முகப்பு

mercredi 27 juin 2012

வெற்றி


பிறகு பார்த்துக் கொள்ளலாம். தானாகச் சரியாகிவிடும் என்று பிரச்சனைகளைத் தள்ளிப் போடாமல், உடனுக்குடன் முடிவெடுப்பவர்கள் வெற்றி பெற்றவர்களாகி விடுகிறார்கள். 

வழி.

கடந்த காலத்தை துடைத்துவிடுங்கள், மறந்துவிடுங்கள். புதிய நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்குங்கள். திருப்தியான மனதில் அமைதியை பெற அது ஒன்றே வழி.


நன்றி

.
 இருவர் மரம் நட்டனர் ஒருவருடைய மரத்தில் இரண்டு பூக்களும் இன்னொருவருடைய மரத்தில் நூறு பூக்களும் பூத்தன. முதலாமவர் மரத்தை நேசிக்காத காரணத்தால் மரம் அதிகம் பூக்கவில்லை இரண்டாமவர் மரத்தை நேசித்த காரணத்தால் அது அபாரமாகப் பூத்தது.
 எதையும் நேசிக்க வேண்டும் இது வாழ்வின் முதற் பாடம். அவற்றை வாழ்த்த வேண்டும் இது இரண்டாவது பாடம். நம்பிக்கையோடு எதையும் எதிர்கொள்ள வேண்டும் இது மூன்றாவது பாடம்.
. யார் நன்றி சொல்கிறார்களோ அவர்கள் மனது நிறைவாக இருக்கும், மற்றவருக்கு அவர்கள் மீது உயர்ந்த மரியாதை தோன்றும்.

mercredi 20 juin 2012

சிரித்து மகிழும் குழந்தையாய்

 
ஆறு சுவை
ஏழு சுரம்
எட்டு அதிசயம்
ஒன்பது ரத்தினம்
பத்து அவதாரம்
இவையெல்லாம்
... ஒன்றாக்கி
இறைவன் படைத்த
உயிர் ஓவியம் நீ
ஆதலினால்
நானும் உன்னைப்
படைத்தேன் கவிதையாய்
சிரித்து மகிழும் குழந்தையாய்
 

அவள்


கவிதை படிக்க - அவள்
கண்கள் படிப்பறை
கனிகள் படிக்க - அவள்
கன்னம் படிப்பறை
இன்பம் படிக்க - அவள்
இதயம் படிப்பறை
இளமை படிக்க - அவள்
இதழே படிப்பறை 

lundi 18 juin 2012

மருத்துவ குறிப்புகள்


ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கிரீன் டீ ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது.
மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. வாய்துர்நாற்றத்தைப் போக்குகிறது. பருக்கள் வராமலும் காக்கும். ஞாபக சக்தியைப் பெருக்கும்.
முட்டைக்கோஸ், முள்ளங்கி, கோவைக்காய், பாகற்காய், வல்லாரைக்கீரை, காரட், எலுமிச்சை பழம் முதலியன ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
கருவாடு, அதிக உப்பு ஊறுகாய், அப்பளம் போன்றவை அனைத்து வயதினருக்கும் ஏற்றது.
காலையிலும், இரவிலும் அத்திப்பழத்துடன் பேரீச்சை சேர்த்து உண்டால் ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைக்க அத்திப்பழம் உதவுகிறது. உடம்பில் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றும்.
முளை நரம்புகளை வலுப்படுத்தி ஞாபக சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது வால்நட்.
சாத்துக்குடி ஆரஞ்சு தோல் நோயையும், உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும்.
துளசி, தோல் நீக்கிய இஞ்சி சாப்பிட்டால் சளித்தொல்லை சரியாகும்.
வாழைப்பழம் சாப்பிட்டு வர பித்தம் குறையும்.
ஆப்பிள் நரம்புத் தளர்ச்சியை நீக்கும்.
தக்காளி ரத்தத்தை விருத்தியாக்கும்.


சிரியுங்கள்



சிரிப்பு வந்தால் சிரியுங்கள்.... நாளை அழுகை வரும் போது, அப்போது அழுது கொள்ளலாம்... கொஞ்சமாக சிரித்து, கொஞ்சமாக அழுவதை காட்டிலும், நெறைய சிரித்து நெறைய அழுவது தான் நல்லது..........

முடியாமல்

 
 
கஷ்டப் படாமல் வாழ வேண்டும் எண்பதற்காக
கஷ்டப்பட்டு வேலை செய்கின்றார்...

நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக வீடு கட்டி நித்திரையின்றி திரிகின்றார்

படித்தால் வேலை கிடைக்கும் என்று படித்துவிட்டு வேலையின்றி திரிகின்றார்

அலங்காரமாக வாழ வென்று ஆபரணம் வாங்கி
லொக்கரில் வைத்து விட்டு அலங்காரமின்றி அலைகின்றார்

... அவசர தேவைக்கு வாகனம் வாங்கி
அவசியமற்ற தேவைக்கும் பயணிக்கின்றார்

முடியும் முடியும் என்றவர்கள் முடிந்தவர்களையும்
முடியாமல் இருக்க செய்கின்றார்


பாதை



அடுத்தவர்களின் பாதையைப் பின்பற்றக்கூடாது.
காரணம் அது அவர்களுடைய பாதை, உன்னுடையதுஅல்ல. உன்னுடைய பாதையைக் கண்டுபிடித்து
விட்டால், அதன்பிறகு நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை....

சந்தேகப்பட்டு வாழாதே...



சந்தேகப்பட்டு வாழாதே...
சந்தேகப்படும்படியும் வாழாதே - ஏனெனில்
அன்பை பெறவோ கொடுக்கவோ நேரம் இருக்காது..
சந்தேகப்படவே நேரம் சரியாகிவிடும்...............

வாடுவதா அழகு?..


மாலையில் மரணமென்று தெரிந்தும்
காலையில் அழுவதில்லை.. மலர்கள்.
நீ மட்டும் சோகங்களை நினைத்து
வாடுவதா அழகு?..

mercredi 6 juin 2012

தேங்காய் பாலின் .........



புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உற்பட்ட தாதுபொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன.
தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் எண்ணெயை தீக்காயம் பட்ட இடத்தில் தடவி வந்தால் தீப்புண்கள் குணமாகும்.
கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் புண்ணாக்குடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில்(வெளிப்புற ஒடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளை குணப்படுத்துகிறது.
தேங்காய்ப்பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது-. சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்கு தேங்காய்பால் நஞ்சு முறிவு சிறந்தது. தேங்காய் எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.
குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் தேங்காய் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால் தேன், கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும்.
பெருவயிறுக்காரர்களுக்கு(வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தல் சரியாகும். தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும்.
தேங்காய் பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுபுண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது. உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.


பசியைக் கட்டுப்படுத்தும் ஐந்து உணவுகள்



உடல் ஆரோக்கியமாக இருக்க உணவு நன்கு உண்ண வேண்டும். ஆனால் அந்த உணவே அளவுக்கு அதிகமாக உண்டால் உடல் பெருத்து விடும்.
சிலருக்கு வயிறு நிறைய சாப்பிட்டு 2-3 மணி நேரத்திலேயே மீண்டும் பசி எடுத்துவிடும். அப்படி பசி எடுக்கும் போதெல்லாம் சாப்பிட்டால் குண்டு தான் ஆக நேரிடும்.
அந்த பசியைக் கட்டுப்படுத்த ஒரு சில உணவுகள் உள்ளன. அந்த உணவுகள் பசியைக் அடக்குவதோடு, உணவுக் கட்டுப்பாட்டோடும் வைக்கிறது.
ஆப்பிள்: ஆப்பிளானது உடலுக்கு ஆரோக்கியமானது மட்டுமல்லாமல், பசியையும் கட்டுப்படுத்துகிறது. ஏனென்றால் ஆப்பிளில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளது, இதனால் வயிறு நிறைவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும்.
ஏனெனில் ஆப்பிளை சாப்பிடும் போது நீண்ட நேரம் மென்று திண்பதால், நம் வயிறு நிறைந்துவிடும். மேலும் இதை நாம் சாப்பிட்டால் நம் எடையும் குறையும்.
காய்கறிகள்: காய்கறிகள் உடலுக்கு மிகவும் சிறந்த அதிகமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருள். அந்த காய்கறிகளில் கீரை வகைகள், முட்டைக் கோஸ், பசலைக் கீரை, கேரட் போன்றவற்றை அதிகம் உண்பதால் பசி குறைவதோடு, உடலானது நன்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.
மேலும் காய்கறிகளை சூப் அல்லது ஜூஸ் செய்து குடித்தால் மிகவும் நல்லது.
வாழைப்பழம்: தினமும் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டால் பசி எடுக்காமல் இருப்பதோடு, சுறுசுறுப்பாகவும் இருக்கும். இது ஒரு எனர்ஜி பூஸ்டர் பழம், ஆகவே பசி வந்தால் இரண்டு வாழைப்பழம் சாப்பிடுங்கள். ஏனென்றால் இதில் உள்ள இனிப்புப் பொருள் பசியைக் கட்டுப்படுத்தும். மேலும் ஒரு நாளைக்கு இரண்டு பழத்திற்கு மேல் சாப்பிட வேண்டாம்.
இறால்: இதில் கலோரி குறைவாக இருப்பதால், பசியை நன்கு கட்டுப்படுத்தும். மேலும் இது உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு மிகச்சிறந்த உணவு. இந்த இறாலை வேக வைத்து, சாஸ் அல்லது சீஸோடு சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டால் சுவையாக இருப்பதோடு, எடையையும் குறைக்கிறது.
நட்ஸ்: நட்ஸில் ஒன்றான அல்மண்ட்ஸ் மற்றும் பைனில் அதிகமாக புரோட்டின் மற்றும் இரும்புச்சத்து இருக்கிறது. இது உடலில் உள்ள பசியைத் தூண்டும் ஹார்மோனின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
இதை காய்கறிகளோடு சேர்த்தும் சாப்பிடலாம். இதிலும் கலோரி குறைவாக இருப்பதால் எடையை குறைக்கவும் உதவுகிறது.


