முகப்பு

mercredi 26 octobre 2016

இறந்த பிறகு உடலுக்கு என்ன மதிப்பு?


இறந்த பிறகு உடலுக்கு என்ன மதிப்பு?
அசோக மாமன்னர் தனது தேரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, எதிரே ஒரு துறவி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததும், தேரிலிருந்து இறங்கி வந்து, அவர் காலில் விழுந்தார். அதைக் கவனித்த அவரது தளபதிக்கு, மாமன்னர் ஒரு பரதேசியின் காலில் விழுவதா என்று வருத்தம் ஏற்பட்டது. அதை அரண்மனைக்கு வந்ததும் மன்னரிடமே வெளிப்படுத்தினார் தளபதி. மன்னரோ அவரது வினாவுக்கு விடையளிக்காமல், ஓர் ஆட்டுத்தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை ஆகிய மூன்றும் உடனே வேண்டும் என, ஒரு வினோதமான ஆணையிட்டார். மூன்று தலைகளும் கொண்டு வரப்பட்டன. அசோகர் மூன்றையும் சந்தையில் விற்றுவரச் சொன்னார். ஆட்டுத்தலை உடனே விலை போயிற்று. புலித்தலையை வாங்கப் பலரும் யோசித்தனர். இறுதியில், ஒரு வேட்டைக்காரர், தன் வீட்டுச் சுவற்றில் பாடம் பண்ணித் தொங்கவிட வாங்கிச் சென்றார். ஆனால், மனிதத் தலையைக் கண்டு, எல்லாரும் அஞ்சிப் பின்வாங்கினர். முகம் சுழித்து ஓடினர். ஒரு காசுக்குக்கூட யாரும் வாங்க முன்வரவில்லை. விபரங்களை மன்னரிடம் சொன்னபோது, மனிதத் தலையை யாருக்காவது இலவசமாகக் கொடுத்துவிடச் சொன்னார் மன்னர். இலவசமாக வாங்கக்கூட யாரும் தயாராயில்லை. இப்போது மாமன்னர் அசோகர் சொன்னார், “தளபதியே, மனிதன் இறந்துவிட்டால் அவன் உடல் ஒரு காசுகூடப் பெறாது. இருந்தும் இந்த உடல், உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் போடுகிறது? இறந்த பிறகு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரிகிறது. உடலில் உயிர் இருக்கும்போதே, தங்களிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் ஞானிகள். அத்தகைய ஞானிகளை, பாதத்தில் விழுந்து வணங்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?” என்று. தளபதிக்கு இப்போது புரிந்தது

vendredi 14 octobre 2016

யாருக்கும் தெரியாது.



  1. ஒரு வீட்டில் எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது.
    எலி வலையை விட்டு தலையை உயர்த்திப்பார்த்தது.
    வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.
    ...
    ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி.
    அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.
    அதைப்பார்த்ததும் அந்த எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.
    உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது."
    கோழி விட்டேற்றியாகச் சொன்னது" உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை."
    உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.
    மனம் நொந்த எலி அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதேபதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை "எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.
    அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.
    ஒரு அரை மணி நேரத்தில் " டமால் " என்றொரு சத்தம்.
    எலி மாட்டிக்கொண்டுவிட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.
    எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.
    எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்ட பின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.
    அருகில் இருந்த ஒரு மூதாட்டி "பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.
    கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.
    அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை.
    உறவினர்கள் சிலர் வந்தார்கள்.அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.
    சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது.
    பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.
    இந்த முறை ஆட்டின் முறை.
    விருந்தாக ஆடும் உயிரை விட்டது.
    நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.
    பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.
    எலி தப்பித்து விட்டது. அப்பாடா...
    ‪ :- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள்.
    ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.
    அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம்.
    அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்......

jeudi 13 octobre 2016

திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்?


