ஆனால்- நிஜத்தோடு நெருங்கி வாழுங்கள்
9) கோபம் உன்னை நேசிப்பவர்களை கூட வெறுக்க வைக்கும்...
ஆனால் அன்பு உன்னை வெறுப்பவர்களைக் கூட நேசிக்க வைக்கும்.....

அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.



 
1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது

அமைதி கொள்!


வாடா மல்லிக்கு வண்ணம்
உண்டு வாசமில்லை,
வாசமுள்ள மல்லிகைக்கோ
வயது குறைவு.
வீரமுள்ள கீரிக்கு கொம்பில்லை,
கொம்புள்ள கடமானுக்கோ
வீரம் இல்லை.
கருங்குயிலுக்குத்
தோகையில்லை
தோகையுள்ள மயிலுக்கோ
இனிய குரலில்லை.
காற்றுக்கு
உருவமில்லை
கதிரவனுக்கு நிழலில்லை
நீருக்கு நிறமில்லை
நெருப்புக்கு ஈரமில்லை
ஒன்றைக் கொடுத்து
ஒன்றை எடுத்தான்,
ஒவ்வொன்றிற்கும் காரணம்
இறைவன்.
அற்பம் நீ உனக்கெதற்கு
பூரணத்துவம்?
எவர் வாழ்விலும் நிறைவில்லை
எவர் வாழ்விலும் குறைவில்லை
புரிந்துகொள் மனிதனே
அமைதி கொள்!