முகப்பு

dimanche 28 septembre 2014

குறை கூற



ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்...
தப்புங்க தப்பு .......
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்...
இதாங்க சரி.....
காலப்போக்கில்... நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்...
..சௌந்தா.....

பெரும்பான்மை மனிதர்கள் வெற்றி பெற்றால் மட்டுமே மகிழ்ச்சியடைவார்கள், ஆனால் தோல்வியடைந்து கொண்டே அந்தத் தோல்வியை வெற்றியாக்கவும் ஒரு வழியிருக்கிறது என்பதே பலர் அறியாத இரகசியமாகும்.

தேவையற்ற சொல்லைப் போல தேவையற்ற பேச்சும் தீங்கையே விளைவிக்கும். மௌனத்தைப் போல சிறந்த அழகு எங்குமே கிடையாது.

கடவுள் தந்த கடமையை மறந்து வீண்பேச்சிலும், குறை கூறுவதிலும் நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்காமல் செயலில் ஈடுபடுங்கள். இருட்டைச் சபித்துக் கொண்டிருப்பதைவிட, ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது சிறந்தது. சௌந்தா.......

தள்ளாதவர்



வீட்டில் எது கொடுத்தாலும் பாவம் வேறு வழியின்றி வயோதிபர்கள் அதைத் தள்ளிவைக்காமல் சாப்பிடுவார்கள். அதனால்தான் அவர்களை தள்ளாதவர் என்று சொல்வார்கள். யாரையும் எதிர்க்க முடியாத வயதில் வேண்டாம் என்று தள்ளாமல் இருப்பதால் தள்ளாதவர் ஆகிறார்கள்.

ஒரு மனிதனின் மதிப்பு அவன் வாழ்ந்த வருடங்களின் எண்ணிக்கையாலோ அல்லது செய்த வேலையாலோ அளக்கப்படுவதில்லை. ஒரு மனிதனின் மதிப்பு அவன் உருவாக்கிய நடத்தையால்தான் அளக்கப்படுகிறது. சௌந்தா.

மனிதர்களின் அமைப்பிலே புனிதமானது திருமணம்தான். நெருப்பில்லாமல் மனித முன்னேற்றமில்லை குடும்ப உறவில்லாமல் வாழ்க்கை இல்லை.

மனித குலம் சிறப்பாக வாழவேண்டும் என்றால் குடும்பங்கள் சிறந்ததாக இருக்க வேண்டும். அதைவிட சமுதாயத்தை சிறப்பாக்க வேறு எந்த வழியும் கிடையாது. ஏனென்றால் நாகரிகத்தின் அடிப்படையே குடும்பம்தான்.சௌந்தா....

காதல் சொல்ல வந்தது அலை
அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது கரை
அதனால்
பூச்சி மருந்து குடித்து
தற்கொலை செய்துகொள்ள முயன்றது அலை
அதுதான்
வாயெல்லாம் இவ்வளவு நுரை?

jeudi 25 septembre 2014

ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது சிறந்தது

கடவுள் தந்த கடமையை மறந்து வீண்பேச்சிலும், குறை கூறுவதிலும் நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்காமல் செயலில் ஈடுபடுங்கள். இருட்டைச் சபித்துக் கொண்டிருப்பதைவிட, ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது சிறந்தது. சௌந்தா.......









"கஞ்சன்"



