முகப்பு

samedi 31 décembre 2011

எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்......!!!

 
தித்திக்கும் இந்நாளில் இன்புறுவோம் நட்போடு.!!

சுயநலம் இல்லாத பொதுநலம் கொண்டிடுவோம்.!!

சுற்றம் போற்ற சுகமாய் வாழ்ந்திடுவோம்>!!

நட்புக்கடலில் ஒன்றாக முக்குளிப்போம்.!!

எல்லோரும் புத்தாண்டில் வளம்பெற வாழ்த்திடுவோம்!!

எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்......!!!

jeudi 29 décembre 2011

அவள் அழகு


கல்லில் சிலை அழகு

சொல்லில் தமிழ் அழகு

மானில் விழி அழகு

தேனில் சுவை அழகு

வானில் நிலவு அழகு

இளவேனிலில் தென்றல் அழகு

இதயத்தில் காதல் அழகு

காதலில் மாலை அழகு

மாலையில் மலர் அழகு

மலரில் மது அழகு

மதுவில் அருந்தும் வண்டு அழகு

புருவத்தில் வில் அழகு

புன்னகையில் முத்து அழகு

கண்களில் கயல் அழகு

கற்பனையில் கவிதை அழகு

கவிதையில் பொய் அழகு

பொய்யில் புதுமை அழகு

புதுமையில் அவள் அழகு
 
(Peratheepan Theepan)



mercredi 28 décembre 2011

மாறுமா இந்த நிலை....???


பட்டுடுத்தி
வரும் பெண்ணை
ஸ்ரீதேவி
என்றும்...
அதே
பெண்
வெள்ளை உடுத்தி வந்தால்
மூதேவி
என்கிறதே இவ்வுலகம்....
ஏன் இந்த நிலை.....
மாறுமா இந்த நிலை....???

"கல்லறைக்கு

என்
காதலி
கல்லறைக்கு
வருவாள் என்று....
சிந்தித்திருந்தால்
வந்திருக்க
மாட்டேன் "கல்லறைக்கு".......

mardi 27 décembre 2011

எழு தோழா


எறும்பு போல் வேகம் பெறுவோம்,
மனதில் நிலவை போல் காட்சி தருவோம் 
 உலகில் கதிரவனாய் இருப்போம் 
பகைவருக்கு சந்திரனாய் இருப்போம் 
நல்லவர்க்கு அமைதியாய் இருப்போம் 
நன்மைக்கு வேகமாய் நடப்போம்
கடமைக்கு துணிச்சலாய் இருப்போம் 
பூமிக்கு துணிச்சலாய் இருப்போம்
பூமிக்கு துணிவோடு எதையும் வென்றுவிடுவோம்
நாட்டிற்கு நம் தேசத்திற்கு 
எழு தோழா ,எழு தோழா, எழு தோழா 

வெற்றி


நீ பெரிசா நான் பெரிசாங்கறது
இல்லம்மா வெற்றி. நீங்க
ரெண்டு பேரும் சேர்ந்து வாழுற
வாழ்க்கை பெரிசுங்கறதை நீயும்
அவரும் புரிஞ்சுக்கணும்.
அதுதாம்மா வெற்றி.

lundi 26 décembre 2011

அழகு?


வானில் ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும்
வானிற்க்கு அழகு நிலவு தான்
அது போல புவியில் ஆயிரம் பெண்கள் இருந்தாலும்
என் வாழ்க்கைக்கு அழகு நீ தான்

அம்மா


அம்மா 
உன் வலியால் பிறந்ததனால் என்னவோ
வலி பிறக்கும் போதெல்லாம் உன்னையே அழைக்கின்றேன்
“அம்மா ” என்று