  1. திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்?
    சம்ஸ்கிருதத்தில் இதை'சப்தபதி'
    என்று கூறுவார்கள்.
    ...
    அதாவது
    ஏழுஅடிகள்மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் சேர்ந்து நடந்து வருவதாகும்.
    அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும் போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன்உனக்குதுணையிருப்பான்என்றுகீழ்கண்டவாறுத‌னதுபிரார்த்தனையைச்சொல்கிறான்!
    "முதல் அடியில்: பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்"
    "இரண்டாம் அடியில்: ஆரொக்கியமாக வாழ வேண்டும்"
    "மூன்றாம் அடியில்: நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்"
    "நான்காவது அடியில்: சுகத்தையும் , செல்வத்தையும் அளிக்க வேண்டும்"
    "ஐந்தாவது அடியில் : லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்"
    "ஆறாவது அடியில்: நாட்டில் நல்ல பருவங்கள்நிலையாக தொடர வேண்டும்"
    "ஏழாவது அடியில்: தர்மங்கள் நிலைக்க வேண்டும்"
    என்றுபிராப்திப்பதாகசொல்லப்படுகிறது.
    இந்தசம்பிரதாயத்தில்மனிதர்களிடம் இருக்கும் மிகவும் சூக்ஷமமான மனோவியல்விசயத்தை இந்து தர்மத்தில் உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள்.
    இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் அவர்களுக்குள் சினேகிதம்உண்டாகும் என்பது சாஸ்திரம்.
    உதாரணமாக நாம் சாலையில் நடக்கும் போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும் போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் நன்றாக கவனியுங்கள்.
    ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களைவேகமாகதாண்டிவிடுவோம் அல்லது அவர்களைமுன்னே போகவிட்டுவிடுவோம்.
    முழுமையாக ஏழு அடிகள் ஒன்றாக நடக்க மாட்டோம்.
    இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குளாக நடந்து விடும் என்பது ஒரு சூக்ஷமமான விஷயம்.

விசித்திரமான ஒரு பழக்கம்



  1. பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் விசித்திரமான ஒரு பழக்கம் இருந்து வந்தது.
    பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால், அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள்.
    எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம்முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில் வாடி வதங்கி மடிவார்கள்.
    இப்படியான சூழ்நிலையில் ஓர் இளைஞன் முதுமையடைந்த தன் தாயை சுமந்து கொண்டு மரங்கள் சூழ்ந்த காட்ட...ுப்பகுதியில் மலை உச்சியை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.
    தாய், மகன் இருவருமே எதுவும் பேசவில்லை!
    ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த தாயார். ஏதோ ஒருவித மணம் கொண்ட மரங்களின் சின்னசின்ன கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான்.
    உடனே,
    ""அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?'' என்று கேட்டான்.
    அதற்கு தாயார், ""மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு திரும்பும்போது வழி தெரியாமல் திண்டாடக் கூடாதல்லவா?
    இங்கே போடப்பட்டுள்ள கிளைகளை கவனித்து நடந்தால் வழி தவறாமல் நீ பாதுகாப்பாக வீடு போய் சேரலாம்.
    அதற்காகவே கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்'' என்றாள்.
    ""வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும் மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் பாசமிகுந்த இந்த தாயா பயனற்றவர் என்று உள் மனம் கேட்க, அவன் தன் தாயை மீண்டும் தன் வீட்டுக்கே கொண்டு வந்து பாசத்துடன் பராமரிக்கலானான் .
    அதன்பின்பு அந்தக் கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது.
    இந்த கதை சொல்ல வரும் கருத்து நம் வாழ்வுக்கு மிக முக்கியம்..
    நீ
    நல்லவனா
    கெட்டவனா என்று தெரிவதற்கு முன்னாலேயே தன் வயிற்றில் இடம் கொடுத்தவள் உன் தாய் எத்தனை ஜென்மம் சம்பாதித்தாலும் நீ இருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாது என்றால் அது உன் தாயின் கருவரை என்பதை மறந்து விடாதே எத்தனையோ
    கஷ்டங்கள்
    நஷ்டங்கள்
    துன்பங்கள்
    துயரங்கள்
    அசிங்கங்கள்
    அவமானங்கள்
    கடந்த பிறகும் ஒன்றுமே தெரியாதது போல் காட்டிக்கொன்டு குடும்பத்தின் மத்தியில் சிரித்துக் கொன்டிருக்கும் தந்தைக்கு நிகரான நம்பிக்கை ஊட்டும் புத்தகம் இந்த உலகில் வேரேதுமில்லை
    நம் பெற்றோர்கள் எப்போதும் நம் நலன் நினைப்பவர்கள்.
    அவர்களை
    கண் போன்று பாதுகாப்போம்

மாறும்.


