முகப்பு

samedi 27 août 2011

நீ பூக்கும் நேரத்தை


பூ பூக்கும் நேரம்

தாமரைப் பூ சூரிய உதயத்தில் பூக்கும்

செண்பக பூ காலை 6 - 7 இல் பூக்கும்

வாழைப் பூ மாலை 5 - 6 இல் பூக்கும்

மல்லிகை பூ இரவு 7 - 8 இல் பூக்கும்

பெண்ணே நீ பூக்கும் நேரத்தை

யாரால் கணிக்க முடியும்

அவசரவேண்டுகோள்... உடனடியாக..!

அவசரவேண்டுகோள்... உடனடியாக..!




முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனை எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படகூடும். மூவரினதும் வாழ்வின் நாட்கள் நிமிடங்களாகவும், செக்கன்களாகவும் சுருங்கிக்கொண்டே போகின்றன.



கலகம் அடக்கும் காவல்துறையும், மத்திய ரிசேவ் ஆயுதக்காவல் பிரிவும் குவித்து வைக்கப்பட்டுள்ளார்கள். சட்டம் - ஒழுங்கை காரணம்காட்டி நாளையோ மறுநாளோகூட தண்டனையை நிறைவேற்ற ஆளும்தரப்பு அவசரம் காட்டுகின்ற...து.



தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் அவர்களை தூக்குகயிறு நெரிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது.



பேரறிவாளனின் தாயின் கதறல் எமது எல்லோரினதும் தாயினதும் கதறலாகவே நாம் கேட்கவேண்டும். இந்த தள்ளாத வயதிலும் அந்த தாய்படும் வேதனை நம் தாய்படும் வேதனை என்றே நாம் துடிக்க வேண்டும்.



நாம் ஒருகணமும் தாமதிக்காமல் உடனடியாக செயற்படவேண்டும். இந்த தூக்குதண்டனையை நிறுத்தும் சட்ட அதிகாரம் உள்ளவர்களிடமும், தூக்குதண்டனைக்கு எதிரான சர்வதேச நிறுவனங்களிடமும் இப்போதே நீதிகேட்டு மின்னஞ்சல்களையும், தகவல்களையும் அனுப்புவோம்.



சாத்தியமான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி இந்த மூவரின் தூக்குதண்டனையை நிறுத்த இப்போதே முயல ஆரம்பிப்போம்.



காலம் மிகவேகமாக நழுவிக்கொண்டிருக்கிறது.



நாளை என்றும் பின்னர் என்றும் ஒத்திப்போடாமல் இப்போதே,



இந்த நிமிடமே மின்னஞ்சல்கள், தொலைநகல்கள் அனுப்புங்கள்.



மின்னஞ்சல்கள், தொலைநகல்கள் அனுப்ப வேண்டிய முகவரிகள்.



President Prathiba Patil



Fax: (0091) 11 230 172 90 or 230 178 24



presidentofindia@rb.nic.in



---------------------------------------------------



Home Minister P.Chidambaram



Fax: (0091) 11 230 942 21



hm@nic.in



---------------------------------------------------



Prime minister Manmohan Singh



Fax: (0091) 11 230 195 45 230 168 57



manmohansingh@sansad.nic.in



---------------------------------------------------



Tamil nadu CM Jayalalitha



011 91 44 281 33510



011 91 44 24992255



011 91 44 24991414



011 91 44 24992121



cmcell@tn.gov.in

vendredi 26 août 2011

நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இதோ ஒரு கதை :


நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இதோ ஒரு கதை :


தாங்க முடியாத வெயிலில் ஒருவன் களைத்தபடி நடந்து கொண்டிருந்தான். சாலை ஓரத்தில் ஒரு மரம் நின்று கொண்டிருந்தது. அதன் நிழலில் ஒதுங்கி நின்றபோது அங்கே ஏதோ எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தான்.
அன்பர்களே.. வேலிக்கு அருகில் ஓர் அற்புதமான சுனை நீர் இருக்கிறது. தாகமாக இருந்தால் வந்து பருகவும் என்று எழுதியிருந்தது.
ஓடிச் சென்று தண்ணீரைக் குடித்தபோது வேறொரு வாசகம் எழுதப்பட்டிருந்தது. களைப்பாக இருந்தால் அதோ அருகில் இருக்கும் வாங்கில் அமர்ந்து ஓய்வெடுங்கள்.

