முகப்பு

lundi 31 décembre 2012

உளம் கனிந்த எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

 
 
உலகெங்கிலும் உள்ள தமிழ் நண்பர்களுக்கு
உங்கள் வாழ்வில் துயர்கள் நீங்கி
உற்காகத்துடனும் உல்லாசத்துடனும்
உன்னத வாழ்வு வாழ
உளம் கனிந்த எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

 
 
உங்கள் வாழ்வில் துயர்கள் நீங்கி
உற்காகத்துடனும் உல்லாசத்துடனும்
உன்னத வாழ்வு வாழ
உளம் கனிந்த எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...!
இல்லங்களும் சிறக்க எங்கள் குடும்பத்தினரது நிறைவான புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

jeudi 27 décembre 2012

திருமண நாளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி அற்புதமான ஆலோசனைகள்.

 
 
ஒவ்வொரு, பெண்களின் வாழ்க்கையிலும் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்துவது திருமணம்!

அன்றைய நாளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி அற்புதமான ஆலோசனைகள்.


திருமண நேரத்தில் எல்லோரின் பார்வையும் மணப்பெண்ணையே மையமாகக் கொண்டிருப்பதால்
பெண்மைக்கே
உரிய நாணம் அவளைத் தலை குனிய வைத்து விடும். இது போன்ற சூழலில் மணப்பெண் தனது
தன்னம்பிக்கையை ஒருபோதும் தளரவிட்டு விடக்கூடாது.



சில பெண்கள் பயத்தில் மணமேடையிலேயே கண்ணீர் உதிர்த்தபடி இருக்கிறார்கள்.

மகிழ்ச்சியான நாளில் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் தேவை. அப்போதுதான் அன்று
எடுக்கப்படும் போட்டோ, வீடியோ காமிராவில் மிக அழகாக காட்சி அளிப்பீர்கள்.



அதுபோல திருமணத்தின் போது மணப்பெண்கள் புடவை கட்டுவதில் கவனமாக இருக்க வேண்டும்.

பட்டுப்புடவையானது அதிகம் தூக்கலாகவோ, தொங்கலாகவோ இருக்கக்கூடாது.

மணமேடையை நோக்கி நடக்கும் போது மிகவும் மெதுவாக அடியெடுத்து வைக்க வேண்டும்.
குறிப்பாக படிக்கட்டில் ஏறும்போது கவனமாக இருப்பது நல்லது.


வழக்கம் போல் அங்கும் இங்கும் பார்வையைச் சிதற விடாமல் கீழே கவனமாக பார்த்து
அடியெடுத்து
வைக்க வேண்டும்
.


உங்கள் கவனத்தை திசை திருப்பும் வகையில் யாராவது குரல் கொடுத்தாலோ, சிரித்தாலோ அதை
கண்டு கொள்ளாதீர்கள்.

உங்கள் பட்டுப் புடவையின் டிசைன் மற்றும் நகைகளின் தேர்வு ஒன்றுக்கொன்று தொந்தரவு
செய்யாத
வகையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.



பொதுவாக நகைகளில், மாலையில் சுற்றப்பட்டிருக்கும் நூல் சிக்கிக் கொள்வதுண்டு.

நீங்கள் மண்டப வாசலில் இருந்து உள்ளே நுழையும் சமயத்தில் பாதையில் உறவினர்கள். பூக்கள்
தூவாமல் இருக்க வீட்டாரிடம் சொல்லி வையுங்கள்.



மனமகளுக்கு பீடா, புகையிலை, பபுள்கம், அடிக்கடி சாக்லேட், ஐஸ்கிரீம் சாப்பிடுவது...
போன்ற பழக்கம் இருந்தால் மணநாளின் போது அதை தவிர்ப்பது நல்லது.

சில மணப்பெண்கள் அளவுக்கு அதிகமாக மேக்-அப் போட்டு வலம் வருகிறார்கள். இது நல்லதல்ல.
ஒரிஜினல் முகம் தெரியாத அளவுக்கு ஒரு போதும் மேக்-அப் போடாதீர்கள்.



போட்டோ கிராபர் சொல்லாத வரை கண்களை அகல விரிக்க வேண்டாம். அதுபோல வீடியோ எடுத்துக்
கொண்டிருக்கும் போது கண்களை அங்கும் இங்கும் அலைய விடக்கூடாது. மணப்பெண் நடந்து வரும்
போது அருகில் உள்ள தோழியுடன் அனாவசியமாகப் பேசவேண்டாம். பற்கள் தெரிய சிரிப்பதோ,
கோபப்படுவதோ தவறு.



மணமேடையில் அமர்ந்திருக்கும் போது யாருடைய பேச்சாவது உங்களுக்கு பிடிக்காமல் போனால்,
உங்கள் அதிருப்தி அல்லது கோபத்தை உடனே காட்டக்கூடாது.


அப்போது நீங்கள் கோபப்பட்டால் மணமகன் வீட்டார் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடும்.


