முகப்பு

mardi 28 juin 2016

சற்றே சிந்திப்போம்


    யாராலும் மறுக்க முடியாத உண்மை:
    ========================================
    அன்றாடம் நம் கைகளிலும், சட்டைப் பாக்கெட்டிலும், சில சமயங்கள் நம் வாயிலும் புழங்கும் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் "நோய் பரப்பும் காரணிகள்".
    1. சாவு வீட்டிற்கு சென்று வந்தால் குளிக்கிறோம். ஆனால் நம் சட்டைப்பையில் புழங்கும் ஒற்றை ரூபாய் நாணயம், எந்த பிணற்றின் நெற்றியிலிருந்து எடுக்கப்பட்டது என்று யாருக்கு தெரியும்?
    அப்படியாக பரவும் அத்தகைய நாணயங்கள் இன்று தவிர்க்க முடியாதவையாகி விட்டன....
    2. அடுத்தபடியாக மருத்தவமனையில் புழங்கக்கூடிய ரூபாய் நோட்டுக்கள் , நாணயங்கள்.
    "காய்ச்சல் சளி தொடங்கி, சொரியாஸிஸ், மூலம், H1N1, TB, இதர பால்வினை நோய்கள் ஆகிய அத்தனை நோய்களையும் தாங்கிவரும் நோயாளிகள் சிகிச்சைக்காக தரும் ரூபாய் நோட்டுக்கள் மருத்துவமனை மூலம் பரவுகின்றன.
    இதனாலேயே சில மருத்துவர்கள் இன்று அந்தந்த சிகிச்சைக்கான கட்டணத்தை தாங்கள் வாங்காமல் அவற்றை கம்பவுன்டர்களிடம் தர சொல்கிறார்கள். பின்னர் அவற்றை வங்கி சேமிப்புக்கணக்கில் கம்பவுண்டர்களையே deposit செய்யவும் சொல்கிறார்கள்.
    3. சாக்கடை மற்றும் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியாளர்கள் மூலம் பரவும் ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள்.
    அதிக அளவில் பாக்டிரியாக்கள் வாழக்கூடிய அந்த நோட்டுக்கள் இன்று நம் சட்டைப்பையில்.
    இயற்கையாகவே இந்த துப்புரவு பணியாளர்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள். ஆனால் அவர்கள் மூலம் பரவும் நோட்டுக்களை பயன்படுத்தும் நாம்..........?
    4. இறைச்சி கடையில் பரிமாறப்படும் பணம். இறைச்சியின் ரத்தத்தில் வாழும் பாக்டிரிய்க்கள் மற்றும் தொற்று கிருமிகள் அப்படியே அந்த கடைக்காரர் மூலம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களில் பரவி இன்று நம் வீட்டு பீரோக்களில் பத்திரப்படுத்த படுகின்றன.
    5. பேருந்து நிலைய கட்டணக் கழிப்பிடத்தில் வாங்கப்படும் அத்தனை நாணயங்களும் நேரடியாக பேருந்து நடத்துனரிடம் ( bus conductors) தினந்தோறும் நேரடியாக தரப்படுகின்றன.
    அவர் தரும் நாணயங்கள் , நம் வீட்டில் புழங்கவில்லை என்று உறுதி அளிக்க எவராலும் முடியுமா?
    6. பாக்டிரியாக்களை பையில் வைத்து கொண்டு திரிகிறோம்.
    பரவும் அபாயத்தை மறக்கிறோம்.
    மற்ற வளர்ந்த நாடுகளில் கரன்சியின் வாழ்நாள் 5 வருடம் தான். அதற்கு பிறகு அவற்றை எரித்து விடுவார்கள். ஆனால் நாம்.....................?
    இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே தான் போகும். இதிலிருந்து தப்புவதற்கு நடுத்தர வர்க்கத்தினரால் இயலாத காரியம். ஆனால் நாம் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் செயல்படலாம்.
    நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை வாயில் வைப்பதை தவிர்க்கவும்.
    எச்சில் தொட்டு பணத்தை எண்ணும் பழக்கத்தை அறவே விடவும்.
    அன்றாடம் கைகளை நன்கு dettol மூலம் கழுவவும்
    கரன்சி மூலம் பரவும் பாக்டிரியாக்களை முற்றிலும் ஒழிக்க முயற்சி செய்வோம். பாடுபடுவோம்.
    இந்த குறுந்தகவலை குறைந்த பட்சம் நம் நண்பர்களிடமாவது பகிர்ந்து கொள்வோம்.
    சற்றே சிந்திப்போம் நம் சந்ததியினரை காப்போம்........!