நாம் நினைப்பது போல் நம் வாழ்க்கையில் எல்லாமே நடப்பது கிடையாது.
சில சமயம் தானாகவே நாம் எதிர்பாராத அளவிற்கு சந்தோஷம் கிடைக்கும்.
சில சமயம் நாம் கற்பனை செய்யமுடியாதபடி துன்பம் நம்மை தேடி வரும்.
எது நடந்தாலும் அதை பகிர்ந்துகொள்ள, தோள் சாய, அழுது புலம்ப, மடி சாய.
ஒரு உறவு நமக்காகவே இருந்தால் அந்த சோகம் கூட சுகமாகத்தான் மாறும்.

மண்புழு



ஒரு மண்புழு தன் குடும்பத்தோடு தூங்கிக்கொண்டு இருந்தது,
பாதி ராத்திரியில் ஒரு கெட்ட கனவு, திடீரென கண்விழித்து காலைவரை உறங்கவேயில்லை அந்த மண்புழு
தன் இனமே மொத்தமாய் அழிந்துவிடுவது போன்ற கனவு அது....!!!
...
  1. காலையில் எழுந்ததும்
    ஊர் பஞ்சாயத்தை கூட்டி,
    நடந்ததை சொல்லி
    அக்கம்பக்கத்து ஊர்களில் இருக்கும் மண்புழுக்கள் எல்லாம்
    நலமாக இருக்கின்றனவா
    என பார்த்துவிட்டு வரும்படி
    ஆள் அனுப்பியது......!!!
  2. பார்த்துவிட்டு வருவதற்காக ஒரு மண்புழு பயணத்தை தொடங்கியது
  3. ஆற்றின் ஒரத்தில் இருந்த கிராமத்தை விட்டு மண்புழு வெளியே செல்ல செல்ல வெப்பம் தலைக்கேறியது
  4. கண்ணுக்கெட்டிய தூரம்வரை மண்புழுக்களை காணவில்லை,
  5. பக்கத்து கிராமத்தில் தூரத்தில் ஒரே ஒரு மண்புழு மட்டும் மண்ணை கிளறிக்கொண்டு இருந்தது,
  6. அருகில் சென்று,எல்லோரும் எங்கு சென்றார்கள் யாரையுமே காணவில்லையே என்றது.....!!!
  7. நான் அழைத்து செல்கிறேன் வா என்று அந்த மண்புழு ஒரு நீரில்லாத குட்டையின் கீழ் மரவேர்களுக்கு இடையே அழைத்து சென்றது
  8. வேர்களுக்கு இடையே இருந்து
    நூற்றுக்கணக்கான மண்புழுக்கள் வெளியே வந்தன,
  9. மொத்த ஊரில் இருந்த கோடிக்கணக்கான மண்புழுக்களில் மிஞ்சியவை இவைதான் என்று காட்டியது......!!!
  10. அந்த நூற்றுக்கணக்கான மண்புழுக்களும் கூட விவசாய நிலத்தில் வாழ்ந்தவை,
  11. மண்ணையே உணவாக தின்பதால் அவர்கள் உணவில் மண்ணள்ளி போட்டது போல் மண்ணில் ஏதோ ரசாயனம் கலந்துவிட்டதாகவும்,
  12. அதை சாப்பிட்ட மண்புழுக்களின் உடல் கருநீலம் அடைந்து கொத்து கொத்தாக இறந்து விட்டதாகவும்,