அதனால் அந்த ஒரு நாள் மட்டும் கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்ளுங்கள். வாழ் நாள்
முழுவதும் நினைவில் வைத்து பூஜிக்க வேண்டிய புனித நாள் அல்லவா?





vendredi 21 décembre 2012

மாமரி மடியில் பிறந்திட்டான்

 
 
மார்கழிக் குளிரில் மாட்டுத்தொழுவத்திலே
மாமரி மடியினிலே மங்கையர் வயிற்றினிலே
மன்னவன் பிறந்திட்டான்

மண்ணில் வேந்தனாய் மக்கள் மத்தியில்
மானிடர் பாவம் போக்க மமதையை மறந்திட
... மலர்ந்திடும் சமாதானத்தை தந்திடவே
மன்னவன் பிறந்திட்டான்

மணம் வீசும் தூபத்துடன் மன்னர்கள் சூழ்ந்திடவே
மண்ணுலகில் ஒளி பிறந்திடவே
மானிடர் அனைவரும் சந்தோசத்தில் திழைத்திடவே
மன்னவன் பிறந்திட்டான்

மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி ஊட்டும் செய்தியொன்றாம்
மண்ணின் வேந்தன் விண்ணில் ராஜன்
மனுக்குலத்தை மீட்டெடுக்க மாபரன் இயேசு பாலன்
மாமரி மடியில் பிறந்திட்டான்
 

வந்து பாரும் இயேசுவே! வந்து பாரும்

 
 
மண்ணுலகில் மாந்தர் பாவம் போக்கிடவே
மனித அவதாரம் எடுத்து இம்மண்ணில்
பிறக்கத் திருவுளம் கொண்ட இயேசுவே
மண் மீதினில் மாந்தர் படும் அவலநிலையை
வந்து பாரும் இயேசுவே! வந்து பாரும்

... பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகள்!
பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்
மற்றும் உற்றார் உறவினரின் பரிதாப வாழ்வால்
நாடும் வீடும் சாவீடாய்ப்போன நிலையை
வந்து பாரும் இயேசுவே! வந்து பாரும்

நியாயம் கேட்போரும் நீதி தேடுவோரும்
அடக்கு முறையில் அடைபட்டுக் கிடக்கும்
அநியாய சிறை வாழ்க்கை நிலையை
வந்து பாரும் இயேசுவே! வந்து பாரும்

வயிற்றுப் பசியினால் ஒரு வேளை உணவிற்காக
ஏங்கி வாடும் குழந்தைகளையும்
முவேளையும் நன்றாக உண்டுவிட்டு
அரக்கர் போல ஆணவத்துடன் அலைமோதும்
ஆட்சியாளரின் அட்டகாச நிலையையும்
வந்து பாரும இயேசுவே! வந்து பாரும்

சமாதானம் சமாதானம் என ஏங்கி
தவிப்போரின் ஏக்க நிலையையும்
சமாதானம் வந்தால் உழைக்க முடியாது என
பெருமுச்சுவிடும் பித்தர்களின் நிலையையும்
வந்து பாரும் இயேசுவே! வந்து பாரும்
 

mercredi 12 décembre 2012

"கடவுளே! உதவி செய்!"

 
 
ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. "கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்!" என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை.

கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியன் "மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்!" என்றான்.

"கடவுளே! உதவி செய்!" என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்!" என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்.

“ஐயோ”

Tamil Arivu Kadhaikal
 
ஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம்.
 
உமாதேவியார் பார்த்துவிட்டு, இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே, கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெரிமானிடம் சொன்னாராம். அதற்கு அவர் சொன்னாராம், சரி அவன் உதவிக்கு உன்னைக் கூப்பிட்டால் நீ போய் காப்பாற்று; என்னைக் கூப்பிட்டால் நான் காப்பாற்றுகிறேன் என்றாராம்.

 
இருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்களாம்.

அவன் இருந்த கிளை இறுதியாக முறிந்து விழுந்தது. அவன் “ஐயோ” என்று கதறிக்கொண்டே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் செத்துப்போனான்.

உமாதேவியார் என்ன இறந்துபோனானே என்றாராம். அதற்கு சிவன் சொன்னாராம், அவன் எமனின் மனைவி “ஐயோ” வை அல்லவா கூப்பிட்டான். அதான், ஐயோ வந்து அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றாராம்.

அதான் “ஐயோ” என்று ஏன் சொல்லக்கூடாது என்பதற்காக ஒரு சின்ன கதை.

mardi 11 décembre 2012

வாய் வீச்சில் வீரரடி

 
 
வாய் வீச்சில் வீரரடி - இவர்
நெஞ்செங்கும் வஞ்சமடி
வான் திறந்து பால் பொழிகின்றது என்பர்
பூகம்பத்தில் பன்னீர் கொப்புளிக்கின்றதென்பர்
தேனூற்று தெருவில் பாயுதென்பர்
தெவிட்டாதது தம் சொல்லுரை என்பர் ( வாய் வீச்சில் வீரரடி...)
பொய்யுரைத்து சிறு நெருப்பூட்டுவர்
தந்திரக் கதையால் தடுமாற்றம் வரவைப்பர்
தெள்ளமுதில் நஞ்சைக் கலந்தூற்றுவர்
தெரியாமல் சிறு நெருப்பூட்டுவர் (வாய் வீச்சில் வீரரடி...)
வீரம்செறி பரம்பரைக்கோர் வினை வைப்போர்
சிறுபிள்ளை விளையாட்டாய்க் குழி வைப்போர்
பிணக் குவியல் நடுவிலும் பேரம் பேசுவர்
மனக் கதவைக் கொஞ்சமும் திறப்பிலர் ( வாய் வீச்சில் வீரரடி...)
வரலாறு மறந்தெமக்கு வதை செய்வர்
வழி மறித்தெமக்கு பகை செய்வர்
கோடிகள் வைக்காக் கோடிக்குள்
நாலடித் துண்டை சிந்திக்கார்! ( வாய் வீச்சில் வீரரடி...)
இரு கையைக் கண்ணுக்குள் குறிவைப்பர்
இனமானம் இழந்தொரு விதி முனைவர்
வளமான வாழ்வுக்கு தணல் வைப்பர்
இழிவாக வரலாற்றில் பதிபடுவர் ( வாய் வீச்சில் வீரரடி...)
மிதிபட இனமொன்றும் புல்லல்ல கேட்பீர்
வழிகாட்டும் விடிவெள்ளி மறந்திடிலர் -எம்
மதி கண்டு ஏனோ பயந்திட்டார்
தலைகீழாய் தப்புகள் கீறுகின்றார் ( வாய் வீச்சில் வீரரடி...)
10.12.2012
வி. அல்விற்(france)