ஓய்வெடுத்தபோது இன்னொரு வாசகம் தெரிந்தது : பசியாக இருந்தால் பக்கத்தில் இருக்கும் பீப்பாவில் ஆப்பிள்கள் இருக்கின்றன எடுத்து சாப்பிடுங்கள்.
சாப்பிட்டபோது அங்கு ஒரு முதியவர் வந்தார் : பாவிக்காவிட்டால் நீர் அசுத்தமடைந்துவிடும், படுக்காவிட்டால் வாங்கில் தூசி பிடித்துவிடும், அதிகமாக கொட்டுப்படும் ஆப்பிளை யாராவது சாப்பிடாவிட்டால் காய்த்த ஆப்பிள் மரத்திற்கு பெருமையில்லை என்றார்.
தன் கிணற்றில் குளிக்கவிடாது..

தன் வாங்கில் படுக்க விடாது..
தனக்கு தேவையற்ற உணவை மற்றவருக்கு கொடுக்க மனமில்லாது..
வாழும் மனிதனாக புவியில் ஒருவன் காணப்பட்டால் அவனால் கடவுளும் கண்ணீர் வடிக்கிறார்.

பணத்தையும், உணவையும் பதுக்கி வைத்து சுயநலத்தோடு வாழ்வது வாழ்வல்ல.



வேலை


வெகு தொலைவில் என்ன மங்கலாகத் தெரிகிறது என்பதல்ல, ஆனால் கையில் தெளிவாக என்ன வேலை இருக்கிறதோ அதைத்தான் முக்கிய வேலையாக கருதிச் செய்ய வேண்டும்.


அந்த நாளின் வேலையை முழுமையாக செய்யுங்கள். எதிர்காலம் குறித்து திட்டமிடுங்கள் ஆனால் அது குறித்து கவலைப்படாமல் இருங்கள். ஏனென்றால் எதிர்காலம் தன்னைத்தானே பார்த்துக் கொள்ளும்.



உயிர்நாடி..!


இந்த நாளைப் பாருங்கள்..!

இதுதான் உங்கள் வாழ்க்கையின் உயிர்நாடி..!

இந்த சுருக்கமான பாதையில்

உங்கள் வாழ்வின் எல்லாவகை உண்மைகளும் உண்டு

வளர்ச்சியில் இன்பம்

செயலில் மேன்மை

சாதனையில் சந்தோஷம்

கடந்த காலம் என்பது கனவு..!

எதிர்காலம் என்பது கற்பனை..!

இன்று நன்றாக வாழ்ந்தால் ஒவ்வொரு கடந்த நாளையும் அது

சந்தோஷக்கனவாக்குகிறது..!



 நாளைதான் இன்றைய சந்தோஷத்திற்குக் காரணம் என்று நினைப்பது முட்டாள்தனம்

dimanche 14 août 2011

அம்மா


அன்பென்ற சொல்லுக்கு அர்த்தம் தேடுபவர்களே

அறிந்தது கொள்வீர் அன்பென்றால் அம்மா தானே........

உங்களது மூளையின் வயதை கண்டறிவதற்கு


உங்களது மூளையின் வயதை கண்டறிவதற்கு




உங்கள் வயதைக் கேட்டால் சொல்லிவிடலாம். மிக எளிது. உங்கள் மூளையின் வயது என்ன? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? மூளைக்கும் நம் வயது தானே என்று எண்ணுகிறீர்களா? அதுதான் இல்லை.

மூளைக்கு வயது அதன் செயல் திறனைப் பொறுத்து உள்ளது. உடல் வளர்ந்து தளர்ந்தாலும், மூளை செயல்படுவதைப் பொறுத்து தளர்வதில்லை.



எனவே உங்களுக்கு வயதானாலும் உங்கள் மூளையின் வயது குறைவாக இருந்தால் நீங்கள் புத்திசாலி என்று அர்த்தம். அப்படியானால் இதனை எப்படிக் கண்டுபிடிப்பது? இதற்கென ஓர் இணையதளம் இயங்குகிறது.



இந்த தளம் சென்று இதில் விளையாட்டுக்களாகத் தரும் சோதனைகளுக்கு நம்மை உட்படுத்திக் கொண்டால் நம் மூளையின் வயதைக் காணலாம். ஏன் அதுவே சொல்லிவிடுகிறது. இது எப்படி இயங்குகிறது எனப் பார்க்கலாம்.



