முகப்பு

dimanche 29 mai 2016

kasapu


vendredi 27 mai 2016


kalai


nam


perapu


manithan


ninaivu


idayam



anpu



mercredi 25 mai 2016

kannire


nammidam


inke


pathai


vali


ithayam


karanam


manam



தவறாகப் பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் சரியான அர்த்தங்களும் ...!


தவறாகப் பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் சரியான அர்த்தங்களும் ...!
1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தப்
பண்ணு...
தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்தப் பண்ணு...
இதாங்க சரி...
2.படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான்....
இதுவும் தப்பு
சரியானது என்னன்னா ...........
படிச்சவன் பாட்டைக் கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டைக் கொடுத்தான் ....
3.ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்...
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்.......
4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ....
சூடு அல்ல சுவடு...
சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்....
5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்....
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....
வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம் ...
காலப்போக்கில்....
நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரைக் குறை கூற
உபயோகிக்கிறோம்...
மாறுவோம்... பிறரை மாற்றுவோம்.

jeudi 19 mai 2016

மனைவி கடவுளின் மறு உருவம்




    பெண்களின் உணர்வுகளை மதி
    மனைவி கடவுளின் மறு உருவம்
    ஒரு பெண்...
    மழலையாகி,
    மகளாகி,...
    தமக்கை,
    தங்கையாகி,
    தாயாகி,
    அண்ணியாகி,
    அத்தையாகி,
    காதலியாகி,
    மனைவியாகி....
    இத்தனை ஆனாலும்,
    மனைவி ஸ்தானத்திற்கே
    மதிப்பும் மரியாதையும் அதிகம்.
    மனைவி. தவிர
    மற்ற உறவுகள், இரத்த சம்பந்தமானது.
    பாசம் என்பது
    அவர்களின் D.N.A. விலே இருக்கும்.
    ஆனால்
    எங்கிருந்தோ வந்து......
    நம் சுக துக்கங்களில் பங்கெடுத்து,
    நோய் காலங்களில் பணிவிடை செய்து,
    தேவை, தேவையற்றதை அறிந்து..
    உனக்கே உரியவளாகிறாள்.
    மட்டுமல்லாது,
    நம் கோப வெறுப்புகளையும் தாங்கிக் கொண்டு
    உன் சுமைகளையும் சுமக்கிறாள்.
    உலகிலேயே யாரும் கொடுக்கமுடியாது.
    உயரிய "தந்தை " எனும் அங்கிகாரத்தை கொடுக்கிறாள்.
    அவ்வளவு ஏன் ?
    நீ இறந்த பின் உன் உறவுகளே செய்யாத
    மழலை பருவத்திலிருந்தே
    பூண்ட...
    " பூவை பொட்டை
    இழந்து வெள்ளை உடை தரித்து... "
    தன் வாழ்வையிம் இழக்கிறாள்....
    அறிவீர்.. உணர்வீர்... போற்றுவீர்...
    காதலிப்பீர் உண்மையாக...!

    ப்பவர்கள் மட்டும் படிக்கவும்...!

yeram



idayam



velai


negal



matham



un



payanam



jeudi 12 mai 2016

பெண்களை மதிக்காத ஆண்களுக்கு மட்டும்.



