முகப்பு

dimanche 27 mars 2016

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு விழா



    ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு விழா
    'நான் இறந்தொழியேன் உயிர் வாழ்வேன் - ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்' (திருப்பாடல்118:17) என்றுரைத்த வல்லமையின் தேவனில் நம்ப...ிக்கை வைத்துப் பேரொளியின் மகிழ்ச்சியில் அல்லேலூயா பாடிட ஆண்டவர் இயேசுவின் உத்தானப் பெருவிழா எம்மை அழைக்கின்றது.
    இறந்த பின்னர் ஆண்டவர் இயேசு மண்ணுக்குள் புதைக்கப் படவில்லை. மாறாக இவ்வுலகத்தைப் பாவத்தின் கட்டுக் களிலிருந்து மீட்டெடுப்பதற்காக விதைக்கப்பட்டு அதிகாலை வேளையில் புத்துயிர் பெற்று உத்தானமானார்.
    இவ்வுலகின் சக்திகளோ அல்லது பிரச்சாரங்களோ உயிர்த்த இயேசுவின் வல்லமையில் கட்டப்பட்ட கத்தோலிக்க திருச்சபையையும் அதனை வழி நடத்து பவர்களையும் எதுவும் செய்துவிட முடியாது என்பதற்கு நமதாண்டவரின் உத்தானத்திருவிழா சாட்சியம் கூறுகின்றது என்பது எனது பணிவான அபிப்பிராயம்.
    கிறிஸ்தவர்கள் என்று எம்மை அழைக்கும் நாம் கிறிஸ்து அவன் அல்லது கிறிஸ்து அவள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஆண்டவர் இயேசுவோடு உத்தானமாகிய விதத்தினில் வாழுகின்றோமா?
    கொடிய யுத்தத்தின் பின்னர் பலவித கொடுமைகளையும் துன்பங்களையும் அனுபவித்துத் திரும்பி வந்த இலங்கைத் தமிழரான நாம் மறு பிறவி எடுத்துள்ளோம் என்று சொல்லித் திரும்பி வந்தாலும் திருந்தி வந்துள்ளோமா?
    நமதாண்டவர் இயேசு தம்மைச் சுற்றியிருந்த கட்டுக்களை அவிழ்த்து துணிகளைச் சுருட்டி வைத்துவிட்டு எழுந்து வந்தது போண்று நாமும் சாதியம் - பாகுபாடு என்ற எமது கட்டுக்களைச் சுருட்டி வைத்துவிட்டு புதிய மனிதர்களாக உத்தானமாகி உள்ளோமா?
    சுனாமி மற்றும் யுத்தகாலத்தில் பங்கரிலும் முகாம் வாழ்க்கையிலும் காணப்பட்ட சகோதர வாழ்க்கை இன்று ஏன் மறைந்துவிட்டது? பாலியல் வன்முறை போன்ற கொடூரச்செயல்கள் ஏன் உருவெடுத்துள்ளது?
    உயிர்தெழுந்த உண்மைக் கிறிஸ்தவர்களாக வாழுவோ மாயின் எதற்காக சாதியம் - தராதரம் என்று வேறுபாடுகள்? என்பதனை நாம் வேறு விதமாகச் சிந்திக்கவும் நமதாண் டவர் இயேசுவின் உயிர்ப்புத் திருவிழா எம்மை அழைக் கின்றது.
    ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பானது மனித சக்திகளால் கல்லைப் புரட்டி - காவலை மீறிக்கடந்து வரவில்லை. மாறாக நீதிக்கெதிரான பிரச்சாரங்களால் - உண்மைக் கெதிரான மிகைப்படுத்தப்பட்ட கட்டுக்கதைகளால் கட்டிவைக்க முடியாத உண்மையின் உயிர்ப்பாகக் கருதப்பட வேண்டியது.
    உயிர்த்த இயேசுவின் பிரசன்னம் மனித வல்லமையின் செயல்களுக்கு அப்பாற்ப்பட்ட இறைவெளிப்பாடாகக் காணப்படவேண்டும் - கத்தோலிக்க விசுவாசத்தில் உரமூட்டப்பட்டு வாழ்பவனை இவ்வுலகின் தீயசக்திகள் எதுவும் மேற்கொள்ள முடியாது எனக்கருதப்படவேண்டும்.
    மீட்பர் இயேசுவை ஆண்டவரென ஏற்றுக்கொள்ளும் நாம் அவர் வைக்கப் பட்டிருந்த கல்லறை வெறுமையாக இருப்பினும் - கல்லறையில் காணப்படாத ஆண்டவர் இயேசுவின் திருவுடல் எமது இதயக்கல்லறைகளில் புத்துயிர் பெறவேண்டும்.
    உயிர்ப்பின் முதற்செய்தியை மதகலா மரியா அறிவிப் பதனால் பெண்கள் ஆண்களைவிட வீரமும் துணிவும் அற்றவர்கள் என்ற மூட நம்பிக்கை உடைத்தெறியப்பட்டு பெண்ணடிமைக்கு எம்மில் புத்துயிர் வழங்கப்பட வேண்டும்.
    ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பால் புத்துயிர் பெற்றுள்ள நாம் தமது அன்பு மகனை எமது மீட்பராக தந்துள்ள பரலோக தகப்பனை அன்பு செய்வது மட்டுமல்ல அவரது சாயலாகப் படைக்கப்பட்டுள்ள எமது அயலவரையும் அன்பு செய்யவேண்டும்.
    ஆண்டவர் இயேசு கட்டியிருந்த துண்டுகளையும் -துணிகளையும் சுருட்டி வைத்துவிட்டு உத்தானமானது போன்று நாமும் எம்மைப் பிடித்துள்ள சாதியம் போன்ற மூட நம்பிக்கைகள் அவவிசுவாசக் கருத்துக்கள் என்ற துணிகளையும் - கட்டுக்களையும் சுருட்டி வைத்துவிட்டு போலி வாழ்வு என்ற கல்லறைகளிலிருந்து வெளியேற வேண்டும்.
    கத்தோலிக்க விசுவாசம் என்ற விளை நிலத்தில் விதையாக விழுந்து - புதிய விருட்சமாக வளர்ந்து எப்போதும் விழிப்பாக இருந்து சாத்தானுக்கு அடிமையா காதவாறு கிறிஸ்துவோடு உயிர் பெற்றெழுந்து மேலுலகு சார்ந்தவற்றை நாட இன்றைய நாளில் முடிவெடுப்போம்

vendredi 25 mars 2016

அடுத்தவங்க விஷயங்கள் தெரியாம, புரியாம மூக்க நுழைக்க கூடாது



படித்த கதை °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நாம செய்ய வேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னு தான் நாம கடமைய மட்டும் தான் செய்யனும் அடுத்தவங்க விஷயங்கள் தெரியாம, புரியாம மூக்க நுழைக்க கூடாது

காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி.
அவர் தவத்தின் போது கண் திறக்காமல், தினமும் ஒரு முறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர்.
ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார்.
மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான்.
மகரிஷியும் அதை வாயில் போட்டு விழுங்கி விட்டார்.
மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய்விட்டான்.
மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், ‘மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா? அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உனக்கு உண்ண வைப்பார்கள். அதற்கு தயாராக இரு!’ என்று கூறி விட்டு போய்விட்டார்.
இதைக் கேட்ட மன்னன் நடுநடுங்கி விட்டான்.
தான் விளையாட்டாக செய்த தவறை எண்ணி வருந்தினான். தான தர்மங்கள் செய்து, தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினான்.
அரண்மனை ஆடம்பர சுகத்தை மறந்தான். தன் நாட்டிலுள்ள இளம் பெண்களை குடிலுக்கு வரவழைத்து, அவர்களது திருமணத்துக்கு தேவையான நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக் கூறி அனுப்பிவைத்தான்.
இது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.
அரசனின் இந்த தினசரி வழக்கத்தை, அந்த நாட்டில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டி விட்டனர். ‘மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் குடிலுக்கு வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்’ என்று திரித்துக் கூறினர்.
இப்படியாக பல விமர்சனங்கள் வந்த வண்ணமிருந்தன. ஒருநாள் கற்புக்கரசியான பெண் ஒருத்தி, பார்வையற்ற தன் கணவருடன், அரசனின் குடில் முன்பாக நின்று யாசகம் கேட்டாள்.
அந்த கணவன், ‘நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்?’ எனக் கேட்டான்.
‘அரசன் அமைத்திருக்கும் குடில் முன்பு’ என்று பதிலளித்தாள் அந்தப் பெண்.
அதற்கு அவளது கணவன், ‘ஓ! தானம் கொடுப்ப தாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா?’ என்றான்.
அந்தப் பெண் பதறிப்போய் உடனடியாக அவனது வாயைப் பொத்தினாள்.
பின் மெதுவாக தன் கணவனிடம் கூறத் தொடங்கினாள். ‘சுவாமி! என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான்.
அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்பதற்காக தயாரானது. அவ்விஷயம் மன்னனுக்குத் தெரியவரவே, அந்த பாவ மலையை கரைக்கும் பொருட்டு, கன்னியருக்கு தானதர்மம் செய்து நற்போதனைகளைச் செய்து வருகிறான்.
ஆனால் சிலர் மன்னனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. தற்போது மன்னனைப் பற்றி தவறாகப் பேசியதன் காரணமாக, அந்த கடைசிக் கவளத்தை தாங்கள் எடுத்துக் கொண்டீர்கள்.
மேலும் அடுத்த பிறவியிலும் கூட தாங்கள் பார்வையற்றவராகவே பிறப்பீர்கள்’ என்று கூறினாள்.
அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அவளது கணவன். தவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது.
அவர்களை தவறாக விமர்சித்தால், அவர் செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும். உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல், காலத்துக்கும் வம்பு பேசிக் கொண்டு மற்றவர்களின் பாவத்தை சிலர் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அந்த தவறை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது.
நாம் செய்த பாவத்தை சுமக்கவே, நமக்கு இந்த ஒரு பிறவி போதுமா என்பது தெரியாத நிலையில், தேவையில்லாமல் புறம்பேசி அடுத்தவரின் பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டுமா என்ன ?

திறமையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே



நம்முடைய அறிவும் திறமையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல. இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்.
தலைக்கனம் பிடித்த ஒரு பண்டிதர் இருந்தார். அடர்த்தியான புருவம் , பெரிய மீசை , அடிக்கடி மொட்டை போட்டுக் கொள்ளுவதால் ஈர்க்குச்சி போல் காணப்படும் முடிகளுடன் கூடிய தலை. இதுவே அவரது அடையாளம் .
வீதியில் அவரைக் கண்டுவிட்டாலே மக்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள். ஏனென்றால் கண்ணில் படும் யாராயிருந்தாலும் ஏதாவது கேள்வி கேட்டு மடக்கித் தமது வாதத்திறமையால் மட்டந்தட்டிவிடுவார். இதில் சிலர் அழுதுவிடுவது கூட உண்டு.
ஒரு நாள் அவருக்கு மட்டந்தட்ட யாருமே கிடைக்கவில்லை. ஊர் எல்லை வரை வந்து விட்டார். அங்கே ஒரு மரத்தடியில் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு நாவிதரைப் பார்த்து விட்டார்.
அவரது உடைகள் நைந்து போய் அவரது வறுமையைக் காட்டினாலும், அதை அவர் சுத்தமாய்த் துவைத்து , நேர்த்தியாய் உடுத்தியிருந்த விதம் அவருக்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்தது. இது பண்டிதருக்கு எரிச்சலை மூட்டியது. இன்று இந்த மனிதனைக் கதறி அழவைத்தே ஆகவேண்டுமென்று முடிவெடுத்து அவரது கடையை நெருங்கினார்.
" என்னப்பா ! முடி வெட்ட எவ்வளவு ? சவரம் பண்ண எவ்வளவு ?" என்றார். அவரும் "முடிவெட்ட நாலணா , சவரம் பண்ண ஒரணா
சாமி ! " என்று பணிவுடன் கூறினார். பண்டிதர் சிரித்தபடியே ,
"அப்படின்னா என் தலையை சவரம் பண்ணு " என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார் .
வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை . வேலையை ஆரம்பித்தார் .
பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான். நாவிதர் கோபப்படுவார் என்று எதிர்பார்த்திருந்தார். அவர் அமைதியாக இருக்கவே அடுத்த கணையைத் தொடுத்தார் .
" ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது . உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க ? " இந்தக் கேள்வி அவரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.
"நல்ல சந்தேகங்க சாமி . நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனாலதான் நாங்க நாவிதர்கள். எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா? "
இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது. அடுத்த முயற்சியைத் துவங்கினார் .
" இதென்னப்பா , கத்தரிக் கோல்னு சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு . கோல் எங்கே போச்சு ?''
இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது.
"சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க " என்று சொல்லி நிறுத்திக் கொண்டார் .
இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம் . கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார் .
" எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற . ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு " .
இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது . அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம் .
இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார். கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்.
இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார். பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார் ,
"சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?"
பண்டிதர் உடனே ஆமாம் என்றார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்தார்.
"மீசை வேணுமுன்னிங்களே சாமி. இந்தாங்க " . பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய். அதிர்ச்சியில் உறைந்து போனார்.
நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார் . அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,
"சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா ?"
இப்போது பண்டிதர் சுதாரித்தார்.
"வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான் " . உடனே சொன்னார்.
"இந்தப் புருவம் எனக்கு வேண்டாம் . வேண்டவே வேண்டாம்".
நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார் .
"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது ". என்றபடி கண்ணாடி அவர் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்.
நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல் , முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல் , அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது.
கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு நடையைக் கட்டினார்.
செல்லமே! நம்முடைய அறிவும் திறமையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல. இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்.

அன்பு



    ஒருவர் இதயத்தில் இன்னொருவர் வாழ்வது காதல்,ஆனால் ஒருவர் இன்னொருவரின் இதயமாக வாழ்வது நட்பு...
      உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி,
      உன் மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி..
        அன்பு என்பது மனிதனின் பலவீனம்
        ஏமாற்றப்படும் அன்பு மனிதனை மிருகமாக்கும்
        ஏமாற்றமில்லா அன்பு மிருகத்தை மனிதனாக்கும

காதல் என்பது



    காதல் என்பது உள்ளத்தின் அழமான உணர்வு...
    இது எதையும் எதிர்பார்த்து வருவது இல்லை
    இன்பமானலும் சரி துன்பமானாலும் சரி... பகிர்ந்து கொள்வதே காதல்...!
    காதலியின் பாசமான ஒரு பார்வை போதும், காதலனின் ஆறுதலான ஒரு வார்த்தை போதும் சொர்க்கமே தோற்றுவிடும்...!
    அதுதான் காதல்... உணர்ந்து பாருங்கள்...!...
    Il y a un sentiment d'amour Alamana ...
    Il n'a rien à se manifester
    Eh bien suave tragédie romantique à partager ... droite ...!
    assez chaud, un coup oeil de petite amie, un mot est réconfortant ... échouer assez amant de corkkame!
    Sentez vous l'amour ... ...!

நல்லதாகட்டும்!



    நீர்வீழ்ச்சி படைத்தான் இறைவன் - அதில் மின்சக்தி கண்டான் மனிதன் !
    காற்றை படைத்தான் இறைவன் - அதில் அலை சக்தி கண்டான் மனிதன் !
    புவியினை படைத்தான் இறைவன் - அதில் ஈர்ப்பு சக்தி கண்டான் மனிதன் !
    மனதை படைத்தான் இறைவன்- அதில் இறைசக்தியை உணர வேண்டும் மனிதன் !
    புலர்ந்த பொழுது நல்லதாகட்டும்!

யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?



Photo de Manuel Sountha.
உலகத்திலுள்ளஅத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர்.
ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா!
யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?
அந்த பெருமைக்குரியவர்,
அவரது மனைவி வாசுகி தான்.
அந்த அம்மையார் தனது கணவரின்
செயல்பாடுகள் குறித்து வாழ்நாள்
முழுவதும் விமர்சித்ததே இல்லை.
அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.
தன் கணவர் சாப்பிடும் போது,
ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும்,
ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம்.
அது ஏன் என்று அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம்.
ஆனாலும் கணவரிடம்
காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம்.
இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.
சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே
அவை இரண்டும் என்றாராம்.
நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை.
அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்றுநெகிழ்ச்சி
யாக சொன்னாராம்.
வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார் அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர்.
அப்போது வள்ளுவர் வாசுகியிடம் சோறு சூடாக இருக்கிறது. விசிறு என்றார். பழைய சோறு எப்படி சுடும்?
அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை.
விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி,
கணவருடன் வாதம் செய்யாமல்
விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம்
கொண்டிருந்தார்.
அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார்.
வள்ளுவர் அவரை அழைக்கவே,
கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக்
கயிறு அப்படியே நின்றதாம்.
இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே!
அந்த அன்பு மனைவி ஒருநாள்
இறந்து போனார்.
“நெருநல் உளனொருவன்
இன்றில்லை எனும்
பெருமை படைத்து இவ்வுலகு”
என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே மனைவியின் பிரிவைத்
தாங்காமல் கலங்கி விட்டார்.
நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக்
குறளின் பொருள்.
ஆக தனது கருத்துப்படி அந்த அம்மையாரின் மறைவுக்காக
பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர்
மனைவியின் பிரிவைத் தாளாமல்
"அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு" என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.
அடியவனுக்கு இனியவளே!
அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என்
பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே!
பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில்
தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.
இன்று சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர்
இந்தசம்பவத்தை மனதிற்குள்
அசைபோடுவார்களா..!!
ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகிரிஷி பேசிக் கொண்டிருந்தார். அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார். அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது.. என்று கேட்டார்.
அதற்கு வேதாத்திரி மகிரிஷி பதிலளிக்கையில், யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள்தான் முதலில் விட்டுக்கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.
உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இருவரும் அறிவாளியாக இருந்தால் அதுவே கோவில்.

samedi 19 mars 2016

குழந்தைகளுக்கு ஏற்படும் மனஅழுத்தம்...


