முகப்பு

samedi 31 décembre 2016

new year2017


new year


vendredi 23 décembre 2016

ஆழிப் பேரலையின் அழியா நினைவுகள்



ஆழிப் பேரலையின் அழியா நினைவுகள்
(அகவைகள் பதின்மூன்றில் ஒரு ஏதிலியின் அவலக்குரல்)
எம்மிடையே இரு உலக மகா யுத்தங்கள் வந்து போனாலும், இன்னமும் பல்வேறு யுத்தங்கள் வெவ்வேறு வடிவங்களில் எம்மிடையே தொடர்கின்றன. காலத்திற்குக் காலம் இயற்கை அழிவுகள் எற்பட்டாலும், ஆழிப்பேரலையின் கொடூரச் சாவின் பிடியில் சிக்கி உயிர் தப்பியவர்கள் வாழ்வைப் பற்றிய உண்மையை உணர்த்தியதை வரலாற்றில் என்றுமே, எவருமே மறுக்கவோ, அல்லது மறைக்கவோ முடியாது.
பூமிப்பந்தின் வரலாற்றில் கடந்த 2004 டிசம்பர் 26ல் தென்னாசியக் கடற்கரையோரங்களைத் (இந்தோனேசியா, இந்தியா உட்பட இலங்கை வரை), தனது கொடூர அரக்கத்தனத்தால், கண் இமைக்கும் நேரத்தில் அழித்து, மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மனித உயிர்களை கொடூரமாகப் பலியெடுத்த “சுனாமி” எனப்படும் பயங்கர அரக்கனான ஆழிப்பேரலையை எம்மிலே யார்தான் மறக்க முடியும்?
பயங்கரக் கொடூரம் நிறைந்த சுனாமியால், கணவனை, மணைவியை இழந்தோர், பெற்றோரைப், பிள்ளை களைப் பறிகொடுத்தோரெனப் பல இலட்சக் கணக்கானோரின் பதறியழும் சோகக்கதைகள் சொல்லிலோ அல்லது எழுத்திலோ விபரிக்க முடியாதது. மக்களது உயிரிழப்புக்களோடு, பாரம்பரிய வரலாற்று நினைவுச் சின்னங்களுக்கும் மிகப்பெரிய அழிவோடு, பொருட்சேதமும் ஏற்பட்டது.
கடல் நீர் கழுத்தளவு வருவதனைக் கண்டுள்ளோம். ஆயினும் கரும்பைனையளவு உயரத்திற்கு மேலாக வந்ததனை கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம்திகதி காலையில் தெற்காசிய நாடுகளின் பல இலட்சக் கணக்கான மக்கள் கண்டு பயப்பீதி அடைந்தது மட்டுமல்ல, மரணித்ததும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட கொடூரச் சோகம் நிறைந்த அழியாத உண்மையாகிவிட்டது.
தென் ஆசியப் பிராந்தியத்தில் இப்பேரலையால், ஒருசில மணித்துளிகளில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உயிர்கள் அநியாயமாகக் கொண்று குவிக்கப்பட்டு. ஒருசில ஊர்கள் இருந்ததற்கான அடையாளமே இல்லாத அளவிற்கு மாறி உள்ளதாகப் பல ஊடகங்கள் கருத்துத் தெரிவித்ததில் தவறேதுமில்லை.
குடியிருந்த வீட்டோடும், கூண்டோடும் மட்டுமல்ல, ஊரோடு சேர்ந்து இலட்சக் கணக்கானோர் அநியாயமாகக் கொல்லப்பட்ட கதை அறியாதார் யாருண்டு? ஊரும் போய், பழகிய முகங்களெல்லாம் பார்க்குமிடமெல்லாம் பல்வேறு திசையில் சடலமாகி, இதையெல்லாம் பார்க்கத்தானா என்னையும் விட்டுவைத்தாயென? நேரில் சந்தித்தவர்கள் இன்னமும் கதறியழுவதனை நாம் கண்டுணராது வாழமுடியுமா?
கண்ணைத் திறந்தால் வாழ்வு கண்ணை ழூடினால் சாவு, என்று கண்ணிமைப் பொழுதில் அகில உலகத்தையும் அடித்துப்புரட்டி, அதிர்ச்சிக்குள்ளாக்கிய பயங்கரக் கொடூரம் நிறைந்த இச் சம்பவத்தை சிலர் மறந்தாலும், இன்றும் எம்மில் பலரது உணர்வுகளை விட்டகலாதுள்ளது என்பது உண்மை.

lundi 19 décembre 2016

நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ?



  1. நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது
    ***********
    நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது ?
    ஒவ்வொரு இடத்தின் தட்பவெட்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றன.
    மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும்போது தினமும் தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர்....
    மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி..
    அப்போதெல்லாம் மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள். அப்போது அப்பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது . .கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள் வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
    பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மஞ்சள்கயிறு தாலியில் கோர்த்து போட்டிருந்தனர். அப்போதெல்லாம் நம் தமிழகத்தில் எவ்வளவு சுகபிரசவங்கள் நடந்தது என்றும், தங்க செயினில் தாலி அணியும் இப்போது எவ்வளவு சுகபிரசவங்கள் நடை பெறுகிறது என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புரியும் .
    அது போல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை எத்தனை பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் இருந்தது, இப்போது எத்தனை பெண்களுக்கு இருக்கிறது என்றும் கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு நன்கு புரியும்.
    இப்போதும் கூட கிராமங்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது தலையில் வேப்பிலை இலையை செருகி வைப்பார்கள் அது எதற்காக ? வேப்பிலை ஒரு சிறந்த கிருமிநாசினி. கர்ப்பிணிகள் தலையில் இருக்கும் வேப்பிலையானது அவர்கள் செல்லும் வழியில் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கிருமி தொற்றிலிருந்து காக்கிறது .
    மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு மஞ்சளுக்கும், வேப்பிலைக்கும் உரிமை கொண்டாடுகின்றனர். பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .
    நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!
    இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!
    நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை... அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!