ஆண்களே பதில் இருக்கிறதா உங்களிடம்?
( பெண்களை மதிக்காத ஆண்களுக்கு மட்டும் )
சமைந்த பெண்ணின் அந்த நேரக் கலவர முகத்தை நீங்கள் காண நேர்ந்ததுண்டா?
சடங்கு தினத்தில் சந்தனத்தையும் மீறிக் கன்னங்கள் குங்கும நிறமடையும் ரசாயன மாற்றத்தை வியந்ததுண்டா?
சிறுமிக்கும் மனுஷிக்கும் அந்தக் குழந்தை சில நாட்கள் தடுமாறுவதை உணர முடிந்ததுண்டா?
கொஞ்சம் கொஞ்சமாக அவளில் பெண்வாசம் குடியேறுவது கண்டு பெருமைப்பட்டதுண்டா?
அக்காக்களின் கவலைகளைப் பற்றி, தங்கைகளின் பயங்களைப் பற்றி என்றேனும் யோசித்ததுண்டா?
கல்யாண நாள்வரை ஒரு கண்ணாடிப் பாத்திரம்போல அவள் தன்னைக் கையாள்வதைக் கவனித்ததுண்டா?
கர்ப்பிணியின் கணவனாக ஒரு பெண்ணின் அருகில் உறங்க வாய்த்ததுண்டா? தூக்க மத்தியில் அவளின் வலியொலியில் பதறி விழித்து, விழிக்கவைத்து விசாரித்ததுண்டா?
ஒரு சுலபப் புன்னகையில் அவள் சமாதானப் படுத்தும்போது, வெட்கத்தில் தன்னைக் குழந்தையாகவும், அவளைத் தாயாகவும் உணர்ந்ததுண்டா?
ஆஸ்பத்திரி வார்டில், அவளின் வலிப் பிளிரல் கேட்டு காமம் நொறுங்கிக் கண் கலங்கியதுண்டா?
ஜில்லிட்ட கைப்பிடித்து குழந்தையைச் சிலாகித்து, அவளில் ரோஜா நெற்றியில் நரம்புகளின் முறுக்கலற்ற முதல் ‘குளிர் முத்தம்’ இட்ட அனுபவம் உண்டா?
குழந்தைக்குப் பாலூட்டும் தருணத்தில் அதன் தாயின் முகத்தை ரசித்ததுண்டா?
முதிர்கன்னியின் வெள்ளை முடிகளைக் கண்டு மனம் கருத்ததுண்டா?
முதுமைக்கு ஏங்கிய இளம் விதவையின் உணர்வுகள் பரிந்து அழுததுண்டா?
குழந்தையற்றவள் ஒவ்வொரு மாதமும் வடிக்கும் ரத்தக்கண்ணீரைப் பார்த்ததுண்டா?
மழலை செத்தவளின் மார்பில் பாறாங்கல் போன்று பால் இறுகுமென்பதைக் கேள்விப்பட்டதுண்டா? அவளின் கண்ணீரில் பால் வாசம் கண்டதுண்டா?
அம்மா உங்களைப் பிரசவித்த அந்த நேரத்து வலியை அப்புறம் எப்போதாவது அவளிடம் விசாரிக்கத் தோன்றியதுண்டா?
இன்னும்… இன்னும்… உள்ளுக்குள் பொங்கிப் பெருகும் ஆயிரம் ஆயிரம் கேள்விகளையும் கேட்கலாம். ஆனால் பதில் இருக்கிறதா ஆண்களே உங்களிடம்??
.
.
.
.
.
.
.
பெண்களை மதிக்காத ஆண்களுக்கு மட்டும்..........

mercredi 11 mai 2016

வாழைப்பழம் தேங்காய்



    வாழைப்பழம் தேங்காய்
    தெய்வங்களுக்கு படைப்பது ஏன்..?
    எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் தேங்காய் படைக்கிறார்கள்.ஏன்...?
    ...
    மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும்.
    ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை.
    இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது.
    எனது இறைவா!
    மீண்டும் பிறவாத நிலையைக் கொடு!
    என வேண்டவே....
    நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.
    அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு.
    அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.
    மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது.
    ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது.
    முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும்.
    அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும்.
    பழம் கொட்டை என்பது கிடையாது.
    அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.
    நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம்.

மாறுமா இந்த நிலை....???




    பட்டுடுத்தி 
    வரும் பெண்ணை 
    ஸ்ரீதேவி 
    என்றும்... 
    அதே ...
    பெண் 
    வெள்ளை உடுத்தி வந்தால் 
    மூதேவி 
    என்கிறதே இவ்வுலகம்.... 
    ஏன் இந்த நிலை.....
    மாறுமா இந்த நிலை....???

என்ன செய்ய முடியும்



    என்ன செய்ய முடியும் என்பதை அறிவதைவிட நம்மால் என்ன செய்ய முடியாது என்பதை அறிவதே முக்கியம். வேறு யாராகவும் இருக்க முயலாமல் தானாகவே தன் சொந்த இயல்பிலேயே இருக்க முயல்வதுதான் வீரமும் விவேகமும்.
    ஒரு மனிதன் சந்தோஷமின்றி இருந்தால் அவனது சொந்தத் தவறுதான் அதற்குக் காரணம் என்பதை நினைவில் வையுங்கள். ஏனெனில் கடவுள் எல்லோரையுமே சந்தோஷமாகத்தான் படைத்திருக்கிறார்.

புதுமையில் அவள் அழகு





    கல்லில் சிலை அழகு 
    சொல்லில் தமிழ் அழகு 
    மானில் விழி அழகு 
    தேனில் சுவை அழகு 
    வானில் நிலவு அழகு ...
    இளவேனிலில் தென்றல் அழகு 
    இதயத்தில் காதல் அழகு 
    காதலில் மாலை அழகு 
    மாலையில் மலர் அழகு 
    மலரில் மது அழகு 
    மதுவில் அருந்தும் வண்டு அழகு 
    புருவத்தில் வில் அழகு 
    புன்னகையில் முத்து அழகு 
    கண்களில் கயல் அழகு 
    கற்பனையில் கவிதை அழகு 
    கவிதையில் பொய் அழகு 
    பொய்யில் புதுமை அழகு 
    புதுமையில் அவள் அழகு