    குழந்தைகளுக்கு ஏற்படும் மன
    அழுத்தம்.......
    குழந்தைகளின் மனஅழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள்.
    மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு வ...ிரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை.
    1. அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.
    2. அவர்கள் மனத்தில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, எனக்கு அப்பவே தெரியும் என்பது, அது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பது, சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.
    3. அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
    4. குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, எண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.
    5. ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
    6. நான் உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். இந்த எண்ணம் அவர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும்.
    - இவ்வாறு அவர்களுடன் கலந்துரையாடி மனஅழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் அதை போக்குவதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும். 

மயில்



    ஒரு தோப்பில் ஒரு மயில் வசித்து வந்தது. அந்த மயிலுக்கு தன் அழகை எண்ணி அதிக பெருமை. ஒரு நாள் அந்த தோப்புக்கு எங்கிருந்தோ வந்து சேர்ந்தது குரங்கு ஒன்று. அந்த குரங்கிடம் தன் தோகையை காட்டி பெருமைப்பட்டு கொண்டது மயில். அதற்கு குரங்கோ, மயிலே இந்த தோகையையும் அதை விரித்து நீ ஆடுவதையும் பார்க்க மனிதர்கள் உன்னை தேடி வர வேண்டும்.
    ஆனால் அந்த குயிலை பார். தினமும் பறந்து மனிதர்கள் இருக்கும் பகுதிக்கு செல்கிறது. அழகாக பாடி மனிதர்களை சந்தோசப்படுத்துகிறது. மனிதர்கள் தங்கள் வீட்டுக்குள் இருந்தே... அதன் அழகிய குரலை கேட்டு மகிழ்கின்றனர். அவர்களை சந்தோசப்படுத்தி விட்டு மீண்டும் மாலையில் தன் கூட்டுக்கு வந்து விடுகிறது. உன்னை விட அந்த குயிலே இறைவனின் அற்புத படைப்பு என்றது.
    இதை கேட்டு ஆத்திரமடைந்த மயில் மறுநாள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு சென்று கத்த தொடங்கியது. அதன் கர்ண கொடூர சத்தம் பொறுக்க முடியாமல் மனிதர்கள் அந்த மயிலை அடித்து தோப்புக்குள் விரட்டினார்கள்.
    குறள்:
    அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
    வியந்தான் விரைந்து கெடும்.
    குறள் விளக்கம்:
    மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்

நல்வழி பெற கடவுள் நம்பிக்கைக் கொள்ளுங்கள்.



    ஒரு பாம்பு வளைந்து நெளிந்து
    குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது. மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில்
    பிடித்து விட்டது. பாம்பு குரங்கின் கையை
    இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப்
    பல்லைக் காட்டி சீறியது .
    தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு
    ...
    குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.
    கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம்
    கூடி வந்து விட்டன. ஆனாலும் யாருமே
    குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.
    "ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள
    பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான்.
    இவன் பிடியை விட்டதுமே பாம்பு இவனப்
    போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது "
    என்று குட்டிக் குரங்கின் காதுபடவே
    பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து
    சென்று விட்டன .
    தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு
    விட்ட சூழ்நிலையின் வேதனை , எந்த
    நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும்
    நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து
    குரங்கை வாட்டி வதைத்தன.
    "ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய
    வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக்
    கிட்டேனே". குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.
    நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் ,
    நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து
    போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும்
    நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத்
    தொடங்கியது.
    அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே
    வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப்
    பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார்.
    குரங்கை நெருங்கி வந்தார்.
    சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட
    நிலையில் , தன்னை நோக்கி மனிதர் ஒருவர்
    வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு
    கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி
    வந்து சொன்னார் ,
    " எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே
    பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக்
    கீழே போடு" என்றார்.
    குரங்கோ , "ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது
    என்னக் கொன்னுடும் " என்றது . அவர்
    மீண்டும் சொன்னார் , " பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".
    அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு
    பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக்
    கீழே போட்டது.
    அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப்
    பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா
    . குரங்குக்கு உயிர் வந்தது . அவரை
    நன்றியுடன் பார்த்தது . "இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
    அன்பு நண்பர்களே . நம்மில் எத்தனையோ பேர் பாவம்
    என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக்
    கொண்டு விட முடியாமல் கதறிக்
    கொண்டிருக்கிறோம் சிகரெட் பிடிக்காமல்
    இருந்தால் செரிமானக் கோளாறு வரும் .
    தண்ணியடிப்பதை விட்டுவிட்டால் யாரும்
    மதிக்கவே மாட்டார்கள். என்று பயந்து
    பாவத்தை விடாது செய்பவர்கள்
    தன்னம்பிக்கையுடன் நல்வழி பெற கடவுள் நம்பிக்கைக் கொள்ளுங்கள். வளம் பெறுங்கள்...

அம்மா, அப்பா


    பெத்தவங்கள ஏன் அம்மா அப்
    .
    அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு..!? அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன...!?
    .
    அ – உயிரெழுத்து....
    ம் – மெய்யெழுத்து .
    மா – உயிர் மெய்யெழுத்து.
    அதே போல தான் அப்பா..!!
    .
    தன் குழந்தைக்கு தன்னுடைய வித்தாகிய உயிரை கொடுப்பவர் தந்தை.தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய்.
    .
    இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது. நமது தமிழ் மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..!!

    பான்னு கூப்பிட்றோம்..!! எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா.??

யார்..கடவுளா?



    "உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்தது யார்..கடவுளா?"
    வகுப்பு மாணவர்களைப் பார்த்து ஆசிரியர் கேட்ட கேள்வி இது! வகுப்பறையே நிசப்தத்தில் மூழ்கியிருக்க.. ஒரு மாணவன் துணிச்சலுடன் எழுந்து நின்று “ஆமாம்” என பதில் அளிக்கிறான்.
    ஆசிரியர்: அப்படியெனில், சாத்தானை படைத்ததும் கடவுள் தானா? இப்போது அந்த மாணவன் அமைதி காக்கிறான். சிறிது நேரம் கழித்து ஆசிரியரை உற்றுப் பார்த்து "நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா?" என்கிறான். ஆசிரியரும் அனுமதி அளிக்கிறார்.
    மாணவன்: 'குளிர்நிலை' என்று ஏதேனும் இரு...க்கிறதா?
    ஆசிரியர்: ஆமாம் இருக்கிறது. குளிரை நீ எப்போதுமே உணர்ந்தது இல்லையா?
    மாணவன்: மன்னிக்கவும்...தங்கள் பதில் தவறு. குளிர் என்ற ஒன்று இல்லவே இல்லை. அது வெப்பத்தின் பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் நாம் குளிர் என்கிறோம். அது சரி.. இருள் என்ற ஒன்று இருக்கிறதா?
    ஆசிரியர்: ஆம், இருக்கிறது.
    மாணவன்: மன்னிக்கவும்... மீண்டும் தவறான பதிலினையே தந்துள்ளீர்கள். இருள் என்ற ஒன்றே கிடையாது. ஒளியின் பற்றாக்குறையைதான் நாம் இருள் என்றழைக்கிறோம். உண்மையில் ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம் அதிகம் படிக்கிறோம். குளிரையும் இருளையும் அல்ல. அதே போல், சாத்தான் என்று இவ்வுலகில் எதுவுமில்லை. உண்மையில் அது கடவுளின் மீது நாம் செலுத்தும் அன்பின் குறைபாடு, அவர் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையின் பாற்றாக்குறை என்று ஆணித்தரமாக பதிலளித்தான்.

