முகப்பு

samedi 19 novembre 2011

அன்பு காணிக்கை


உந்தன் மெளனத்தில்.

எந்தன் வார்த்தை கலந்திருக்கும்...

உந்தன் இதயத்தில்.

என் நினைவுகள் நிறைந்திருக்கும்...

உந்தன் உறவில்.

எந்தன் பாசம் நிறைந்திருக்கும்...

உந்தன் உயிரில்.

என் நேசம் மலர்ந்திருக்கும்...

என்றும் உந்தன் கனவுகளை

என் நெஞ்சம் சுமந்திருக்கும்...

உந்தன் அன்புக்காக..!!

என் இனிய அன்பு காணிக்கை

. ராஜி.

பூமியின் அழகை புதுப்பிக்கிறது.


பூவிலிருந்து வேர் வருவதில்லை, வேரில் இருந்துதான் பூ வருகிறது. காற்றிலோ, விண்ணிலோ அழகாக மலரும் எதுவுமே தன் அழகை, சக்தியை வேரிலிருந்துதான் பெறுகிறது.

மண்ணில் புதைந்த ஆழமான வேர்களின் சாறினால்தான் உயிருள்ள எல்லாம் பூத்து நிற்கின்றன. கன்னத்தில் மறைந்திருக்கும் வெட்கம் மண்ணின் வேதியல் பொருட்களில் மறைந்திருக்கும் அமைதியான உயிர் சக்தியில் இருந்துதான் வருகிறது. மண்ணைப் பிரிந்து வானில் பூக்க முடியாது
மண்ணில் இருந்து, பூமியின் அமைதியான மடியில் இருந்துதான் வாழ்வின், சக்தியின் ஊற்று வெளிப்படுகிறது. மண்ணிலிருந்து, மக்களின் அமைதியான இதயத்தில் இருந்து நம்பிக்கையும், உறுதியும் சந்தோஷத்தோடு வெளிப்பட்டு பூமியின் அழகை புதுப்பிக்கிறது.

jeudi 17 novembre 2011

நாம்

நான் என்பது தனியாகும்


நீ என்பது வெறுமையாகும்

நாம் என்பது இனிமையாகும்

என் மனதும்!! ♥


சின்னச் சின்ன கோபத்தில்

சின்னச் சின்ன வாக்குவாதங்களில்

சின்னச் சின்ன சண்டைகளில்

சின்னச் சின்ன தேடல்க‌ளில்

சின்னச் சின்ன ஊடல்களில்

சின்னச் சின்ன மௌனங்களில்

சின்னச் சின்ன பிரிவுகளில்

சின்னச் சின்ன எதிர்பார்ப்புக்களில்

சின்னச் சின்ன எதிர்ப்புகளில்

சின்னச் சின்ன பிடிவாதங்களில்

சின்னச் சின்ன வார்த்தைகளில்

தொலைந்த போது தான்

புரிந்து கொண்டோம் நாம்

நம் உறவுகளின்

மகத்துவத்தையும்

அதன் தனித்துவத்தையும். ♥

நீ விட்டுச் சென்ற சாலையோரம்

காத்துக் கிடக்கிறது

சாலையோரப்

பூக்களுடன் பூவாய்

என் மனதும்!! ♥

அன்புடன்

ரோஜா.
Par : Rose Spellman

.

அவன் பின்னால்



தொலைத்தலும் இழத்தலும்

என் வாழ்வின் வழமையாய்...

எல்லாம் இருந்தும்

எதுவுமே இல்லாதவளாய்...

வெறுமையாய்

என்னையே வெறுத்து

நின்ற வேளை

ஒளி தந்து

விழிதந்தவனாய் ஒருவன்.

இருளுக்குத்

தத்துவம் சொல்லி

வெளிச்சத்தை

அறிமுகம் செய்தவன் அவன்.

அதனாலேயே

என் பயணம்

இன்னும் தொடர்கிறது

அவன் பின்னால்.

lundi 14 novembre 2011

மனித சுதந்திரத்திற்கு நான்கு முக்கிய விடயங்கள்


மனித சுதந்திரத்திற்கு நான்கு முக்கிய விடயங்கள் அடிப்படையானவை :

முதலாவது : உலகம் முழுவதும் பேச்சுக்கும், எழுத்துக்கும் சுதந்திரம்.
இரண்டாவது : உலகம் முழுவதும் ஒவ்வொரு மனிதனும் தனக்கே உரிய விதத்தில் கடவுளை வணங்கும் சுதந்திரம்.
மூன்றாவது : தேவைகளுக்கான சுதந்திரம், ஒவ்வொரு நாடும் தமது மக்களுக்கு ஆரோக்கியமான சமாதான காலத்தை வழங்குவது.
நான்காவது : பயத்தில் இருந்து விடுதலை. எந்த நாடும் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் ஆயுத வன்முறையை செலுத்தாமல் இருக்க வேண்டும்.