மனநிறைவோடு விட்டு கொடுங்கள்


சிந்திப்பதானால் நிதானமாக சிந்தியுங்கள்.....
செயற்படுவதானால் உறுதியோடு செயற்படுங்கள்....
விட்டு கொடுப்பதானால் மனநிறைவோடு விட்டு கொடுங்கள்....

lundi 4 juin 2012

திருமணப் பொருத்தம்


திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம் பல எண்ணிக்கையில் முனிவர்கள் வகுத்துத் தந்துள்ளாள்கள். நடைமுறையில் பொருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு பார்ப்பது வழக்கமாக இருக்கிறது. இதனை சரசோதி மாலை என்ற சோதிட நூல் பாடல் வழவில் தந்துள்ளது.

செப்பு நாள் கணங்கள் மாகேந்திர மொடு மங்கை தீர்க்கந்

தப்பிலா யோனி ராசி ராசியின் தலை தம்மோடு

ஒப்பிலா வசியம் நன்னூல் வரைதறு வேதை ஆக

மைபுயல் அளக மாதே மருவிய பொருத்தம் பத்தே.

10 பொருத்தங்களும் முழுமையாகப் பொருந்தி வருகிறவாறு அடிப்படையில் அமைக்கவில்லை. சில பொருத்தங்கள் இல்லை என்றாகிவிடும். மிக முக்கியமாக இருக்க வேண்டிய பொருத்தங்கள் ஐந்து.

அவை

தினப்பொருத்தம்
கனபோருத்தம்
யோனிப்போருத்தம்
ராசிப்போருத்தம்
ரஜ்ஜிப்பொருத்தம்.

இவை அவசியம் இருக்க வேண்டும். இதில் மிக மிக முக்கியமாக தவிர்க்க இயலாத – தவிர்க்கக் கூடாத பொருத்தமான இரண்டு உண்டு.

ஒன்று யோனிப்போருத்தம் மற்றொன்று ராஜ்ஜிப் பொருத்தம். இந்த இரண்டில் எந்தப் பொருத்தம் ஒன்று இல்லையாயினும் மணமுடிக்கக் கூடாது.

எனவே இவை இரண்டு பொருத்தமும் வாழ்விற்கு உயிர்நாடியாக இருக்கும் பொருத்தம்.

தினப் பொருத்தம்

மணமக்களின் ஆயுள் ஆரோக்கியம் இவை இரண்டையும் குறிப்பிடுவது. இது முக்கியம்.

கணப்பொருத்தம்

இது குணநலன் பண்பு நலனைக் குறிக்கும் இது மூன்று வகை தேவகானம் மனித கனம இராட்சஷ கணம். 27 நட்சத்திரங்கலியா முன்று பிரிவாகப் பிரித்து இன்ன நட்சத்திரத்தில் பிறந்தவர் இன்ன கணம் என்று முனிவர்கள் வகுத்துள்ளார்கள். இது முக்கியம். குண நலம் வாழ்விற்கு எத்துணை அவசியம் என்பது நீங்கள் அறிவீர்கள்.

மாகேந்திரப் பொருத்தம்

பொருளாதார வளமாக அமைந்திட இப் பொருத்தம் வேண்டும்.