வியாபாரி



    தெருவோரத்தில் ஒரு வாழைப்பழ வியாபாரி பழம் விற்றுக்கொண்டிருந்தார். பலர் அவரிடம் வாழைப்பழங்களை வாங்கிக்கொண்டிருந்தனர். அப்பொழுது எங்கிருந்தோ ஒரு பசு திடீரென்று அந்த கடையை நோக்கி ஓடி வந்தது. அங்கிருந்த மக்கள் அனைவரும் சிதறி ஓடினர். அந்த பசு கடையின் அருகில் வந்து வாழை சீப்புகளை எடுத்து உட்கொள்ள ஆரம்பித்தது. அருகில் நின்றுகொண்டிருந்த அனைவரும் அந்த பசுவை கற்களாலும், கம்புகளாலும் தாக்கத் தொடங்கினர். அந்த பழக்கடையின் உரிமையாளர் பதறிப்போய் மக்கள் அனைவரையும் தடுத்தார். அடிக்காதிங்க அடிக...்காதிங்க என்று கத்தினார்.
    என்ன ஐயா உங்க பழக்கடைல இருந்து பழங்களை சாபிடுது நீங்க என்னடானா அடிக்க வேண்டாம்னு சொல்லுரிங்க? என்று கேட்டார்.
    அது பாவம் பா, வாயில்லா ஜீவன், நமக்கு ஆறறிவு இருக்கு அதனால நம்ம உழைச்சு சாபிடுறோம்.. நம்ம அளவுக்கு அதுக்கு அறிவு இல்லாதனால அது இப்படி இருக்கு.
    அந்த பசு என்ன பாவம் பண்ணுச்சு, எத்தனை நாள் தான் அதுவும் மேய புல்லு இல்லாம சுவரோட்டிகலையே தின்னுகிட்டு இருக்கும். விடுங்க அது போகட்டும் என்றார் அவர்.
    என்ன அய்யா இப்படி சொல்லுரிங்க... அந்த பசு இப்படி சாப்டா உங்களுக்கு நஷ்டம் வராதானு கேட்டேன். அதற்க்கு அவர் தந்த பதில் என்னை கலந்கடித்தது.
    அந்த பெரியவர் சொன்னார் என்ன பெருசா நஷ்டம் வந்துற போகுது? நீங்க பேரம் பேசி என்கிட்ட பழம் வாங்கி நஷ்டப்பட வைகிறீங்க.. அந்த நஷ்டத்த விடவா இந்த பசுமாடு எனக்கு நஷ்டம் ஏற்படுதிர போகுது...?
    எங்க ஆத்தாக்கு ஆக்கி போட எனக்கு கொடுத்துவைகல எங்க ஆத்தாக்கு கொடுக்குறதா நெனச்சு இந்த பசுமாட்டுக்கு கொடுக்குறேன் என்றார்.
    என் மனதை தொட்ட மனிதர்களில் அவரும் ஒருவர்.

மரமும் அவனை எதிர் பாத்து காத்திருந்தது



அது ஒரு பழ மரம். ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர் பாத்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான் .அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.
அதற்கு அவன் சொன்னான். என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, கடையில் வாங்கலாம் என்றாலும் கையில் காசில்லை என்றான்.
மரம் சொன்னது கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று அதில் பொம்மை வாங்கிக்கொள். என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்று சொன்னது... அவனும் மகிழ்ச்சியுடன் மரத்தில் ஏறி பழங்களை பறித்து சென்றான்.
மறுபடியும் அவன் பல நாள் வரவில்லை. வாரங்கள், மாதங்கள் ஓடின அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து அவன் ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். வா என்னிடம் விளையாடு இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது.
அதற்கு அவன் சொன்னான், இல்லை எனக்கு இப்பொது வயதாகி விட்டது, எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர், ஆனால் நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை, வீடு வாங்க என்னிடம் பணமில்லை என்றான். மரம் உடனே சொன்னது பரவாயில்லை உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை அதற்கு பதில் என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் அதில் ஒரு வீடு கட்டிக்கொள் என்றது.
அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான். அப்போது மரம் அவனிடம் இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே முடிந்த வரை வருடம் ஒரு முறையாவது வந்து என்னை பார்த்து செல் என்றது. அவனும் வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றான். அதற்கு பின் பல வருடங்கள் அவன் வரவில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் நித்தமும் காத்திருந்தது. அதற்கு பின் பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.
மரம் அவனை பார்த்து ஆனந்த கூத்தாடியது. அவன் எப்போதும் போல் சோகமாக இருந்தான். ஏன் இப்படி இருக்கிறாய் என்று மரம் கேட்டது. அவன் சொன்னான் என் மீன் பிடி படகு உளுத்து விட்டது, படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை, அதனால் வருமானம் இல்லை நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்றான்.
மரம் துடித்து போனது, நான் இருக்கிறேன். என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக்கொள், இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள் என்றது. அவன் அடி மரத்தை வெட்டும் போது மறக்காதே வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் எப்போதாவது என்னை பார்க்க வா என்றது.
ஆனால் பல வருடங்கள் அவன் வரவேயில்லை. மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது. அப்போது அவன் வந்தான். தலையெல்லாம் நரைத்து கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத்துடன் அவன் இருந்தான். அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது.
இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை கிளைகள் இல்லை அடி மரமும் இல்லை உனக்கு கொடுக்க ஒன்றுமே இல்லையே என வருந்தியது.
அவன் சொன்னான் நீ பழங்கள் கொடுத்தாலும் அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை, வீடு கட்டவும் படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது என்றான்.
அப்படியா இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக்கொள் என்றது. அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக்கொண்டான். இந்த சுகத்துக்குதான் அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது, அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது.
இது மரத்தின் கதையல்ல நிஜமான நம் பெற்றோர்களின் கதை, இந்த சிறுவனை போல் நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம் வளர்ந்து பெரியவனானதும் தமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம். அதன் பின் ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம். நம்மிடம் இருப்பவை எல்லாம் அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர. அவர்கள் விரும்புவதும் அது தான். அதை கூடவா நம்மால் தர முடியாது??????????.

ஆசை !!



    ஆசை !! -
    கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.
    கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி, ''அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்...தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?'' என்று கேட்டார்.
    வியாபாரி நடந்ததைக் கூறினான்.

    துறவி சொன்னார், ''அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது. அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?''
    வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.

குதிரை



    ஒருத்தர் மத்தியான வேளையில் மிக வேகமாக நடுந்து போய் கொண்டிருந்தார். அதற்கு காரணம் அவன் காலில செருப்பு இல்லை. வெயில் வேறு மிக அதிகம். அதனால அவனால கால் சூடு தாங்க முடியலை. எனவே நடந்தும் ஓடியுமாய் சென்றான்.
    அந்த வழியாக ஒருவன் குதிரையில் சென்று கொண்டிருந்தான். உடனே அந்த குதிரைக்கரனிடம்,
    ஐயா!! நீங்களோ குதிரையில் போறிங்க. நான் வெறும் காலோடு நடந்து செல்கிறேன்.
    ...
    ஆகையால் எனக்கு உங்க செருப்பை கொடுத்து உதவலாமே என்றான்.
    அந்த குதிரைக்கரனுக்கு இது நியாயமானதாக தோன்றியது. எனவே செருப்பை கழட்டி அவனிடம் கொடுத்துவிட்டு புறப்பட தயாரானான்.
    மீண்டும் அவன் குதிரைகக்ரனிடம் ஐயா !! செருப்பு கொடுத்ததுக்கு நன்றி. ஆனாலும் நீங்க குதிரையில் போறதால சீக்கிரமே போக வேண்டிய இடத்தக்கு போய் சேர்ந்துவிடுவீர்கள் ஆகையால் எனக்கு அந்த குடையையும் கொடுத்து உதவலாமே என்றான்..
    அந்த குதிரைக்கரனுக்கு இதுவும் நியாயமானதாக தோன்றியது. எனவே குடையையும் அவனிடம் கொடுத்துவிட்டு புறப்பட தயாரானான்.
    மீண்டும் அவன் குதிரைகக்ரனிடம் ஐயா !! செருப்பு, குடைகொடுத்ததுக்கு நன்றி. அந்த குதிரையும் எனக்கு கொடுக்க முடிமா? என்றான்.
    உடனே அந்த குதிரைக்கரனுக்கு கோபம் வந்து விட்டது. குதிரையை விட்டு கீழே இறங்கி அவனை சட்டையை கொண்டு அடி அடி என அடிதான். பிறகு கோபத்துடன் குதிரையில் ஏறி புறப்பட தயாரானான். அப்பொழுது அவன் சிரித்து கொடிருப்பதை பார்த்து ஆச்சர்யமாணன்.
    அவனை நோக்கி இவ்வளவு அடி வாங்கியும் இப்படி சிரிக்கிறாயே? என்ன காரணம் என்றான் அதட்டலுடன்.
    அதற்க்கு அவன் ஐயா நீங்க என்னை அடித்ததால் என்னுடைய பேராசைக்கும் ஒரு எல்லை உண்டுஎன்பதை புரிய வைத்துள்ளீர்!! இல்லை என்றால் என் காலம் முழுதும் நான் ஒருவேளை அந்த குதிரையும் கேட்ட கிடைச்சிருக்குமோன்னு நினச்சிட்டே இருந்திருப்பேன். ஆனா இப்போஎனக்கு தெளிவா நீங்க புரிய வைசிட்டுங்க!! ஆசைக்கும் அளவு உண்டு என!! இனிமேல் நான் நிம்மதியா நடந்தே என் ஊருக்கு போயிருவேன் என்றான்.. குதிரைக்காரனும் நானும் கோபத்தால் உங்களை அடித்து விட்டேன். மன்னித்து கொள்ளுங்கள் என்று கூறி வீட்டு புறப்பட்டு சென்றான்.

அம்மா எனும் தேவதை ...!