இதில் ஐந்து பிரிவுகள் உள்ளன. முதலில்,



Recall: இதில் பொருட்கள் காட்டப்பட்டு அவை எந்த வரிசையில் காட்டப்படுகின்றன என்று நாம் காட்ட வேண்டும். முதலில் எளிதாக இருந்தாலும் போகப்போகச் சவால் விடும் வகையில் உள்ளது. இந்த விளையாட்டு விளையாடும் தளத்தின் கீழாக மெமரி என்பது என்ன, அதனை எப்படி நாம் தீட்டி வைத்துக் கொள்ளலாம் என்று டிப்ஸ்கள் வழங்கப்படுகின்றன.



Recognition: இமேஜ் ஒன்று காட்டப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் எத்தனை முறை அது காட்டப்படுகிறது என்று சொல்ல வேண்டும். விளையாடிப் பார்க்கும் போதுதான் எவ்வளவு கடினம் என்று தெரிகிறது. இதன் கீழாகவும் டிப்ஸ்கள் தரப்படுகின்றன.



Anagrams: எழுத்துக்கள் தரப்பட்டு சொற்களை அமைக்கும் சோதனை. இதில் எழுத்துக்களை இழுத்து வரிசையில் அமைத்துச் சொற்களை அமைக்க வேண்டும். ஆங்கில சொற்கள் தெரிந்தவர்களுக்கு இது எளிது.



Pounce: எதிர்செயல்திறனைச் சோதிக்கிறது நான்காவது பிரிவு. இதில் ஆங்காங்கே ஸ்டார்கள் காட்டப்பட்டு மறையும். உங்கள் மவுஸ் கொண்டு அதில் கிளிக் செய்திட வேண்டும். எத்தனை ஸ்டார்களைக் கிளிக் செய்கிறீர்கள் என்பதுதான் விளையாட்டு. சோதிக்கப்படும் திறன், ஒரு செயலுக்கான உங்களின் எதிர்த்திறன். Pounce என இது அழைக்கப்படுகிறது.



Blink: அடுத்த மூளை விளையாட்டு வைத்த கண் வாங்காமல் பார்த்து விளையாடும் விளையாட்டு. ஒரு இமேஜ் காட்டப்படும். திடீரென இது மாறும். மாறுகையில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் மாற்றம் இருக்கும். அது என்ன என்று மவுஸால் காட்ட வேண்டும்.



சற்று சிக்கலானதுதான். ஆனால் விளையாட மிகவும் ஆர்வமாக இருக்கும். இவை அனைத்தையும் விளையாண்டு முடித்தவுடன் உங்களின் மூளை வயது காட்டப்படுகிறது. உங்கள் வயதுடன் ஒப்பிட்டுப் பார்த்து நீங்கள் உங்கள் மூளைத் திறன் எப்படி உள்ளது என அறியலாம். ஒருமுறை விளையாடிப் பார்த்தால் நிச்சயம் மூளைத்திறன் உயரும்.



இணையதள முகவரி

vendredi 12 août 2011

காலம் குறுகியது



மன்னியுங்கள், மறந்துவிடுங்கள், உங்கள் தவறுகளை மற்றவர்கள் எப்படி மன்னிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படியே மற்றவர்களை மன்னியுங்கள். பொறுமையோடும் புரிதலோடும் இருங்கள் விரோதம் பாராட்டவோ பழிவாங்கவோ நேரமில்லை வாழ்க்கை குறுகியது.
வாழ்க்கை குறுகியது, நம் பகைமையை தொந்தரவுகளை மறக்க வேண்டும். இன்னும் காலம் இருக்கும்போதே மறக்க, மன்னிக்க வேண்டும். சண்டையை நிறுத்த காத்திருக்காதீர்கள். அன்பான வார்த்தையை சொல்ல அன்பான செயலை செய்ய காத்திருக்காதீர்கள். காலம் குறுகியது நாளை மிகவும் தாமதமாகிவிடலாம்.

jeudi 11 août 2011

நாணல்



எல்லாவிதமான கசப்பு, கோபம், சண்டை, போராட்டம், தவறான பேச்சு, விரோதம் உட்பட அனைத்தையும் விலத்தி வையுங்கள்.
 நாணல் போல மென்மையாகவும், வளையும் தன்மையுடனும் இருங்கள். செடார் மரத்தைப்போல வளையாமல் இருக்காதீர்கள்.

நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இதோ ஒரு கதை



நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இதோ ஒரு கதை :
தாங்க முடியாத வெயிலில் ஒருவன் களைத்தபடி நடந்து கொண்டிருந்தான். சாலை ஓரத்தில் ஒரு மரம் நின்று கொண்டிருந்தது. அதன் நிழலில் ஒதுங்கி நின்றபோது அங்கே ஏதோ எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தான்.
அன்பர்களே.. வேலிக்கு அருகில் ஓர் அற்புதமான சுனை நீர் இருக்கிறது. தாகமாக இருந்தால் வந்து பருகவும் என்று எழுதியிருந்தது.
ஓடிச் சென்று தண்ணீரைக் குடித்தபோது வேறொரு வாசகம் எழுதப்பட்டிருந்தது. களைப்பாக இருந்தால் அதோ அருகில் இருக்கும் வாங்கில் அமர்ந்து ஓய்வெடுங்கள்.
ஓய்வெடுத்தபோது இன்னொரு வாசகம் தெரிந்தது : பசியாக இருந்தால் பக்கத்தில் இருக்கும் பீப்பாவில் ஆப்பிள்கள் இருக்கின்றன எடுத்து சாப்பிடுங்கள்.
சாப்பிட்டபோது அங்கு ஒரு முதியவர் வந்தார் : பாவிக்காவிட்டால் நீர் அசுத்தமடைந்துவிடும், படுக்காவிட்டால் வாங்கில் தூசி பிடித்துவிடும், அதிகமாக கொட்டுப்படும் ஆப்பிளை யாராவது சாப்பிடாவிட்டால் காய்த்த ஆப்பிள் மரத்திற்கு பெருமையில்லை என்றார்.
தன் கிணற்றில் குளிக்கவிடாது..
தன் வாங்கில் படுக்க விடாது..
தனக்கு தேவையற்ற உணவை மற்றவருக்கு கொடுக்க மனமில்லாது..
வாழும் மனிதனாக புவியில் ஒருவன் காணப்பட்டால் அவனால் கடவுளும் கண்ணீர் வடிக்கிறார்.
பணத்தையும், உணவையும் பதுக்கி வைத்து சுயநலத்தோடு வாழ்வது வாழ்வல்ல.

lundi 8 août 2011

மனங்களில் உள்ளதே வாழ்க்கை



சிவப்பு மனிதனுக்கு நிழல் 
கருப்புதான் 
கருப்பு மனிதனுக்கு குருதி சிவப்புதான் 
நிறங்களில் இல்லை வாழ்கை 
மனித மனங்களில் உள்ளதே வாழ்க்கை

நண்பன்



நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது கூட இலகுவானதுதான், ஆனால்
நம் உயிரைக் கொடுக்கும் அளவிற்கு தகுந்த நண்பன் கிடைப்பதுதான் கடினமானது.

vendredi 5 août 2011

அன்பு


நம்பிக்கை உள்ள இடத்தில் 
அன்புக்கு பஞ்சமா?

தேடிய இதயங்களுக்கு
காதல் பஞ்சமா?

கவிதை புனைய 
கற்பனைக்குத்தான் பஞ்சமா?

கிடைத்த காதலுக்கு
காத்திருப்பு பஞ்சமா?

பல தடவை 
அழுது விழுந்துமறுத்தாலும்மனம் விரும்பாதவனோடுமண வாழ்க்கை முதலிரவில்முகம் சுழிக்காதுபெற்றவர்களுக்காககுற்றஉணர்வோடுமுகம் குனிந்த படி கட்டிலில்அழுது கொண்டிருப்பதுஅவள் மட்டுமல்லஅவள் சேகரித்தசெல்லக் கனவுகளும் தான் மரபு வண்டியில்இறக்க முடியாதசுமைகளோடுஇதயம் உள்ளேகண்ணீர் கசியபோலிப் புன்னகையோடுபாவி வாழ்க்கை தொடங்குகிறது...

தோழி.........நீ.



வெயில்கால நிழலாக
குளிர்காலக் கம்பளியாக
மழை நேரக் குடையாக
பசி நேர உணவாக
இருளில் ஒளியாக
துன்பத்தில் தலை தடவும்
தோழி.........நீ....

jeudi 4 août 2011

கர்ப்பிணிகள் ஓவனை பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும்: அதிர்ச்சித் தகவல்

கர்ப்பிணிகள் ஓவனை பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும்: அதிர்ச்சித் தகவல்