இனிய நத்தார் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

வாசகர்களுக்கு இனிய நத்தார் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

vendredi 23 décembre 2011

தூக்கம் பற்றிய ஒரு சுவாரசிய ஆய்வு


தூக்கம் பற்றிய ஒரு சுவாரசிய ஆய்வு


ஆழ்ந்த தூக்கம் தான் ஒரு மனிதனை விழிப்பிற்குப் பின் சுறுசுறுப்பாக்கும். அந்த தூக்கத்திற்காக இன்று தடுமாறுபவர்கள் ஏராளம்.
படுத்ததும் தூங்கிப் போனால் அது அவருக்கு வரம். தூக்கம் வராமல் கண்ணை பிராண்டினால் அதுவே சாபம்.
சிலர் படுத்த நீண்ட நேரத்திற்குப் பின்னரே உறங்குவார்கள். இன்னும் சிலர் எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கமின்றி தவிப்பார்கள். தூக்கம் வரும் போது, நேரம் விடியலை நெருங்கியிருக்கும்.
சிலர் தூக்கம் வருவதற்காக 100ல் இருந்து பின்னோக்கி எண்ணுவார்கள். அவ்வாறு எண்ணும்போது அவர்களது முழுக் கவனமும் எண்களில் கரைந்துவிட சிறிது நேரத்தில் தங்களை மறந்து தூங்கிப் போவார்கள். இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அங்குள்ளவர்களுக்கு தூக்கம் வருவதற்கு குறைந்தது 37 நிமிடங்கள் ஆவது தெரியவந்தது.
ஆழ்ந்த தூக்கத்திற்காக அவர்கள் மெல்லிசையை விரும்பி கேட்கிறார்கள். மெல்லிசையை கேட்டுக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவார்களாம்.
அவர்களில் சிலர் இயற்கையான சப்தங்களை கேட்டுக்கொண்டே தூங்க முயற்சிப்பதும் ஆய்வில் தெரியவந்தது. அதாவது சீச்சிடும் பறவைகளின் ஒலிகள், மெல்லிய காற்றின் இரைச்சல், நீரோடையின் சலசலப்பு போன்றவை அவர்களது தூக்கத்தை எளிதில் வரவழைக்க பயன்படுகின்றனவாம்.
சிலர் மிகப் பழமையான முறையான புத்தகம் படிப்பதையும் தூக்கம் வருவதற்காக பயன்படுத்துகிறார்களாம். இன்னும் சிலர் துணையுடன் பேசிக்கொண்டே தூங்கிப் போகிறார்களாம்.
இவை தவிர கடிகாரத்தின் டிக் டிக் ஓசை, சாலையில் செல்லும் வாகனங்களின் சப்தமும் இங்கிலாந்து நாட்டவர்களின் தூக்கத்தை வரவழைக்கும் விடயங்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பதும் ஆய்வில் தெரியவந்தது.



வாழ்வின் இறுதிதான்


ஒரு மனிதனின் மதிப்பு அவன் வாழ்ந்த வருடங்களின் எண்ணிக்கையாலோ அல்லது செய்த வேலையாலோ அளக்கப்படுவதில்லை. ஒரு மனிதனின் மதிப்பு அவன் உருவாக்கிய நடத்தையால்தான் அளக்கப்படுகிறது.

வாழ்வின் அந்திம காலத்தை நம்பிக்கையோடும் சந்தோஷத்தோடும் அணுகுங்கள். வாழ்வின் இறுதியை ஆர்வத்தோடு அணுகுங்கள், சோகத்தோடு அல்ல. ஏனெனில் வாழ்வின் இறுதிதான் சிறப்பானது, கடவுளை நம்புங்கள்.

lundi 19 décembre 2011

மனித வாழ்வின் நோக்கமும் இறுதி இலட்சியமும்


மனத்தை நீ எப்படி வைத்திருக்கிறாயோ அந்த நிலையைப் பொறுத்தே நீ அடையும் சந்தோஷத்தின் அளவு இருக்கிறது. ஏனென்றால் வாழ்வின் அர்தமும் நோக்கமும், சந்தோஷம்தான். மனித வாழ்வின் நோக்கமும் இறுதி இலட்சியமும் அதுதான்.
திருப்திக்கான வழிமுறைகள் நம்மிடையே வளர்தெடுக்கப்படாவிட்டால் பொருளாதார வெற்றிகள் முதல் எவ்வளவு வெற்றிகள் வந்தாலும் அவை நம்மை மகிழ்விக்காது. திருப்திப்படத் தெரியாதவனுக்கு தீர்வு என்னவென்று தெரியாது. சந்தோமான வாழ்வுக்கு ஒரு சிலதுதான் தேவை. அவை உங்களிடமே இருக்கின்றன, உங்கள் சிந்தனா முறையில் இருக்கின்றன.

கடவுள் எல்லோரையுமே சந்தோஷமாகத்தான் படைத்திருக்கிறார்.


என்ன செய்ய முடியும் என்பதை அறிவதைவிட நம்மால் என்ன செய்ய முடியாது என்பதை அறிவதே முக்கியம். வேறு யாராகவும் இருக்க முயலாமல் தானாகவே தன் சொந்த இயல்பிலேயே இருக்க முயல்வதுதான் வீரமும் விவேகமும்.

ஒரு மனிதன் சந்தோஷமின்றி இருந்தால் அவனது சொந்தத் தவறுதான் அதற்குக் காரணம் என்பதை நினைவில் வையுங்கள். ஏனெனில் கடவுள் எல்லோரையுமே சந்தோஷமாகத்தான் படைத்திருக்கிறார்.



வாழ்க்கை



வாழ்க்கையைப்பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரிகிறது என்பதைவிட நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். அடுத்தவர் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, தவறு செய்யாமல் இருப்பவர்கள் துன்பங்களில் சிக்குப்படமாட்டார்கள். நிச்சயமற்ற இந்த உலகில் மனித அனுவம் என்ற கடந்த காலச் சரித்திரமே நமக்கு தெரிந்தவற்றிலேயே நிச்சயமானது, நம்பகமானது

மூட நம்பிக்கைகளை முறியடிக்க வேண்டும்..!