    அம்மா எனும் தேவதை ...!
    இன்னும் சிறிது நேரத்தில் பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.
    வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது, அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது, வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை கடவுளை அழைத்தது....
    குழந்தை : இறைவனே என்னை எங்கு அனுப்பப் போகிறாய் வழக்கத்துக் மாறான ஏதேதோ சத்தம் கேட்கிறதே எனக்கு ஒன்றும் புரியவில்லையே.
    கடவுள் : குழந்தாய் இனி நீ மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய்
    குழந்தை : நான் இங்கு சந்தோசமாகத் தானே இருக்கிறேன் நான் ஏன் அங்கு போக வேண்டும்
    கடவுள் : இல்லை குழந்தாய் நீ இங்கிருப்பது போலவே அங்கும் இருப்பாய் சென்று வா.
    குழந்தை : என்னை நீ இங்கு பாத்துக் கொள்வது போல் யார் என்னை அங்கு பார்த்துக் கொள்வார்.
    கடவுள் : கவலைப் படாதே குழந்தாய் அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், அந்த தேவதை உனக்காக பாடும் உன் மீது அன்பு செழுத்தும் அந்த அன்பை நீ உணர்வாய்.
    குழந்தை : மனிதர்களிடம் என்னை தனியாக அனுப்புகிறாய் நான் மிகச் சிறியவன் என்னால் நடக்க முடியாது என்னால் பேச முடியாது, இன்னும் அவர்கள் மொழியைக் கூட புரிந்துக் கொள்ள முடியாது.
    கடவுள் : அது மிகவும் சுலபம் உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் உனக்கு பேசக் கற்றுக் கொடுக்கும், உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் நீ பயப்படத் தேவையில்லை.
    குழந்தை : (அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் கடவுளையே பார்த்தது) ம்ம்ம்;;…. நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் என்ன செய்வேன்.
    கடவுள் : (மென்மையாக சிரித்து) நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும்.
    குழந்தை : உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று இங்குள்ள தேவதைகள் பேசிக் கொள்கிறார்களே அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்.
    கடவுள் : வாஞ்சையுடன் குழந்தையை தடவி) உனக்கு நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை தன்னுயிர் போனாலும் உன்னை பாதுகாக்கும்.
    குழந்தை: (மிகவும் சோகமான முகத்துடன்) இனி நான் உன்னை பார்க்கவோ பேசவோ முடியாதா.
    கடவுள் : (குழந்தையை அன்பாக அணைத்து) உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையிடம் நீ போனதுமே என் பெயர் உனக்கு சொல்லும் சதா என்னைப் பற்றி உன்னிடம் பேசும், என்னிடம் திருப்பி வரும் வழியையும் உனக்கு சொல்லித் தரும், நான் உன்னோடு தான் இருப்பேன் ஆனால் நீ என்னைப் பார்க்க மாட்டாய்.
    உலகின் சத்தங்கள் அதிகமாக குழந்தைக்கு கேட்க தொடங்கின
    குழந்தை : (மிகவும் கடவுளைப் பிரியும் சோகத்துடன்) இறைவனே இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை விட்டு பிரியப் போகிறேன் நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயரையாவது சொல்
    கடவுள் : குழந்தாய் தைரியமாக சென்று வா உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயர் முக்கியமில்லை அவளை நீ அம்மா என்று அழைப்பாய்.
    கடைசியாக உனக்கு ஒரு அறிவுரை நீ வளர்ந்து பெரியவனானதும் அந்த தேவதையின் மனம் புண்படும் படி எதுவும் பேசி விடாதே.
    குழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது…

சிந்திக்க


    சிந்திக்க....
    நீதிபதி:
    உங்கள் கடையில் இரட்டை டம்ளர் முறை உள்ளதா?
    ...
    கடைக்காரர்:
    நிறைய டம்ளர் இருக்குங்கய்யா.
    நீதிபதி:
    அதில்லை தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு என தனியாகவும் ஆதிக்கசக்தி மக்களுக்கும் என தனி தனி டம்ளர்ல கொடுப்பீங்களா?
    கடைகாரர்:
    ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் வந்தா தனித்தனியா டம்ளர்லாதான் கொடுப்பேங்க.
    நீதிபதி:
    அது தீண்டாமை சட்டப்படி குற்றம்னு தெரியாதா?
    கடைக்காரர்:
    அய்யா ஒரே டம்ளரில் ரண்டு பேருக்கும் கொடுத்தா எப்படிங்கையா குடிப்பாங்க?
    நீதிபதி:
    வேண்டுமென்றே குழப்புகிறீர்கள்.
    தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி டம்ளர் வச்சிருக்கீரீர்களா?
    கடைகாரர்:
    அய்யா நான் சொந்தமா முதல் போட்டு கடைவச்சிருக்கேன்.என் கடையில் வியாபாரம் எப்படி பண்ணுவது என்பது என் விருப்பம்.நான் வித்தியாசமா ரண்டு டம்ளர்ல கொடுக்கரது அவங்களுக்கு அவமானம்னா வேறகடைக்கு போலாமே, என்னை இப்படித்தான் கொடுக்கனும்னு சொல்ல இவங்க யாரு?
    நீதிபதி:
    குற்றத்தை ஒப்புக்கொண்டதால் தண்டனை விதிக்கிறேன்.
    கடைக்காரர்:
    சரிங்கையா,
    எனக்கு அவசரமா பாத்ரூம் போகனும் உங்க பாத் ரூம்க்கு போகட்டுங்களா?
    நீதிபதி:
    அங்கெல்லாம் போகக்கூடாது.
    public னு தனியா இருக்கு அங்கதான் போகனும்.
    கடைக்காரர்:
    இங்க மட்டும் எதுக்கு ரண்டு பாத் ரூம்.
    அப்ப நாங்க தீண்ட தகாதவங்களா?
    போலீஸ்காரய்யா நீதிபதிமேல கேஸ் போடுங்க.

என் தெய்வம்



    என் தெய்வம் !!!
    முழுகாமல் இருப்பதை முதன்முதலில் அறிகையில் முகமலர்ந்து நின்றவள் !
    இரவுகளின் மடியில் எண்ணற்ற நாட்கள் என்னுருவம் தேடியவள் !
    ...
    கனவுகளின் வழியே காவல் காக்கும் கடமைச் செய்தவள் !
    காணாமல் எனைக் காதலித்தவள் கர்ப்பத்திலேயே எனக்கு பெயர் வைத்தவள் !
    என் தந்தையின் ஒருதுளி விந்தில் வந்துதித்த என்னை விரயப்படுத்தாமல் கரை சேர்க்க மேகம் பொழியும் தண்ணீரை விடவும் கண்ணீர் அதிகம் சிந்தியவள் நான் நோயுற்றுபோது மருத்துவச்சி ஆனவள் !!
    காவல்துறைப் பணியை கையிலெடுத்து என் காணாமல் போன பொம்மையைக் கண்டுபிடித்துத் தந்தவள் !!
    மரங்களுக்கும் குளிரும் மார்கழிக் குளிரில் முந்தானைத் தளர்த்தி என் முழுவுடலும் போர்த்தி கதகதப்புத் தந்தவள் !!
    பிஞ்சுவிரல் பார்த்து பஞ்சுவிரல் என்று நெஞ்சுக் கூத்தாடி கொஞ்சி மகிழ்ந்தவள் !!
    கண்களில் விளக்கேற்றி கைகளை விசிறியாக்கி கண்தூங்க வைத்தவள் !!
    மழைபோல் அழுகையில் மடியில் விழுகையில் மார்போடு அனைத்து மகிழ்ச்சி அளித்தவள் !!
    எட்டியவளை உதைக்கையில் என்பிள்ளை
    உதைக்கிறது என்றெண்ணி மகிழ்ந்தவள் !!
    நீச்சல் கற்றுத் தந்தவள் !!
    கால்சட்டை போட்டு விட்டவள் !!
    எண்ணெய் தேய்த்து தலைவாரி பவுடர் பூசி தன் முகத்தை என் முகத்தில் உரசித் தேய்த்து
    என் கண்ணே
    பட்டுடும் ன்னு பெருமூச்சி விட்டவள் !!
    உறங்கிய பிறகு என் தலைமுடிக் கோதி உவகை அடைந்தவள் !!
    கண்ணீரில் கவலையில் தலையணை
    நனைத்தவள் !
    வெந்நீரில் நான்குளிக்க விறகாக எரிந்தவள் !!
    நான் படிக்க விழித்திருந்த விளக்கவள் !!
    திரும்பிப் பார்க்கிறேன் ...
    அவளுக்கான வாழ்க்கையில் அவளின் தேடல் அத்தனையும் எனக்கானவை;
    விண்மீன் கணக்கானவை .!
    ஆட்டுக்காறி எடுத்து அற்புதமாகச் சமைத்து அப்பா,தங்கையை விடவும் ஜந்தாறு துண்டுகளை அதிகமாக எனக்கு வைக்கும் அவள் அன்புக்கு என்னதான் தர இயலும் என்னைவிட பெரிதாய் !!!..
    நான் உன்னை காதலிக்கிறேன் அம்மா ..