நீங்கள் யார்? சல்லடையா? முறமா?

 
 
பல ஆண்டு காலம் பயின்றுவிட்டுத் தனது குருகுலத்திலிருந்து வெளியுலகுக்குச் செல்லும் மாணவன் ஒருவனைப் பார்த்து அந்த குரு சொன்னார்: "நீ முறம் மாதிரி இரு! சல்லடை மாதிரி இருக்காதே!"

இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?

சல்லடை நல்ல விஷயங்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு, தேவையில்லாத கசடுகளையும் கல்லையும் மண்ணையும், தான் வைத்துக் கொள்ளும். முறமோ, பதர், கல், மண் ஆகியவற்றை கீழே தள்ளிவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும்!

நீங்கள் யார்? சல்லடையா? முறமா?

உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது

உருவத்தில் சிறியவனாக இருப்பதால் யாரையும் ஏளனம் செய்யக்கூடாது. அவன் வேறு ஒரு வகையில் வல்லவனாக இருப்பான் என்பதை உண்ர்த்தும் நீதிக்கதை
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது தனது பலத்தாலும், தோற்றத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் வசித்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.
பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திற்கு அருகே செல்வதில்லை. சிங்கத்தைக் கண்டால் பயந்து ஓடிவிடுகின்றன.

ஆனால் 'ஈ" ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது. அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..'உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன், நகங்களால் கீறுவேன், நசுக்கிப் பொசிக்கிப் போடுவேன் என்றது.

அதற்கு 'ஈ' ஏய் ! நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் விறாண்டிக் கொள்ளவும் செய்வேன்" என்றது.

இதைக் கேட்ட சிங்கம் கோபத்துடன் முடியுமாயின் அதைச் செய் என் சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் முதுகில் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது..அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் கடிக்க முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.

ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க...சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே கீறிக் கொண்டது. இவ்வாறு பலதடவை சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது.

சிங்கத்தினால் ஈயை பிடிக்கவோ நசுக்கவோ முடியவில்லை.
அதன் பின்புதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை பாடாய் படுத்தி பாடம் புகட்டிவிட்டதே!. .

உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது

எப்படி பேசுவது ???


எப்படி பேசுவது ???
பொறுப்பற்ற பேச்சு
சச்சரவை ஏற்படுத்தும்
கொடுரமான பேச்சு
வாழ்வை சிதைக்கலாம்
கசப்பான பேச்சு
கவலையை உண்டாக்கலாம்

கனிவான பேச்சு
களிப்பை உருவாக்கலாம்
அன்பான பேச்சு
ஆணவத்தையே அழிக்கலாம்
ஆறுதல் பேச்சு
மனக்காயத்தை ஆற்றலாம்
மழழை பேச்சு
மனமகிழ்வைத் தரலாம்
சமாதானப் பேச்சு
ஒற்றுமையை உருவாக்கலாம்

வெற்றியின் ரகசியம்


வெற்றியின் ரகசியம்
அன்பு காட்டு
ஆனால் அடிமையாகி விடாதே!
இரக்கம் காட்டு
ஆனால் ஏமாந்து விடாதே!
பணிவாய் இரு
ஆனால் கோழையாய் இராதே!
கண்டிப்பாய் இரு
ஆனால் கோபப்படாதே
சிக்கனமாய் இரு
ஆனால் கஞ்சனாய் இராதே!
வீரனாய் இரு
ஆனால் போக்கிரியாய் இராதே!
சுறுசுறுப்பாய் இரு
ஆனால் பதட்டப்படாதே!
தர்மம் செய்
ஆனால் ஆண்டியாகி விடாதே!
பொருளைத்தேடு
ஆனால் பேராசைப்படாதே!
உழைப்பை நம்பு
ஆனால் கடவுளை மறந்துவிடாதே!

11,12,2012

dimanche 9 décembre 2012

மாற்றி சிந்திக்கப் பழக வேண்டும்.

 
 
ரயில் தண்டவாளத்தில் சிக்குப்பட்டுவிட்டான் ஒருவன். நள்ளிரவு நேரம்..! காப்பாற்ற எவரும் வரவில்லை. தூரத்தே ரயில் வண்டி வருகிறது. மரணம் ஏறத்தாழ நிச்சயமாகிவிட்டது. என்ன செய்யலாம்.. பாக்கட்டை பார்த்தான் சிகரட் கொழுத்தும் லைட்டர் மட்டும் இருந்தது. அதை கொழுத்தி கையில் பிடித்து அங்கும் இங்கும் ஆட்டினான்… யாரோ நிற்பது தெரிந்து ரயில் நின்றது. சிகரட் பற்ற மட்டும் பயன்படும் என்ற லைட்டரின் பாவனையை மாற்றி சிந்தித்த காரணத்தால் அவன் உயிர் தப்பியது. ஆகவே எப்போதும் மாற்றி சிந்திக்கப் பழக வேண்டும்.