வாழையடி வாழையாக விழுந்த மனக்கோலங்களை நிமிர்த்த வேண்டும்…!

சூழலின் இறுக்கத்தைத் தளர்த்த வேண்டும்..!

குழப்பமுள்ள எண்ணங்களை திருத்த வேண்டும்..!

தளர்ந்துவிட்ட நம்பிக்கைகளை தூக்கி நிமிர்த்த வேண்டும்..!

தாழ்ந்துவிட்ட சுய மரியாதைக்கு உயிரூட்ட வேண்டும்..!

மூட்டமிடும் மூட நம்பிக்கைகளை முறியடிக்க வேண்டும்..!

எதிர்ப்படுகிற தடைகளை தகர்க்க வேண்டும்..!



lundi 12 décembre 2011

ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிவது ஏன்?

ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிவது ஏன்?

சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் ருத்ராட்ச மாலையும், துளசி மாலையும் அணிந்து விரதமிருந்து செல்வார்கள். சிவனும் பெருமாளும் இணைந்து ஒரு மாபெரும் சக்தியாக உருவானவர் ஐயப்பன். இதில் ருத்ராட்சம் என்பது சிவனின் சின்னமாகும். துளசி என்பது பெருமாளுக்கு மிகவும் பிடித்தமானது. இது தவிர, துளசியின் கதையில் துளசியிடம் மஹாலட்சுமி வாசம் செய்கிறாள். ஆகையால் மலைக்குப் போகும் பக்தர்களுக்கு ஐஸ்வர்யம், சுபீட்சம் கிடைக்கும் என நம்பிக்கையும் உண்டு.
கார்த்திகை மாதத்தில் தொடங்கி, தை மாதம் வரை குளிர் இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும். இந்தத் துளசிக்கு உஷ்ணம் கொடுக்கும் தன்மை உண்டு. சளி, ஜலதோஷம் என்றால் துளசி கஷாயம் சாப்பிடுவது வழக்கம். ஐயப்ப பக்தர்கள், உடலில் வெப்பம் கொடுக்கத்தான் இந்தத் துளசி மாலையை அணிகின்றனர். மஹாவிஷ்ணு பாற்கடலில் சயனித்திருக்க, அவர் கழுத்தையும் துளசி மாலை அலங்கரிக்கும். இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் ருத்ராட்சம் மற்றும் துளசி மாலையணிந்து சபரிமலை செல்கின்றனர்.

வேண்டும்!



நமக்குத்தான்

துயில் எழுப்புவதற்கு

சேவல்

கடிகாரம் எல்லாம்......

அந்த சூரியனுக்கேது?

கண்களில் முயற்சி

கைகளில்

நம்பிக்கை

மனதில்

இலட்சியம்

வேண்டும்!

dimanche 11 décembre 2011

தடையில்லை!



மரங்களின் வேர்கள் மண்ணோடு
மலர்களின் வாசனை காற்றோடு
உறவுகள் இருக்கட்டும் வாழ்வோடு
உணர்வுகள் கலக்கட்டும் வானோடு


இப்படி பூமியில் பிறக்கும்வரை
இருந்தோம் கருவில் கண்மூடி
தொப்புள்கொடியை வெட்டியபின்
தானாய் வளர்ந்தோம் உறவாடி


உனக்கென உறவுகள் அவசியம்தான்
உயர்வுக்கு அலையும் உடனிருக்கும்
தனக்கென மட்டும் வாழாதே
திசைகள் எட்டும் திறந்திருக்கும்


வீடு மட்டும் நீயில்லை
வரவும் செலவும் நீயில்லை
கூடு பறவையின் இடமில்லை
குதித்துக் கிளம்பு! தடையில்லை!

mardi 6 décembre 2011

வேரில் இருந்துதான் பூ வருகிறது.


பூவிலிருந்து வேர் வருவதில்லை, வேரில் இருந்துதான் பூ வருகிறது. காற்றிலோ, விண்ணிலோ அழகாக மலரும் எதுவுமே தன் அழகை, சக்தியை வேரிலிருந்துதான் பெறுகிறது.

மண்ணில் புதைந்த ஆழமான வேர்களின் சாறினால்தான் உயிருள்ள எல்லாம் பூத்து நிற்கின்றன. கன்னத்தில் மறைந்திருக்கும் வெட்கம் மண்ணின் வேதியல் பொருட்களில் மறைந்திருக்கும் அமைதியான உயிர் சக்தியில் இருந்துதான் வருகிறது. மண்ணைப் பிரிந்து வானில் பூக்க முடியாது
மண்ணில் இருந்து, பூமியின் அமைதியான மடியில் இருந்துதான் வாழ்வின், சக்தியின் ஊற்று வெளிப்படுகிறது. மண்ணிலிருந்து, மக்களின் அமைதியான இதயத்தில் இருந்து நம்பிக்கையும், உறுதியும் சந்தோஷத்தோடு வெளிப்பட்டு பூமியின் அழகை புதுப்பிக்கிறது.