டைரியில் ஒரு பக்கம்



திருமணம் செய்த அன்பான ஒருவனின் டைரியில் ஒரு பக்கம்.(..படித்ததில் பிடித்தது....).
திருமணம் முடிந்து 2 மாதங்கள் வேகமாக நகர்ந்து விட்டது,
கல்யாணத்திற்காக, அதன் பின் தேன்நிலவிற்காக என ஏகப்பட்ட லீவ் எடுத்ததின் விளைவு, இப்போது ஆபீஸ் வேலை அதிகமாகிவிட்டது.
அதிலும் கடந்த இரண்ட வாரமாக ஆன்சைட் க்ளைய்ண்ட் கால் முடித்து உறங்க போவதிற்கு இரவு 12 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. இன்றும் அதுபோல் இரவு லேட்டாக எங்கள் ரூமிற்க்குள் தூங்க சென்றேன்.
அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் மனைவியை டிஸ்டர்ப் பண்ணாமல் குட் நைட் கிஸ் கொடுக்க அருகில் குனிந்தபோது கவனித்தேன், அவள் கன்னங்களில் கண்ணீர், கன்னத்தை தொட்டுப் பார்த்தேன். அதிலே கண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது.
சற்றுநேரத்துக்கு முன்னர்தான் அவள் தூங்கியிருந்தாள் என்று நினைக்கிறேன். ஆனால் கண்ணீர் தூங்கவில்லை. "அவளுக்கு கண்ணீர் விடும் அளவிற்கு என்ன துயரம்?
சொந்தகாரங்க யாராவது ஏதும் திட்டியிருப்பார்களா??
அவளோட friends கூட ஏதும் பிரச்சனையா???
என்மேல் ஏதும் கோபமாக இருக்குமோ???"
கேள்விகளுடனும்,குழப்பத்துடனும் உறங்கி போனேன்.
வழக்கம்போல் காலையில் 'பெட் காபி'யுடன் என்னை எழுப்பினாள்.
வழமைபோல் பளீச்சென்ற அவளது புன்னகை பூத்த முகம்,
இரவில் அழுதத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை .....
காபி அருந்தியபடியே அவளிடம் கேட்டேன் ஏன் இரவில் அழுதிருந்தாள் என்று....
'அப்படி ஒன்றும் இல்லை,அழவே இல்லை' என்று சாதித்துவிட்டாள். (அழுத்தக்காரி...!)
என் காதல் மனைவிக்கு என்னிடம் கூட பகிர்ந்துக்கொள்ள முடியாத துயரம் அவளை வாட்டுகிறது என்பது என் நெஞ்சை பிசைந்தது.
இருவருடைய குடும்பத்தினரின் முழு சம்மதத்துடன்
விமர்சையாக எங்கள் திருமணம் நடந்தது, நாங்க ஆசைப்பட்ட மணவாழ்க்கை அழகாக ஆரம்பித்திருக்கும் போது, அவளுக்கு கண்ணீர் விடும் அளவிற்கு என்ன மனக்கஷ்டம்????
யோசனையுடன் குளியல் அறைக்குள் சென்றேன்,
அவள் பெட்ரூம் கண்ணாடி ஜன்னலில் இரவு பெய்த மழை துளியின் ஈரத்தில் ஏதோ கிறுக்கி கொண்டிருந்தாள் விரல் நுனியால். நான் குளியல் அறையில் இருந்து வெளியில் வரும்போது, நான் குடித்து முடித்திருந்த காபி கப்புடன்
அறையைவிட்டு வெளியேறி இருந்தாள்.
எதேச்சையாக ஜன்னல் பக்கம் என் பார்வை சென்றது,
மழை துளியின் ஈரத்தில் "அப்பா " என்று எழுதியிருந்தாள்,
வெயிலின் உஷ்ணத்தில் மெது மெதுவாக எழுத்துக்கள் மறைந்து அவள் கண்ணீருக்கான காரணத்தை எனக்கு உணர்த்திக்கொண்டிருந்தது!
அவளுக்கு பிடித்த பாடலை முணு முணுத்தபடி காலை டிபன் பரிமாறினாள், நாங்கள் காதலித்த நாட்களில் விளையாட்டாக
அவள் பாடுவதை கிண்டல் அடித்து விட்டேன், அதிலிருந்து நான் எவ்வளவு கெஞ்சினாலும் என் முன் சத்தமாக பாடவே மாட்டாள், ரோஷக்காரி !
Office க்கு செல்லும் என்னை வழியனுப்ப வாசல்வரை
என் laptop bag யை தூக்கிக்கொண்டு வந்தவளிடம்,
"ஒரு வாரத்திற்கு தேவையான ட்ரஸ் நம்ம இரண்டு பேருக்கும் பேக் பண்ணி வைச்சுடு ..... இன்னைக்கு நைட் நாம கிளம்பறோம் "
"ஒரு வாரமா?.....எங்க போறோம்?"
"அது evening office ல இருந்து வந்து சொல்றேன் "
"Office trip ஆ?.....என்னையும் உங்க கூட கூட்டிட்டு போறீங்களா??"
"இல்ல...."
"அப்போ எங்க போறோம் நாம ......"
"ஏன் இவ்வளவு கேள்வி கேட்கிறே ?"
"இல்ல ஹனி மூனும் போய்ட்டு வந்துட்டோம்..... உங்க ஆபீஸ்'ல வேற உங்களுக்கு ரொம்ப வொர்க் ,அதான் எங்கே திடீர்னு travel பண்றோம்னு ...."
"அதான் evening சொல்றேன்னு சொல்றேன் ல "
(Suspense ஓடவே இரு ........என்கிட்ட கூட சொல்லாம தனியா அழு அழுன்னு அழுவியா நீ ? -> My Mind Voice)
"புஜ்ஜு evening சொல்றதை இப்பவே சொன்னாதான் என்னவாம்??"
(அடிப்பாவி புஜ்ஜு ன்னு செல்லம் கொஞ்சி நைஸா கேட்கிறியா?)
"Evening வரைக்கும் வெயிட் பண்ணுமா பட்டு குட்டி"
நான் பதிலுக்கு கொஞ்சினதும், ஹையோ நம்ம try வேஸ்ட் ஆ போச்சுதேன்னு அவ மனசுல நினைக்கிறது அவ கண்ணுல தெரிஞ்சுது,
அதை ரசித்துக்கொண்டே அவள் நெற்றி உச்சியில் முத்தமிட்டு நகர்ந்த என்னை என் ஷர்ட் காலர் பிடித்திழுத்து நிறுத்தினாள்.
அவள் விழி ஓரத்தில் கண்ணீர் ததும்பி நின்றது.
நா தழு தழுக்க.....சின்ன விசும்பலுடன்...."தேங்க்ஸ் ......." என்றபடி என் தோளில் சாய்ந்தாள்.
"எதுக்குடி பட்டு ...."
"ஹும் ......நாம..........இன்னைக்கு நைட் எங்கப்பா வீட்டுக்குத்தான போறோம்??"
"எப்படி...........எப்படி தெரியும்டி பட்டுமா "
" Possessiveness கலந்த காதலை 2 மாதத்திற்கு அப்பறமா இப்போ உங்க கண்ணுல பார்த்தேன்......கண்டிப்பா அதுக்கு என் அப்பா மட்டும் தான் காரணம்னு எனக்கு தெரியுமே "
"அடிகள்ளி........."
'இறைவா !
அப்பா மேல் பாசம் பொழியும் மகளை
எனக்கும் சீக்கிரம் வரமாக கொடு' என்ற வேண்டுதலோடு
இனிதே அன்றைய நாளை துவங்கினேன் !!.....(..படித்ததில் பிடித்தது....).