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க,



    கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, நிறைய கிடைக்கும்
    ஒரு நாள் ஒரு சின்ன பையன் தன் அம்மாவுடன் கடைக்கு போனான்.அந்த கடைக்காரர் பையன் அழகா இருக்கானே என்று சொல்லிவிட்டு பாட்டிலில் இருந்து சாக்லேட்டை காட்டி எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோப்பா என்றார்.
    ஆனால் அந்த பையன் சாக்லேட்டை எடுக்கவே இல்லை.கடைக்காரர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் எடுக்கவில்லை.அதை பார்த்த அவன் அம்மா சாக்லேட் பாட்டிலில் இருந்து எடுத்துக்கோ என்றார்.அப்பவும் அவன் சாக்லெட்டை எடுக்கவே இல்லை.
    பிறகு அந்த கடைக்காரரே சாக்லேட்டை அள்ளி அ...வன் கைகளில் வைத்தார்.அவன் ஆசையுடன் இரண்டு கைகளாலும் வாங்கிகொண்டான்.
    வீட்டிற்கு போனவுடன் அவன் அம்மா ஏன் சாக்லேட்டை பாட்டிலில் இருந்து நீயே எடுத்து கொள்ளவில்லை என்று கேட்டார்.
    அம்மா என் கையை பாருங்கள் எவ்வளவு சின்னதா இருக்குது.நானே பாட்டிலில் இருந்து எடுத்து இருந்தால் எனக்கு கொஞ்சமாக தான் கிடைத்திருக்கும் இப்ப பாருங்க அவர் எடுத்து கொடுத்ததால் எவ்வளவு அதிகமா சாக்லேட் கிடைச்சிருக்கு பாருங்கள் என்றான்.
    எதையுமே நாமளா நாடிப்போனா குறைவா தான் கிடைக்கும் அதுவா தேடி வந்தா அதிகமா கிடைக்கும்...

ஒரு குட்டிக் கதை!



    ஒரு குட்டிக் கதை!
    ஆற்றங்கரைக்குத் தன் மகனை அழைத்துப் போயிருந்தார் ஒருவர்.
    அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார்.
    ...
    பெரிய பெரிய கற்களைக் காண்பித்தார்.
    “இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு” என்றார். மகன் நிரப்பி எடுத்து வந்தான். “இதற்கு மேல் நிரப்ப முடியாது” என்றான்.
    அப்பா கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார். அதே பையில் போட்டுக் குலுக்கினார்.
    அவை கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின.
    ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை.
    “இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா?” கேட்டான் மகன்.
    தந்தை அங்கேயிருந்த மணலை அள்ளிப் பையில் போட்டார். பையை மேலும் குலுக்கினார்.
    கற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது.
    “இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால், பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா?
    ”“இருந்திருக்காது” என்று ஒப்புக் கொண்டான் மகன்.
    “வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய அன்பு, கருணை, உடல்நலம், மனநலம் போன்ற உன்னதமான விஷயங்கள் பெரிய கற்கள் போன்றவை.
    வேலை, வீடு, கார் போன்ற செல்வங்கள் கூழாங்கற்களுக்குச் சமமானவை.
    கேளிக்கை, வீண் அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை.
    முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடு.
    அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும்.
    ஆனால், உன் சக்தியை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால், முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது

pesu


urimai


nalai


kathal


verupam


dimanche 8 mai 2016

அன்னையர் தினம்




    இன்று உனக்கென
    அன்னையர் தினமாம்!
    அகிலத்தில் எம்மை
    ஆளாக்கி காட்டிய உனக்கு
    இன்று மட்டும் தான்...
    அன்னையர் தினமா?
    ஆயுள் முழுவதும்
    தினமும் வாழ்த்தினாலும்
    ஈடாகுமா இங்கு
    உனக்கு பட்ட கடன்?

samedi 7 mai 2016

உன் மடியை தந்தால் போதும்..


    சொந்தமென்று சொல்ல நீ மட்டும் போதும்...!
    துன்பங்களில் தாங்கிக்கொள்ள உன் பாசம் போதும்...!
    இன்பங்களில் கலந்து கொண்டு நீ புன்னகைத்தால் போதும்...!
    கடைசி மூச்சி நிற்கும் போது
    உன் மடியை தந்தால் போதும்..

vendredi 6 mai 2016

காதல் என்றால் என்ன??



காதல் என்றால் என்ன??

5 வயசு பொண்ணு :
என் பொம்மைய அவன் புடுங்கிட்டு போனான்
எனக்கு கோவம் வந்திடுச்சு
அவன் சைக்கிள தள்ளி விடலாம்னு போறப்ப
என் பொம்மைக்கு புது சட்ட போட்டு
எடுத்துட்டு வருவது.

10 வயசு பொண்ணு :
அவன் சோசியல் சயன்ஸ் புத்தகத்துல
கலர் பென்சிலாலக் கிறுக்கிட்ட்டேன்
டீச்சர் கேட்டப்ப என்ன மாட்டி விடாம
அவனே முட்டி போட்டு நிறபது .