வாழ்த்த வேண்டும்

 
 
எல்லோரையும் மனம் கனிந்து வாழ்த்த வேண்டும். மனம் இசைந்து நன்றி சொல்ல வேண்டும். அன்பு இல்லையெனில் வாழ்த்தும் நன்றி உணர்வும் தோன்றமாட்டாது.

அன்பின் அர்த்தம் புரியும்

 
 
நீ நேசிக்கும் இதயத்தில்
பல ஆண்டுகள் வாழ்வதைவிட....
உன்னை நேசிக்கும் இதயத்தில்
சில நொடிகள் வாழ்ந்து பார்...
அன்பின் அர்த்தம் புரியும் !.


அதிகம்.

 
 
நான் நேசிப்பது
பூவையும், உன் மனசையும் தான்.
ஏனென்றால்,
பூவுக்கு வாசம் அதிகம்.
உன் மனசுக்கு பாசம் அதிகம்.


samedi 8 décembre 2012

அகங்கார‌ம் இன்றி வாழ்ந்திடுவோம்!

 
 
ஒரு பள்ளி ஆசிரியர் வண்ணப் புத்தகத்தில் யானையின் படத்தை வரைந்து கொண்டு வந்து, அதை சுட்டிக் காட்டி “இது என்ன?” என்று மாணவர்களைக் கேட்டார்.
சின்னக் குழந்தைகள் எல்லாம் மகிழ்ச்சியான குரலில் “யானை!”, “யானை!” என்றார்கள். அவர்களை பாராட்டி விட்டு அடுத்த வகுப்பை நோக்கிச் சென்றார். அங்கு ஒரு சின்ன குழந்தையின் அறிவு ஆசிரியரின் அறிவை அறியாமையாக்கியது.

ஒரே ஒரு சின்ன குழந்தை எழுந்து, “ஐயா, அது யானை அல்ல… யானையின் படம் என்றது”. ஐம்பது வயது மூளை அப்படியே அமைதியாகி போனது! உண்மை தானே. பிஞ்சு மூளையில் உதித்த அறிவு தமது அறியாமையை ஆசிரியருக்கு உணர்த்தியது.

“படிப்பாலும் கல்வியறிவாலும் வருகிற அகங்காரம் இருக்கிறதே அது அழியாது! இந்த அறிவு வெறும் அறியாமை என்று அடுத்தவர் அறிவால் அடிவாங்கினால் ஒழிய, இது ஒழியாது”.

ஆகையால் நாம் இந்த‌ துன்ப‌த்திற்கு ஆளாகாம‌ல் அகங்கார‌ம் இன்றி வாழ்ந்திடுவோம்! 

முடியாது

 
 
நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள், ஒவ்வொரு கண்ணும்தங்களையே பார்ப்பதாக எண்ணுவர்.
உள்ளத்தின் ஒழுங்குமுற்றிலும் குலைந்திருந்தால், நாம் புறத்தில் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது.




mercredi 5 décembre 2012

பயம்

பயம்

ஏழு அடிப்படைப் பயங்களை வெற்றிகொள்ள முடியாதவர்கள் வாழ்வில் வெற்றிபெற முடியாது. அவையாவன.
01.ஏழ்மை பற்றிய பயம்
02. குறை சொல்வார்களோ என்ற பயம்
03. உடல் நலம், வலி பற்றிய பயம்
04. அன்பின் இழப்பு பற்றிய பயம்
05. சுதந்திரத்தை இழப்பது பற்றிய பயம்
06. முதுமை பற்றிய பயம்
07. சாவு பற்றிய பயம்.
ஆறு பயங்களையும் வென்று,
கடைசியில் சாவு பற்றிய பயத்தால் எல்லாவற்றையும் இழந்தவர்களே உலகில் அதிகம்.

 

வாழ்க்கை

வாழ்க்கை

வாழ்க்கை என்கிற கடிகாரத்திற்கு ஒரு முறைதான் சாவி கொடுக்கப்படுகிறது. அந்த கடிகாரத்தின் முட்கள் சீக்கரமே நின்று போகுமோ அல்லது அதிக காலம் கழித்து நின்று போகுமோ என்பதை எவருமே அறிய முடியாது”. இப்போது இருக்கின்ற காலம் தான் உங்களுக்குச் சொந்தமானது.
மன உறுதியோடு வாழ்க்கை நடத்துங்கள்!
பிறரிடம் அன்பு செலுத்துங்கள்!!
உழைத்துக் கொண்டிருங்கள்!!!
நாளைய தினத்திடம் நம்பிக்கை வைக்காதீர்கள்.
ஒரு வேளை நாளைக்குக் கடிகாரம் நின்று போய்விடலாம்.
நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது நம்முடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விடியம். ஆனால் வாழ்க்கையின் மற்ற பரிமாணங்களை உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும். அதனுடைய ஆழம் அகலம் மற்றும் உயரம் ஆகியவை உங்களுடைய கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவையே. இந்த பரிமாணங்களுக்குள் வாழ்க்கை என்கிற அதிசயத்தை நீங்கள் வாழ முடியும். திரும்பவும் நிகழ முடியாத அதிசயம் இது.



