முகப்பு

dimanche 31 juillet 2011

எனது அம்மாவின் அன்பிற்கு!



உலகிலேயே...
மிகவும் அழகானது
பூ
மிகவும் அதிசயமானது
தாஜ்மஹால்
...மிகவும் பிரகாசமானது
சூரியன்
மிகவும் குளுமையானது
நிலவு
மிகவும் தெளிவானது
நதி
மிகவும் இனிமையானது
தென்றல்
ஆனாலும்...இவை எதுவும்
ஈடு இல்லை
என்னைப் பெற்று
வளர்த்து
நானும் ஒரு மனிதனாக
இவ்வுலகில்
நடமாடவைத்த
எனது அம்மாவின்
அன்பிற்கு!


முதலில் நாங்கள் மன்னிக்க வேண்டும் இல்லாமல் எங்களை மன்னிக்கும்படி மன்றாட முடியாது.
தெருவில் கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு போகும் ஒருவன் நாளை இறந்துவிட்டால் அவனுக்குக் கிடைக்கப்போவது என்ன..?

samedi 30 juillet 2011

அன்பான செயலை செய்ய காத்திருக்காதீர்கள். காலம் குறுகியது நாளை மிகவும் தாமதமாகிவிடலாம்.



மன்னியுங்கள், மறந்துவிடுங்கள், உங்கள் தவறுகளை மற்றவர்கள் எப்படி மன்னிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படியே மற்றவர்களை மன்னியுங்கள். பொறுமையோடும் புரிதலோடும் இருங்கள் விரோதம் பாராட்டவோ பழிவாங்கவோ நேரமில்லை வாழ்க்கை குறுகியது.
வாழ்க்கை குறுகியது, நம் பகைமையை தொந்தரவுகளை மறக்க வேண்டும். இன்னும் காலம் இருக்கும்போதே மறக்க, மன்னிக்க வேண்டும். சண்டையை நிறுத்த காத்திருக்காதீர்கள். அன்பான வார்த்தையை சொல்ல அன்பான செயலை செய்ய காத்திருக்காதீர்கள். காலம் குறுகியது நாளை மிகவும் தாமதமாகிவிடலாம்.

செய்யாதீர்கள்.


உங்களுக்கு மற்றவர்கள் எதை செய்யக்கூடாது என்று விரும்புகிறீர்களோ அதை மற்றவர்களுக்கு செய்யாதீர்கள். கன்பியூசியஸ் சொன்ன இந்தப் பழமொழி சீனாவை மட்டுமல்ல உலகையே மாற்றியது.

நன்மை



வாழ்வின் சந்தோஷத்திற்கு ஓர் அடிப்படை தேவை. ஆகவேதான் எந்த மனிதனுக்காவது எதாவது அன்பைக் காட்ட முடிந்தால் இப்போதே காட்டிவிடுங்கள்.
நாம் நமக்காக மட்டும் வாழ்வதில்லை, அடுத்தவருக்கு உதவ நம்மாலானதைச் செய்ய வேண்டும். துக்கத்தை குறைக்க, மனப்பாரத்தை இறக்க முடிந்தபோதெல்லாம் உதவ வேண்டும்.
நமக்கு வாழ்வதற்கு நல்லதோர் வாழ்வு கிடைத்திருக்கிறது, அதனால் எல்லோருக்கும் நன்மை செய்வோம்.
ஒரு மனிதனின் உண்மையான சொத்து அவன் இந்த உலகிற்கு செய்த நன்மைதான்.

jeudi 28 juillet 2011

வாழ்க்கை


வாழ்க்கை பசுமையானது, வசந்தமானது, மிகவும் சுருக்கமானது, பறந்து போவது. காலப் பெரு வெளியில் நமது வாழ்வு ஒரு கணத்திற்கும் குறைவானது

mercredi 27 juillet 2011



maman

les milliers de poissons dans la mer les milliers de coquillages dans la mer 

les milliers d'abeilles sur les fleurs, 
les milliers d'abeilles sur les fruits,


les milliers d'étoiles dans le ciel, 
les milliers de nuages dans le ciel,

les milliers d'oiseaux dans les arbres, 
les milliers d'écureuils dans les arbres

les milliers de crabes sur la plage,
les milliers de rochers sur la plage, 

Et seulement 

Et seulement 
Une maman.!  

maman



Une maman

Des milliers d'étoiles dans le ciel, 
Des milliers d'oiseaux dans les arbres, 
Des milliers de fleurs dans les jardins, 
Des milliers d'abeilles sur les fleurs, 
Des milliers de coquillages sur la plage, 
Des milliers de poissons dans la mer 
Et seulement seulement Une maman. 

mardi 26 juillet 2011

maman


elle est jolie

elle est mimi

elle est intelligente

elle est marrante

elle m'aime

je l'aime

vous l'avez deviné ?

c'est ma maman préférée

அழகு


பூக்களின் அழகு அதன் மனத்தினில்

மனிதரின் அழகு அவர் குணத்தினில்

பெண்ணின் அழகு நல்ல பண்பினில்

ஆணின் அழகு தன்னம்பிக்கையில்

நமது அழகே அழகு ஒரு புன்னகையில்

vendredi 22 juillet 2011

உன் இதயத்தின் கொள்கைகளுக்கு உண்மையாக இரு.