  13. மீதி இருந்த கொஞ்ச நஞ்ச மண்புழுக்களும் பாதுகாப்பான இடம் தேடி குட்டைக்கு அடியில் உள்ள வேர்களுக்கு இடையே வந்து பதுங்கிக்கொண்டதாகவும் கூறின....!!!
  14. பக்கத்து ஊரில் இருந்து பார்க்க வந்திருப்பதாக கூறி எல்லோரையும் வெளியே அழைக்க, எல்லா மண்புழுக்களும் பயத்தோடு வெளியே வந்தன....!!!
  15. பெரும்பாலான மண்புழுக்கள் கருநீலம் அடைந்து, உடல் முழுவதும் திட்டுதிட்டாய் வெடித்து, உருவம் சிதைந்து ரத்தம் வழிந்து, தோல் வறண்டு போய், வாழ்நாளை எண்ணிக்கொண்டு இருந்தன.....!!!
  16. இனவிருத்தி முழுவதுமாக நின்றுபோய் விட்டதாகவும், தப்பிதவறி பிறந்தால் கூட
    ஊனமுற்று பிறப்பதாகவும், பிறந்த சில நாட்களிலேயே இறந்துவிடுவதாகவும் கூறி அழுதன....!!!
  17. ஊருக்குள் இந்த இடத்தை தவிர வேறு எங்கும் மண்ணில் ஈரமில்லை என்றும்,
  18. விவசாய நிலங்கள் எல்லாம் உயிருக்கு ஆபத்தானவை என்றும்,
  19. அக்கம்பக்கத்து ஊர்களில் கூட இதே நிலைமைதான் என்றும்,
  20. இருக்கும் காலம் வரை
    இந்த வேருக்கு அடியில் வாழ்ந்துவிட்டு போய்சேர்ந்து விடுவதாக ஓலமிட்டு அழுதன....!!!
  21. விசாரிக்க வந்த மண்புழுவுக்கு துக்கம் தொண்டையை அடைத்துவிட்டது....!!!
  22. இன்னும் கொஞ்சநாள் தான் நாங்க உயிரோட இருப்போம், உங்கள் ஊரில் ஈரமான இடம் இருந்தால் இந்த குழந்தையை அங்கே விட்டுவிடுங்கள் பிழைத்துக்கொள்ளட்டும் என்று
    ஒரு மண்புழு குட்டியை கொடுத்து கண்ணீரோடு வழியனுப்பி வைத்தன......!!!
  23. விட்டுபோக முடியாமல், அந்த மண்புழு கிளம்பிச்செல்ல, ''வந்த வழியே போயிடுங்க
    மேற்கு பக்கம் போயிடாதீங்க, மொத்தம் விவசாய நிலம் உங்க உயிருக்கே ஆபத்தா போயிடும்'' என எச்சரித்து வழியனுப்பிவிட்டு வேர்களுக்குள் போய் பதுங்கிக்கொண்டன அத்தனை மண்புழுக்களும்.
  24. விவசாய நிலத்தில் கால் வைக்காமல் கவனமாய் ஊர்போய் சேர்ந்தது அந்த மண்புழு.....!!!
  25. மண்புழுவுக்கு மட்டுமல்ல இந்த மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு உயிருக்கும் மரணவாசலை திறந்துகொண்டு இருக்கிறது நம் மனிதவாசம்....!!!
  26. பகிர்ந்ததில் உருக வைத்த கதை