இது ஒரு நகைச்சுவை கதை அவ்வளவு தான், ஏன்னா நீங்க சிரிக்கனுமில்ல அதான்...முன்னாடியேவும்...
ஒரு ஊரில் மிகப்பெரிய "கஞ்சன்" இருந்தான், அவனுடைய தொழில் பெருங்காயம் வாங்கி விற்பனை செய்வது. அவனுக்கு ஒரு மகனும் இருந்தான். எப்பொழுது பார்த்தாலும் மகனை நீ கொஞ்சம் கூட கஞ்சத்தனமாக இல்லை என்று திட்டிக் கொண்டேயிருப்பான். ஆனாலும் மகன் அப்பாவிடம் பெயர் எடுக்கவேண்டும் என்று முயற்சி செய்து கொண்டே இருந்தான்.
அதற்கு ஏற்றார் போல, அவருடைய அப்பாவும் வேலையின் காரணமாக வெளியூர் சென்று விட்டார். அந்த நேரம் பார்த்து பெருங்காய மூட்டைகள் பெருமளவில் வந்து இரங்கின. அதை இவன் இறக்க வேண்டியதாகி விட்டது. இறக்கும் பொழுது கைகளிலெல்லாம், பெருங்காயம் பெருமளவு ஒட்டிக் கொண்டது. கை கழுவச் சென்ற நேரத்தில் அவனது அம்மா, பருப்பு குழம்பு, சமைப்பதற்கு பெருங்காயம் வேண்டும் என்றார் உடனே இவன் தன் கையில் ஒட்டியுள்ள பெருங்காயத்தை தண்ணீரில் கழுவி அதை கொண்டுபோய் கொடுத்தான். அதை வைத்தே அவனுடைய அம்மா குழம்பு சமைத்தார்கள். உடனே பையன் இந்த கஞ்சத்தனத்தை கூறி அப்பாவிடம் பெயர் வாங்கி விட வேண்டும் என்று நினைத்தான். மறு நாள் அவனது அப்பா வீடு திரும்பினார்.
அப்பாவிடம் தான் செய்த கஞ்சத்தனத்தை கூறினான். அதை கேட்டு பாரட்டுவார் என்று நினைத்தான். ஆனால் அவனது அப்பா "ஒரே நாள்ள ரெண்டு கையையும் கழுவி ஊத்திட்டியே. ஒவ்வொரு விரலா கழுவி ஊத்தினா 10-நாள் கொழம்பு வைக்கலாமே என்றார்..." பையன் திகைத்து நின்றான்...
(சிரிப்பு வந்துச்சா...? வரலன்னா விடுங்க திரும்பவும் முயற்சி செய்யிறேன்...)

நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது.




ஒரு நாய் கடைக்கு வந்துச்சு... கடைக்காரர் விரட்டி விட்டார், திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு…
என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு…
கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. 
நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது.
கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார். அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது. அப்போது ரெட் சிக்னல். அந்த நாய் ரோட்’டை கடக்காமல் நின்றது. பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது, கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை, அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார்.
அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது. ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது. கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார். இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது. கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்.
நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது. கதவு திறந்து ஒரு ஆள் வந்தார். நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்.
கடைக்காரர் ஓடி சென்று நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே …??? அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீட்டு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு.
நீதி: நமக்கு மேல உள்ள முதலாளிங்க, மேனேஜர் எல்லாரும் இப்படி தான்... நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது.

உண்மை செய்திகள்



உண்மை செய்திகள்
1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.
3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.
4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.
5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.
6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.
7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.
8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.
9.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.
10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.
11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.
12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது.
13.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
14இந்தியாவில் தமிழில் தான்"பைபிள்"முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
15.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.
16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .
17.கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
18.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
19.முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.
20.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.
21.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது"
உண்மை செய்திகள்

lundi 15 septembre 2014

தமிழ் என்று எப்படி பொருள் வந்தது



தமிழ் என்று எப்படி பொருள் வந்தது 
என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...

க, ச, ட, த, ப, ற – ஆறும் வல்லினம்.,
ங, ஞ, ண, ந, ம, ன – ஆறும் மெல்லினம்.,
ய, ர, ல, வ, ழ, ள – ஆறும் இடையினம்.
உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), இ(தன்னிலை), உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து.
தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்றுமெய் எழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர்.
அவை த், ம், ழ் என்பவை.
இந்த மூன்று மெய்களுடன்,
உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி…
த் + அ = 'த' வாகவும்,
ம் + இ = 'மி' யாகவும்,
ழ் + உ = ‘ழு’ வாகவும்
என்று "தமிழு" என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுள்ள உகரத்தை நீக்கி தமிழ் என்று அழைத்தனர்.
மொழியில் தான் அளவற்ற நுணுக்கங்கள் என்றால், பெயரில் கூடவா..
தகவல் மூலம்: அதிசயம்

அன்பின் அணைப்பு...



மெத்தை மேல் 
படுத்து உறங்கினாலும் 
அம்மாவின் சேலையில் 
தொட்டில் கட்டி ஆடியது 
ஆயுசுக்கும் மறையாது..

கொஞ்ச கொஞ்ச
நெஞ்சமெல்லாம் 
இன்பத்தேன் 
நிறைந்திடுமே .... 
தாய்மையின் 
பாசமொழி ... 
இறுகிய 
அன்பின் அணைப்பு...

பிடிவாதக்காரர்களையும், முட்டாள்களையும் திருத்த நேர்வழி பயன்படாது.



ஒரு நாட்டை ஆண்ட அரசனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. தலைமுடி கொட்டி வழுக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அரசனுக்கு தன் கம்பீரம் குறைந்து விடும் என்ற கவலை அதிகமாகிப் போய் ஒரு நாள் அரசவைத் தலைமை மருத்துவனிடம் நிவாரணம் கேட்டான்.