அழகான வாழ்க்கையை ஆராதிப்போம்.......



  1. எரிவதில் தீபம் அழகானது.....
    சுடுவதில் *சூரியன்*அழகானது.....
    சுற்றுவதில் புவி அழகானது.....
    வளர்வதில் பிறை அழகானது......
    மின்னுவதில் விண்மீன் அழகானது........
    தவழ்வதில் குழந்தை அழகானது......
    குதிப்பதில் கடல் நீர் அழகானது.....
    விழுவதில் அருவி அழகானது.........
    உறைவதில் பனி அழகானது......
    விளைவதில் பயிர்கள் அழகானது.....
    தலை சாய்ப்பதில் *நெற்கதிர்*அழகானது.....
    குளிர்ச்சியில் *தென்றல்*அழகானது......
    உழைப்பதில் வியர்வை அழகானது......
    பாடுவதில் குயில் அழகானது......
    பறப்பதில் புறா அழகானது.......
    கலையினில் அறுபத்துநான்கும் அழகானது......
    உறவினில் நட்பு அழகானது.....
    மொழிகளில் மழலை மொழி அழகானது...
    மலர்களில் ரோஜா அழகானது......
    மலர் வாசனையில் மல்லிகை அழகானது....
    நிறங்களில் கறுப்பே
    அழகானது.....
    கலாச்சாரத்தில் நம் நாடே அழகானது
    இத்தனைக்கும் இதற்கு மேலேயும்.......
    எப்போதும் தாய்மை அழகானது.......
    இதை உணர்ந்த அத்தனை உள்ளங்களும் அழகானது....
    இதைவிட வேறு என்ன வேண்டும் வாழ்வில்.....???
    *குறை ஒன்றும்*இல்லையே......
    அழகான வாழ்க்கையை ஆராதிப்போம்.......

கிறிஸ்து பிறப்பு அன்றும்….... இன்றும்…… (ஓரு மனிதக் கண்ணோட்டம்)



கிறிஸ்து பிறப்பு அன்றும்….... இன்றும்……
(ஓரு மனிதக் கண்ணோட்டம்)

அன்று 2016 வருடங்களுக்கு முன்னர் பெத்லகேமில் மிக எளிமையாக இடம்பெற்ற குழந்தை இயேசுவின் பிறப்பு, இன்று உலகம் முழுவதும் இணைந்து கொண்டாடும் பெரு விழாவாக மாற்றம் பெற்றாலும், அந்த அதிசயம் மிக்க அற்புத நிகழ்வின் உண்மைத் தன்மையை நாம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டோமா? அல்லது, இறைமகன் இயேசு வின் பிறப்பு என்றால், என்ன என்பதனை மறந்து வாழ்கி றோமா? என்பது எனது பணிவான அபிப்பிராயமாகும்.

தெய்வத்திருமகன் பெத்லகேமில் எதற்குமே பெறுமதி யில்லாத மாட்டுத் தொழுவத்தில் பிறந்த தால், இன்று பெத்லகேம் அகில உலகமும் போற்றும் ஒரு பரிசுத்த யாத்திரைத் தலமாகி. நாமும் அத்திருத்தலத்திற்கு யாத்திரையும் சென்றிருக்கலாம். ஆயினும், ஆண்டவர் இயேசு எமது உள்ளமெனும் மாட்டுத் தொழுவத்தில் பிறந்திட நாம் இடம் ஒதுக்காவிட்டால், எமது யாத்திரை மட்டுமல்ல, நாங்களும் பெறுமதியற்ற ஈனப்பிறவிகளே என்பதனை உனருகிறோமா?

இஸ்ராயேல் மக்கள் பல்லாயிரம் வருடங்களான தமது அடிமைத்தனத்திலிருந்து மீட்க மெசியா பிறப்பாரென எதிர்பார்த்ததாகத் திருவிவிலியம் பல இடங்களில் தெரிவிக்கின்றது. இன்றும் அதே மனிதன் தனது இனத்தின் விடியலைத்தேடி சொந்த நாட்டிலேயே அகதியானது மட்டுமல்ல, புலம் பெயர்ந்தும் அகதியாக அலைவது வரலாறாகப் பதிவாகவில்லையா?

மார்கழி நள்ளிரவில் பிறந்த குழந்தை தீவனத் தொட்டியில் வளர்த்தப்பட இடையரும், ஞானிகளும் தெண்டனிட்டு வணங்கினர். கடைசி இரா உணவில், “இது எனது உடல் வாங்கி உண்ணுங்கள்“ என்று தரப்படும் தீவனத் தொட்டி யின் ஆன்மீக உணவில் தகுதியோடு பங்கெடுக்கி றோமா? அந்தத் திரு உடலை ஈரைந்து மாதம் சுமந்த “அருள் நிறைந்த பேழை“க்கு மதிப்பளிக்கிறோமா?, அல்லது, நற்கருனைப் பேழையில் வீற்றிருப்பவரை பக்தியோடு பணிந்து, வணங்குகிறோமா?

அன்றைய மனிதன் பயங்கர விலங்குகளிலிருந்து பாதுகாக்க ஆயுதங்களை உருவாக்கினான். இன்றைய மனிதன் கொடிய மிருகங்களை செல்லப் பிராணி களாக்கி, தனது சொந்தச் சகோதரங்களையே கொண்றொழிக்கப் பல்வேறு ஆயுதங்களை உருவாக்கிப், பாவம் வந்து வீட்டு வாசலில் பாய்விரித்துப் படுத்திருக்க இடமளிக்கவில்லையா?

“உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக” (லூக்கா 2:14) என்று வானதூதர்கள் பாடியது, உள அமைதி தொடங்கி உலக அமைதி வரைக்கும் என்பதாகும். அமைதியை உருவாக்குவதே கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி என்பதை நாம் உணர்ந்திருந்தால், குழு சேர்த்து, சதி செய்துக் குழிபறிக்கும் முயற்சிகள், சாதிய முரண்பாடுகள் எம்மிடையே எதற்காக?