கர்ப்பிணிகள் மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் ஆகிய சாதனங்களுக்கு அருகில் நீண்ட நேரம் இருந்தால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வர வாய்ப்பு அதிகம் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகளிடம் ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தனர். மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் உள்ளிட்ட மின்காந்த சக்தி(மைக்ரோவேவ்) அதிகம் உள்ள கருவிகளின் பயன்பாடு பற்றி 801 கர்ப்பிணிகளிடம் கருத்து கேட்டனர்.
பின்னர் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் மருத்துவ விவரங்களை தொடர்ந்து பதிவு செய்து வந்தனர். 13 ஆண்டுகள் கழித்து அந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கான அறிகுறிகள் பற்றி ஆராய்ந்தனர்.
மின்காந்த கருவிகளை குறைவாக பயன்படுத்தியவர்களைவிட அதிக நேரம் பயன்படுத்திய கர்ப்பிணிகளின் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வாய்ப்பு 3 மடங்கு அதிகமாக இருந்தது தெரியவந்தது.
கர்ப்பிணிகள் மின்காந்த கருவிகளின் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது அவசியம் என்பதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. அத்துடன் அவை இயங்கும் போது அருகில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதை தடுக்க முடியும் என ஆய்வுக் குழுவின் தலைவர் டிகுன் லி தெரிவித்துள்ளார்

ரகசியம்..



மங்கையே
மௌனத்தால் நீ பேசும் வார்த்தைகள் ஆயிரம்
விழியால் நீ பேச நினைத்தால் பாஷைகள் ஆயிரம்..ஆயிரம்உன் மனக்கடலின் ஆழமோஎவரும் அறியா ரகசியம்...

புன்னகை



    • பூக்களின் அழகு அதன் மனத்தினில்

      மனிதரின் அழகு அவர் குணத்தினில்

      பெண்ணின் அழகு நல்ல பண்பினில்

      ஆணின் அழகு தன்னம்பிக்கையில்

      நமது அழகே அழகு ஒரு புன்னகையில்

  • mardi 2 août 2011

    இளமைக்கு வழிவகுக்கும் திராட்சை

    
    இளமைக்கு வழிவகுக்கும் திராட்சை


    திராட்சைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் புற்றுநோயை தவிர்க்கலாம். அது மட்டுமல்லாமல் முன் கூட்டிய வயோதிகத்தை தடுக்கவும் திராட்சை உதவுகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    திராட்சையில் உள்ள கூட்டுப் பொருள்கள் சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் கதிர்வீச்சில் இருந்து செல்களை பாதுகாக்க உதவுகிறது. புற ஊதா கதிர்கள் தோல் புற்றுநோயை ஏற்படுத்த காரணமாக உள்ளது.



    பார்சிலோனா பல்கலைகழகம் மற்றும் ஸ்பானிஷ் தேசிய ஆராய்ச்சி கொவுன்சில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. புற ஊதா கதிர்வீச்சு பாதிப்பை தவிர்க்க திராட்சையில் உள் ப்ளேவனாய்ட் உதவுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



    ஆய்வின் இயக்குனரும் பார்சிலோனா பல்கலைகழக உயிரி வேதியியல் நிபுணருமான மார்டா காஸ்கன்டே கூறுகையில்,"சூரிய ஒளியின் மூலம் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க முடியும் என இந்த புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது" என்றார்.



    அழகு சாதனப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றில் திராட்சை கூட்டுப் பொருள்கள் ஏற்கனவே உள்ளன. இருப்பினும் அவை தோல் செல்களை பாதுகாப்பதில் உரிய முறையில் செயல்படவில்லை. சூரிய கதிர்வீச்சால் தோலுக்கு ஏற்படும் சேதத்தை தவிர்ப்பதற்கு தற்போதைய ஆய்வு உதவும் என அவர் தெரிவித்தார்.



    தவிர்க்க கூடாத பத்து உணவு வகைகள்

    
    தவிர்க்க கூடாத பத்து உணவு வகைகள்



    உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் சுத்தமான மனிதர்களால் கூடத் தடுக்க முடியாது.

    நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள் நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்து விடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.



    வெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும், பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது.



    உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.



    வெங்காயம்: வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது.



    நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.



    காரட்: நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.



    ஆரஞ்சு: வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி.



    காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.



    பருப்பு வகைகள்: பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.



    கோதுமை: நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன்(கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது.



    இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.



    இறால், மீன் மற்றும் நண்டு: அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.



    தேநீர்: தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.



    பாலாடைக்கட்டி: சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.



    முட்டைக்கோஸ்: குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.



    முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருத்துவச் செலவு குறைந்துவிடும்.



    வெற்றி


    உன் தலையெழுத்தைத் தீர்மானிப்பவன் நீதான் உன் ஆன்மாவின் எஜமானனும் நீதான்.

    ஒரு மனிதனின் நம்பிக்கை அவனுடைய பலவீனத்தை வெற்றி கொள்ளும்.