சந்தோஷம்


நம்மிடம் என்ன இருக்கிறதோ அது போதுமான திருப்திகரமான அளவு இருப்பதாக திருப்தியடைவதுதான் உண்மையான சந்தோஷம். ஏனெனில் அப்படிப்பட்டவனுக்கு எதுவுமே தேவையில்லை. செல்வத்தாலோ புகழாலோ மேன்மைப்படுத்தவும், தாழ்வுபடுத்தவும் முடியாத மனத்தின் சமநிலைதான் சந்தோஷம். சந்தோஷமான மனிதனை ஆரோக்கியமான மனம்தான் உருவாக்கும்.




சந்தோஷம்


மனத்தை நீ எப்படி வைத்திருக்கிறாயோ அந்த நிலையைப் பொறுத்தே நீ அடையும் சந்தோஷத்தின் அளவு இருக்கிறது. ஏனென்றால் வாழ்வின் அர்தமும் நோக்கமும், சந்தோஷம்தான். மனித வாழ்வின் நோக்கமும் இறுதி இலட்சியமும் அதுதான்

வாழ்க்கை


வாழ்க்கையைப்பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரிகிறது என்பதைவிட நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். அடுத்தவர் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, தவறு செய்யாமல் இருப்பவர்கள் துன்பங்களில் சிக்குப்படமாட்டார்கள். நிச்சயமற்ற இந்த உலகில் மனித அனுவம் என்ற கடந்த காலச் சரித்திரமே நமக்கு தெரிந்தவற்றிலேயே நிச்சயமானது, நம்பகமானது.

samedi 19 novembre 2011

அன்பு காணிக்கை


உந்தன் மெளனத்தில்.

எந்தன் வார்த்தை கலந்திருக்கும்...

உந்தன் இதயத்தில்.

என் நினைவுகள் நிறைந்திருக்கும்...

உந்தன் உறவில்.

எந்தன் பாசம் நிறைந்திருக்கும்...

உந்தன் உயிரில்.

என் நேசம் மலர்ந்திருக்கும்...

என்றும் உந்தன் கனவுகளை

என் நெஞ்சம் சுமந்திருக்கும்...

உந்தன் அன்புக்காக..!!

என் இனிய அன்பு காணிக்கை

. ராஜி.

பூமியின் அழகை புதுப்பிக்கிறது.


பூவிலிருந்து வேர் வருவதில்லை, வேரில் இருந்துதான் பூ வருகிறது. காற்றிலோ, விண்ணிலோ அழகாக மலரும் எதுவுமே தன் அழகை, சக்தியை வேரிலிருந்துதான் பெறுகிறது.

மண்ணில் புதைந்த ஆழமான வேர்களின் சாறினால்தான் உயிருள்ள எல்லாம் பூத்து நிற்கின்றன. கன்னத்தில் மறைந்திருக்கும் வெட்கம் மண்ணின் வேதியல் பொருட்களில் மறைந்திருக்கும் அமைதியான உயிர் சக்தியில் இருந்துதான் வருகிறது. மண்ணைப் பிரிந்து வானில் பூக்க முடியாது
மண்ணில் இருந்து, பூமியின் அமைதியான மடியில் இருந்துதான் வாழ்வின், சக்தியின் ஊற்று வெளிப்படுகிறது. மண்ணிலிருந்து, மக்களின் அமைதியான இதயத்தில் இருந்து நம்பிக்கையும், உறுதியும் சந்தோஷத்தோடு வெளிப்பட்டு பூமியின் அழகை புதுப்பிக்கிறது.

jeudi 17 novembre 2011

நாம்

நான் என்பது தனியாகும்


நீ என்பது வெறுமையாகும்

நாம் என்பது இனிமையாகும்

என் மனதும்!! ♥


சின்னச் சின்ன கோபத்தில்

சின்னச் சின்ன வாக்குவாதங்களில்

சின்னச் சின்ன சண்டைகளில்

சின்னச் சின்ன தேடல்க‌ளில்

சின்னச் சின்ன ஊடல்களில்

சின்னச் சின்ன மௌனங்களில்

சின்னச் சின்ன பிரிவுகளில்

சின்னச் சின்ன எதிர்பார்ப்புக்களில்

சின்னச் சின்ன எதிர்ப்புகளில்

சின்னச் சின்ன பிடிவாதங்களில்

சின்னச் சின்ன வார்த்தைகளில்

தொலைந்த போது தான்

புரிந்து கொண்டோம் நாம்

நம் உறவுகளின்

மகத்துவத்தையும்

அதன் தனித்துவத்தையும். ♥

நீ விட்டுச் சென்ற சாலையோரம்

காத்துக் கிடக்கிறது

சாலையோரப்

பூக்களுடன் பூவாய்

என் மனதும்!! ♥

அன்புடன்

ரோஜா.
Par : Rose Spellman

.

