முகப்பு

mercredi 20 février 2013

சிந்தனைகள்....

 
 
ஏற்கனவே எனது இணையத்தளத்தில் வெளிவந்தது மீண்டும் உங்களுக்காக
 
சிந்தனைகள்....
காலை எழுந்ததும் கைகளைப் பார்த்து வணங்குங்கள். விரல் நுனிப்பகுதியில் லக்சுமியும் மையப்பகுதியில் சரஸ்வதியும் மணிக்கட்டில் கோவிந்தனும் இருப்பதாகக் கூறுவார்கள். ஆலய தரிசனத்திற்கு உங்கள் கைகள் உள்ளன.

சிந்தனைகள்....
தன் தவறுகளை திருத்திக்கொண்டு தன்னைத் தொடர்ந்து புதிய மனிதனாக மாற்றிக் கொள்வதில்தான் மனிதனின் நல்ல குணம் இருக்கிறது. ஒரு மனிதனின் மனம்தான் அவனுடைய நண்பன்இ அதை அவன் தனது எதிரியாக மாற்றிவிடக் கூடாது.
 
சிந்தனைகள்....
அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

சிந்தனைகள்....
தன் கிணற்றில் குளிக்கவிடாது..
தன் வாங்கில் படுக்க விடாது..
தனக்கு தேவையற்ற உணவை மற்றவருக்கு கொடுக்க மனமில்லாது..
வாழும் மனிதனாக புவியில் ஒருவன் காணப்பட்டால் அவனால் கடவுளும் கண்ணீர் வடிக்கிறார்.
பணத்தையும் உணவையும் பதுக்கி வைத்து சுயநலத்தோடு வாழ்வது வாழ்வல்ல.

சிந்தனைகள்....
பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.

சிந்தனைகள்....
நம்மைப்பற்றி நல்ல அபிப்பிராயத்தை உருவாக்காமல் நாம் எவரையுமே கவர இயலாது. செல்வத்தைச் சேமிப்பதைவிட நல்ல பெயரை உருவாக்குவதே சிறப்பானது.
 
சிந்தனைகள்....
சரியான ஜோடியை தேர்ந்தெடுப்பது முக்கியமல்ல சரியான ஜோடியாக இருப்பதுதான் முக்கியம்.
 திருமணம் வேருள்ளது வளர்ந்து பூ பூக்க வல்லது அதை விசுவாசமாகக் கவனிக்க வேண்டும்

சிந்தனைகள்....
ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்;
ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை....

சிந்தனைகள்....
எத்தனை நாள் பழகினோம் என்பது முக்கியமில்லை ;
எத்தனை நாள் உண்மையாக பழகினோம் என்பதே முக்கியம் ! 

mardi 5 février 2013

மழை

Photo : கொட்டி முடித்த மழையில் 
உடைந்திருந்த பள்ளங்களில் 
நிறைந்திருக்கும் மிச்சங்களில் 
கால் பதித்து துள்ளி விளையாடி
சேறுபூசிய அழுக்காகிய 
காலங்கள் அழியவில்லை 
இன்னும் என்னால் 
முடியும் அப்படி.....
என்தேசம் வாவென்றென்னைக் 
கை நீட்டி 
என்வாசல் தந்து 
வாடைக் காற்றில் அறையும்
என் அறையன்னலூடாய்
என் கடலை இரசிக்க விடுமானால்..
அதுவரை...
இரவல் தேசத்தின் 
இரவல் மழையில் 
இழந்தவற்றுடன் இருட்டில் 
குடைக்குள் தனியே
நனையாமல் ந(க)டக்கிறேன்!

வி.அல்விற்.
01.02.2013
 
கொட்டி முடித்த மழையில்
உடைந்திருந்த பள்ளங்களில்
நிறைந்திருக்கும் மிச்சங்களில்
கால் பதித்து துள்ளி விளையாடி
சேறுபூசிய அழுக்காகிய
காலங்கள் அழியவில்லை
... இன்னும் என்னால்
முடியும் அப்படி.....
என்தேசம் வாவென்றென்னைக்
கை நீட்டி
என்வாசல் தந்து
வாடைக் காற்றில் அறையும்
என் அறையன்னலூடாய்
என் கடலை இரசிக்க விடுமானால்..
அதுவரை...
இரவல் தேசத்தின்
இரவல் மழையில்
இழந்தவற்றுடன் இருட்டில்
குடைக்குள் தனியே
நனையாமல் ந(க)டக்கிறேன்!

வி.அல்விற்.
01.02.2013
 

dimanche 3 février 2013

உண்மையான நட்பு !!.

 
 
நினைவில் வைத்து
கனவில் காண்பதல்ல நட்பு !.
மனதில் புதைத்து மரணம்
வரை தொடர்வதுதான்
உண்மையான நட்பு !!.


தலைமைத் தகுதியை பெற முடியாது

 
 
உபதேசத்தைவிட நடந்து காட்டுவது மேலானது, முன்னுதாரணமாக நடந்து காட்டாமல் எவரும் தலைமைத் தகுதியை பெற முடியாது. 

வெளி வந்துவிடுகின்றன

 
 
அறையில் அழுகிய பொருள் இருந்தால் அதன் நாற்றம் உடனே அறையெங்கும் பரவுவதைப்போல பொறாமை, வெறுப்பு, தீமை ஆகியன இதயத்தில் இருந்தால் அவை உடனே வார்தையாக வெளி வந்துவிடுகின்றன

மனம் இருந்தால் மாட்டுக் கொட்டிலும் மாளிகை…!

 
 
நேசம் இருந்தால் விடுதியும் வீடு..!
பாசம் இருந்தால் வெட்ட வெளியும் அரண்மனை..!
இதயம் இருந்தால் இடுகாடும் சுவர்க்கம்..!
மனம் இருந்தால் மாட்டுக் கொட்டிலும் மாளிகை…!


இதனால்தான்.

 
 
கரும்பு – மிளகாய் – மலர்ச்செடி இந்த மூன்றையும் அருகருகாக நட்டு நீரை ஊற்றி வளர்த்தான் ஒருவன். ஊற்றியது ஒரே கிணற்றின் நீர்தான் ஆனால் மிளகாய் உறைத்தது, கரும்பு இனித்தது, பூ வாசமாக இருந்தது.. காரணம் இவை மூன்றும் ஒரே நீரை உண்டு வளர்ந்தாலும் தத்த...மது இயல்பை மாற்றவில்லை.
கரும்பு, மிளகாய், பூமரம் ஆகிய மூன்றும் மற்றவருக்காக தமது இயல்பை மாற்றவில்லை. மற்றவருக்கு பயந்து வாழ்ந்தால் மிளகாய் இனிக்னும் கரும்பு உறைக்கும். கடைசியில் இரண்டுமே சந்தையில் செல்லாக்காசாகப் போய்விடும். மற்றவர்களுக்கு பயந்து தமது இயல்பை மாற்றுவோர் செல்லாக்காசுகளாகவும், நடைப்பிணங்களாகவும் வாழ்வது இதனால்தான்.