தலைமை மருத்துவன் "மன்னா! இதற்கு மருந்தே கிடையாது" என்று உண்மையைச் சொன்னான். அரசனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை. கோபமடைந்தான். ஆத்திரம் தலைக்கேறி தலைமை மருத்துவனை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான்.

ஊரில் இருக்கும் அனைத்து சிறந்த மருத்துவர்களையும் வரவழைத்தான். ஒரே வாரத்தில் தன் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு பிடிக்குமாறு பணித்தான்.

மருத்துவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். அரசனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்றுதான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு துடிப்பான இளைஞன் இருந்தான். பிரச்சினைக்குத் தன்னிடம் தீர்வு இருப்பதாகக் கூறினான். அனுபவம் முதிர்ந்த வயதான மருத்துவர்கள் கூட்டத்தில் இருந்தனர். அவனைப் பார்த்து சிரித்தனர். "வழுக்கைக்குத் தீர்வா? போய் வேறு வேலை இருந்தால் கவனியப்பா" என்று கூறினர்.

நாள் செல்லச் செல்ல அவர்களுக்கு அரசனிடமிருந்து தப்பிக்கும் வழி தெரியவில்லை.

அரசனை இந்த நிலையில் சந்தித்தால் கண்டிப்பாகத் தலைமை மருத்துவனுக்கு நேர்ந்த கதிதான் தமக்கும் நடக்கும் என்று எல்லோருக்கும் புரிந்தது. கதி கலங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது இளைய மருத்துவன் திரும்பவும் "என்னை நம்பினால் நம் எல்லோருக்கும் விடிவு நிச்சயம்" என்று கூறினான்.

வேறு வழியில்லாமல் அனைவரும் அவன் வழியில் செல்ல ஒத்துக் கொண்டார்கள். அவனோ, மருந்தை நேரடியாக அரசனிடம்தான் தருவேன், என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான்.

அடுத்த நாள் சபை கூடியது. மருத்துவர்கள் இளைய மருத்துவனைக் கூட்டிக் கொண்டு அரசவைக்கு வந்தார்கள்.

அவன் அரசனிடம் ஒரு குடுவையைக் கொடுத்தான். "மன்னா இதில் இருக்கும் மருந்தை தினமும் சிரசில் தேய்த்துக் கொண்டு வந்தால், ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்று போகும். இரண்டே மாதத்தில் முடியில்லாத இடத்திலெல்லாம் முடி வளர ஆரம்பிக்கும், ஆறே மாதத்தில் கருகருவென தலையெங்கும் தலைமுடி அழகாக வளர்ந்திருக்கும்" என்றான்.

மன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. "இப்போதே அந்தப்புரத்திற்குப் போய் தலையில் மருந்தைத் தடவிக் கொள்கிறேன்" என்று கிளம்பினான்.

அப்போது மருத்துவன் "மன்னா. இந்த மருந்து வேலை செய்ய வேண்டுமென்றால், அதைத் தலையில் தடவிக் கொள்ளும் போது மட்டும் நீங்கள் குரங்கை நினைக்கக் கூடாது!" என்றான்.

முட்டாள் மன்னன் சரியென்று சொன்னான். மந்திரியிடம் மருத்துவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து சிறப்பாக மரியாதை செய்து அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டு அந்தப்புரத்திற்கு வேகமாகச் சென்று விட்டான். மருத்துவர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊரை விட்டே ஓடி விட்டார்கள்.

அந்தப்புரத்திற்குச் சென்ற அரசன், அங்கு குடுவையைக் கையில் எடுத்து அதிலிருந்த மருந்தைத் தலையில் தேய்க்கப் போனான். அப்போது அவனுக்கு மருத்துவன் சொல்லிய பக்குவம் கவனத்திற்கு வந்தது. "குரங்கை நினைக்கக் கூடாது" என்று நினைத்தவுடன் குரங்கைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டான். என்ன முயற்சித்தும் அவன் நினைவிலிருந்து குரங்கை அகற்ற இயலவில்லை.

மன்னனுக்கு மருத்துவனின் தந்திரம் புரியவில்லை. சற்று நேரம் கழித்து முயற்சிப்போம் என்று வேறு வேலையில் ஈடுபட்டான்.

ஆனால் ஒவ்வொரு முறை அவன் மருந்தைக் கையில் எடுத்த போதும் மருத்துவனின் அறிவுரை மனதில் தோன்றி அவனுக்குக் குரங்கு பற்றிய யோசனை வந்து கொண்டே இருந்தது.