ஸ்திரீ தீர்க்கம்

மணமகள் தீர்க்க சுமங்கலியாய் வாழ்ந்து சுமங்கலியாயாகவே வாழ்வு நிறைவு பெறுவாள் என்பதாகும்.

யோனிப் பொருத்தம்

இது மிக முக்கியமானது. பெரும்பான்மையான மனிதர்கள் உடல் தேவையே வாழ்வு என மயங்குகின்றனர். உடல் தேவையைப் பூர்த்தி செய்ய இப் பொருத்தம் வேண்டும். வேறு ஏதோ குறிக்கோளுக்காக இந்த வாழ்வை இறையருள் தந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள மனிதனை இழுக்கும் ஒரு மாயப் பொறி என்பதனை அனுபவஸ்தர்கள் அறிவார்கள். எனினும் உடலுடன் கூடிய வாழ்வில் தான் குறிக்கோளை அடைய முடியும். வாலிபக் காலத்தில் உடலில் கட்டளைக்கு மனக் ஒத்துழைத்து செயற்படும். அறிவு ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்கும். சில காலம் சென்ற பின் இயற்கைச் சட்டப்படி உடல் தளரும் ஞானம் பிறக்கும் அறிவுப்பூர்வமாக சிந்திப்பார். கடந்த கால வாழ்வை எண்ணி கலி விரக்கம் கொள்வார். வாழ்வில் இளமையில் பிழையும் நடுப் பகுதில் போராட்டமும் முதுமையில் கடந்த கால வாழ்வை எண்ணி கழிவிரக்கம் கொள்வதுதான் பெரும்பான்மையானவர்களின் வாழ்வாக இருக்கிறது. விதிவிலக்காக தற்சோதனை செய்து வாழ்வின் குறிக்கோளை உணர்ந்து மரணமில்லாத வாழ்வை அடைந்தவர் பலருண்டு. இதைக்கூறிடும் தகுதி எனக்கு உண்டு. ஏனெனில் பல்லாயிரக்கான மானிடரின் தனிப்பட்ட வாழ்வை அறியும் சூழ்நிலையில் என்பணி அமைந்தது தான் காரணம். எனவே மனிதன் மனிதப் பண்போடு பிற்காலத்தில் வாழ்ந்திட இப்பொருத்தம் துணை செய்யும். எனவே இது முக்கியம்.

ராசிப் பொருத்தம்

இது வம்ஸ விருத்திக்காக. இது முக்கியம்.

ராசி அதிபதி பொருத்தம்

சந்ததிகள் விருத்திக்காகவும் ஒருவர்க்கொருவர் நேசமுடன் வாழ வழி வகுப்பதற்காகவும் இது உதவும்.

வசியப் பொருத்தம்

மணமக்களின் நேச வாழ்விற்காக

ரஜ்ஜிப்பொருத்தம்

இது உயிர்நாடி போன்ற பொருத்தமாகும். வாழ்வில் முக்கியமான ஆயுள் புத்தோஷம் பிரயாணத்தில் தீமைக் பொருள் இழப்பு இவைகளைப் குறிப்பிடுவது. இதற்கு தீர்க்க சுமங்கலிப் பொருத்தம் என்று பெயரும் உண்டு இப்பொருத்தம் இல்லை எனில் மனம் முடிக்கக் கூடாது. இது மிக முக்கியம்.

வேதைப் பொருத்தம்

துக்கத்தை நீக்கக்கூடிய பொருத்தம்.

இந்த 10 பொருத்தங்களையும் சரிபார்த்து இன்ன நட்சத்திரப் பெண்ணிற்கு இன்ன நட்சத்திர வரன் இத்தனை பொருத்தங்கள் அமைகின்றன என்றும் பொருத்தம் உண்டு அல்லது இல்லை என்றும் அறிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளோம்.

- – - – – -ஆண்களுக்கு – - – - – -

கீலே குறித்த நட்சத்திரம் தவிர

மற்ற நட்சத்திரத்தில் பிறந்த பெண் பொருத்தமாகும்

மணமகன் நட்சத்திரம் அஸ்வினி

அசுவினி ஆயில்யம் மகம் அஸ்தம் சுவாதி கேட்டை முலம் ரேவதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் பரணி

பரணி பூரட்டாதி அவிட்டம் பூசம் பூரம் அனுஷம் பூராடம் உத்திரட்டாதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் கார்த்திகை

கார்த்திகை புனர்பூசம் உத்திரம் விசாகம் உத்தராடம் பூரட்டாதி பூராடம் திருவோணம் இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் ரோகினி