15 வயசு பொண்ணு :
ரெகார்ட் நோட் ஒன்னா ஒக்கார்ந்து எழுதும் போது
அந்த பேனாவ தான்னு வாங்கும் போது
அவன் கைல லேசா உரசுவது

20 வயசு பொண்ணு :
நான்கு வருடம் எதையுமே சொல்லாமல்
கல்லூரி கடைசி நாளில் விடை பெறும் போது
"அப்புறம் எப்ப பார்க்கலாம் ?"
என்று அவன் கேட்டது

25 வயசு பொண்ணு :
கையில ஒத்த ரோசாவோட வந்து
என்னைக் கல்யாணம் பண்ணிப்பாயா
என்று கேட்டு அவனையே முட்டாளாக்கி கொண்டது .

35 -45 வயசு பெண் மணி :
நான் ரொம்ப களைப்பா இருக்குறதப்
பார்த்து நான் காபி போட்டு தரவா
என்று அவர் கேட்பது

55 வயசு பெண்மணி :
அவருக்கு மைசூர்பான்னா உயிர்
எனக்கு சர்க்கரை நோய் நான் சாப்பிட
முடியாதென்று அவரும் சாப்பிடாமல்
அதை ஒதுக்குவது

65 வயது பெண்மணி
நான் கடைசி மூச்ச விடும் போது
என் கைய பிடிச்சிகிட்டே
என்னையும் கூட்டிட்டு போ என்று
அவர் கண்ணீர் விட்டது. 

துணை



ஒரு பெண் மௌனமாக இருக்கிறாள் என்றால்...
அவள் எண்ண அலைகளில் பல ஆயிரம் விஷயங்கள்
நிழலாடிக்கொண்டிருக்கின்றன என்றுபொருள்...!

நீ வம்பிழுக்கும்போது, அவள் வாதாடவில்லை
எனில்...
அவள் ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கின்றாள்
என்று பொருள்...!

ஒரு பெண் பல
கேள்விக்குறியோடு உன்னை
பார்க்கிறாள் என்றால்...
நீ எதுவரை அவளுடன் நீடித்து இருப்பாய் என்று
சிந்திக்கிறாள் என்று பொருள்...!

நீ நலமா என்று கேட்கும்போது, ஒரு பெண் சில
வினாடிகள் கழித்து "நான் நலமாய்
இருக்கிறேன்" என்று பதிலளித்தாளானால்...
அவள் நலமாக இல்லை என்று பொருள்...!

ஒரு பெண், நீ பேசும்போது கண் இமைக்காமல்
உற்றுப்பார்த்துக் கொண்டிருகிறாளானால்...
நீ ஏன் அவளிடம் உண்மையை மறைக்க
முயற்சிக்கிறாய் என்று வியக்கிறாள் என
பொருள்...!

ஒரு பெண் உன் தோளில் சாய
விரும்புகிறாளானால்..
நீ காலம் முழுதும் அவளுடன் இணைந்து
இருக்க வேண்டும் என விரும்புகிறாள் என்று
பொருள்...!

ஒரு பெண் உன்னை
தினம் தினம் சந்திக்க
வேண்டும் என்று விரும்புகிறாளானால்...
அவள் உன்னிடம் மிக நெருக்கமாக, அன்பாக
இருக்க விரும்புகிறாள் என்று பொருள்...!

ஒரு பெண் உன்னிடம் "நான் உன்னை
நேசிக்கிறேன்" என்று கூறுகிறாளானால்...
அதன் அர்த்தமறிந்தே அந்த வார்த்தையை
உச்சரித்திருக்கிறாள் என்று பொருள்...!

ஒரு பெண் "நான் உங்கள் பிரிவால்
துயருறுகிறேன் " I MISS YOU" என்று
கூறுகிறாளானால்...
அவள் அளவிற்கு வேறு எவரும் உங்கள்
பிரிவால் வாடவில்லை என்று பொருள்...!

வாழ்க்கை ஒரு முறை தான்...
இந்த வாழ்க்கையை உங்களுக்கு பிடித்தமான
சரியான உறவுடன் இணைத்துக்கொள்ளுங்கள்...

உங்கள் மனம் அறிந்து, அன்பை
பகிர்ந்துக்கொள்ளும் ஒரு உறவை
தேர்ந்தெடுங்கள்...

உண்மையான அன்புடன் உங்கள் உள்ள அழகை
ரசிக்கும் ஒரு துணையை தேர்ந்தெடுங்கள்...

வாழ்க தமிழ் வளர்க தமிழ்.