மார்கழிக் கடுங்குளிரில், பிரசவ வலியில் மரி அன்னை துடி துடித்தும், சத்திரத்திலும் இடம் கொடாது கதவை மூடிய மனிதர்களாக நாம் இன்றும் வாழவில்லையா? கொட்டும் மழையிலும், கொதிக்கும் வெய்யிலிலும், பனியின் குளிரிலும், பசியின் கொடுமையிலும் அபயம் தேடும் ஏழைகளின் உருவில் வரும் மரி அன்னை களுக்காக இதயக் கதவைத் திறப்போர் எத்தனை பேர்?

புனித நள்ளிரவில் மந்தைகளைப் பாதுகாக்க ஏழை இடையர் விழித்திருக்க, வரலாற்றை முன்னும் பின்னு மாகப் பிரித்த இறைமகன் இயேசு எமது வழிகாட்டும் விடிவெள்ளியாகப் பிறந்தார். ஆயினும், சொந்த உறவு களையே பிரித்தாளும் மனிதனின் கொடூர உள்ளத்தில் இரக்கம், கருணை,பரிவு, பாசம் என்ற “மனித நேய விடிவெள்ளி“ பிறந்துள்ளதா?

குழந்தை இயேசு, “உலகமெங்கும் சென்று என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுங்கள்” என்று கூறவில்லை. மாறாக, தெருவோரப் பிச்சைக்காரரிலும், தனிமையில் வாடும் முதியவரிலும், கவனிப்பாரற்ற நோயாளியிலும், துன்பங்களோடும், வேதனைகளோடும் சிறைகளில் சித்திர வதைப்படுவோர் மத்தியிலும் இன்றும் பிறப்ப தாகப் போதித்ததனை நாமுணருகிறோமா?

குழந்தை இயேசு பிறந்ததும் கொல்லத் தேடிய ஏரோது, இரு வயதிற்குட்பட்ட அப்பாவிக் குழந்தைகளைக் கொலை செய்தான். வேண்டாக் கர்ப்பத்தால் உருவாகும் பச்சிளம் சிசுக்களைக் கருவறையிலேயே கல்லறைக்கு அனுப்பும் ஏரோதுக்கள் எம்மிடையே இல்லை யென்போமா?

தனக்கு நிகரான அரசன் பிறந்ததாக ஏரோது கேள்விப்பட, முழு எருசலேமுமே அவனோடு கலங்கியது. இன்றும் பல நாடுகளில் அதிகாரம் செலுத்தும் ஆளும் இனம், தமது சிறுபாண்மை இனத்தவரைப் படுகொலை செய்வதைக் கேள்விப்பட்டு ஐக்கிய நாடுகளே கலங்கவில்லையா?

குழந்தை இயேசுவைத் தரிசிக்க ஞானிகள் வழிதேடி ஏரோதுவிடம் சென்றபோது, உதவி செய்வதாக ஏமாற்றி னான். இன்றும் எம்மிடையே நல்ல செயல்களைத் தடுக்க வெனப் பல ஏரோதுக்கள் இணைந்து, நல்ல முயற்சி களைத் திசை திருப்பிக் குழப்புவதில்லையா?

பாலகன் இயேசுவின் பிறப்பு மிக எளிமையானதாகும். இன்றைய உலக மயக் களியாட்டங்கள், ஒருபால் திரு மணம், விவாகரத்து, திருமணம் செய்யாது கூடிவாழுதல் என்று கிறிஸ்து பிறப்பின் விழுமியங்களை இழந்த எம்மி டையே கிறிஸ்து ” அர்த்தமுள்ளதாகப் பிறப்பது“ எப்போது?

ஆண்டவர் இயேசுவினுடைய பிறப்பு விடுதலையும், சமாதானமும் மட்டுமல்ல, பாவத்தின் அடிமையில் வாழ்வோர் விடுதலை பெறவும், ஏழைகள், புறந்தள்ள ப்பட்டு ஒதுக்கப்பட்டோர் மறுவாழ்வு பெற்று அனைவரும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்பதாகும். நுகர்வுக் கலாச்சாரச் சூழலில் “நான், என்னுடையது“ என்பது தவிர இவ்வாறான விழுமியங்கள் வாழப்படுகின்றதா?

ஆண்டுகள் பல கடந்தும், ஆண்டவர் இயேசுவின் பிறப்பு இன்று உலகம் முழுவதும் அர்த்தமின்றிக் குடியும் கும்மாளமும், விநோதமுமாகி, கிறிஸ்மஸ் தாத்தாவே பணம் வசூலிப்பவராக மாற்ற மடைந்து, கிறிஸ்து பிறப்பின் அர்த்தமே குழிதோண்டிப் புதைக்கப்படும் நிலையில், கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் எமது உள்ளங்கள் மாற்றமடைந்துள்ளதா?

வானளாவக் கிறிஸ்மஸ் மரங்கள் உயர்ந்தாலும், எமது உள்ளங்கள் மனித மான்பை உயர்த்தும் எண்ணக் கருத்துக்களால் உயர்ந்துள்ளதா? ஏழைகள் ஏழைகளாகத் தொடர்ந்து வாழ, செல்வந்தர் செல்வம் பெருக்கும் நோக்கத்தில் முன்னேற, ஒரு நேர உணவுக்காக ஏங்கு வோர் எம்மிடையே இல்லை என்போமா? அர்த்தமுள்ள கிறிஸ்து பிறப்பு விழாவைக் காண, எமது வெளிவேடக் கிறிஸ்தவ வாழ்விலிருந்து புதுப்பிறப்பெடுப்போம்.

"மிகச் சிறியோராகிய என் சகோதரர், சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்“ – (மத்தேயு 25:41)

dimanche 4 décembre 2016

தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்குது.......!!!



ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு!

ஒரு பிடி சோற்றைக் கூட - அதிகமாய்
உட்கொள்ளாத வயிறு..!

ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும்
உலக அதிசயம்..!

எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள்
வந்தாலும்

கருவறையை விடப் பாதுகாப்பான
அறையை

குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..?
இறைவனின் வல்லமைக்கு இதனை விட
சான்று வேண்டுமா..?

பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்துப்
போகிறது

பத்து மாதம் சுமந்தாலும்
கருவறை கனப்பதில்லை..!

வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள் -

ஆனால்
இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்..!

மனைவியாய் வளரும் உறவு
தாய்மையில்தான் தன்னிறைவு பெறுகிறது..!

தாய்மையின் மகத்துவத்தை எத்தனை
தத்துவமாயும் தத்ரூபமாயும் சொல்லலாம்

எல்லாவற்றையும் விட
தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்குது.......!!!

dimanche 13 novembre 2016

நகல்

கனவு காண் அது நற்கனவாயின் நிகழ்த்தி முடி....

sountha

முடியும் என்பவனால் எல்லாமே முடியும்

  1. முடியும் என்பவனால் எல்லாமே முடியும்..முடியாது என்பவனால்..இறுதியில் அவனின் வாழ்க்கையே வீணாகி முடிந்துவிடும்...முயற்சி இல்லாதவர்கள்..முதுகெலும்பில்லாதவனுக்கு சம்மானவன்...நீங்கள்?
    உன்னால் எது முடியாது?
    எதுவரை முடியாது?
    எதற்காக முடியாது?
    எதனால் முடியாது?...
    இத்தனை கேள்விகளுக்கும் விடை தேட நீஎப்போது முடிவு செய்கின்றாயோ,;;;;;;;அந்த நொடிப்பொழுதிலிருந்து அத்தனையும் உன்னால் முடியும்.....

இறைவன்




  1. நேற்று என் கனவில் இறைவன் வந்தான் நலமா......??? என்றான்
    நறுக்கென்று என்னுள் தோன்றியது ஒரு கேள்வி.....
    "காசில்லா பக்தனுக்கு தூரத்திலும்.....
    ...
    காசுள்ள மனிதனுக்கு அருகிலும் காட்சி அளிக்கிறாயே இறைவா......!!!
    இது என்ன நியாயம்.....??? " என்றேன்.
    கலகலவென சிரித்தான் இறைவன்
    "தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன் நீங்கள் வணங்கவில்லை;
    தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றேன் நீங்கள் கேட்கவில்லை;
    தூணிலும் இருக்கிறேன் துரும்பிலும் இருக்கிறேன் என்றேன் நீங்கள் நம்பவில்லை;
    ஏழைக்கு உதவுங்கள் அது எனக்கே செய்வது என்றேன் நீங்கள் செய்யவில்லை;
    எனக்கான இடத்தை,
    எனக்கான நேரத்தை,
    எனக்கான விழாக்களை,
    என்னை வணங்கும் முறையை
    எல்லாம் நீங்களே முடிவு செய்தீர்கள்.....!!!
    இப்போது எனக்குக் கட்டணத்தையும் வைத்து என்னை காட்சிப்பொருளாக்கி விட்டு என்னையே கேட்பது என்ன நியாயம்.....???" என்றான் இறைவன்.

மகனுக்கு அம்மா கூறும் ஐந்து அறிவுரை.!




  1. புதிதாக கல்யாணம் கட்டிக்கொண்ட தன் மகனுக்கு அம்மா கூறும் ஐந்து அறிவுரை.!
    ( படியுங்கள்)
    1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது....!!
  2. மகனே...மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே...
  3. ...
  4. உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு.
    ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கைக்கு புதுசு.
  5. உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து அனுப்பியிருக்காங்க.
  6. அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும்.
    அதுக்கப்புறம், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள்.
  7. 2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!!
  8. மகனே, உன் மனைவி உன்னுடன் வாழ்க்கைய பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை.
  9. உன் அம்மாவுக்கு உன்னை கவனிக்கறது மட்டும் தான் வேலை.
    ஆனா உனக்கு, உன் மனைவிய நீ நன்றாக கவனிக்கிறது முக்கியம்.
  10. நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கவனிச்சு அன்பு செலுத்தறது மிக மிக முக்கியம்டா.
  11. 3.மதிக்கப்படவேண்டியவள் மனைவி...!!
  12. மகனே , உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப்போகிறவள்.
  13. அவளை மதிக்கவேண்டும்.
    உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கு உள்ளது.
  14. அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருடா.!
  15. 4. புகுந்த வீடு வந்த மனைவியை இயல்பாக உணர வைக்க
    உதவி செய்யணும்.
  16. பிறந்து , வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு,
    நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருக்கா உன் மனைவி...
  17. அவளை இயல்பா இருக்க வைக்க நீதான் உதவணும்..
    சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்..
  18. அதை நீதான் கவனிச்சு அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்கணும்டா...!
  19. 5. எப்பவும் மனைவிய காதலிக்கவேணும்
  20. காதலிக்க வயசு ஒரு விஷயமே இல்லடா.. எப்பவும் உன் மனைவியை..சந்தோஷமா வச்சுக்கோ..
  21. சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளிய அழைச்சுட்டுப் போறது, அவள் டிரஸ்ஸிங்கை சிலாகிச்சுப் பேசறது, சந்தோஷமா வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க ரெண்டுபேரையும்...எப்பவும்இளமையா உணர வைக்கும்...!!
  22. ஐந்து பாய்ண்ட்டுகளையும் சேர்த்து ஒரே பாய்ண்ட்டா சொல்றேன்டா.....!!
  23. உங்க அப்பா(நல்ல அப்பா மட்டும்) என்னை எப்படி நடத்தறாரோ....?
    அது போல நீயும் உன் மனைவியை...கௌரவமா மதிச்சுக் குடும்பம் நடத்துடா மகனே..!!
  24. உனக்கும் மருமகளா வந்திருக்கும் மகளுக்கும் என் அன்பும் வாழ்த்துகளும்... ஆசீர்வாதங்களும்.....

சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்



  1. சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்
    பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.
    எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும...் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.
    மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.
    ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.
    அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.
    எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.
    இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.
    அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.
    லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.
    ‘எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது.

படித்தேன்..பகர்கிறேன்



படித்து வருந்தியது!!! படித்தேன்..பகர்கிறேன்.

.
🌴மண்வெட்டி பிடித்தவனை மாப்பிள்ளையாக சமுதாயம் மறுக்கிறது,
🌴விவசாயி என சொல்லிக்கொண்டு பெண் பார்க்க முடியல,
...
🌴எதிர் காலத்தில் எதை உண்ணும்மோ இந்த சமுதாயம் எனக்கு தெரியல,
🌴திருமணத்தில் நான் விழைவித்த பொருட்கள் மட்டும் வேண்டும் என்றார்கள்,
🌴மணமேடைக்கு மண்கரை படித்த என்னை வேண்டாம் என்றார்கள்,
🌴எந்த நேரத்திலும் வெளுக்காத என் விவசாயம்
திருமண நேரத்தில் வெளுத்துபோனதே சாயம்,
இது என்றுமே என் மனதில் ஆறாத காயம்...😭😭😭
விளைவித்தவன்
பிச்சைக்காரன்...!!
விலை வைத்தவன்
இலட்சக்காரன்...!!
இரண்டு கோடிகள் கொடுத்து
ஒரு ஜோடி நாய்கள் வாங்கும்
எங்கள் தேசத்தில்...!!
இருபது கோடிகள் கொடுத்து
ஒருவர் மட்டுமே பயணிக்க
கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!!
இருநூறு கோடிகள் கொடுத்து
கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்..!!
இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய்
தள்ளுபடி செய்யும்
எங்கள் தேசத்தில்...!!
இருபதாயிரம் கோடிகளை
பொழுதுபோக்க ஒதுக்கும்
எங்கள் தேசத்தில்...!!
இரண்டு இலட்சம் கோடிகளுக்கு
அலைக்கற்றை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்...!!
எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும் பொருளையோ ஏலமெடுக்கத்தான்
எவருமில்லை....!!
இப்படிக்கு விவசாயி.
🌳விவசாயிக்கு மதிப்பு கொடுங்கள்🌳

"பால் சொம்பு"



  1. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் முடித்த பிறகு முதல் இரவில் ஏன் மனைவி கையில் "பால் சொம்பு" கொடுத்து அனுப்பிவைக்கின்றனர்???
  2. "ஒரு கணவனும் மனைவியும் அவர்கள் சந்திக்கும் முதல் தனிமையான இடம் படுக்கை அறை... நான்கு சுவற்றில் தனது அன்புக்குறியவரை, தனது வாழ்க்கையின் பாதியை, தனது எதிர்காலத்தை, அந்த இடத்தில்தான் முதன்முதலாக சந்திக்கின்றனர். வாழ்நாள் முடியும்... எந்த நிலையிலும் தனது கணவன்/மனைவியை முதன்முதலில் பார்த்த அந்த இனிமையான நினைவுகளை அவர்கள் மனதிலிருந்து அவ்வளவு சுலபமாக யாராலும...் அழிக்க இயலாது. அப்படிப்பட்ட ஒரு சந்திப்பு மிக சிறப்பாக தொடங்கவேண்டும்.
  3. அதன்படி நம் தமிழர்களின் பாரம்பரிய ஒரு பழக்க வழக்கம் முதலிரவில் "பால் சொம்பு" கொடுத்து அனுப்பிவைப்பது...அதன் அர்த்தம்? பால் போல தூய்மையான சுவையான ஒரு வாழ்க்கையை இருவரும் தொடங்கவேண்டும், பால் போல கலப்படம் இல்லா வென்மையான குணம் இருவருக்கும் இருக்கவேண்டும்.
  4. அதாவது...
  5. ((முதலில் மனைவி தன் கணவனுக்கு பால் சொம்பை நீட்டுவாள். கணவன் அதை வாங்கி
  6. 1; இந்த பாலின் உள்ள சுவை, மணம், வென்மை, போல நமது வாழ்க்கையிலும் இன்பம், துன்பம், விட்டுக்கொடுத்தல், இன்று முதல் தொடங்கும் என்ற அர்த்தத்தில் பாதி பால் பருகுவான். மீதி பாலை தன் மனைவிக்கு கொடுத்து
  7. 2; இனி உங்கள் பாதையே என் பாதை, எந்த நிலையிலும் பாலின் உள்ள வென்மை பிரியாதது போல் மரணம் வரை உன்னுடன் நான் இருப்பேன். என்ற அர்த்தத்தில் மீதி பாலை அருந்துவாள்.))

mercredi 9 novembre 2016

'பொண்டாட்டிடா'..."

  1. மந்திரவாதி ஒரு டம்ளர் நீரை
    கவிழ்த்து அதிலிருந்து ஒரு
    கைக்குட்டை வர வைத்தான்....
    கூட்டத்தில் இருந்த எல்லோரும்...
    அதிசயத்துடன் கைத்தட்டினர்...

    ஒருவர் மட்டும் கைத்தட்டாமல்
    உம்மென்று இருந்தார்...
    அவரிடம் சென்று, "நீங்க ஏன் சிரிக்கல, உம்மென்று இருக்கீங்க" என்று கேட்டார்...
    அதற்கு அவர், "இது ரொம்பவே சாதாரணம்...
    நீ ஒரு டம்ளர் தண்ணீல ஒரு கைக்குட்டை தானே எடுத்தாய்..
    என் பொண்டாட்டி ரெண்டு சொட்டு கண்ணீருல
    ஒரு பட்டு புடவையே
    எடுத்துடுவாடா.
    புரிஞ்சுக்கடா...

    'பொண்டாட்டிடா'..."

சொல்லாதீர்கள்..