இலட்சியங்களை துறப்பதால்


உங்கள் நரை முடி குறித்து வெட்கப்படாதீர்கள் அதை ஒரு கொடிபோல பெருமையாக அணியுங்கள். ஏனென்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் இந்த நரைமுடியை பார்க்காமலே பலர் புவியில் இறந்துவிட்டார்கள். இதைப் பார்க்கும்வரை உங்களுக்கு வாழக் கிடைத்தது எத்தனை சிறப்பு என்று எண்ணுங்கள்.

மூளை நன்கு வளர்ந்து மூளையில் உள்ள வெண்ணிற செல்கள் நரை முடியாக வெளியே வருகின்றன அது பெருமைக்குரியதே.
இளமை என்பது வாழ்வின் பாகமல்ல அது ஒரு மனோநிலை. இளமை என்றால் பயத்தை தைரியம் வெற்றி கொள்ளும் மனோநிலை.
வருடங்களை கடப்பதால் ஒருவனுக்கு வயதாவதில்லை. தங்கள் இலட்சியங்களை துறப்பதால்தான் ஒருவனுக்கு வயதாகிறது.

முதுமை


உங்கள் நம்பிக்கையைப் போலவே
இளையவராக இருக்கிறீர்கள்,
சந்தேகத்தைப் போலவே
முதியவராக இருக்கிறீர்கள்,
தன்னம்பிக்கையைப் போலவே
இளைஞராக இருக்கிறீர்கள்,
பயத்தைப் போலவே
முதியவராக இருக்கிறீர்கள்,
விசுவாசத்தைப் போலவே
இளைஞராக இருக்கிறீர்கள்.

முதுமை என்பது எப்போதுமே உங்களை விட 15 வயது அதிகமாக இருப்பது என்று எண்ணிக் கொள்ளுங்கள்.

இதயத்தில்


இலையுதிர் காலம் என் தலையில் இருக்கிறது ஆனால் வசந்த காலம் என் இதயத்தில் இருக்கிறது.




வயது என்பது மனதின் தன்மை



வயது என்பது மனதின் தன்மை

உங்கள் கனவுகளை நீங்கள் தொலைத்துவிட்டால்

நம்பிக்கை இழந்து விட்டால்

எதிர் காலத்தை நீங்கள் எதிர்பார்க்காவிட்டால்

உங்கள் இலட்சிய தாகம் அடங்கிவிட்டால்

நீங்கள் வயதானவர்தான்.

ஆனால் வாழ்வில் இருந்து சிறந்ததை நீங்கள் எடுத்து

விளையாட்டாக உங்களால் இருக்க முடிந்தால்

அன்பாக இருந்தால்

எவ்வளவு வருடங்கள் கடந்தாலும்

எத்தனை பிறந்த நாள் போனாலும்

உங்களுக்கு வயதாவதில்லை.

இனிமையானவை


கவலையோ குழப்பமோ இன்றி ஒவ்வொரு நாளையும் வரவேற்று, தனக்கு விதிக்கப்பட்ட செயல்களை செய்து, சந்தோஷமாக, பயமற்று வாழுங்கள். நல்ல நண்பர்களை உருவாக்குங்கள், நல்ல நினைவுகளை எண்ணி மகிழுங்கள், காலம் மறைவதை புறக்கணியுங்கள், எதிர் காலத்தை மட்டும் பாருங்கள் வாழ்வில் சிறந்தது இனிமேல்தான் வரப்போகிறது.

வயதான காலத்தை அரவணைத்து நேசியுங்கள். அதை எப்படி நேசிப்பது என்று உங்களுக்கு தெரிந்தால் அதில் சந்தோஷம் மிதமிஞ்சி இருக்கிறது. மெதுவாக கடந்து செல்லும் வருடங்கள்தான் ஒரு மனித வாழ்வில் மிக இனிமையானவை. அவை இறுதியை அடைந்துவிட்டாலும் அதன் சந்தோஷங்கள் மாறுவதில்லை.

vendredi 11 novembre 2011

துடிப்பது .......


விழியோரம் நீர் துளிகளுடன்

உன் வருகைக்காய் ஏங்கும்

என் இதயம்.......
 
துடிப்பது .......
 