தமிழனடா நாங்கள்
தமிழில் டீக்கு "தேநீர்',
காபிக்கு "குளம்பி' என்று
பெரும்பாலோருக்குத் தெரியும்.
மற்ற சில முக்கியமான உணவு
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!
சப்பாத்தி - கோந்தடை
புரோட்டா - புரியடை
நூடுல்ஸ் - குழைமா
கிச்சடி - காய்சோறு, காய்மா
கேக் - கட்டிகை, கடினி
சமோசா - கறிப்பொதி, முறுகி
பாயசம் - பாற்கன்னல்
சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு
பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி
பொறை - வறக்கை
கேசரி - செழும்பம், பழும்பம்
குருமா - கூட்டாளம்
ஐஸ்கிரீம் - பனிக்குழைவு
சோடா - காலகம்
ஜாங்கிரி - முறுக்கினி
ரோஸ்மில்க் - முளரிப்பால்
சட்னி - அரைப்பம், துவையல்
கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு
பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்
போண்டா - உழுந்தை
ஸர்பத் - நறுமட்டு
சோமாஸ் - பிறைமடி
பப்ஸ் - புடைச்சி
பன் - மெதுவன்
ரோஸ்டு - முறுவல்
லட்டு - கோளினி
புரூட் சாலட் - பழக்கூட்டு14:29
🌏68 - ஆண்டுகளாய் தான் நீ இந்தியன்,,,.
🌏800 - ஆண்டுகளாய் தான் நீ இந்து.
🌏400 - ஆண்டுகளாய் தான் நீ கிறித்தவன்.
🌏200 - ஆண்டுகளாய் தான் நீ இஸ்லாமியர்.
🌏உலக மொழிகள் தோன்றியே வெறும் 2000 ஆண்டுகள் தான் ஆகின்றது.
🌏சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி தமிழ்.....
🌏சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இனம் தமிழ் இனம்...
🌏100000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனம் தோன்றியிருக்களாம்...
குமரிகண்டம் மற்றும் லேமனியகண்டம் ....
மாபெரும் இரண்டு கண்டங்களையும் 13 தேசங்களையும் கட்டி ஆண்ட வீர தமிழனடா நீ!!!!!!!!!
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!!!
தமிழன்டா..........
எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!
கண்டிப்பாக படித்து பகிரவும் ....
தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!
அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.
இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம்..!
வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

mercredi 4 mai 2016

தேர்தல் சமயம் !,.. புத்திசாலிதனமா நடந்துகோங்க மக்களே ,,..



தேர்தல் சமயம் !,.. புத்திசாலிதனமா நடந்துகோங்க மக்களே ,,..
ஒரு நாட்டின் தளபதி இறந்து போனார். அவரது இடத்தை நிரப்புவதற்காக ராஜா பல இளைஞர்களை வரவழைத்துத் தேர்வு நடத்தினார். பல கட்டங்களாக நடந்த தேர்வில் இறுதியாக இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். இதில் ஜெயிப்பவன் தளபதியாவான். அது மட்டுமின்றி ஒரு மூட்டை பொற்காசும் அவனுக்குப் பரிசுப் பொருளாக வழங்கப்படும்.
இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் முன்பாகவே இருவரும் வரவழைக்கப்பட்டு சகல வசதிகளுடன் தனித் தனியாகத் தங்க வைக்கப் பட்டிருந்தார்கள். அதிகாலையிலேயே போட்டி ஆரம்பிக்கப்படும் என்பதால் நேரத்துடனேயே உணவருந்த ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களில் ஒருவனின் அறைக்குள் தலைமை சமையல்காரன் திடீரென்று நுழைந்தான். அவனிடம் ரகசியமான குரலில் , "தம்பி. நாளை நடக்கும் போட்டியில் நீ மட்டுமே கலந்து கொள்ளப் போகிறாய் . எனவே போட்டியே இல்லாமல் நீதான் ஜெயிப்பாய்" என்றான். அவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.
சமையல்காரன் மீண்டும் சொன்னான். "இதோ பார். நான் பக்கத்து அறையிலுள்ள உன் போட்டியாளனுடைய உணவில் தூக்கத்திற்கான மருந்தைக் கலந்து விடுவேன். அவனால் காலையில் எழுந்திருக்கவே முடியாது. ராஜா சோம்பேறியை ஏற்றுக் கொள்ளவே மாட்டார். அப்புறம் நீதான் தளபதி. இதற்குப் பிரதிபலனாக , நீ பரிசாகப் பெறும் தங்கத்தை எனக்குத் தந்துவிட வேண்டும். சம்மதமா ?" என்றான்.
சமையல்காரன் சொல்லி முடித்தவுடனேயே அவன் அவசரமாய்ச் சொன்னான் , " ஐயா. இது நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய பதவி . தகுதியுள்ளவன் வென்றால் மட்டுமே நாட்டுக்குப் பாதுகாப்பு. எனவே எனக்குத் தகுதி இருந்தால் நான் வெற்றி பெறுவேன். தயவு செய்து குறுக்கு வழி வேண்டாம். அதே நேரத்தில் என் போட்டியாளனிடம் பேரம் பேசி என் உணவில் மருந்தைக் கலந்து விடமாட்டேன் என்று சத்தியம் செய்யுங்கள்" என்றான்.
சமையல்காரன் புன்னகைத்தபடி , " கடவுள் உன்னைக் காப்பாற்றட்டும். நீ புத்திசாலி. சத்தியமாக நான் உனக்கு நல்ல உணவை மட்டுமே பரிமாறுவேன்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் சமையல்காரனின் உதவியாளன் , மற்றுமுள்ள போட்டியாளனிடம் அதே பேரத்தைத் தொடங்கியிருந்தான். ஆனால் அங்கே நடந்ததோ வேறொன்று. அவன் பேரத்திற்கு ஒப்புக் கொண்டான்.
போட்டியில் கிடைக்கும் தங்கப் பரிசு மட்டுமன்றி இன்னும் கொஞ்சம் தங்கமும் சேர்த்துக் கொடுப்பதாக வாக்களித்தான். உதவி சமையல் காரனும் ,
" காரியத்தை சிறப்பாக முடிப்பேன். நீங்கள் தான் இந்நாட்டின் தளபதி " என்றான்.