  1. ஆறுதலுக்காய் பிறரிடம்
    அழுகைக்கான காரணத்தை
    சொல்லாதீர்கள்..
    ஆறுதல் கிடைக்கிறதோ
    இல்லையோ.. உங்களை ...
    அழ வைப்பதற்கான வழி
    அவர்களுக்கு கிடைத்து விடும்

உன்னை நேசிக்கும்..!!



  1. உருவத்தில் நீ
    எப்படி இருந்தாலும்
    உனக்கு பிடித்தமானவரின் உள்ளத்தில்
    நீ ஒரு குழந்தையாக இரு
    இந்த உலகமே...
    உன்னை நேசிக்கும்..!!

எல்லா நாளும் நமக்கு இனிய நாள்தான்!



  1. இந்தத் தத்துவத்தை நீங்களும், நானும் புரிந்து நடந்து கொண்டோமென்றால் இந்த நாள் மட்டுமல்ல
    எல்லா நாளும் நமக்கு இனிய நாள்தான்!
    ஒரு சமயம் அர்ஜுனனும்,கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள்.
    அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது....
    கிருஷ்ணர் அதைப் பார்த்தார்.அதை அர்ஜுனனுக்கும் காட்டினார்.

    "அர்ஜுனா,அது புறா தானே.?" என்று கேட்டார் கிருஷ்ணர்.
    " ஆமாம் கிருஷ்ணா,அது புறா தான்.!" என்றான் அர்ஜுனன்.
    சில விநாடிகளுக்குப் பிறகு,
    "பார்த்தா,எனக்கென்னவோ அந்தப் பறவை பருந்தைப் போல் தெரிகிறது.!" என்றார் கிருஷ்ணர்.
    அடுத்த விநாடியே,"ஆமாம்.....ஆமாம் ...அது பருந்து தான்.!"
    என்று சொன்னான் அர்ஜுனன்.
    மேலும் சில விநாடிகள் கழித்து
    "அந்தப் பறவையை உற்றுப் பார்த்தால்,அது கிளியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.!"
    கிருஷ்ணர் சொல்ல,
    கொஞ்சமும் தாமதிக்காமல் ," தாங்கள் சொல்வது சரிதான்...அது கிளி தான் .!" என பதிலளித்தான் அர்ஜுனன்.
    இன்னும் கொஞ்சம் நேரமானதும்,
    "அர்ஜுனா,முதலில் சொன்னது எல்லாம் தவறு.இப்போது தான் தெளிவாகத் தெரிகிறது.
    அது ஒரு காகம்.!" கள்ளச் சிரிப்புடன் கூறினார் கிருஷ்ணர்.
    "நிஜம் தான் கிருஷ்ணா...அது
    காகமே தான்...சந்தேகமே இல்லை.!"
    பதிலளித்தான் அர்ஜுனன்.
    " என்ன நீ ,நான் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்கிறாயே.! உனக்கென்று எதுவும் யோசிக்கத்
    தெரியாதா.?"
    கிருஷ்ணர் கொஞ்சம் கோபம் கொண்டவர் போல் கேட்டார்.
    "கிருஷ்ணா, என் கண்ணை விடவும்,அறிவை விடவும் எனக்கு உன் மேல் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.நீ ஒன்றைச்
    சொன்னால் ,அது பருந்தோ,காகமோ,
    புறாவோ எதுவானாலும் அதை அதுவாகவே மாற்றும் ஆற்றல் உன்னிடம் இருக்கிறது.
    அதனால் நீ என்ன சொல்கிறாயோ,அப்படித் தானே அது இருக்க முடியும்.
    தெய்வத்தின் வாக்கினை விட வேறு எதன் மேல் நான் நம்பிக்கை வைக்க முடியும்.?" அமைதியாகச் சொன்னான் ,அர்ஜுனன்.
    🌹இந்த நம்பிக்கை தான் பகவானை எப்போதும் அர்ஜுனன் பக்கத்திலேயே இருக்க வைத்தது.

    கடவுள் மேல் சந்தேகம் இல்லாமல் ,நம்பிக்கை வையுங்கள்.
    அவர் நினைத்தால் எப்படிப்பட்ட சூழலையும் மாற்ற முடியும் என்பதை உணருங்கள்.
    உங்கள் சங்கடங்களைப் போக்கவும்,சந்தோஷத்தை நிலைக்க வைக்கவும்
    கடவுளால் மட்டுமே முடியும் என்பதை உணருங்கள்
    இந்தத் தத்துவத்தை நீங்களும், நானும் புரிந்து நடந்து கொண்டோமென்றால் இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாளும் நமக்கு இனிய நாள்தான்!

dimanche 6 novembre 2016

thavaru


manam


சில வினாடிகள்



  1. பிரபலமான ஹார்ட் சர்ஜன் ஒருவர் தன் காரை சர்வீஸ் செய்ய மெக்கானிக் ஒருவரிடம் வந்தார். காரை பழுது பார்த்த மெக்கானிக்,
    "டாக்டர், நீங்கள் செய்வதையே தான் நானும் செய்கிறேன்...நானும் வால்வுகளைப் பிரிக்கிறேன்.. பாகங்களை வெட்டி ஒட்டுகிறேன்.அடைப்பை சரி செய்கிறேன்.புதிய ஸ்பேர் பார்ட்ஸ் போடுகிறேன்..நீங்களும் அதையே தான் செய்கிறீர்கள்..அப்படி இருக்கும் போது உங்களுக்கு மட்டும் எப்படி அதிக பணம்,புகழ்?" என்று கேட்டான்.
    சில வினாடிகள் மௌனம் சாதித்த டாக்டர், புன்னைகையுடன் ,"நீ சொன்ன வேலைகளையெல்லாம் வண்டி ஓடிக் கொண்டிருக்கும் போது செய்து பார், அப்போது புரியும்!" என்றார்

கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல, வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல, அது சாத்தியமும் அல்ல.



பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை.அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம்.

ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை
கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.

குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக,பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன.அவை அப்படியே சுகமாகவும்,பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால்
வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல.
எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய
உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி
விடுகின்றது.

முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து கூட்டை சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து விடுகின்றது. பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து
இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது.
தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்புவரை வந்து நிற்கின்றது.அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும்
உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது.அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப்
பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது.

ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம். அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயே
பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய
இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.
அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில் என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும்
அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து
வெளியே தள்ளி விடுகிறது. அந்த எதிர்பாராத தருணத்தில்
கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது. குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன்
குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது.குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது.

அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப் பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக்
கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது. மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக்
குஞ்சு உள்ளாகிறது.

இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும்,
காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று
வெளியில் பறக்கும் கலையையும் விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது. அது சுதந்திரமாக, ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது.

கழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும்
அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்த சுதந்திரத்தையும், ஆனந்தத்தையும்,
தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது.

பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச்
செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப்
பேருதவி என்பதை மறுக்க முடியாது ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும்,
பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும், அனுபவத்தையும்
மறுப்பது வாழ்வின் பொருளையே மறுப்பது போலத் தான்.

கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான் அதற்கு பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கப்பலை உருவாக்குவது அதை
துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை.கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல,மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்.

தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில் முதல் முதலில் தள்ளப்பட்டதை எண்ணிப்பார்த்து "நான் பட்ட அந்தக் கஷ்டம் என்
குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக் கொள்வேன்" என்று நினைக்குமானால்
அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும்.ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகு
செய்ததாக சரித்திரம் இல்லை

அந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல பெற்றோர்களிடம் இருப்பதில்லை. "நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை
இன்று நாம் நிறையவே பார்க்கிறோம்.

ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில் கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம்
இருந்ததில்லை அதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை. ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு
குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க
வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் போது பாசமிகுதியால்
அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறி விடுகிறார்கள்.

அதற்காக "நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம் செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும் நட" என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. வசதிகளும்,
வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக் காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத் தான் இருக்கும். இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின் பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது
அவசியமே. தேவையே இல்லாத கஷ்டங்களை பிள்ளைகள் படத் தேவையில்லைதான். ஆனால் 'எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான
அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது' என்று நினைப்பது அந்தப் பிள்ளையின் உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும்
செயலே ஆகும்.

வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானவையே. அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போது தான் அவன் வலிமை அடைகிறான். அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப் பெற்றோர் நினைப்பது அவனுக்கு வாழ்க்கையையே மறுப்பது போலத் தான். சில கஷ்டங்கள் பிள்ளைகள்படும் போது பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக இருக்கலாம்.

ஆனால் கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல,
வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல, அது சாத்தியமும் அல்ல.



mercredi 26 octobre 2016

இறந்த பிறகு உடலுக்கு என்ன மதிப்பு?


இறந்த பிறகு உடலுக்கு என்ன மதிப்பு?
அசோக மாமன்னர் தனது தேரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, எதிரே ஒரு துறவி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததும், தேரிலிருந்து இறங்கி வந்து, அவர் காலில் விழுந்தார். அதைக் கவனித்த அவரது தளபதிக்கு, மாமன்னர் ஒரு பரதேசியின் காலில் விழுவதா என்று வருத்தம் ஏற்பட்டது. அதை அரண்மனைக்கு வந்ததும் மன்னரிடமே வெளிப்படுத்தினார் தளபதி. மன்னரோ அவரது வினாவுக்கு விடையளிக்காமல், ஓர் ஆட்டுத்தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை ஆகிய மூன்றும் உடனே வேண்டும் என, ஒரு வினோதமான ஆணையிட்டார். மூன்று தலைகளும் கொண்டு வரப்பட்டன. அசோகர் மூன்றையும் சந்தையில் விற்றுவரச் சொன்னார். ஆட்டுத்தலை உடனே விலை போயிற்று. புலித்தலையை வாங்கப் பலரும் யோசித்தனர். இறுதியில், ஒரு வேட்டைக்காரர், தன் வீட்டுச் சுவற்றில் பாடம் பண்ணித் தொங்கவிட வாங்கிச் சென்றார். ஆனால், மனிதத் தலையைக் கண்டு, எல்லாரும் அஞ்சிப் பின்வாங்கினர். முகம் சுழித்து ஓடினர். ஒரு காசுக்குக்கூட யாரும் வாங்க முன்வரவில்லை. விபரங்களை மன்னரிடம் சொன்னபோது, மனிதத் தலையை யாருக்காவது இலவசமாகக் கொடுத்துவிடச் சொன்னார் மன்னர். இலவசமாக வாங்கக்கூட யாரும் தயாராயில்லை. இப்போது மாமன்னர் அசோகர் சொன்னார், “தளபதியே, மனிதன் இறந்துவிட்டால் அவன் உடல் ஒரு காசுகூடப் பெறாது. இருந்தும் இந்த உடல், உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் போடுகிறது? இறந்த பிறகு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரிகிறது. உடலில் உயிர் இருக்கும்போதே, தங்களிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் ஞானிகள். அத்தகைய ஞானிகளை, பாதத்தில் விழுந்து வணங்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?” என்று. தளபதிக்கு இப்போது புரிந்தது

vendredi 14 octobre 2016

யாருக்கும் தெரியாது.



  1. ஒரு வீட்டில் எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது.
    எலி வலையை விட்டு தலையை உயர்த்திப்பார்த்தது.
    வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.
    ...
    ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி.
    அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.
    அதைப்பார்த்ததும் அந்த எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.
    உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது."
    கோழி விட்டேற்றியாகச் சொன்னது" உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை."
    உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.
    மனம் நொந்த எலி அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதேபதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை "எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.
    அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.
    ஒரு அரை மணி நேரத்தில் " டமால் " என்றொரு சத்தம்.
    எலி மாட்டிக்கொண்டுவிட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.
    எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.
    எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்ட பின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.
    அருகில் இருந்த ஒரு மூதாட்டி "பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.
    கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.
    அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை.
    உறவினர்கள் சிலர் வந்தார்கள்.அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.
    சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது.
    பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.
    இந்த முறை ஆட்டின் முறை.
    விருந்தாக ஆடும் உயிரை விட்டது.
    நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.
    பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.
    எலி தப்பித்து விட்டது. அப்பாடா...
    ‪ :- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள்.
    ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.
    அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம்.
    அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்......

jeudi 13 octobre 2016

திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்?