பல நாள் திரும்பத் திரும்ப முயற்சித்து விட்டு, இந்தச் சிரமத்திற்குப் பேசாமல் வழுக்கையாகவே இருந்து விடலாம் என்று தீர்மானித்து விட்டான்.

நீதி : பிடிவாதக்காரர்களையும், முட்டாள்களையும் திருத்த நேர்வழி பயன்படாது.

samedi 13 septembre 2014

வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்...



1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்

2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ
தெரிந்துகொள்.

3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.

4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை 
ஆரம்பிக்கிறது.

5. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.

6. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட
மோசமான சாபமும் இல்லை.

7. முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான். பின்பு மது மனிதனை குடிக்கிறது.

8. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு
வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும்.

9. இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால் இரண்டு கை
உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது.

10. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்.

11.ஒருவன் தான் செய்த தவறை ஒத்துக்கொள்ள வெட்கப்படக் கூடாது.
ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றைவிட இன்று அதிக அறிவு
பெற்று விட்டான் என்பதே.

12. வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதை நரகமாக்கி
விடாதீர்கள்.

13. பிறரைப் பாராட்டுங்கள். பாராட்டு கிடைக்கும். பிறரை மதியுங்கள். மதிப்புக்
கிடைக்கும். அன்பு செலுத்துங்கள். அன்பு தேடி வரும். இவை ஒற்றைவழிப்
பாதைகள் அல்ல. இரட்டை வழிப் பாதைகள். அன்பில் வணிகத்திற்கு
இடமில்லை. வணிகத்தில் அன்புக்கு இடமில்லை.

14. தனக்கென வாழ்ந்தவன் தாழ்ந்தவன் ஆகிறான். பிறருக்கென வாழ்பவன்
பெருவாழ்வு வாழ்கிறான். அடக்கம் அணிகலன் மட்டுமல்ல. அறத்தின்
காவலன்.

15. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும்,
கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.

16. சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு
எல்லாமே எளிதாகத் தோன்றும்.

17. எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும்
கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.

18.எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த
சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன்
ஆவான்.

19. பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல
பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.

20. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ
விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான்.

kuz mwptpj;jy;


dimanche 7 septembre 2014


s


s


s


s



கலர் பிலிமை கண்டு பிடித்த ஈஸ்ட்மேன்


கலர் பிலிமை கண்டு பிடித்த ஈஸ்ட்மேன்
திரைப்படங்களில் ஈஸ்ட்மேன் கலர் என்று போடப்பட்டிருப்பதைப் பார்ப்பீர்கள். கமேராவில் கோடாக் பிலிம் என்று போடப்பட்டிருப்பதையும் பார்ப்பீர்கள். இவற்றைக் கண்டு பிடித்தவர்தான் ஈஸ்ட்மேன்.

1854 ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் உள்ள வாட்டர் வில்லா என்ற இடத்தில் யூலை 12ம் திகதி இவர் பிறந்தார். அக்காலத்தில் புகைப்படம் எடுப்பது பெரும் செலவு கொண்ட விடயமாக இருந்தது. இதைக் குறைத்து எளிமையாக படம் எடுக்கும் வழியை கண்டறிவதாக சபதமெடுத்தார். இதன் பயனாக 1884ல் அவர் பிலிம் ரோலை கண்டு பிடித்தார். தொடர்ந்து 1888ல் எளிதாக இயங்கும் கமேராவை கண்டு பிடித்தார். அதற்கு அவர் வைத்த பெயர்தான் கோடாக். 1897 ல் பாக்கட்டில் வைத்துச் செல்லும் கமேராவை கண்டு பிடித்தார். 1898 ல் மடித்து செல்லும் கமேராவை கண்டு பிடித்தார். 1928 ல் சினிமாவிற்கான கலர் பிலிமை அறிமுகம் செய்தார். கமேராவில் முதன் முதலில் பிளாஸ் பயன்படுத்தியவரும் இவர்தான். பெரும் புகழும் பணமும் சம்பாதித்த இவர்தான் தொழிலாளிகளுக்கு இலாபத்தில் பங்கு கொடுத்தவராகும்.
இவருடைய வாழ்க்கையில் நாம் காணும் உண்மை சபதம்தான். மற்றவரை அழிக்க வேண்டும் என்று சபதமெடுக்காமல், ஆக்க சக்திக்காக சபதமெடுத்தார் என்பதுதான். சபதம் எடுங்கள் நல்ல செயல்களுக்காக மட்டும். இறைவன் உங்களுக்கு ஈஸ்ட்மேனுக்கு கொடுத்தது போல வெற்றியைத் தருவார்.