நாணம்

 
காற்று வந்தால் தலை சாயும் நாணல்
காதல் வந்தால் தலை சாயும் நாணம்
ஒருவர் மட்டும் படிப்பது தான் வேதம்
இருவரும் சேர்ந்து படிப்பது தான் காதல்
மழை வரும் முன் வானத்தை மூடும் மேகம்
காதல் வந்து மனத்தை மூடும் மோகம்
அஞ்சி அஞ்சி நடந்து வரும் அன்னம்
அச்சத்தால் அஞ்சி சிவக்கும் கன்னம்



mardi 4 décembre 2012

ரகசியம்

 
 
மங்கையே
மௌனத்தால் நீ பேசும் வார்த்தைகள் ஆயிரம்
விழியால் நீ பேச நினைத்தால் பாஷைகள் ஆயிரம்..ஆயிரம்
உன் மனக்கடலின் ஆழமோ
எவரும் அறியா ரகசியம்

குணாம்சமாகும்.

குணாம்சமாகும்.

*தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும், அதனை திருத்திக்கொள்வதற்கான பலமும்தான் வெற்றி பெறுவதற்கு சிறந்த குணாம்சமாகும்.

சரி

சரி

*உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல்
*அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும்.
*உங்களிடம் யாரவது உழைப்பை எதிர்பார்த்து ஒரு நிமிஷம் என்றால் என்ன என்பதை அறியாமல் சரி சொல்லாதீர்கள்.

 

விளைவு

விளைவு

மனிதனை உயர்வடையச் செய்வது சோதனை நேரம்தான், வெற்றி நேரமல்ல.
சோம்பலாக இருப்பது முட்டாள்கள் எடுக்கும் ஓய்வாகும்.
சோம்பலின் விளைவு தரித்திரம் முயற்சியின் விளைவு முன்னேற்றம்.



மனதை வெல்பவனே

 

. ஆழமான அர்த்தங்களும் அதிகமான தத்துவங்களும் அடங்கியதே வாழ்க்கை.
. மனிதனை வெல்பவனை விட மனித மனதை வெல்பவனே மாபெரும் கெட்டிக்காரன்.
. பிரச்சனை சிறிதாயினும் அதைத் தீர்ப்பதில் பெரிய கவனம் செலுத்து.



lundi 3 décembre 2012

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

 



சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. .

நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன். இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது... பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார். ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார். மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார். சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும். எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்). ( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம். நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது. கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும். மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது. அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்... இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள். சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில : துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்) ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம். திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம். மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம். அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம். தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம். இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம். வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம். மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள். பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது. பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.



உடற்சூட்டை தணிப்பவை

 

 

 


உடற்சூட்டை தணிப்பவை ...

பச்சைப்பயிறு, மோர், உளுந்தவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம் நாவற்பழம், கோவைக்காய், இளநீர் ருசியின்மையைப் போக்குபவை
புதினா, மல்லி, கறிவேப்பிலை, நெல்லிக்காய், எலுமிச்சை, மாவடு, திராட்சை, வெல்லம், கருப்பட்டி, மிளகு, நெற்பொறி சிவப்பணு உற்பத்திக்கு புடலைங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம் கேழ்வரகு,பசலைக்கீரை மருந்தை முறிக்கும் உணவுகள்
அகத்தி, பாகற்காய், வேப்பிலை, நெய், கடலைப்பருப்பு, கொத்தவரை, எருமைப்பால் . சோம்பு, வெள்ளரிக்காய் விஷத்தை நீக்கும் உணவுகள்
வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், காயம் பித்தம் தணிப்பவை
சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைவற்றல் செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை



கீரைகளின் மருத்துவ குணங்கள்

 




கீரைகளின் மருத்துவ குணங்கள்
விலை
மலிவான சாதாரணப் பொருட்களிலும், நிறைய பலன்களைப் பெற முடியும் என்பதற்கு சிறந்த
எடுத்துக்காட்டு தான் கீரைகள்.
கீரைகள் தினமும் எடுத்து கொண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம்
இருக்காது என்பார்கள் முதியோர்கள்.
அரைக்கீரை: தினமும் உண்ணத்தக்க கீரைகளில் இது தலையானது. எவ்வகை
நோயாளிக்கும் ஏற்றது. கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றை
நன்னிலையில் பாதுகாக்கும். பிரசவமான மகளிர்க்கு உடனடி ஊட்டம் அளிக்கும்.
மணத்தக்காளி: வாய்ப்புண், வயிற்றுப்புண்ணுக்கு சிறந்த மருந்து.
மூலநோய், குடல் அழற்சி கட்டுப்படும். குரல் வளம் பெருக்கும். அல்சருக்கு அற்புத
மருந்து. வாரம் 2 முறை உண்ணத்தக்கது.
பசளைக்கீரை: மலச்சிக்கலை விரட்டும். ஆண்மையைப் பலப்படுத்தும்.
குளிர்ச்சி தரும். இக்கீரையை ஆஸ்துமா போன்ற நோயுடையவர்கள் கோடை காலத்தில் மட்டுமே
உண்ணவும்.
வெந்தயக்கீரை: வாயுவைக் கண்டிக்கும். கல்லீரலைச்
சுறுசுறுப்பக்கும். புரதம், தாதுக்கள், வைட்டமின் சி இதில் ஏராளம். வாரம் 1 முறை
உண்டு வர மூட்டுவலி, இடுப்புப் பிடிப்பு போன்றவை நீங்கும். சிறுநீர் கோளாறு
அண்டாது.
முளைக்கீரை: எவ்வயதினரும், தினமும் உண்ணக்கூடியது. நல்ல
பசியைத் தூண்டும். காச நோயின் போது வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
அகத்திக்கீரை: வைட்டமின், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து
நிறைந்தது. விஷங்களை முறிக்கும். கண்பார்வை நரம்புகளுக்கு வலுவூட்டும். கிருமிகளைக்
கொல்லும். ஆனால், இதனை வயிற்றுக் கோளாறுடையோர், வயோதிகர் உண்ணலாகாது. மாதம் ஒரு
முறையே இது உண்ணத்தக்கது.
கரிசலாங்கண்ணி கீரை: கபம், பித்தவாயுவையும் கண்டிக்கும்.
மூலநோய், நாட்பட்ட கிராணி இவற்றிற்கு மாமருந்து.