உத்தராடம் திருவாதிரை அஸ்தம் சுவாதி திருவோணம் சதயம் ரோகினி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் மிருகசீர்ஷம்

மிருகசீர்ஷம் சித்திரை அவிட்டம் உத்தராடம் இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் திருவாதிரை

திருவாதிரை கேட்டை அனுஷம் ரோகினி அஸ்தம் சுவாதி திருவோணம் சதயம் இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் புனர்பூசம்

புனர்பூசம் கிருத்திகை உத்திரம் விசாகம் உத்திரடாம் பூரட்டாதி மகம் பூரம் இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் பூசம்

பூசம் பூராடம் திருவோணம் பரணி பூசம் அனுஷம் உத்திரட்டாதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் ஆயில்யம்

ஆயில்யம் மகம் பூரம் அசுவினி கேட்டை முலம் ரேவதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் மகம்

மகம் ஆயில்யம் புனர்பூசம் அசுவினி கேட்டை முலம் ரேவதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் உத்ரம்

உதரம் விசாகம் சித்திரை புனர்பூசம் கிருத்திகை உத்திராடம் பூரட்டாதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் அஸ்தம்

அஸ்தம் திருவாதிரை ரோகினி சுவாதி திருவோணம் சதயம் அசுவினி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் சித்திரை

சித்திரை உதரம் உத்திரட்டாதி மிருகசீர்ஷம் அவிட்டம் இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் சுவாதி

சுவாதி ரோகினி திருவாதிரை அஸ்தம் திருவோணம் சதயம் அசுவினி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் விசாகம்

விசாகம் உத்திரம் உத்திரட்டாதி கிருத்திகை புனர்பூசம் உத்திராடம் பூரட்டாதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் அனுஷம்

அனுஷம் பரணி பூசம் பூராடம் உத்திரட்டாதி பூரம் முலம் திருவாதிரை இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் கேட்டை

கேட்டை முலம் திருவாதிரை அசுவினி ஆயில்யம் மகம் ரேவதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் முலம்

முலம் அசுவினி ஆயில்யம் மகம் கேட்டை ரேவதி திருவாதிரை இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் பூராடம்

பூராடம் பரணி பூசம் பூரம் அனுஷம் உத்திரட்டாதி கிருத்திகை இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் உத்தராடம்

உத்தராடம் ரோகினி மிருகசீர்ஷம் கிருத்திகை புனைபூசம் உதரம் விசாகம் பூரட்டாதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் திருவோணம்

திருவோணம் ரோகினி திருவாதிரை அஸ்தம் சுவாதி சதயம் பூசம் கிருத்திகை இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் அவிட்டம்

அவிட்டம் பரணி ரேவதி சித்திரை மிருகசீர்ஷம் இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் சதயம்

சதயம் ரோகினி திருவாதிரை அஸ்தம் சுவாதி திருவோணம் இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் பூரட்டாதி

பூரட்டாதி பரணி ரேவதி கிருத்திகை புனைபூசம் உதரம் உத்தராடம் விசாகம் இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் உத்திரட்டாதி

உத்திரட்டாதி விசாகம் சித்திரை பரணி பூசம் பூரம் அனுஷம் பூராடம் இவை ஆகாது. மற்ற நட்சர்ஹ்திரம் பொருந்தும்.

மணமகன் நட்சத்திரம் ரேவதி

ரேவதி அசுவினி ஆயில்யம் மகம் கேட்டை முலம் பூரட்டாதி அவிட்டம் இவை ஆகாது. மற்ற நட்சத்திரம் பொருந்தும்.

dimanche 3 juin 2012

மருத்துவ செய்தி..."வெந்தயம்".


 உடல் எடையை குறைக்கும் "வெந்தயம்".

கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது என்னவென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும்.
...
இதனை சாப்பிடுவதால் உடலை வறுத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.

வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

மேலும் வெந்தயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை மற்றும் உடலில் கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது.

இரவில் ஒரு ஸ்பூன் வெந்தய விதையை நீரில் ஊற வைத்து, காலையில் சுடு தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுப்பொருளை வெளியேற்றுவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.

வெந்தய விதையை சாதாரண தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, ஜீரண சக்தியும் கூடும்.

வெந்தய விதையை பொன்னிறமாக வறுத்து அதை பொடியாக்கி, காற்று புகாத ஒரு டப்பாவில் வைத்து, உண்ணும் உணவில் கலந்து சாப்பிடலாம்.

வெறும் வயிற்றில் டீயுடன் வெந்தயப்பொடியை கலந்து சாப்பிடலாம். இதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும்.