மனித மனம்


Manuel Sountha இன் படம்.
    நன்கு சிந்திக்கும் திறனுடைய மனித மனம் ஒருபோதும் சோடைபோவதில்லை மற்றும் அது விலைமதிப்பற்றதும் கூட.
    வழக்கமான எண்ணங்களிலிருந்து மாறுபட்டு, புதிய சிந்தனைகளை ஏன் நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்? எதற்காக இந்த சிந்தனை மாற்றம் நமக்கு அவசியமாகிறது? சிந்தனையின் பயன்கள் . நல்ல எண்ணங்களின் வாயிலாக பல்வேறு நன்மைகள் நமக்கு வந்தடைகின்றன. அதாவது, நமது பொருளாதார மேம்பாடு, பிரச்சனைகளிலிருந்து விடுபடுதல், நமக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுதல் போன்றவற்றில் எண் ணங்களின் பங்கு மிகவும் அதிகம்.... மேலும், தனிப்பட்ட மற்றும் தொழில் முறையில் சிந்தனைகள் நம்மை முற்றிலும் புதியதொரு நிலைக்கு அழைத்துச்சென்று நமது வாழ்வில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றன.
    சிந்தனையின் பயன்கள் பலவகை யில் இருந்தாலும், நல்ல சிந்தனைகளை உருவாக்கிக்கொள்ளுதல் என்பது எளிதான செயல் அல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண் டியது அவசியமான ஒன்று. சிறந்த சிந்தனையாளராக மாறவேண்டு மானால் அதற்கான தேடல் மற்றும் உழைப்பு மிகவும் அவசியம். “சிந்தித்தல் என்பது கடினமான பணி, அதனாலேயே சிலர் மட்டும் அதனை செய்கின்றனர்” நமது சிந்தனையினை எவ்வாறு மேம்படுத்திக்கொள்வது என்பதைக் கற்றுக்கொள்ளத் தொடங்கும்போதே, சிறந்த சிந்தனையாளராக மாற ஆரம் பிக்கின்றோம் . மேலும், சிந்தனையானது மிகச் சிறந்த முதலீடு என்பதையும் தெளிவு படுத்துகிறார். தங்கச் சுரங்கங்கள் வற்றிப் போகலாம், பங்குச் சந்தையில் சரிவு ஏற்படலாம், சொத்துகள் கூட கைவிட்டுப்போகலாம் ஆனால், நன்கு சிந்திக்கும் திறனுடைய மனித மனம் ஒருபோதும் சோடைபோவதில்லை மற்றும் அது விலைமதிப்பற்றதும் கூட.

பயம்



    பயம் ஒரு பெரிய நோய். நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான்.
    அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார். என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.
    அக்பா் யோசிச்சார். பீர்பாலை பார்த்தார். பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.
    ...
    மாதக்கடைசியில் .எடையும் அப்படியே இருந்தது. அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்.
    அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.
    ூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன். அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.
    அச்சமின்மையே ஆரோக்கியம்!
    பின்குறிப்பு
    இந்த கதையை எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னார்.
    சொன்ன நண்பரை மேலும் கீழும் பார்த்தேன். அவர் கல்யாணத்துக்கு முன் எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்போதும் இருந்தார்.
    சரிதான். சிங்கத்துடன் வாழ்க்கை நடத்துறாரு