உனக்காய் காத்திருக்கிறேன்




உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக்கும் குங்குமப்பூ


உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக்கும் குங்குமப்பூ


குங்குமப்பூவில் உள்ள மூலப்பொருள்கள் மூளை உள்பட உடல் உறுப்புகள் அனைத்தையும் சுறுசுறுப்பாக்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

குங்குமப்பூவுக்கு பல மருத்துவ குணங்கள் இருப்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கனடாவின் அல்பர்ட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சிரிஸ் போவர் தலைமையில் இதுதொடர்பான ஆய்வு சமீபத்தில் நடந்தது.


உடல் உறுப்புகள் குறிப்பாக மூளையின் செயல்பாட்டை குங்குமப்பூ துரிதப்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது. குங்குமப்பூவில் உள்ள பொருள்கள் மூளையில் உள்ள செல்கள் பாதிப்படையாமல் பாதுகாப்பதால் மூளை செயல்பாடு அதிகரிப்பதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதனால் நரம்பு மண்டலமும் வலுவடையும் என்கின்றனர். இதுபற்றி அவர்கள் மேலும் கூறுகையில், மூளை செல்கள் பாதிப்படைவதால் ஏற்படும் நிலை மைலின் எனப்படுகிறது. இந்த நிலையில் நரம்புகளைச் சுற்றி ஒரு மெல்லிய திரை போன்ற கவசம் உருவாகும்.

இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். குங்குமப்பூவில் உள்ள பொருள்கள் இந்த திரை போன்ற கவசம் உருவாகாமல் தடுக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு குங்குமப்பூ கலந்த மருந்து கொடுக்கும்போது, பாதிப்பில் இருந்து அவர்கள் விடுபட முடிகிறது. மூளை செல்களை குங்குமப்பூ பாதுகாக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் வலு சேர்க்கிறது என்றனர்.



அப்பா ஆகும் போது கெட்ட பழக்கங்கள் மறைந்து விடும்


அப்பா ஆகும் போது கெட்ட பழக்கங்கள் மறைந்து விடும்: சுவாரஸ்ய தகவல்


ஒரு ஆண் அப்பா ஆகும் போது கெட்ட பழக்கங்கள் இல்லாமல் போவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

முதன் முறையாக அப்பா ஆகும் ஆண்கள் மது, புகையிலை போன்ற தீய பழக்கங்களில் இருந்து விடுபடுவதாக Oregon மாநிலப் பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு கடந்த 19 வருடங்களாக இடம்பெற்றுள்ளது. அதில் 200 க்கும் மேற்பட்ட தீய பழக்கம் உள்ள இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் நடத்தைகள் காலப்போக்கில் குறிப்பாக திருமணம் ஆன பின்னரும் எவ்வாறு மாறுகின்றது என்பதை தீவிரமாக கண்காணித்தே ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.


திருமணமாகி அப்பா ஆன பின்னர் நல்ல பழக்க வழக்கங்கள் உடன் சமூகத்தில் இணைந்து பயணிக்கிற தன்மையை காண முடிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் Journal of Marriage என்ற இதழில் வெளியாகியுள்ளது.



பயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்


பயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்


மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். இது மனிதர்களின் உடல்நலத்தை பேணுதல், மீள்வித்தல் போன்றவற்றிற்காக உருவாக்கப்பட்ட செயல்முறைகளை உள்ளடக்கும்.

1. வெந்தயம், சுண்டைக்காய் வத்தல், மிளகு தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

2. முழு நெல்லிக்காய் 4, பச்சை மிளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.


3. வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் குணமாகும்.

4. வெந்தயக் கீரையுடன் பச்சைமிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்டினியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.

5. வில்வ பழத்தின் தோலை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தம் ஆகும்.


6. வில்வ மரத்தின் பூக்களை உலர்த்திப் பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும்.


7. வில்வ மரப் பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை அடையும்.


8. வங்கார வள்ளைக் கீரையுடன் சீரகத்தைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் பெருவயிறு குணமாகும்.

9. வங்கார வள்ளைக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.


10. மூங்கில் முளைகளை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

11. முருங்கைக் கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம் பைக் குழைத்து தொண்டையில் தடவிக் கொண்டால் இருமல் நிற்கும்.




mardi 8 novembre 2011

அழகான வாழ்வை தொலைத்துவிடுகிறார்கள்


மக்கள் இயற்கையை நேசிப்பதில்லை..! வீடுகளையும், வசதிகளையும் பெருக்கிக் கொண்டு தங்களை அடிமைப்படுத்திக் கொள்கிறார்கள். பொருளாதார இலாபத்தைத் தேடி அலைந்து இயற்கையோடு இணைந்த அழகான வாழ்வை தொலைத்துவிடுகிறார்கள்