அறிவோம்




  1. அறிவோம்
    **
    வாழ்த்துக்கள் அல்ல; வாழ்த்துகள் என்பதே சரி .
    குற்றியலுகரம்
    உ என்ற ஓசையில் சில சொற்கள் முடிகின்றன அல்லவா? ( பசு , பந்து போன்றவை ) . இவை தன் இயல்பான நிலையில் இருந்து குறைந்து ஒலித்தால் குற்றியலுகரம். அதிகரித்து ஒலித்தால் முற்றியலுகரம்....
    இந்த குற்றிய லுகரத்திலேயே பல வகைகள் இருக்கின்றன
    நெடில் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : மாடு , பாகு
    ஆயுதத் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : எஃகு
    உயிர்த் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : வரகு, வரவு, செலவு, மிளகு
    வன் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : கொக்கு , மக்கு, பாக்கு, சாக்கு
    மென் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : சங்கு, பங்கு, பந்து, அம்பு, வம்பு
    இடைத் தொடர் குற்றியலுகரம்- உதாரணம்: எய்து, அல்கு
    எந்த சொற்களுக்கு பின் க் ச் ப் என்ற புள்ளி வைத்த எழுத்து வரும் என எளிதாக நினைவு வைத்து கொள்வது எப்படி?
    இலக்கணம் எல்லாம் இல்லாமல் எளிதாக பார்க்கலாம்.
    1 நெடில் எழுத்தில் ஆரம்பிக்கும் இரண்டு சொல் சொற்களுக்கு பின் , புள்ளி வைத்த எழுத்து வராது..
    உதாரணம்.. மாடு , ஆடு .... இதில் ஆடுகள் , மாடுகள் என்று வருமே தவிர ஆடுக்கள் , மாடுக்கள் என்று வராது..
    2 பசு , மரு, கணு போன்று குறில் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு பின் ,புள்ளி வைத்த எழுத்து வரும்..
    பசுக்கள், மருக்கள், கணுக்கள் ( பசுகள், கணுகள் என எழுதக் கூடாது )
    2 குறில் எழுத்துக்கு பின் வரும் உகார எழுத்துக்கு பிறகு புள்ளி வைத்த எழுத்து வராது..
    செலவு, வரவு- செலவுகள், வரவுகள் என்று எழுத வேண்டும்
    3 க் ச் ட் த் ப் ற் போன்ற எழுத்துகளுக்கு பின் வரும் உகார எழுத்தைத் தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது..
    வாக்கு - வாக்குகள் ( வாக்குக்கள் அன்று )
    கணக்கு - கணக்குகள்
    நாக்கு - நாக்குகள்
    வாத்து- வாத்துகள்
    வாழ்த்து - வாழ்த்துகள் ( வாழ்த்துக்கள் என்பது தவறு )
    உதாரணமாக தோப்புகள் என்பது தோப்பு என்ற சொல்லின் பன்மை
    தோப்புக்கள் என்றால் தோப்பில் இருந்து உருவாக்கப்பட்ட கள் எனப் பொருள் கொள்ளலாம்.
    அதே போல வாழ்த்துக்கள் என்று சொன்னால், புதிய வகை கள் என்ற அர்த்தம்தான் தொனிக்கும்.
    வாழ்த்துகள் என்பதே வாழ்த்து என்பதன் பன்மை வடிவம்

உங்களுக்கு நேரவிருக்கும் அபாயத்தை உங்களால் கணிக்க முடிந்தால் எதற்காக அழ வேண்டும்?