நீரிழிவு, இருதய நோய்களை தவிர்க்கும் தேநீர்

 


நீரிழிவு, இருதய நோய்களை தவிர்க்கும் தேநீர்
தற்காலத்தில் உண்டாகும் பலவிதமான
நோய்களுக்கு மருந்து வகைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் நாம் அன்றாடம் உண்ணும்
உணவுகளிலும், பருகும் பானங்களிலும் குறித்த சில நோய்களுக்கான நிவாரணிகள்
காணப்படுகின்றன.
அதனடிப்படையில் தினந்தோறும் மூன்று கப் பால் கலக்காத தேநீர் பருகி வருவதன் மூலம்
இருதய நோய்கள், நீரிழிவு நோய்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும் என
ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேநீரானது தீங்கு விளைவிக்கும் கொலஸ்திரோலின் அளவையும், குருதியிலுள்ள சீனியின்
அளவையும் குறைப்பதனால் மேற்குறித்த பிரச்சினைகள் பற்றி அச்சப்படவேண்டிய அவசியம்
இல்லை.
அத்துடன் தேநீரில் காணப்படும் பிறிதொரு உள்ளடக்கமாக காணப்படும்
பிளேவனொயிட்(flavonoid) எனும் பதார்த்தம் இதய நாளங்களில் ஏற்படும் கோளாறுகளை
கட்டுப்படுத்த உதவுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கப் தேநீரின் மூலம்
உடலுக்கு 150-200mg வரையான பிளேவனொயிட் கிடைக்கின்றது என்பது
குறிப்பிடத்தக்கது.



பெண்களைப் பற்றிய பொன்மொழிகள்

 



பெண்களைப் பற்றிய பொன்மொழிகள்


1) பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி _ வில்சன் மிஸ்னர்.
2)காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம் _ ஷேக்ஸ்பியர்.
3)பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும்அவள் ஒடிந்து விழ மாட்டாள் _ வேட்லி.
4)பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது _ நேரு....
5)பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது. ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது _ லார்ட் பைரன்.
6)பொய்மை கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய மூன்றுமே பெண்கள் பெரிதும் வெறுப்பவை _ ஷேக்ஸ்பியர்.
7)பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப் பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது _ ஷேக்ஸ்பியர்.
பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்திலே குடும்ப இன்பத்தின் அடிப்படை _ லாண்டர்.
9)எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் _ மகாபாரதம்
10) தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு _ ஒளவையார்
11)பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் _ தேசிக விநாயகம் பிள்ளை.
12)ஒரு பெண்ணின் உள்ளமாகிய கடலில் இரக்கம், தியாகம்,கற்பு,காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம் _பெஸ்லிங்