  1. திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்?
    சம்ஸ்கிருதத்தில் இதை'சப்தபதி'
    என்று கூறுவார்கள்.
    ...
    அதாவது
    ஏழுஅடிகள்மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் சேர்ந்து நடந்து வருவதாகும்.
    அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும் போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன்உனக்குதுணையிருப்பான்என்றுகீழ்கண்டவாறுத‌னதுபிரார்த்தனையைச்சொல்கிறான்!
    "முதல் அடியில்: பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்"
    "இரண்டாம் அடியில்: ஆரொக்கியமாக வாழ வேண்டும்"
    "மூன்றாம் அடியில்: நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்"
    "நான்காவது அடியில்: சுகத்தையும் , செல்வத்தையும் அளிக்க வேண்டும்"
    "ஐந்தாவது அடியில் : லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்"
    "ஆறாவது அடியில்: நாட்டில் நல்ல பருவங்கள்நிலையாக தொடர வேண்டும்"
    "ஏழாவது அடியில்: தர்மங்கள் நிலைக்க வேண்டும்"
    என்றுபிராப்திப்பதாகசொல்லப்படுகிறது.
    இந்தசம்பிரதாயத்தில்மனிதர்களிடம் இருக்கும் மிகவும் சூக்ஷமமான மனோவியல்விசயத்தை இந்து தர்மத்தில் உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள்.
    இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் அவர்களுக்குள் சினேகிதம்உண்டாகும் என்பது சாஸ்திரம்.
    உதாரணமாக நாம் சாலையில் நடக்கும் போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும் போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் நன்றாக கவனியுங்கள்.
    ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களைவேகமாகதாண்டிவிடுவோம் அல்லது அவர்களைமுன்னே போகவிட்டுவிடுவோம்.
    முழுமையாக ஏழு அடிகள் ஒன்றாக நடக்க மாட்டோம்.
    இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குளாக நடந்து விடும் என்பது ஒரு சூக்ஷமமான விஷயம்.

விசித்திரமான ஒரு பழக்கம்



  1. பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் விசித்திரமான ஒரு பழக்கம் இருந்து வந்தது.
    பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால், அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள்.
    எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம்முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில் வாடி வதங்கி மடிவார்கள்.
    இப்படியான சூழ்நிலையில் ஓர் இளைஞன் முதுமையடைந்த தன் தாயை சுமந்து கொண்டு மரங்கள் சூழ்ந்த காட்ட...ுப்பகுதியில் மலை உச்சியை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.
    தாய், மகன் இருவருமே எதுவும் பேசவில்லை!
    ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த தாயார். ஏதோ ஒருவித மணம் கொண்ட மரங்களின் சின்னசின்ன கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான்.
    உடனே,
    ""அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?'' என்று கேட்டான்.
    அதற்கு தாயார், ""மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு திரும்பும்போது வழி தெரியாமல் திண்டாடக் கூடாதல்லவா?
    இங்கே போடப்பட்டுள்ள கிளைகளை கவனித்து நடந்தால் வழி தவறாமல் நீ பாதுகாப்பாக வீடு போய் சேரலாம்.
    அதற்காகவே கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்'' என்றாள்.
    ""வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும் மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் பாசமிகுந்த இந்த தாயா பயனற்றவர் என்று உள் மனம் கேட்க, அவன் தன் தாயை மீண்டும் தன் வீட்டுக்கே கொண்டு வந்து பாசத்துடன் பராமரிக்கலானான் .
    அதன்பின்பு அந்தக் கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது.
    இந்த கதை சொல்ல வரும் கருத்து நம் வாழ்வுக்கு மிக முக்கியம்..
    நீ
    நல்லவனா
    கெட்டவனா என்று தெரிவதற்கு முன்னாலேயே தன் வயிற்றில் இடம் கொடுத்தவள் உன் தாய் எத்தனை ஜென்மம் சம்பாதித்தாலும் நீ இருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாது என்றால் அது உன் தாயின் கருவரை என்பதை மறந்து விடாதே எத்தனையோ
    கஷ்டங்கள்
    நஷ்டங்கள்
    துன்பங்கள்
    துயரங்கள்
    அசிங்கங்கள்
    அவமானங்கள்
    கடந்த பிறகும் ஒன்றுமே தெரியாதது போல் காட்டிக்கொன்டு குடும்பத்தின் மத்தியில் சிரித்துக் கொன்டிருக்கும் தந்தைக்கு நிகரான நம்பிக்கை ஊட்டும் புத்தகம் இந்த உலகில் வேரேதுமில்லை
    நம் பெற்றோர்கள் எப்போதும் நம் நலன் நினைப்பவர்கள்.
    அவர்களை
    கண் போன்று பாதுகாப்போம்

மாறும்.


நாம் நினைப்பது போல் நம் வாழ்க்கையில் எல்லாமே நடப்பது கிடையாது.
சில சமயம் தானாகவே நாம் எதிர்பாராத அளவிற்கு சந்தோஷம் கிடைக்கும்.
சில சமயம் நாம் கற்பனை செய்யமுடியாதபடி துன்பம் நம்மை தேடி வரும்.
எது நடந்தாலும் அதை பகிர்ந்துகொள்ள, தோள் சாய, அழுது புலம்ப, மடி சாய.
ஒரு உறவு நமக்காகவே இருந்தால் அந்த சோகம் கூட சுகமாகத்தான் மாறும்.