உண்மை


ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. இறைவனிடம் பலர் வந்து வேண்டிக் கொள்கின்றனர். அப்படி வேண்டிக் கொள்ளும் போது, ’இறைவா... நான் தினமும் உன்னை வணங்குகிறேன்' என்று சொல்கின்றனர்... இதில் உண்மையான பக்தி உடையவன் யார் என்பது தான் அந்த சந்தேகம்' நேராக இறைவனிடம் சென்று தங்கள் சந்தேகத்தை கேட்டன.
அப்போது இறைவன், ’தேவதைகளே! இந்த ஊரில் பலரையும் போய் சந்தித்து யார் எனது உண்மையான பக்தன் என்பதை விசாரித்து வாருங்கள்' என்றார்.
உடனே தேவதைகள் புறப்பட்டு பலரிடமும் சென்று விசாரித்தன.
...
ஒருவன், ’நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை... தினமும் மூன்று வேளை கடவுளை வணங்குகிறேன்,' என்றான்.
அடுத்தவன், /நான் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோவில் போவேன்,' என்றான்.
மற்றவன், ’நான் வாரத்தில் ஒரு நாள் நிச்சயம் கோவிலுக்குச் செல்லுவேன்,' என்றான்.
இன்னொருவன், ’எனக்கு கஷ்டம் வரும் சமயத்தில் கடவுளிடம் முறையிடுவேன்,' என்றான்.
இப்படியாக பலரும் ஏதோ ஒரு சமயத்தில் கடவுளை நினைப்பவராகவே இருக்க, ’இதில் யார் உண்மையான பக்தன்' எனக் கண்டு பிடிப்பது எப்படி என்ற குழப்பம் தேவதைக்கு ஏற்பட்டது.
அப்போது அந்தவழியே அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒருவனை நிறுத்தி, ’அப்பனே! உனக்குக் கடவுள் பக்தி உண்டா? நீ எப்போது கடவுளை வழிபடுவாய்?'' என்று ஒரு தேவதை கேட்டது.
அதற்கு அவன், ’எனக்குக் கடவுளை நினைக்கவே நேரமில்லை... அவசரமாக சிலருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கிறது. நான் போகிறேன்...' என்று பதில் கூறிவிட்டு ஏழைகளுக்கு உதவிட அவன் விரைந்தான்.
தேவதைகள் கடவுளிடம் திரும்பி வந்து நடந்ததை அப்படியே விவரித்தன.
எல்லாவற்றையும் கேட்ட கடவுள் மவுனம் சாதித்தார்.
’தேவனே... உண்மையான பக்தன் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?' என்று கேட்டன.
’கண்டுபிடித்துவிட்டேன்!' என்றார் கடவுள்.
’யார் பிரபு? தினமும் மூன்று வேளை கோவிலுக்கு வருபவர்தானே?' என்று கேட்டன தேவதை கள்.
கடவுள் புன்னகைத்தபடியே, ’இல்லை... இல்லை... கடைசியாக என்னை நினைக்கக்கூட நேரமில்லாது ஏழைகளுக்கு சேவை செய்ய ஓடினானே... உண்மையில் அவன் தான் எனது உண்மைப் பக்தன்,' என்றார்.
அப்போது தான் உண்மை புரிந்தது தேவதைகளுக்கு.

samedi 12 mars 2016

குற்ற_உணர்வு

படித்ததில் வலித்தது

பசியில் இருந்த ஒரு பெண் சிங்கம் நீண்ட போராட்டத்தின் பின்
 ஒரு மானை வேட்டையாடி பிடித்து இறையை துண்டிக்க ஆரம்பித்தது.

சிறிது நேரத்தில் மான் கருவுற்றிருப்பதை கண்டு கொண்டது.

இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிய
 சிங்கம் உடனே தாயின் வயிற்றிலிருந்து
 வெளியேறிய
 குட்டியை காப்பற்றுவதற்காக பகீரத
 பிரயத்தனம் மேற்கொண்டது.

இறுதியில் நீண்ட நேர
 முயற்ச்சி பலனளிக்காது குட்டி இறக்க
 நேரிட்டது. இதைத் தாங்க முடியாத
 சிங்கமும் கீழே சாய்ந்து கொண்டது.

சிறிது நேரத்தின் பின் இந்த நிகழ்வை முழுவதுமாக படம் பிடித்துக்
 கொண்டிருந்தவர் அருகில் சென்று பார்த்த போது சிங்கம் இறந்து கிடந்தது....
 #குற்ற_உணர்வு

மனிதர்களிடம் தொலைந்து போன கருணை..
‎இன்று‬ விலங்குகளிடம்

படித்ததில் வலித்தது

vendredi 11 mars 2016

இதுதான் விதி என்பதோ


இந்திரன்மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாகவளர்த்துவந்தாள்.

ஒருநாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது.

அதை பரிசோதித்த மருத்துவர்
இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்.

உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி,
இந்த கிளியை எப்படியாவதுக்காப்பாற்றுங்கள்.
கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள்.

இந்திரன்,
கவலைப்படாதே இந்திராணி...நான் உடனே பிரம்மாவிடம்சென்று முறையிடுகிறேன்...
ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே?

அவரிடம்சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றியெழுதிவிடுவோம் என்று சொல்லிவிட்டு
பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்..

விஷயத்தைக்கேட்ட பிரம்மா ,

இந்திரா.... படைப்பது மட்டுமே என்வேலை.

உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில்.

நாம் அவரிடம்சென்று உதவிகேட்போம்...வா ...நானும் உன்னுடன் வருகிறேன் என்று இந்திரனை அழைத்துக்கொண்டு
மஹாவிஷ்ணுவிடம்சென்று விஷயத்தை தெரிவித்தார் பிரம்மா.

மஹாவிஷ்ணுவோ, உயிர்களை காப்பது நான்தான்.

ஆனால் உன் கிளி இறக்குந்தறுவாயிலிருக்கிறது.

அழிக்கும்தொழிலை மேற்கொண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற வேண்டும்.

வாருங்கள் நானும் உங்களுடன்வந்து சிவனிடம் பேசுகிறேன் என்று கிளம்பினார் விஷ்ணு.

விபரங்களைக்கேட்ட சிவன் , அழிக்கும் தொழில் என்னுடையதுதான்.

உயிர்களையெடுக்கும்பொறுப்பை நான்
எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன்.

வாருங்கள் ....நாம் அனைவரும்சென்று எமதர்மனிடம்கூறி அந்த கிளியின் உயிரை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவோம் என்றுசொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு எமலோகம் செல்கிறார் சிவன்.

தன்னுடைய அவைக்கு சிவன் , மஹாவிஷ்ணு , பிரம்மா , இந்திரன் ஆகிய நால்வரும் வருவதைக்கண்ட எமதர்மன் உடனே எழுந்து ஓடிவந்து வரவேற்கிறார்.

விஷயம் முழுவதையும்கேட்ட அவர் ,
ஒவ்வொரு உயிரையும் எந்தநேரத்தில் ,
எந்தசூழ்நிலையில் ,
என்னகார‌ணத்தால் எடுக்கவேண்டும் என்ற காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டுவிடுவோம்.

அந்த ஓலை அறுந்துவிழுந்துவிட்டால், அவரின் ஆயுள் முடிந்துவிடும்.

வாருங்கள் அந்த அறைக்குச்சென்று
கிளியின் ஆயுள் ஓலை எது என்று பார்த்து , அதை மாற்றி எழுதிவிடுவோம் என்று அவர்களை அழைத்துச்செல்கிறார்.

இப்படியாக
இந்திரன் ,பிரம்மா ,விஷ்ணு , சிவன் , எம்தர்மன் ஆகிய ஐவரும் அந்த அறைக்குச்சென்றனர்.

அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது.

உடனே அவர்கள் அவசரமாகச்சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர்.

அது அந்த கிளியின் ஆயுள் ஓலை.

அவசரமாக அதை படித்துப்பார்க்கின்றனர்....

அதில்,,,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,

இந்திரன் , பிரம்மா , விஷ்ணு , சிவன் , எம‌தர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ,
அப்போது இந்த கிளி இறந்துவிடும்..... என்று எழுதப்பட்டிருந்தது.

இதுதான் விதி என்பதோ!

lundi 7 mars 2016

குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு...

குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு...

குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை. - சிக்மண்ட் ஃபிராய்ட் (மனவியலாளர்)

சிம்மாசனங்களை விட்டு இறங்காத அப்பாக்களுக்கு குழந்தையின் இனிசியலில் மட்டும்தான் இடம்.

குழந்தையோடு குழந்தையாக இறங்கி, விளையாடி, தோற்று, அடி வாங்கி, அழுவதுபோல நடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, தோளில் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுற்றும் அப்பாக்களுக்கு மட்டுமே இதயத்தில் இடம். எவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான்

அப்பாவுடன் இருக்கும்போது குழந்தைகளுக்கு நேர்மறையாக சிந்திக்கும் குணம் அதிகரிக்கிறது. மனவளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கிறது. அதிக தன்னம்பிக்கை பெறுகிறார்கள். சமூகத்துடனான பழக்கமும் அய்க்யூவும் அதிகரிக்கின்றன. மொழித்திறன் மேம்படுகிறது.

படிப்பில் முழுத் திறனையும் வெளிப் படுத்துவார்கள். எந்தப் பிரச்சினையையும் எளிதாக அணுகுவார்கள். குழந்தையின் திறமையை வளர்க்க ஏதேதோ தேடும் அப்பாக்கள் தினமும் ஒரு மணி நேரமாவது நேரம் ஒதுக்கி அவர்களோடு விளையாட வேண்டும்.

எல்லாக் குழந்தைகளுமே முழுத் திறமை யுடனும், அறிவுடனும்தான் பிறக்கின்றன. ஒரு மின்னல் விழுந்து மலையின் ஊற்றுக்கண் திறப்பது போல, குழந்தைக்குள் இருக்கும் அறிவுக் கண்ணைத் திறக்கும் அதிசய மின்னல் அப்பாக்களின் அன்பில் ஒளிந்திருக் கிறது. தான் சந்திக்கும் விஷயங்களை ஆராய்ந்து, தெளிவுபடுத்திக் கொள்ளும் போக்கை குழந்தைகளிடம் பார்க்க முடியும்.

அப்பாவுடன் விளையாடுவது, விவாதிப்பது என இருவருக்குமான தளம் விரிவடையும்போது மூளையின் செயல்பாடு அதிக அளவில் தூண்டப்படுகிறது (பிரெய்ன் ஸ்டிமுலேசன்). அப்பாவுடன் நேரம் செல வழிக்கும் குழந்தைகளின் திறன் மேம்படுவது உலகளவில் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக் கிறது.