நினைவில் நின்ற பொன்மொழிகள்

நினைவில் நின்ற பொன்மொழிகள்



மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும்
செய்துபார், ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது "கடவுள் இருக்கிறார்" என்பதே.
ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல,
விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான்.
மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது,
ஆனால் முட்டாள்தனமாகச் செயற்படுவது.
பணமும், பதவியும் மோசமானவை என்று ஞானிகள் ஏன்
சொல்கிறார்கள்? அவை வரக்கூடாதவனுக்கு வருவதால், கிடைக்கக்கூடாதவனுக்குக்
கிடைப்பதால்.
மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட, ஒரு கணப்
பொழுதாயினும் உதவி செய்வது மேல்.
தாய் பசித்திருக்க, தாரத்திற்கு சோறு ஊட்டாதே, நாளை நீ பசித்திருக்க உன்
பிள்ளையும் அதே தவறைச் செய்து கொண்டிருப்பான்.
அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி, ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன்
மூடன், ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை, தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து
திருத்திக் கொள்கிறவனே மனிதன்.
பூமியை ஆழமாகத் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கிறது, உண்மையான அன்பு
வைப்பவனுக்குத்தான் நன்றி நிரம்ப வருகிறது.
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும்
உன்னைத் தெரியாது.
நீ கொடுக்கவேண்டியவற்றை நன்றாகக் கொடு, அது உனக்கு 4 மடங்காகத் திருப்பித்
தரப்படும்.
எப்பொழுதும் உன்னை நினைத்துச் சுயநலமாக இருப்பதைவிட, மற்றவர்களை நினைத்துப்
பொதுநலமாக சிந்தி, நீ நன்றாக இருப்பாய்.
வாழ்க்கை ஒருமுறை, அதை மற்றவர்களுக்காகவும் வாழ்ந்து காட்டப் பழகிக் கொள்ள
வேண்டும்.
நீ இந்தப் பூமியை விட்டு வெளியேறும்போது நீதி, நேர்மை, மனிதாபிமானம் போன்றவற்றை
விட்டுச் செல், அது உன் சந்ததியை நன்றாக வழிநடத்தும்.
நீ எப்பொழுதும் நல்லவற்றையே சிந்தி, உனக்கு எல்லாம் நல்லவைகளாகவே நடக்கும் இது
விதி, தீயவற்றைச் சிந்தித்தால் தீயவையே நடக்கும் இதுவும் விதி.
ஆண்டவன் உனக்குத் தர நினைக்கும்போது யாரும் தடுக்க முடியாது, அதேநேரம் ஆண்டவன்
அதைப் பறிக்கும்போது யாராலும் அதைத் தடுக்க முடியாது.
ஆண்டவன் ஒவ்வொரு நல்ல உள்ளங்களிலும் அழகாக வீற்றிருக்கிறான், நாங்கள்தான் அதைக்
கண்டுகொள்வதில்லை.
உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே, ஆனால் சந்தர்ப்பம், சூழ்நிலைகள்
அதை மாற்றியமைக்கின்றன.
ஆண்டவன் எல்லோருக்கும் எதோ ஒரு திறமையைக் கொடுத்திருக்கிறான், நாம் அதைக்
கண்டுகொள்ளாமல், திறமையற்றவர்களாகத் திரிகிறோம்.
நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு, இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான்.
நீ எப்போது யாருமற்ற ஏழை, எளியவர்களுக்கு உதவுகிறாயோ, அப்போது ஆண்டவன் உன்னிடம்
'கடன்காரன்' ஆகிறான்.

 




நீரிழிவு நோயால் கண்பார்வை

நீரிழிவு நோயால் கண்பார்வை


நீரிழிவு நோயால் ஏற்படும் பார்வை இழப்பை சரிசெய்வதற்கு
நீரிழிவு நோயால் கண்பார்வை
அதிகளவு பாதிக்கப்படும், இதனால் ஏற்படும் பார்வை குறைபாட்டை குணமாக்குவது எப்படி
என்பது குறித்து விளக்கம் அளிக்கின்றனர் விழித்திரை நிபுணர்கள்.
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நீரிழிவு நோய் மிக வேகமாக பரவி வருகிறது.
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுப் படி உலக மக்கள் தொகையில் 4 சதவீதம் பேருக்கு
நீரிழிவு நோய் இருக்கிறது.
உலகிலேயே அளவுக்கு அதிகமான நீரிழிவு நோயாளிகள் இருப்பது இந்தியாவில் தான்.
இதனால் தான் இந்தியாவை நீரிழிவு நோயாளிகளின் தலைநகரம் என்று வர்ணிக்கிறார்கள்.
நீரிழிவு நோயை டைப்-1, டைப்-2 என்று 2 வகையான பிரித்துள்ளனர். 30 வயதுக்குள்
நீரிழிவு நோய் வருவதை டைப்-1 என்றும், 30 வயதுக்கு பிறகு நீரிழிவு நோய் வருவதை
டைப்-2 என்றும் பிரித்துள்ளனர்.
டைப்-1ன் வகையை சேர்ந்த நோயாளிகளுக்கு 15 ஆண்டுகளாக நீரிழிவு இருந்தால் அவர்களது
கண்பார்வை 100 சதவீதம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
டைப்-2 வகையினருக்கு நீரிழிவு நோய் 15 ஆண்டுகள் நீடித்தால் 30 சதவீதம் பேரின்
கண்பார்வை கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே 30 வயதுக்கு பிறகு நீரிழிவு நோய்
இருப்பது தெரிய வந்தால், இந்நோயாளிகள் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை
செய்து கொள்வது அவசியம்.
அதிலும் விழித்திரை நிபுணரிடம்(ரெட்டினா ஸ்பெஷலிஸ்ட்) சென்று `செக்-அப்' செய்
வது மிகவும் நல்லது. சிலருக்கு விழித்திரையில் வலி அதிகமாக இருக்கும். அப்போதே
அவர்கள் விழித்திரை நிபுணரிடம் பரிசோதனை செய்து கொண்டால் கண் பார்வை இழப்பில்
இருந்து தப்பி விடலாம்.
நீரிழிவு நோயாளிகள் மட்டுமல்ல 40 வயதை கடந்த அனைவரும் கண் மருத்துவரிடம் சென்று
கண் பிரஷ்ஷரை பரிசோதித்து கொள்ள வேண்டும். இந்த கண் பிரஷ்ஷர் அதிகமானால் கண்பார்வை
குறைபாடு ஏற்படும். பரிசோதனை எப்.எப்.ஏ. என்ற கண் பரிசோதனை மூலம் நீரிழிவால்
ஏற்படும் ரத்த நாள கோளாறுகளை கண்டறிய முடியும்.
இப் பரிசோதனைக்கு பிறகு கண்ணுக்குள் இன்ட்ரா விட்ரியாஸ் என்ற ஊசி மருந்தை ஊசி
மூலம் செலுத்துவோம். கண்ணுக்குள் வி.இ.ஜி.எப். ரசாயனம் உண்டு. இந்த ரசாயனத்துக்கு
எதிராக வி.இ.ஜி.எப். மருந்தை ஊசி மூலம் செலுத்தினால் ரத்தநாள கோளாறு குணமாகும்.
விழித்திரையில் ஏற்படும் கோளாறை தடுக்க சிலிகான் ஆயில் ஊசி மூலம்
செலுத்தப்படும். இந்த ஆயிலானது விழித்திரையை பலப்படுத்தும்.