உங்களுக்கு நேரவிருக்கும் அபாயத்தை உங்களால் கணிக்க முடிந்தால் எதற்காக அழ வேண்டும்? அதிலிருந்து விடுபடும் வழியைப் பற்றி மட்டும் சிந்திக்கலாமே!!!
வணிகன் ஒருவன் தன் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்வதற்காக, அந்த ஊரின் மிகப் பெரிய பணக்கார கிழவன் ஒருவனிடம் கடன் வாங்கியிருந்தான். அவன் மிகவும் கோபக்காரன். கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் மிகப் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி விடுவான்.
வணிகனால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. என்ன செய்வதென தெரியாமல் தவித்தான். கிழவன் வணிகனை தேடிக் கொண்டு வீட்டிற்கே வந்துவிட்டான். அப்போது வணிகன் தன் மகளுடன் ஆற்றங்கரை அருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
வணிகனைப் பார்த்து, "வாங்கிய கடனை திருப்பி தருகிறாயா? இல்லை நான் உன்னைப் பற்றி நான் புகார் செய்யவா?" என்றான் கிழவன். வணிகன், "ஐயா! எனக்கு இரண்டு நாட்கள் அவகாசம் தாருங்கள். உங்கள் பணத்தை திருப்பி செலுத்து விடுகிறேன்" எனக் கெஞ்சினான்.
மகளுக்கு தன் அப்பாவை பார்க்க மிகவும் பாவமாக இருந்தது.
அவளும் கிழவனிடம் தந்தைக்கு பரிந்துரைத்து பேசினாள். அவள் அழகில் மயங்கிய பணக்கார கிழவன், 'எப்படியாவது அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என முடிவெடுத்தான்.
கிழவன், "உன்னைப் பார்த்தால் எனக்கு பாவமாக உள்ளது. இந்த பிரச்சனையை தீர்க்க, ஒரு வழி என்னிடம் உள்ளது. நீயும், உன் மகளும் அதற்கு சம்மதம் தெரிவித்தால் நான் 'அது என்ன வழி?' என்பதைக் கூறுவேன்" என்றான். அவனது தந்திரத்தை அறியாத வணிகனும் மகளும் சம்மதம் தெரிவித்தனர்.
அவர்கள் நின்றிருந்த இடத்தின் அருகே நிறைய கருப்பு மற்றும் வெள்ளை நிற கூழாங்கற்கள் சிதறிக் கிடந்தன. அதைக் காட்டி, "இங்கிருக்கும் கற்களில், ஒரு கருப்பு நிறக் கல்லையும், ஒரு வெள்ளை நிறக் கல்லையும் எடுத்து நான் என் பையில் போட்டுக் கொள்வேன். அதிலிருந்து ஒரு கல்லை மட்டும் உன் மகள் கண்ணை மூடிக் கொண்டு எடுக்க வேண்டும். வெள்ளை நிறக் கல் கையில் வந்தால், நீ பணம் எதுவும் தரவேண்டாம். கருப்பு நிறக் கல் கையில் வந்தால், நீ உன் மகளை எனக்கு திருமணம் செய்து தரவேண்டும்" என்றான்.
இதைக் கேட்ட இருவரும் அதிர்ந்தனர். முதலில் இருவரும் சம்மதம் தெரிவித்ததால், இப்போது மறுத்து பேச முடியாமல் தவித்தனர். வணிகன், 'தன்னால் தன் மகளுக்கு இப்படி ஒரு நிலை வந்து விட்டதே' என அழுது புலம்பினான். பணக்கார கிழவன் கீழே குனிந்து இரண்டு கற்களை எடுத்தான். ஆனால் அவை இரண்டுமே கருப்பு நிறக் கற்கள்!
வணிகனின் மகள் அதை பார்த்து விட்டாள். கிழவனின் திட்டம் தெரிந்து விட்டது. ஆனால் அழுது கொண்டிருக்கும் தந்தையிடம் அதை சொல்ல முடியவில்லை. அவள் மனதில் 'எப்படியாவது இந்த கிழவனின் திட்டத்தை முறியடிக்க வேண்டும்' என்ற எண்ணம் உருவானது.
கிழவன் அந்த இரண்டு கற்களையும் பையில் போட்டு, ஒன்றை மட்டும் எடுக்கச் சொல்லி பையை நீட்டினான். வணிகனின் மகளும் ஒன்றை எடுத்தாள். கையை திறக்கும் நொடிப் பொழுதில் அதை தவறவிடுவது போல் கீழே போட்டுவிட்டாள். அந்த கல் குவியலுக்கு நடுவே சென்று விட்டது.
கிழவனைப் பார்த்து, "நான் எந்த கல்லை எடுத்தேன் என்பதை கண்டுபிடிக்க வேண்டுமானால், உங்கள் பையில் இருக்கும் பையை திறந்து பாருங்கள். ஒருவேளை உங்கள் பையில் கருப்பு நிற கல் இருந்தால், நான் எடுத்தது வெள்ளை நிறக் கல்லாகத்தான் இருக்க வேண்டும்" என்றாள்.
அவளது புத்திசாலிதனத்தால் ஏமாந்த கிழவன், "அவள் எடுத்தது வெள்ளை நிறக் கல் தான். பணம் தர தேவையில்லை" எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.
உங்களுக்கு நேரவிருக்கும் அபாயத்தை உங்களால் கணிக்க முடிந்தால் எதற்காக அழ வேண்டும்? அதிலிருந்து விடுபடும் வழியைப் பற்றி மட்டும் சிந்திக்கலாமே!!!

திருமணம்



  1. ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லை. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள்.
    ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்...தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர். மூவரும் வீடு திரும்புகிறார்கள்.
    கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.
    கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். “அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?”
    அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு, “நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை” எனச் சொல்கிறான்.
    வீரன் மகனிடம், “பின் யார் அப்பா?” எனக் கேட்கிறான்.
    “தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்” என்றான் மகன்.
    வீரனுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது. மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.
    மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் தூங்கச் செல்லும் போது, தந்தையின் நிழலைக் காண்பித்து மகன், “இதோ என் அப்பா” என்றான்.
    திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் 'இது யார்?' என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள், இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.
    வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.
    இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம். மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும்.
    ஆனால் கணவன் தன் மனைவியின் மேல் சந்தேகப்பட்டு வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது, 'ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்?' என்று கேட்டு அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள்.
    வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் ஒரு குடும்பமே தகர்ந்து போனது.
    எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பான அர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.