தாயின் பனிக்குடம் தாண்டி உதிக்கும் அந்தத் தாமரையின் சின்னச் சிரிப்பு, செல்லச் சிணுங்கல், மின்னல் கோபம், கொல்லும் அழுகை - ஒவ்வொன்றாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அப்பா நடக்கும் போது இருவருக்குமான இன்னொரு தொப்புள்கொடி முடிச்சு போடப்படுகிறது.

அது ஆயுள் முழுவதும் அறுக்கப்படுவதில்லை. அம்மாவோடு அப்பாவும் சேர்ந்து வளர்த்த குழந்தைக்கு எவ்வளவு சிக்கலான சூழலையும் தனதாக்கிக் கொள்ளும் வித்தை தெரிந்திருக்கும்.

படிப்பு, விளை யாட்டு, உறவு, சமூகம் என எல்லா இடத்திலும் தானாக முன்வந்து பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள்.

எது சரி, தவறு என்பதை உணர்ந்து செயல்படும் பக்குவத்தை அவர்களிடம் பார்க்க முடியும். தேடல் வேட்கையுடன் இருப்பார்கள். கோடிக்கணக்கான முகங்களுக்கு மத்தியில் தங்களுக்கான தனி அடையாளத்தை காட்ட எப்போதும் குழந்தைகள் விரும்புவார்கள். அதற்கு அவர்களுக்குத் தேவை அப்பாவின் ஆள்காட்டி விரலைப் பற்றிக் கொண்டு நடக்கிற சந்தோஷம்தான் - தீர்க்கமாகச் சொல்கிறார் மனநல மருத்துவர் மீனாட்சி..

mercredi 2 mars 2016

உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய பதிவு

உறவு முறைகள் ....பற்றி ....
மிகவும் சிந்திக்கவேண்டிய பதிவு

----------
அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா,
பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார்,
தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு,
பெரியப்பா பையன்,
பெரியப்பா பொண்ணு,
அத்தை பையன்,
அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன், இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது, யாரும் கூப்பிடவும் மாட்டார்கள், அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும்
காரணம்,
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்!
அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்?
பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர்வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத்தரவோ, எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை!
திருமணத்தின் போது அரசாணைக்கால் நட
எந்த அண்ணனும் இருக்கப்போவதில்லை மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப்போவதில்லை, குழந்தைக்கு மோட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள்?
கட்டிக்கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும் தம்பியும் பறந்து செல்வார்கள்,
இனி யார் போவார்?
ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி
ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்க போகிறார்கள்
ஒவ்வொரு ஆணும்
தன் கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்ள அண்ணன் தம்பி யாருமின்றி அவதிப்பட போகிறார்கள்
அப்பா அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை,
அந்த ஒரு குழந்தையும்
வெளியூருக்கோ
இல்லை தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால்
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ இல்லை அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்!
உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு
ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு
எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும்
இதே நிலைதான் !
உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?!
சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம்
எனக்கு உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள் தான் வயதான காலத்தில் அப்பா அம்மாவுக்கு எதாவது ஒன்று என்றால் நான் நீ என்று ஓடிவருவார்கள்!
கணவன் குடும்பம் குழந்தை என்று உயிரைவிட்ட பெண்கள் கூட பெற்றோருக்கு
ஒன்று என்றால் அத்தனையும் தூக்கியெறிந்துவிட்டு முதலில் வந்து நிற்பார்கள்!
ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்துபாருங்கள்!
பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!
ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை மறந்துவிடக்கூடது!
கார் பங்களா வசதி வாய்ப்புகளுடன்
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும்,
வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு
ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள்?

வணக்கம்.

வணக்கம்.
தமிழர்கள் சொல்லும் ‘வணக்கம்’ பல்தரப்பட்ட பொருளினை உணர்த்துகின்றது. இறைவன் முதற்கொண்டு எளிய மாந்தர் வரையிலாக எல்லாரும் வணக்கம் என்னும் சொல்லுக்கு ஏற்புடையவராக உள்ளனர். இத்தகைய உயர்வுமிக்க கருத்தின் குறியீடாக வணக்கம் அமைந்துள்ளது.
இன்றைய நாளில் இச்சொல்லின் பயன்பாட்டில் பிற இனத்தவர் பண்பாடு கலந்துவிட்டது. காலையில் சந்திக்கும்போது ‘காலை வணக்கம்’, மாலை நேரச் சந்திப்பின்போது ‘மாலை வணக்கம்’, பின்னர் இரவின்போது ‘இரவு வணக்கம்’ எனச் சொல்லும் வழக்கத்தைத் தமிழர்கள் கொண்டுள்ளனர். இவ்வாறு காலத்தை முன் வைத்து வணக்கம் சொல்லும் மரபு தமிழர்களுடையதன்று. இஃது ஆங்கிலேயரின் மரபாகும். ‘குட் மார்னிங்’ (Good morning), குட் ஆஃப்டர்னூன் (Good afternoon), குட் ஈவினிங் (Good evening) எனச் சொல்வது ஆங்கிலேயரின் வழக்கமாகும். இதனையே தமிழர்களும் பின்பற்றுகின்றனர். தமிழரின் பண்பாட்டுடன் ஆங்கிலேயர் பண்பாடு கலப்புற்றதால் ஏற்பட்ட விளைவு இது.
“இன்றைய காலைப்பொழுது நற்பொழுதாக அமையட்டும்”, என்னும் கருத்தினையே ‘காலை வணக்கம்’ என்னும் தொடர் உணர்த்துகின்றது. இத்தகைய வணக்கம் குறிப்பிட்ட ஓர் எல்லையைக் கொண்ட பொருளினை மட்டுமே உணர்த்துகின்றது. ஆனால், தமிழர்களின் வணக்கம் பரந்துபட்ட நிலையினைக் கொண்டிருக்கின்றது. தமிழர்களின் தனிப்பெரும் சிந்தனையும் பண்பாடும் சிதைந்துள்ளது. குறிப்பிட்ட காலத்தினை முன்னிட்டு வணக்கம் சொல்வது தமிழர் மரபன்று. ‘நீடுழி வாழ்க’, ‘பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க’, என வாழ்த்துவது தமிழர் மரபு. தமிழர்களின் வாழ்வியல் மரபுக்கு முரணாக ‘காலை வணக்கம்’, ‘மாலை வணக்கம்’ போன்ற தொடர்கள் அமைந்துள்ளன.
பிறருக்கு வணக்கம் சொல்லும்போது மனம் நிறைவு கொள்கின்றது. ஏற்றத் தாழ்வுகள் ஏதுமின்றி சொல்லப்படும் வணக்கத்தால் மனிதன் பண்பாளனாக ஆகின்றான். எளிய தமிழர் வாழ்வில் வணக்கம் தொடர்பான சில பழமொழிகள் உள்ளன. ‘வணங்கின புல் பிழைக்கும்’ என்பது தமிழ்ப் பழமொழிகளுள் ஒன்றாகும். இப்பழமொழியில் கையாளப்பட்டுள்ள வணக்கம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை உணர்த்துகின்றது. விட்டுக் கொடுத்து வாழ்வது மிக உயர்ந்த பண்பாட்டுக் கூறாகும்.
பகைவரும் நமக்கு வணக்கம் சொல்வர் என்னும் அரிய தகவலைத் தருகின்றது திருக்குறள். வில்லின் வணக்கம் என்பது தீமை செய்திடும். வில்லின் தன்மை வெளிப்படையாகத் தெரியக்கூடியது. ஆனால், பகைவரின் சொல் வணக்கம் அத்தகையதன்று. பகைவரின் வணக்கம் நன்மையளிக்க வல்லது என நம்பிடக்கூடாது. இக்கூற்றினைக் கீழுள்ள திருக்குறள் எடுத்துரைக்கின்றது.
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான் (குறள் 827)
அரசன் மக்களிடம் சொல்லும் வணக்கமும் மக்கள் அரசனிடம் சொல்லும் வணக்கமும் வேறுபட்ட பொருளினை உணர்த்துகின்றன. “என்னுடைய ஆட்சியில் நற்பேறு பெற்று வாழ்வாயாக”, எனும் வாழ்த்தின் குறியீடாக அரசனின் வணக்கம் அமைந்துள்ளது. “உங்கள் ஆட்சிக்கு உட்பட்ட இந்நாட்டில் நல்வாழ்வு பெற்றுள்ளமைக்காக என் நன்றியினைப் புலப்படுத்துகின்றேன்”, என்னும் பொருளில் மக்களின் வணக்கம் அமைந்துள்ளது.
தமிழர் வாழ்வியலில் ‘வணக்கம்’ எனும் சொல் குறிப்பிட்ட ஒரு சாரார் மட்டுமே பயன்படுத்துவதன்று. அரசன் முதல் ஆண்டி வரை எல்லாருக்கும் உரிய பொதுச்சொல்லாக வணக்கம் விளங்குகின்றது. 

mattaver


josanai


monam