 



நல்ல சொற்களை எப்போதும் வார்த்தைகளில் சேருங்கள்

 



பின்வரும் நல்ல சொற்களை எப்போதும் வார்த்தைகளில் சேருங்கள் :
அன்பு – அறம் – அறிவு – அமைதி – அருட்பேராற்றல் – ஆக்கத்திறன் – ஆர்வம் – ஆறுதல் – ஆளுமை – ஆற்றல் – இணக்கம் – இலட்சியம் – ஈகை – உடல்நலம் – உண்மை – உழைப்பு – உறுதி – உற்சாகம் – ஊக்கம் – ஒழுங்கு – கற்றல் – கருணை – காலந்தவறாமை – சங்கற்பம் – சக்தி – சாதனை – சாந்தம் – சிந்தனை – சிரத்தை – சிக்கனம் – சுதந்திரம் – சுத்தம் – சுறுசுறுப்பு – செல்வம் – செழிப்பு – சேவை – ஞானம் – தன்னம்பிக்கை – தன்னடக்கம் – தானம் – தியானம் – தீர்மானம் – துணிவு – தூய்மை – தைரியம் – தெளிவு – தெய்வீகம் – நட்பு – நன்றி – நியாயம் – நம்பிக்கை – நிறைவு – நேர்மை – பக்தி – பணிவு – பொறுமை – மகிழ்ச்சி – மலர்ச்சி – மன ஒருமை – மரியாதை – முழுமை – முயற்சி – முன்னேற்றம் – மேன்மை – மௌனம் – வளமை – வாழ்த்து – வெற்றி – ஜீவகாந்தம்இவற்றை படித்து, மற்றவர்களுக்கும் சொல்லி எல்லோரும் நலம்வாழ உதவுங்கள்…யாருடனும் பகை வேண்டாம்… கடவுளின் படைப்பில் எல்லோரும் நல்லவரே..

 



புற்றுநோய் செல்களை அழிக்கும் தக்காளி

புற்றுநோய் செல்களை அழிக்கும் தக்காளி



புற்றுநோய் செல்களை அழிக்கும் தக்காளி

சமைத்த
தக்காளியில் உள்ள சத்துக்கள் புற்றுநோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, புற்றுநோய்
செல்களை அழிக்கவும் செய்கின்றன என்று இங்கிலாந்தை சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர்
கண்டுபிடித்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் மற்றும்
பயோமெடிக்கல் சயின்ஸ் பிரிவு பேராசிரியர் மிருதுளா சோப்ரா. இந்திய வம்சாவளியை
சேர்ந்தவர்.
தக்காளியின் மருத்துவ குணங்கள் மற்றும் புற்றுநோயை கட்டுப்படுத்துவதில்
தக்காளியின் பங்கு குறித்து இவரது தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
சமைத்த தக்காளியில் உருவாகும் ரசாயன பொருள் புற்றுநோய்க்கு மருந்தாக செயல்படுவதை
ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து மிருதுளா கூறியதாவது: புற்றுநோயால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அட்ரியாமைசின், சைக்ளோபாஸ்பமைடு போன்ற மருந்துகளை தனியாகவோ, மற்ற மருந்துகளுடன்
கலந்தோ நோயாளியின் உடலில் செலுத்தி, வேகமாக பரவும் புற்றுநோய் செல்களை அழிப்பதே
கீமோதெரபி.
நோயாளியின் உடலில் உள்ள இரத்தத்தில் இருந்து தனக்கு தேவையான சத்துகளை நோய்
கிருமிகள் கிரகித்துக்கொண்டு விரைவாக நோயை அதிகரிக்கச் செய்கின்றன. இதனால்
இரத்தத்தில் சத்து இல்லாமல் போவதுடன் உடலின் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது.
தக்காளி உட்பட சிவப்பான பழங்களில் லைகோபீன் என்ற சத்து உள்ளது. அந்த பழங்களுக்கு
சிவப்பு நிறத்தை கொடுப்பதுகூட லைகோபீன்தான். வெறும் தக்காளியிலேயே இது அதிகம்
உள்ளது. சற்று எண்ணெய் விட்டு சமைக்கும்போது, லைகோபீன் சத்து அதிகமாகிறது. இது
அனைத்து வகையான புற்றுநோய்களையும் கட்டுப்படுத்துகிறது.
நோயின் தீவிரத்தை குறைப்பது மட்டுமின்றி, பரவி வரும் புற்றுநோய் செல்களை
அழிக்கவும் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடலுக்கு ஆரோக்கியம்
தருகிறது. இதுதொடர்பாக மேலும் ஆராய்ச்சி நடந்து வருகிறது என்றார்.