அவன் பின்னால்



தொலைத்தலும் இழத்தலும்

என் வாழ்வின் வழமையாய்...

எல்லாம் இருந்தும்

எதுவுமே இல்லாதவளாய்...

வெறுமையாய்

என்னையே வெறுத்து

நின்ற வேளை

ஒளி தந்து

விழிதந்தவனாய் ஒருவன்.

இருளுக்குத்

தத்துவம் சொல்லி

வெளிச்சத்தை

அறிமுகம் செய்தவன் அவன்.

அதனாலேயே

என் பயணம்

இன்னும் தொடர்கிறது

அவன் பின்னால்.

lundi 14 novembre 2011

மனித சுதந்திரத்திற்கு நான்கு முக்கிய விடயங்கள்


மனித சுதந்திரத்திற்கு நான்கு முக்கிய விடயங்கள் அடிப்படையானவை :

முதலாவது : உலகம் முழுவதும் பேச்சுக்கும், எழுத்துக்கும் சுதந்திரம்.
இரண்டாவது : உலகம் முழுவதும் ஒவ்வொரு மனிதனும் தனக்கே உரிய விதத்தில் கடவுளை வணங்கும் சுதந்திரம்.
மூன்றாவது : தேவைகளுக்கான சுதந்திரம், ஒவ்வொரு நாடும் தமது மக்களுக்கு ஆரோக்கியமான சமாதான காலத்தை வழங்குவது.
நான்காவது : பயத்தில் இருந்து விடுதலை. எந்த நாடும் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் ஆயுத வன்முறையை செலுத்தாமல் இருக்க வேண்டும்.

இலட்சியங்களை துறப்பதால்


உங்கள் நரை முடி குறித்து வெட்கப்படாதீர்கள் அதை ஒரு கொடிபோல பெருமையாக அணியுங்கள். ஏனென்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் இந்த நரைமுடியை பார்க்காமலே பலர் புவியில் இறந்துவிட்டார்கள். இதைப் பார்க்கும்வரை உங்களுக்கு வாழக் கிடைத்தது எத்தனை சிறப்பு என்று எண்ணுங்கள்.

மூளை நன்கு வளர்ந்து மூளையில் உள்ள வெண்ணிற செல்கள் நரை முடியாக வெளியே வருகின்றன அது பெருமைக்குரியதே.
இளமை என்பது வாழ்வின் பாகமல்ல அது ஒரு மனோநிலை. இளமை என்றால் பயத்தை தைரியம் வெற்றி கொள்ளும் மனோநிலை.
வருடங்களை கடப்பதால் ஒருவனுக்கு வயதாவதில்லை. தங்கள் இலட்சியங்களை துறப்பதால்தான் ஒருவனுக்கு வயதாகிறது.

முதுமை


உங்கள் நம்பிக்கையைப் போலவே
இளையவராக இருக்கிறீர்கள்,
சந்தேகத்தைப் போலவே
முதியவராக இருக்கிறீர்கள்,
தன்னம்பிக்கையைப் போலவே
இளைஞராக இருக்கிறீர்கள்,
பயத்தைப் போலவே
முதியவராக இருக்கிறீர்கள்,
விசுவாசத்தைப் போலவே
இளைஞராக இருக்கிறீர்கள்.

முதுமை என்பது எப்போதுமே உங்களை விட 15 வயது அதிகமாக இருப்பது என்று எண்ணிக் கொள்ளுங்கள்.

இதயத்தில்


இலையுதிர் காலம் என் தலையில் இருக்கிறது ஆனால் வசந்த காலம் என் இதயத்தில் இருக்கிறது.




வயது என்பது மனதின் தன்மை



வயது என்பது மனதின் தன்மை

உங்கள் கனவுகளை நீங்கள் தொலைத்துவிட்டால்

நம்பிக்கை இழந்து விட்டால்

எதிர் காலத்தை நீங்கள் எதிர்பார்க்காவிட்டால்

உங்கள் இலட்சிய தாகம் அடங்கிவிட்டால்

நீங்கள் வயதானவர்தான்.

ஆனால் வாழ்வில் இருந்து சிறந்ததை நீங்கள் எடுத்து

விளையாட்டாக உங்களால் இருக்க முடிந்தால்

அன்பாக இருந்தால்

எவ்வளவு வருடங்கள் கடந்தாலும்

எத்தனை பிறந்த நாள் போனாலும்

உங்களுக்கு வயதாவதில்லை.