இரவு உணவு முடிந்து இருவரும் உறங்கினார்கள். பேரத்துக்கு ஒப்புக் கொள்ளாத வீரன் அதிகாலையில் எழுந்து போட்டிக்குக் கிளம்பினான். அங்கே போய்ப் பார்த்தால், அவனோடு போட்டியிட யாருமே வந்திருக்கவில்லை.
மன்னர் திடீரென அந்த இடத்தில் பிரவேசித்து , " புதிய தளபதியாருக்கு வாழ்த்துகள் " என்று சொல்லித் தன்னுடைய வீர வாளைப் பரிசளித்தார் .

அவனுக்கோ ஒரே ஆச்சரியம். போட்டியாளன் இல்லாமல் தேர்வான அதிர்ச்சி. மன்னரை நேருக்கு நேராய்ப் பார்த்துவிட்ட மகிழ்ச்சி. தன்னையறியாமல் கண்களில் நீர் கசிந்தது.

மன்னர் அவனை அணைத்துக் கொண்டார்.

"மகனே! நடப்பதெல்லாம் கனவு போலத் தோன்றுகிறதா ? உங்களுக்கான இறுதிப் போட்டி நேற்றிரவே முடிந்து விட்டது. காசைக் கொடுத்துப் பதவியை வாங்குபவர்கள், அந்தப் பதவியைக் கொண்டு மேலும் சம்பாதிக்கத்தான் முயல்வார்கள். தேசத்தின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இது போன்ற பதவிகளில் அவனைப் போன்ற புல்லுருவிகள் இருந்தால் நாட்டையே கூட விற்றுவிடுவார்கள். எனவே அவன் அதிகாலையிலேயே விரட்டப்பட்டான். அந்தச் சூழலிலும் உண்மையாய் நடந்து கொண்ட நீ தேர்ந்தெடுக்கப்பட்டாய்" என்றார்.தேர்தல் சமயம் !,.. புத்திசாலிதனமா நடந்துகோங்க மக்களே ,,..
தேர்தல் சமயம் !,.. புத்திசாலிதனமா நடந்துகோங்க மக்களே ,,..

ஒரு நாள் கண்டிப்பாக மாறும்


1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்...

