முகப்பு

jeudi 23 février 2012

வெறும் கனவு



நிலவை போலவே ..,
 இரவும் சுகமானது ..!
 நிஜத்தை போலவே
 உன் நினைவுகளும்
 என்னுள் சுகமானது !!
 என்னுடன் நீ
 அருகில் இல்லாவிட்டாலும்
 உன் நினைவுகளுடன்
 வாழ்கிறது என் நிஜம் ...!!
 என் உண்மை காதல்
 நீ அங்கு தனியே உறங்கும் போது,
 இங்கு நான் உன்னோடு
 கனவு காண்கிறேன்
 என் கவிதை வரிகளோடு!!!!
 "போடி பைத்தியம்"
 ஆமாம் உண்மைதான் ..,
 நீ சொன்னாலும்
 சொல்லா விட்டாலும்..,
 அதிகம் பேசாமல்
 ஊமையாய் என் உதடுகள்
 உன் பெயரை மட்டும்மே
 வீணையாய் வாசிக்கிறேன்!!
 கொஞ்சம் பொருத்து கொள்
 விடிந்ததும் தெரிந்து விடும்
 நான் காண்பது
 வெறும் கனவு என்று !!!!!
(fadi anthony)

Aucun commentaire:

Enregistrer un commentaire