சிந்திக்க சில நிமிடங்கள்....




  1. சிந்திக்க சில நிமிடங்கள்....
  2. கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று கேட்டார். நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று அவன் பதிலளித்தான். இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் '10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார். "பத்தாயிரம்," என்று உடனடியா...கப் பதில் வந்தது. இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார். "அதே பத்தாயிரம்" என்று அவன் பதில் கூறினான்.
    ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, "ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியம் வாய்ந்த என்னைப் பின்தொடர்ந்து செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது. அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னாள் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதும் இல்லை. அது போன்றதுதான் ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பின்தொடர்ந்து சென்றால், அவனது மதிப்பு கூடுகிறது. அதுவே தலைகீழாக அமைந்தால்? பதில் உனக்கே தெரியும் என்று கூறினார்...

அறிந்து கொள்ள வேண்டிய ஆச்சரியமான தகவல்....!



  1. அறிந்து கொள்ள வேண்டிய
    ஆச்சரியமான தகவல்....!
    அர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள் தெரிந்து கொள்வோம்
    ...
    அல்லிப்பூ செல்வம் பெருகும்
    பூவரசம்பூ உடல் நலம் பெருகும்
    வாடமல்லி மரணபயம் நீங்கும்
    மல்லிகை குடும்ப அமைதி
    செம்பருத்தி ஆன்ம பலம்
    காசாம்பூ நன்மைகள்
    அரளிப்பூ கடன்கள் நீங்கும்
    அலரிப்பூ இன்பமான வாழ்க்கை
    செம்பருத்தி ஆன்ம பலம்
    ஆவாரம் பூ நினைவாற்றல் பெருகும்
    கொடிரோஜா குடும்ப ஒற்றுமை
    ரோஜா பூ நினைத்தது நடக்கும்
    மருக்கொழுந்து குலதெய்வம் அருள்
    சம்பங்கி இடமாற்றம் கிடைக்கும்
    செம்பருத்தி பூ நோயற்ற வாழ்வு
    நந்தியாவட்டை குழந்தை குறை நீங்கும்
    சங்குப்பூ (வெள்ளை) சிவப்பூஜைக்கு சிறந்தது
    சங்குப்பூ (நீலம்) விஷ்ணு பூஜைக்கு சிறந்தது
    மனோரஞ்சிதம் குடும்ப ஒற்றுமை, தேவ ஆகர்¬ணம்
    தாமரைப்பூ செல்வம் பெருகும் அறிவு வளர்ச்சி பெறும்
    நாகலிங்கப்பூ லட்சுமி கடாட்சம், ஆரோக்யம்
    முல்லை பூ தொழில் வளர்ச்சி, புதிய தொழில்கள் உண்டாகும்
    பட்டிப்பூ (நித்திய கல்யாணி பூ) முன்னேற்றம் பெருகும்
    தங்க அரளி (மஞ்சள் பூ) குருவின் அருள் , பெண்களுக்கு மாங்கல்ய பலம் கடன்கள் நீங்கும் , கிரக பீடை நீங்கும்
    பவள மல்லி இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன்மூலம் தேவர் களினதும், ரிஷிகளினதும் அருளும், ஆசியும் கிடைக்கும்.
    பழைய புஷ்பங்கள், மலராத மொட்டுக்கள், தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனிற்கு அர்ச்சனை செய்யக்கூடாது.
    அரச்சனை செய்த பூக்கள் கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகள் காலில் மிதிபடாதவாறு போட வேண்டும். முடிந்தால் தூய்மையான ஓடுகின்ற தண்ணீரில் விடலாம். அல்லது தூய்மையான இடத்தில் குழி தோண்டி போட்டு மூடிவிடலாம்.
    கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகளை வாகனங்களில் முன்பக்கம் கட்டுவது மிகபெரிய சாபம். இதனால் தீமைகள் உண்டாகும் நன்மைகள் கிடைக்காது.
    பூசைக்கு சிறப்பான பூக்கள்
    திருமாலுக்கு -- பவளமல்லி , மரிக்கொழுந்து துளசி
    சிவன் -- வில்வம் செவ்வரளி
    முருகன் -- முல்லை, செவ்வந்தி, ரோஜா
    அம்பாளுக்கு -- வெள்ளை நிறப்பூக்கள்
    ஆகியவை பூசைக்கு சிறப்பானவை.
    ஆகாதபூக்கள்
    விநாயகருக்கு -- துளசி
    சிவனுக்கு -- தாழம்பூ
    அம்பாளுக்கு -- அருகம்புல்
    பெருமாளிற்கு -- அருகம்புல்
    பைரவர் -- நந்தியாவட்டை ,
    சூரியனுக்கு -- வில்வம்
    ஆகியவை பூஜைக்கு ஆகாதவை