mardi 3 mai 2016

அனாதை



சமூகத்தில் அனாதைகளாக எவரும் பிறப்பதில்லை மாறாக உருவாக்கப்படுகிறார்கள்.
அனாதைக் குழந்தைகள் உருவாவதற்கு சமூகம் தான் காரணம் என்று நாம் தப்பிக்க முடியாது. தனிப்பட்ட ஒரு மனிதனின் அபிலாஷைகள்தான் இதற்கு காரணம்.
பிறந்தவுடன் அனாதைகளாக மாற 'ஏழ்மை' ஒரு காரணமாக இருந்தாலும், ஏழ்மை மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. பெரும்பாலான குழந்தைகள் அனாதைகள் ஆக தவறான தொடர்பு ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது என்கின்றது உலக சுகதார அமைப்பு.
பெற்ற குழந்தைகளை அனாதைகளாக விட ஆண்களைவிட பெண்களே இச்செயலை அதிகம் செய்கின்றனர்.
அனாதைகள் உருவாக யார் காரணம்?
சமூக கட்டுப்பாடுகள் குறைந்துவிட்ட இக் காலகட்டத்தில் உடல் வேட்கைக்காக கள்ளத்தனமாக இணையும் ஜோடிகள் அதிகரித்துள்ளனர். அவர்களது சொற்ப நேர சுகம், ஒரு குழந்தையை உருவாக்கி அனாதையாக்குகின்றது.
பெற்றெடுத்த குழந்தையை கோயில் வாசலில் போட்டுவிடுவது, இரயில் வண்டியில் வைத்துவிட்டு இறங்கி விடுவது, குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவது, அனாதை இல்ல வாசலில் போட்டுவிட்டு மறைந்துவிடுவது, ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் குழந்தையை துணியில் சுற்றி வைத்துவிடுவது, சிலர் மருத்துவமனையில் தவறான முகவரி தந்து குழந்தையை பெற்றெடுத்தப் பின்னர் ஓடிவிடுவது, கூட்டத்தில் அல்லது பொது இடத்தில் குழந்தை காணாமல் போவது என்று பல வழிகளில் குழந்தைகள் அனாதைகளாக்கப்படுகின்றனர்.
பெருகும் அனாதை இல்லங்கள்
அன்பற்ற வக்கிர உடல்களின் ஒருங்கிணைப்பால் உருவாக்கப்பட்ட இந்த குழந்தைகளுக்கு கிடைக்கும் பெயர் அனாதை.
இவர் விட்டுச்சென்ற இந்த குழந்தைகள் கடைசியாக சங்கமிக்கும் இடம் அனாதை இல்லம், இதனாலேயே அனாதை இல்லங்கள் பெருகிவருகின்றன.
ஒவ்வொரு அனாதை இல்லங்களுக்கு சென்று பார்த்தால் நமக்கு பல எண்ணங்கள் உருவாகும், இந்த குழந்தைகள் எங்கிருந்து வந்திருப்பார்கள்?. இவர்களது பெற்றோர் யார்? என்ன காரணத்தினால் இந்த குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டனர்.
எந்த ஒரு தாயும் ஒரு வாரத்திற்குள் ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடியாது, குறைந்தது 10 மாதங்களாவது சுமக்க வேண்டும். ஊர் உலகத்திற்குத் தெரியாமல் யாரும் கர்ப்பம் சுமக்க முடியாது? அப்படி இருக்க. அதுவரை சுமந்துவிட்டு, பெற்றபின் ஏன் தெருவில் வீச வேண்டும். உடல் நோக சுமந்துவிட்டு, உதறி எறியலாமா? இதில் இந்த பிஞ்சுகள் என்ன பாவம் செய்தார்கள்,? அனாதைகள் உருவாக யார் காரணம். பெற்றோரா இல்லை சமூகமா? என்று மனதிற்குள் அடுக்கடுக்காக கேள்விகள் நம்மையே வாட்டும் என்பதில் ஜயமில்லை.
அனாதைகளே வேண்டாம் !!...
இந்த அனாதைகளை பார்க்கும்போது நம் மனதிற்குள் ஏதோ ஒரு இனம் புரியாத வலி வந்து போகும்போது, பெற்றோர் என்ற வார்தைக்கே அர்த்தம் தெரியாமல் வாழும் இந்த குழந்தைகளின் மனதில் தோன்றும் ஏக்கங்கள் தான் எத்தனை?
தலைவாரி, பூச்சூடி, ஆடை அணிவித்து, நிலா காட்டி சோறுட்டி, தூங்கவைக்க கதைகள் சொல்லி என்று எந்த நிகழ்வும் இவர்களுக்கு இல்லை.
அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, அத்தை, மாமா, சித்தப்பா, அண்ணன், தங்கை என்று எந்த உறவுமில்லாமல் வாழும் இந்த குழந்தைகளை ஏன் உருவாக வேண்டும் என்று சமூகமும் கொஞ்சம் அக்கறை கொள்ளத்தான் வேண்டும்.
அனாதை இல்லங்களில் வளரும் குழந்தைகளுக்கு கூட ஏதோ மூன்று வேளை உணவும், உடுக்க துணிகளும் கிடைக்கின்றன. ஆனால் தெருவோரத்தில் வாழும் குழந்தைகள் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துகின்றன.
நாளடைவில் இந்த பிச்சை பிழைப்பானது, அடுத்தவர்களிடம் கைவரிசையை காட்டும் செயலான கொலை, கொள்ளை செயல்களாக மாறுகிறது.
அனாதைகள் உருவாக்கப்படுவதால் அவர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை கூடவே சமூகமும் பாதிக்கப்படுகின்றது!
இன்னொரு குழந்தை அனாதையாக்கப்படாமல் பார்த்துக்கொள்வது நம் சமுதாய கடமை !...

பிறந்த குழந்தை ஏன் அழுகிறது ? _________________________________



பிறந்த குழந்தை ஏன் அழுகிறது ?
_________________________________
இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.
இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
சரி அப்படி எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது காரணங்கள் என்ன?
இதோ தெரிந்துகொள்ளுங்கள் :
ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம்.
இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால்தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம்.
அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக்கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது

காயப்படுத்தி, கஷ்டப்படுத்தி பார்க்க விரும்பாதீர்கள்...