thavaru


paratu


dimanche 19 juin 2016

மனம் போல வாழ்க்கை அமையுமாம்


    மனம் போல வாழ்க்கை அமையுமாம்
    பாட்டி படுத்திருந்த திண்ணையின் ஓரத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள் பேத்தி. திடீரென வானில் மேகம் சூழ்ந்து, மழை கொட்டியது. பாட்டி, பேத்தியிடம், அடியே, எவ்வளவு தண்ணீர் வீணாய்ப் போகுது. அண்டாவை முற் றத்தில் கொண்டு வந்து வச்சு மழை தண்ணீரை நிரப்புடி என் ராசாத்தி..." என்றாள்.
    போ... பாட்டி" என மறுத்தாள் பேத்தி. அடியே, அடுக்களையில் இருக்கிற பாத்திரத்தை அப்படியே கொண்டு வந்து முற்றத்தில் வைக்கிறது பெரிய வேலையா? போய் அண்டாவைக் கொண்டு வந்து அப்படியே வை..." என உத்...தரவிட் டாள் பாட்டி. வெறுப்பாய் ஓடி, பாட்டி சொன்னதைச் செய்துவிட்டுத் திரும்பி னாள் பேத்தி. அரை மணி நேரம் மழை கொட்டியது! இந்நேரம் அண்டா நிரம்பி இருக்கும் என ஆனந்தமடைந்த பாட்டி, திண்ணையை விட்டு முற்றத்துக்கு எழுந்து போனாள். பகீர் என்று ஆனது பாட்டிக்கு.
    அண்டாவில் ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லை. ‘அப்படியே கொண்டு வந்து முற்றத்தில் வை’ என்று பாட்டி சொன்னதை, வேத வாக்காக எடுத்துக் கொண்டு, கழுவிக் கவிழ்த்து வைத்திருந்த அண்டாவை கவிழ்த்த வண்ணமே மழையில் வைத்து விட்டாள் பேத்தி. மழை என்னவோ வஞ்சனை இன்றிதான் பெய்தது. பாத்திரம்தான் கவிழ்ந்து கொண்டு தண்ணீரை ஏற்க மறுத்து விட்டது.
    கடவுளின் அருளும் அப்படித்தான்! அது பொதுவா கவே அனைவருக்கும் கொட்டுகிறது. கவிழ்த்து வைத்தவர்களின் மனங்கள் அதில் ஒரு சொட்டுகூட ஏந்துவதில்லை. திறந்த மனத்தோடு, பிரபஞ்சத்தோடு தொடர்பு வைத்துக் கொண்டால் பஞ்ச பூதங்களும் நமக்குச் சாதகமானவையே..

அமைதியா இருப்பது


    நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால் நினைவின் மொழியும் பிரிவின் வலியும் ௨ணராமலே போய்விடும்...!!!

      சிலரது சில கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியா இருப்பது பதில் தெரியாமல் அல்ல உன் அளவுக்கு பேசி என் மதிப்பை நான் குறைச்சுக்க விரும்ப வி ல்லை என்று தான்

kall


house


fathers day


palam


jeudi 2 juin 2016

தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்!



தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்!

தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா..?! தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்!
தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய.. தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?
கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீரோட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம...் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான்.
இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்! மத்திய தரைக்கடல், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான். பல நாடுகளையும் கைப்பற்றினான்.
கடலில் பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன் மட்டும்தான் பயன்படுத்தினான். பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர்.
உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார். சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில்
பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகள் அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான். போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா? அதுதான் உண்மை!
கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழன்
தொழில்நுட்பம் தான் . அதாவது, கொலம்பஸ் கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட வழித்தடமும் ஒன்றுதான்!
ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க
இது மட்டுமா காரணம்? இல்லை. நம் பண்பாட்டுக்கும் ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆம் தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம் உண்டு. தான் பிறந்த இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும். தமிழகத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு.

mercredi 1 juin 2016

விலை மதிக்க முடியாத ஓரே சொத்து


வாழ்வின் முன்னேற்றங்களுக்கு நினைவாற்றல் எவ்வளவு அவசியமோ, அதே போல் வாழ்வின் மகிழ்ச்சிக்கு ஞாபகமறதி மிக அவசியம்..!!

தன்தேவைக்காக தேனொழுகபேசிவிட்டு தேவைகள் முடிந்தபின்னே தேளினைபோல் கொட்டுகிறார்கள்,தேகமெங்கும் நஞ்சினை வைத்துக்கொண்டுள்ள சில மனித விஷஜந்துக்கள்

மனம் நிறைந்த சிரிப்பில் எல்லோரிடமும் இருப்பது... அழகு மட்டுமே !!!
என் இதயம் அழகான பூஞ்சோலை .... அதில் அழகான நட்பூக்கள் பூத்திருக்கிறது அன்புதான் இதன் பசளை

தனிமையை விரும்பிகிறேன் அது என்னை புரிந்து கொண்ட அளவிற்கு கூட மனிதர்கள் புரிந்து கொள்ளவில்லை..