மரணத்தைச் சந்திக்கின்ற துணிச்சல்



ஒருவன் தின்னாமல் குடியாமல் பணத்தைச் சேர்த்து குவித்தான். அவன் எதிர்பார்த்த பணம் சேர்ந்ததும் இனி செலவழித்து மகிழ்ச்சியாக இருக்கப்போவதாக துள்ளிக் குதித்தான். அப்போது அவன் முன் தோன்றிய கடவுள் முட்டாளே நீ இறப்பதற்கு மேலும் ஒரு மணி நேரமே இருக்கிறது என்றார்.
வாழ்க்கையைப் பயனுள்ள வகையில் கழித்தால் மரணத்தைச் சந்திக்கின்ற துணிச்சல் ஏற்படும்.

சாமுவேல் கோல்ட



சாமுவேல் கோல்ட
தனது 17 வது வயதிலேயே சிறிய இரக துப்பாக்கியை கண்டு பிடித்தவரே சாமுவேல் கோல்ட் ஆகும். இவர் 1814ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார். குடும்பத்தின் வறுமை காரணமாக 16வயதிலேயே வேலைக்கு சென்றார். இவர் மரக்கட்டையில் செய்த சிறிய துப்பாக்கியை கொல்ல பட்டறையில் கொடுத்து வடிவமைத்தார். அதன் பின்னர் அமெரிக்க இராணுவம் இவருடைய துப்பாக்கிகளை வாங்க ஒப்பந்தம் எழுதியது. திடீரென உலகின் பிரபல தொழிலதிபராக உயர்வடைந்தார். அமெரிக்கா – மெக்சிக்கன் யுத்தத்தில் அமெரிக்காவின் வெற்றிக்கு இவருடைய துப்பாக்கிகளே உதவின. புதிய சிந்தனை இருந்தால் உலகத்தை வெல்லும் ஆயுதத்தை தனி மனிதனே உருவாக்கலாம் என்பதற்கு இவருடைய கோல்ட் என்னும் பெயர் கொண்ட துப்பாக்கிகளே காரணமாகும். ஆட்களோ படையணியோ ஆயுதமல்ல அறிவே ஆயுதம் என்பதற்கு கோலட் சிறந்த உதாரணமானவர்.

samedi 6 septembre 2014

ss


mother


சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


பிரச்சனை வரும்போது அந்தப் பிரச்சனையில் மூழ்கிவிடக் கூடாது. பிரச்சனை ஏன் ஏற்பட்டது, எதனால் ஏற்பட்டது, இதன் விளைவுகள் என்ன ? இது தேவையா ? என்று பிரச்சனைக்கு வெளியே நின்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நீங்களே முடிவு செய்ய வேண்டும்


இருபது வயதில் பிணமாகி எழுபது வயதில் புதைக்கப்பட்டான் என்று கருதத்தக்க சுவாரஸ்யமற்ற வாழ்க்கை வேண்டுமா அல்லது சவால்களை எதிர் கொள்ளும் சாதனை வாழ்க்கை வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்ய வேண்டும்.

வெற்றியின் மந்திரம் – கஷ்டப்பட்டு முயற்சி செய்



ஒரு நாய் தன்னால்தான் வேகமாக ஓட முடியும் என்று பெருமையாக நினைத்து வந்தது. ஒரு நாள் அது முயல் ஒன்றைத் துரத்தியது. அப்போது அதனால் முயலைப் பிடிக்க முடியவில்லை. மற்ற நாய்கள் அதைக் கேலி செய்தன. அப்போது நாய் கூறியது, மறவாதீர்கள் முயல் உயிருக்குப் பயந்து ஓடியது, நானோ அதைத் துரத்தும் வேடிக்கைக்காகவே ஓடினேன் என்றது. ஆனால் இதனுடைய முதன்மை விடயம் சிரத்தையாகும். உயிரைப் பணயம் வைத்து போராடியதால் முயல் தப்பியது.
வெற்றியின் மந்திரம் – கஷ்டப்பட்டு முயற்சி செய் – என்பதுதான்

lundi 1 septembre 2014

வெற்றி வாகை சூட வாழ்த்துகள்


ஈழத் தமிழச்சியே-உன்னை
ஈன்ற நாடு பெருமை
கொள்ளுது. 
எமது உறவு நீ என்று
சொல்வதில்
தமிழனாகிய நாமும்
பெருமை கொள்கிறோம்.
இறை அருள் உனக்கு பூரணமாக கிடைக்க பெற்று வெற்றி வாகை சூட வாழ்த்துகள் super singer junior jessica