    யாரும் உங்களின் அன்பானவர்களை காயப்படுத்தி, கஷ்டப்படுத்தி பார்க்க விரும்பாதீர்கள்...
    ஒரு ஊரில் இரு காதலர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்கள் இரண்டு மூன்று வருடங்கள் சந்தோஷமாக தான் வாழ்ந்தார்கள்.
    ஆனால் ஒரு நாள் தன் சுதந்திரத்தை பறிப்பதாய் கூறி கணவன் தன் மனைவியுடன் சண்டை பிடித்து அவளை வார்த்தையால் காயப்படுத்தி விட்டு வேறொரு ஊரில் தனியே வாழத்தொடங்கினான்.
    ...
    ஒரு நாளும் பிரிவு என்ற சொல்லை தாங்காத மனைவி தவிப்புற்றாள்...ஒருவழியாக கணவன் இருக்கும் இடத்தை அறிந்து கொண்ட அவள்... எப்படியும் தன்னை தன் கணவன் பார்க்க விரும்பமாட்டான் என எண்ணிக்கொண்டு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தாள்." உங்களை கட்டாயம் ஒரே ஒரு தடவை பார்க்க வேண்டும்... உங்கள் பிரிவை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.. தயவு செய்து நான் ஏதும் தவறு செய்திருந்தால் மன்னித்து ஒரு தடவை தன்னை பார்த்து விட்டு செல்லுமாறு" கூறியிருந்தாள்.
    எனினும் அந்த கடிதத்தினை பொருட்படுத்தாத அவன் தன் வேலையை பார்க்க தொடங்கினான்... தன்னை இதுவரைக்கும் பார்க்க வராத கணவன் வேறு திருமனம் செய்திருப்பான் என தவறாக எண்ணினாள்...! எனினும் 5,6 நாட்கள் களித்து அவனுக்கு தன் காதல் மனைவியின் நினைவுகள் கண்ணை கூசவே உடனே தன் மனைவியை பார்க்க ஊருக்கு கிளம்பினான்.
    ஏனோ துயரம்! அவனின் வீட்டு வாசலில் ஊரே கூடி நின்றது...! ஏதும் புரியாத அவன் விறு விறுவென தன் வீட்டுக்குள் நுழைந்தான்... அவலம்! அவனின் மனைவி மாலைகளுடன் மலர்வளையத்தின் நடுவே...! என்ன செய்வதென்று அறியாத அவன் திகைத்து போய் மனம் செத்து நின்றான்...! காதல் நினைவுகளுடன் அவளின் இறுதி சடங்குகளும் முடிந்து போனது....! அன்று இரவு....... தன் மனைவி இறுதியாக வாழ்ந்த அறைக்குள் சென்று அழுதான்...!அங்கு ஒரு கடதாசி உறையில் என் ஆசை கணவனுக்கு என்று எழுதிய கடிதம் ஒன்று இருந்ததை கண்டான்...!
    " உங்களுக்கு இது வரைக்கும் ஒன்றையும்மறைத்தது இல்லை... ஏனோ என்னை கொஞ்ச நாளகவே உங்களுக்கு பிடிக்கவில்லை... பிடிக்காத ஒன்றுடன் வாழ முடியாது என்று தானே! அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்..!
    என்னால் உங்களை 3 வருடங்கள் மட்டுமே சந்தோஷ படுத்த முடிந்தது என நினைகிறேன்... என்னை மன்னித்து விடுங்கள்...! காதலில் அவசரபட்டு விட்டீகள்..! இனியாவது உஙகளின் மனசுக்குபிடிச்சவளோடு வாழுஙகள்...!
    இறுதியாக ஒரே ஒரு ஆசை மட்டுமே...! நான் இறந்த பின்னர் என்னை அடக்கம் செய்யும்போது நீங்கள் என்னை காதலிக்கும் போது கொடுத்த பரிசுகள், மடல்கள் அனைத்தையும் சேர்த்து புதைத்து விடுங்கள்...! என்னோடு வாழ்ந்த வாழ்க்கையை பற்றி உங்களின் எதிர்கால வாழ்க்கை துணையிடம் கூறிவிடாதீர்கள்...பாவம் அவளாவது நிம்மதியாக உங்களுடன் வாழட்டும்...! என எழுதியிருந்ததை கண்டு "அய்யோ......" என குளறி அழுதான்.... அழுதும் என்ன பயன்....?????
    இனியாவது யாரும் உங்களின் அன்பானவர்களை காயப்படுத்தி, கஷ்டப்படுத்தி பார்க்க விரும்பாதீர்கள்... காதலிக்கும் இதயம் மிகவும் மென்மையானது...! அது அன்பானவர்களைப் பற்றி பல்லாயிரகனக்கான கனவுகளுடன் இருக்கும் போது அதை நீங்கள் கசக்கி எறியும் போது எத்தனயோ தவறான முடிவுகளை எண்ண வைக்கும்...! தேவையில்லாத மெளனமும் கோவமும் இதயத்தை வேரோடு கிள்ளி எறியும் என்பதை யாரும்மறந்து விடாதீர்கள்