பணத்தை தேடி ஓடுகிறவன் ஒரு நாள் அதை விட வேகமா திரும்ப வருவான்.. அப்பொழுது அனுபவிக்க வாழ்க்கை மீதம் இருக்காது..!

பூக்கள் அழகானவைதான் அதன் வாழ்நாள் குறைவு ஆனால் செடிகள் அப்படி இல்லை எனவே பூக்களாக இருக்க ஆசைபடாமல் செடிகளாகஇருப்போம்
விட்டு கொடுக்கும் தன்மை நமக்கு இருந்தால் நாம் விட்டுக் கொடுத்த அனைத்தும் ஒரு நாள் நம்மை தேடி வரும்

மனசுக்கு பிடித்த ஒரு சொந்தம் இருக்கும் வரை இதயத்தில் மகிழ்ச்சி இருந்து கொண்டே இருக்கும்

ஆழமான அன்பிற்கு ஆணிவேராக அமைவது கடுகளவும் சந்தேகமில்லாத நம்பிக்கை மட்டுமே.

உலகத்தின் குறைகளை எல்லாம் கண்டு பிடிக்கும் சிலருக்கு., தன் குறைகள் மட்டும் தெரியாமல் போவதற்கு பெயர் தான் "சுயநலம்".,

வாழ்க்கையில் நம்மிடம் இருக்கும் விலை மதிக்க முடியாத ஓரே சொத்து இந்த "நொடி" மட்டுமே... நற்காலை வணக்கம்

இன்பமான அழகு,இறைவனின் படைப்பே



மரியாதைக்குரியவர்கள் மனதை காயப்படுத்தும் போது தான் சொல்லொண்ணா வலி மனதில் ஏற்படுகிறது .

மெல்லினமாய் இருக்கும் பெண்கள் வல்லினமாய் வார்த்தைகள் உதிர்ப்பது ஏனோ

ஒவ்வொரு விடியலிலும் இன்றாவது நம் வாழ்வில் விடியல் வராதா என்ற ஏக்கத்துடனே விடிகிறது.. காலை வணக்கம் தோழமைகளே.

அருகில் இருப்பவருக்கோ அன்பு காட்ட தெரியவில்லை அன்பு காட்டுபவருக்கோ அருகில் வர முடியவில்லை

ருவரை கெட்டவன் என்று அவர்களே தீர்மானித்து விடுகிறார்கள் நல்லவன் என்பதற்கு மட்டும் அடுத்தடுத்து ஆதாரம் கேட்கிறார்கள்

விமர்சனங்களைப் பற்றி கவலை படாமல் உங்கள் வேலையை செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்

பென்சிலில் இருந்து பேனாவிற்கு மாறும் தருணத்தில் வாழ்க்கையில் ஒன்றையும் அழித்து எழுத முடியாது என்று உணர தொடங்கிவிடுகிறது குழந்தை!!!

கிடைக்கும் போது பெற தவறினால் தேடும்போது கிடைக்காது அன்பு...

ஒருவரை மிகவும் பிடித்து விட்டால் அவர் மீது எவ்வளவு கோபங்கள் வந்தாலும் அவர்மீதான அன்பு மட்டும் ஒருபோதும் குறைவதில்லை
1.                         
   குழந்தைகள் முன் பெற்றோர் சண்டையிடுவது மிக தவறு குழந்தைகள்      மனதில் எளிதாக பாதிப்பை ஏற்படுத்தி தவறு செய்ய தூண்டுகிறது

நட்பு எப்போதுமே சாதி மத இன வேறுபாடு என்றும் பார்ப்பது இல்லை நட்பு என்றும் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும்

இயற்கையின் அழகே ஒரு இன்பமான அழகு,இறைவனின் படைப்பே இனிசைப்பாடும் அழகு...

யாரை நீ வெறுத்தாலும் உன்னை மட்டுமாவது நேசிக்க கற்றுக்கொள் இந்த உலகிலே மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பது தான்

போனதை மறந்து இருப்பதை மகிழ்ந்து வருவதை எதிர்கொண்டு வாழ்வதே வாழ்க்கை!