இனிமையானவை


கவலையோ குழப்பமோ இன்றி ஒவ்வொரு நாளையும் வரவேற்று, தனக்கு விதிக்கப்பட்ட செயல்களை செய்து, சந்தோஷமாக, பயமற்று வாழுங்கள். நல்ல நண்பர்களை உருவாக்குங்கள், நல்ல நினைவுகளை எண்ணி மகிழுங்கள், காலம் மறைவதை புறக்கணியுங்கள், எதிர் காலத்தை மட்டும் பாருங்கள் வாழ்வில் சிறந்தது இனிமேல்தான் வரப்போகிறது.

வயதான காலத்தை அரவணைத்து நேசியுங்கள். அதை எப்படி நேசிப்பது என்று உங்களுக்கு தெரிந்தால் அதில் சந்தோஷம் மிதமிஞ்சி இருக்கிறது. மெதுவாக கடந்து செல்லும் வருடங்கள்தான் ஒரு மனித வாழ்வில் மிக இனிமையானவை. அவை இறுதியை அடைந்துவிட்டாலும் அதன் சந்தோஷங்கள் மாறுவதில்லை.

vendredi 11 novembre 2011

துடிப்பது .......


விழியோரம் நீர் துளிகளுடன்

உன் வருகைக்காய் ஏங்கும்

என் இதயம்.......
 
துடிப்பது .......
 
உனக்காய் காத்திருக்கிறேன்




உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக்கும் குங்குமப்பூ


உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக்கும் குங்குமப்பூ


குங்குமப்பூவில் உள்ள மூலப்பொருள்கள் மூளை உள்பட உடல் உறுப்புகள் அனைத்தையும் சுறுசுறுப்பாக்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

குங்குமப்பூவுக்கு பல மருத்துவ குணங்கள் இருப்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கனடாவின் அல்பர்ட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சிரிஸ் போவர் தலைமையில் இதுதொடர்பான ஆய்வு சமீபத்தில் நடந்தது.


உடல் உறுப்புகள் குறிப்பாக மூளையின் செயல்பாட்டை குங்குமப்பூ துரிதப்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது. குங்குமப்பூவில் உள்ள பொருள்கள் மூளையில் உள்ள செல்கள் பாதிப்படையாமல் பாதுகாப்பதால் மூளை செயல்பாடு அதிகரிப்பதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதனால் நரம்பு மண்டலமும் வலுவடையும் என்கின்றனர். இதுபற்றி அவர்கள் மேலும் கூறுகையில், மூளை செல்கள் பாதிப்படைவதால் ஏற்படும் நிலை மைலின் எனப்படுகிறது. இந்த நிலையில் நரம்புகளைச் சுற்றி ஒரு மெல்லிய திரை போன்ற கவசம் உருவாகும்.

இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். குங்குமப்பூவில் உள்ள பொருள்கள் இந்த திரை போன்ற கவசம் உருவாகாமல் தடுக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு குங்குமப்பூ கலந்த மருந்து கொடுக்கும்போது, பாதிப்பில் இருந்து அவர்கள் விடுபட முடிகிறது. மூளை செல்களை குங்குமப்பூ பாதுகாக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் வலு சேர்க்கிறது என்றனர்.



அப்பா ஆகும் போது கெட்ட பழக்கங்கள் மறைந்து விடும்


அப்பா ஆகும் போது கெட்ட பழக்கங்கள் மறைந்து விடும்: சுவாரஸ்ய தகவல்


ஒரு ஆண் அப்பா ஆகும் போது கெட்ட பழக்கங்கள் இல்லாமல் போவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

முதன் முறையாக அப்பா ஆகும் ஆண்கள் மது, புகையிலை போன்ற தீய பழக்கங்களில் இருந்து விடுபடுவதாக Oregon மாநிலப் பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு கடந்த 19 வருடங்களாக இடம்பெற்றுள்ளது. அதில் 200 க்கும் மேற்பட்ட தீய பழக்கம் உள்ள இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் நடத்தைகள் காலப்போக்கில் குறிப்பாக திருமணம் ஆன பின்னரும் எவ்வாறு மாறுகின்றது என்பதை தீவிரமாக கண்காணித்தே ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.


திருமணமாகி அப்பா ஆன பின்னர் நல்ல பழக்க வழக்கங்கள் உடன் சமூகத்தில் இணைந்து பயணிக்கிற தன்மையை காண முடிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் Journal of Marriage என்ற இதழில் வெளியாகியுள்ளது.



பயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்


பயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்


மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். இது மனிதர்களின் உடல்நலத்தை பேணுதல், மீள்வித்தல் போன்றவற்றிற்காக உருவாக்கப்பட்ட செயல்முறைகளை உள்ளடக்கும்.

1. வெந்தயம், சுண்டைக்காய் வத்தல், மிளகு தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

2. முழு நெல்லிக்காய் 4, பச்சை மிளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.


3. வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் குணமாகும்.