நீ விரும்பியதை பிறருக்கு கொடு !



  1. நீ விரும்பியதை பிறருக்கு கொடு !
    இதன் பொருள் என்னவென்றால்...
    நீ பிறரிடம் எதிர் பார்க்கும் அன்பு மரியாதை போன்றவைகளை பிறர் எதிர்பார்க்கும் முன் கொடுப்பேயானால் உனக்கானது தேடிவரும்...

இறைவன்.


  1. ஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது.
    அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை.
    அதனால்அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்கும்.
    ஒருநாள் திடீரென்று
    ""இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா?''...
    என்று சந்தேகம் வந்தது.
    பின்னர் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும் என்று சமாதானம் செய்துகொண்டது.
    ஒருநாள் அந்தக் கழுகு ""இன்று எனக்கு உணவு கிடைக்குமா?
    இறைவன்தான் எல்லோருக்கும் படியளப்பவன் ஆயிற்றே...'' என்று யோசித்தது.
    உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் வந்ததும் அந்தக் கழுகு அமர்ந்து தியானம் செய்யும் பாறை மீது நின்று,
    "இறைவா,
    இன்று எனக்கு உணவு கிடைக்குமா?'' என்று பெரிய குரலெடுத்துக் கூவியது.
    உடனே விண்ணிலிருந்து ஒரு குரல்.
    ""உனக்கு இன்று உணவு உண்டு'' என்று பதில் கூறியது.
    மிக்க மகிழ்ச்சியுடன் "இன்று இரை தேடும் வேலை இல்லை,
    எப்படியும் உணவு கிடைத்துவிடும்''
    என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப் பாறை மீது அமர்ந்திருந்தது.
    நேரம் செல்லச்செல்ல கழுகுக்குப் பசி வரத் தொடங்கியது.
    ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறை தியானத்திலேயே அமர்ந்திருந்தது.
    மதியம் ஆயிற்று, மாலையும் போயிற்று. இரவு வந்துவிட்டது.
    ""நம்மை இறைவனே ஏமாற்றிவிட்டாரே'' என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு.
    அப்போது ஒரு குரல் கேட்டது.
    "என்ன குழந்தாய். சாப்பிட்டாயா?''
    என்றதைக் கேட்டதும், கழுகுக்கு அழுகை வந்துவிட்டது.
    "குழந்தாய் சற்று திரும்பிப் பார்.
    உன் பின்னாலேயே உனக்கான உணவு இருக்கிறது
    ''கழுகு பின்னால் சென்று பார்த்தது.
    அங்கே ஒரு பெரிய எலி இறந்துகிடந்தது.
    கழுகு புன்னகை புரிந்தது. இறைவனிடம் ,
    "இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?'
    இறைவன் பதிலளித்தார்.
    "குழந்தாய்,
    உனக்குரிய நேரத்தில் உணவு வந்துவிட்டது.
    நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய்.
    திரும்பிப் பார்க்கும் முயற்சிகூடச் செய்யாமல் உணவு எப்படிக் கிடைக்கும்.
    "கடுகளவேனும் முயற்சி வேண்டும்.
    ஒரு வேளை உணவுகூட உழைக்காமல் உண்ணக்கூடாது.
    அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும்'' என்று கழுகுக்கு ஆசி கூறி மறைந்தார் இறைவன்.