4. வெந்தயக் கீரையுடன் பச்சைமிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்டினியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.

5. வில்வ பழத்தின் தோலை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தம் ஆகும்.


6. வில்வ மரத்தின் பூக்களை உலர்த்திப் பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும்.


7. வில்வ மரப் பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை அடையும்.


8. வங்கார வள்ளைக் கீரையுடன் சீரகத்தைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் பெருவயிறு குணமாகும்.

9. வங்கார வள்ளைக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.


10. மூங்கில் முளைகளை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

11. முருங்கைக் கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம் பைக் குழைத்து தொண்டையில் தடவிக் கொண்டால் இருமல் நிற்கும்.




mardi 8 novembre 2011

அழகான வாழ்வை தொலைத்துவிடுகிறார்கள்


மக்கள் இயற்கையை நேசிப்பதில்லை..! வீடுகளையும், வசதிகளையும் பெருக்கிக் கொண்டு தங்களை அடிமைப்படுத்திக் கொள்கிறார்கள். பொருளாதார இலாபத்தைத் தேடி அலைந்து இயற்கையோடு இணைந்த அழகான வாழ்வை தொலைத்துவிடுகிறார்கள்

samedi 29 octobre 2011

நீரிழிவு நோய்கான அறிகுறிகள்

நீரிழிவு நோய்கான அறிகுறிகள்



நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை கடந்த ஐந்து வருடங்களில் 50 சதவீதம் அதிகரித்து வருவதாக மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரம்பரையினால் நீரிழிவு நோய் ஏற்படுவது ஒரு வகை என்றாலும், அதிகளவு இனிப்புப் பதார்தம், மாவுப்பொருள் போன்றவை அதிக அளவு உண்பதனால் உடல் பருமன் அதிகரித்து நீரிழிவு நோய் வருவதற்கு முக்கியகாரணம் என்று தற்போதைய மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மேலும் கடைகளில் விற்கப்படும் உடனடி உணவுப் பொருட்களளை அதிகளவு உண்பதனாலும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகும். நீரிழிவு நோய் ஏற்பட்டவர்களுக்கு வெளியே தெரியக்கூடிய அறிகுறிகளாவன அதிக நீர்தாகம் ஏற்படல், உடல் பலவீனம் அடைதல், களைப்படைதல் போன்றவையாகும்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பிரித்தானிய தேசீய வைத்தியத் துறை 9 பில்லியன் பவுண்ஸ் நிதியை செலவு செய்கின்றது. 3 மில்லியன் இளைஞர்களும், சிறுவர்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

சென்ற 12 மாதங்களுக்குள் 11,7000 அதிகமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. நீரிழிவு நோயிற்காக அரசாங்கம் தனது நிதிச்செவில் பத்தில் ஒரு பகுதியை செலவிடுகின்றது.



செயற்கை ரத்தம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

செயற்கை ரத்தம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

அனைத்து வகையான அறுவை சிகிச்சைகளுக்கும் ரத்தம் தேவைப்படுகிறது. அவசர தேவையின் போது உடனடியாக ரத்தம் கிடைக்காததால் பலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதை தடுக்க தற்போது இங்கிலாந்து விஞ்ஞானிகள் செயற்கை முறையில் ரத்தம் தயாரித்துள்ளனர். இவற்றை ஸ்டெம் செல்களில் இருந்து தயாரித்து இருக்கின்றனர்.

இங்கிலாந்தின் எடின்பர்க் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதற்கான ஆய்வை மேற்கொண்டனர். ஸ்டெம்செல்களில் இருந்து ஆயிரக்கணக்கான மில்லியன் சிவப்பு அணுக்களை உருவாக்கினர். அதை பரிசோதனை கூடத்தில் வைத்து செயற்கை ரத்தத்தை உருவாக்கினர்.

இந்த ரத்தம் 25 லட்சம் சிவப்பு அணுக்களை கொண்டது. இவற்றை மனித உடலில் செலுத்த முடியும். எந்தவிதமான நோய் தொற்றும் ஏற்படாது.

இவை இன்னும் 2 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வருகிறது. இவற்றை இருதய ஆபரேசன், இருதய மாற்று ஆபரேசன் மற்றும் புற்று நோய் பாதித்தவர்களும் பயன்படுத்தலாம். இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாக்கப்படும் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.



உயிர் வாழவேண்டும்



பூசுகின்ற மஞ்சளாய்

நான்வர வேண்டும்

உன்முகம் தொட்ட சுகத்தில்

நான் கவியெழுத வேண்டும்

உன்னிரு கைகளுக்குள்

உயிர் வாழவேண்டும்

dimanche 23 octobre 2011

"AMMA" Enralaikka.


Amma

Nee parkkum pothu solla ninaikirean...!

Nee pesum pothu solla ninaikiren...!

Nee ennai mutham idum pothu solla ninaikiren...!

anal ennal solla mudiyavillai.

kaduvule..!

Enakku seekiram pesum sakthiyai kodu avalai

"AMMA" Enralaikka.

The feelings of the three month old baby....

..

jeudi 13 octobre 2011

இன்பம்


காதல் இன்பம் கடுகளவு தான் அதனால் ஏற்படும் போராட்டமோ வாழ் நாள் முழுவதுமே..(சவுந்தா)

பலம்


ஒரு கணவனின் பலம் அவன் கையிலிருக்கும் பணத்தில் இருக்கிறது.ஒரு மனைவியின் பலம் அவள் கண்ணீரில் இருக்கிறது..சவுந்தா

vendredi 7 octobre 2011

நண்பர்


ஆண்டுகள் பல ஆனாலும் சிறந்த நண்பர்களை பெற முடியாது:

ஆனால் ஒரு நொடியில் அவர்களை இழந்து விட முடியும்....சவுந்தா

lundi 3 octobre 2011

மனத்தில்


ஒரு பெண்ணின் ஒரு பெண்ணின் மனத்தில் பணத்தால் நுழைவதைவிட அன்பால் இடம்


பெறுவது நிரந்தரமாகும் - சவுந்தா

vendredi 23 septembre 2011

உன்னதமானவை.


எல்லா உறவுகளிலும் வீட்டிலும் குடும்பத்திலும் உள்ள உறவுதான் அதிக முக்கியமானவை. காதலும், கல்யாணமும், பெற்றோராக இருக்கும் குடும்ப உறவுகளில் உள்ள சந்தோஷங்கள்தான் வாழ்வின் சிறந்தவற்றுக்கெல்லாம் அடிப்படையானவை, உன்னதமானவை.




ஒவ்வொரு மனிதனும் தன் மனதிற்கு சொல்ல வேண்டிய விடயங்கள் :


ஒவ்வொரு மனிதனும் தன் மனதிற்கு சொல்ல வேண்டிய விடயங்கள் :


அ. அடுத்தவனிடம் எவ்வளவு செல்வங்கள் அதிகாரங்கள் இருந்தாலும் அதில் எனக்கு ஆர்வமில்லை.

ஆ. என் குடும்பத்திற்கும் எனக்கும் தேவையான பாதுகாப்பும், கௌரவமும் சம்பாதித்தால் போதுமானது.

இ. காற்றைத் துரத்தி கஷ்டப்பட்டு என் அமைதியை குலைக்கமாட்டேன்.

ஈ. மற்றவரிடம் என்ன இருக்கிறது என்று ஒப்பிடும் மாயச் சூழலில் இருந்து என்னை விடுவித்துக் கொள்வேன்.



பூ பூக்க


சரியான ஜோடியை தேர்ந்தெடுப்பது முக்கியமல்ல சரியான ஜோடியாக இருப்பதுதான் முக்கியம்.
திருமணம் வேருள்ளது வளர்ந்து பூ பூக்க வல்லது அதை விசுவாசமாகக் கவனிக்க வேண்டும்.



mercredi 21 septembre 2011

இதயம் இருக்குமிடம்


அன்பாய் புன்னகைக்கும் தந்தையின் அருகே அமர்வது எவ்வளவு இனிமை, அன்பாக அம்மா ஆறுதல் சொல்வது எவ்வளவு இனிமை, சன்னலால் நிலவைப் பார்க்கும் சுகம் இனிமை. இத்தனையையும் தரும் என் வீடுபோல இனிமை உலகில் எதுவும் இல்லை.

 ராஜாவானாலும், கிராமத்தவனானாலும் வீட்டில் நின்மதி காண்பவன்தான் சந்தோஷமானவன். ஏனென்றால் வீடுதான் வாழ்வின் இதயம் இருக்குமிடம்

நன்றி


நல்ல குடும்பங்களாக நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் அதற்காக கடவுளுக்கு நன்றி கூறுங்கள். உங்கள் அனைவரையும் ஒற்றுமையாக வைத்திருப்பதற்கு நன்றி கூறுங்கள். கணவன் மனைவி ஒற்றுமை, பிள்ளைகளின் பாசம் இவைகள்தான் துன்பத்தில் இருந்து முக்கிய பாதுகாப்பாக அமையும்.
 குடும்பத்தை ஆக்குவதும் அழிப்பதும் பெண்தான் அவள் அதன் விதியை தன் முந்தானை முடிச்சில் வைத்துக் கொண்டிருக்கிறாள்.



மனித குலம்


மனித குலம் சிறப்பாக வாழவேண்டும் என்றால் குடும்பங்கள் சிறந்ததாக இருக்க வேண்டும். அதைவிட சமுதாயத்தை சிறப்பாக்க வேறு எந்த வழியும் கிடையாது. ஏனென்றால் நாகரிகத்தின் அடிப்படையே குடும்பம்தான்