உன்னை நீ நம்பு.. ஒவ்வொரு இதயமும் அந்த இரும்புக் கம்பியின் இசைக்கு துடிக்கிறது. ஒரு மனிதன் தன் சொந்தத் திறமையை அறிய வேண்டும். கொள்கைகளின் வெற்றி தவிர, வேறெதுவும் உனக்கு அமைதி தராது.

 இயற்கை நீ என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறது என்பதைக் கண்டுபிடி. உன் இதயத்தின் கொள்கைகளுக்கு உண்மையாக இரு. மற்றவரின் கொள்கைகளுக்கு நீ உண்மையாக இருப்பதாகக் கூறி, உன் வாழ்வை போலி விசவாச நாடகமாக்காதே. உன் சொந்த எண்ணங்களை நம்பு, நம்பிக்கையாய் இரு, சுய சார்போடு நடந்து கொள்.

 இந்த உலகில் நன்மைகள் நிறைந்திருந்தாலும் போஷாக்கூட்டும் சோளம் தானாக வராது. உழுவதற்காக உங்களுக்குக் கிடைத்த நிலத்தில் உழுதால் மட்டுமே கிடைக்கும்.

நல்ல எண்ணங்கள்


எண்ணமும் நடத்தையும் ஒன்றுதான். நல்ல எண்ணங்கள் நல்ல பலனைத் தருகின்றன. ஒரு மனிதன் எவ்வளவு தூரம் தன் எண்ணங்களை உயர்த்துகிறானோ அவ்வளவு தூரம் வெற்றி பெறுவான். உங்கள் கனவுகளை குறிக்கோள்களை மதியுங்கள். உங்கள் இலட்சியங்களை எப்போதும் உங்கள் மனதில் நிறுத்துங்கள். ஒரு மனிதன் தான் நினைப்பதாகவே மாறுகிறான். இதுதான் முடிவில்லாத வாழ்க்கை மர்மம்.

பலன்


உங்கள் சொந்த எண்ணங்களின் பலன் உங்கள் கைகளிலேயே இருக்கிறது. நீங்கள் சம்பாதித்ததைத்தான் நீங்கள் பெறுவீர்கள், கூடக்குறைய இருக்காது. உங்களுடைய தற்போதய நிலை எதுவாக இருந்தாலும் எண்ணங்கள், கற்பனைகள் குறிக்கோள்களைப் பொறுத்தே உங்கள் எழுச்சியோ, வீழ்ச்சியோ, அல்லது நிலையாக இருப்பதோ நிகழும். இலட்சியத்திற்கு ஏற்பவே நீங்கள் பெரிதாவீர்கள்.

samedi 9 juillet 2011

உலக வெப்பமயமாதலால் பூமியின் பருமன் அதிகரிப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்






நாம் வாழும் பூமியின் பருமன் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. உலக தொழிற்சாலைகளில் வெளியேறும் கரியமில வாயுக்களால் வெப்பம் அதிகரித்து வருகிறது.
இந்த வெப்ப அதிகரிப்பால் பூமியின் வட துருவம் மற்றும் தென் துருவத்தில் ஆண்டுக்கு 38 ஆயிரத்து 200 கோடி டன் பனிக்கட்டி உருகி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த பனிக்கட்டி உருகலால் கடல்நீர் மட்டமும் அதிகரித்து வருகிறது.
20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது ஐஸ் யுகத்திற்கு பின்னர் பூமி மிகுந்த அளவு எடை குறைந்து காணப்பட்டது. இன்று நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. இப்போது பூமியின் மையப்பகுதி உலக வெப்பம் அதிகரிப்பால் பெருத்து உள்ளது. அண்டார்டிகாவிலும், கிறீன்லாந்திலும் ஐஸ் உருகி ஓடுவது தொடர்கிறது.
ஐஸ் கட்டி காலத்தின் போது பூமியின் எடை பருமன் ஆண்டுக்கு ஒரு மில்லி மீற்றருக்கும் குறைவான அளவில் இருந்து வந்தது. ஐஸ் கட்டியின் அடுக்குகள் கடுமையானதாக இருந்த போது பூமியின் மேல் பகுதியிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
கிரேஸ் எனப்படும் புவி ஈர்ப்பு மீட்பு சோதனை செயற்கை கோள் மூலம் ஆய்வு செய்யப்பட்டதில் பூமியில் பனிக்கட்டி உருகுவது அதிகரித்து பூமியின் வடிவத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதை அறிய முடிந்தது.

vendredi 8 juillet 2011

நாலு பேருக்கு பயன் இல்லாவிட்டால்.. ?


இரவு பகலா நீ வேலை செய்து என்ன பயன் அதனால் நாலு பேருக்கு பயன் இல்லாவிட்டால்.. ?

தவறு.


பத்து ரூபா விலையில் தரமான பொருள் தருவதற்குப் பதில் ஐந்து ரூபா விலையில் தரக்குறைவான பொருளைத் தருவது தவறு, அதை வாங்குவதோ அதைவிடத் தவறு.

மந்திரங்கள்.


வாழ்க்கையில் அவமானப்பட்டிருக்கிறீர்களா ? 
அதற்காக சந்தோஷப்படுங்கள். 
துரோகத்தை சந்தித்திருக்கிறீர்களா ? 
அதற்காகவும் சந்தோஷப்படுங்கள். 
யாரையாவது நம்பி கெட்டிருக்கிறீர்களா ? 
அதற்காகவும் சந்தோஷப்படுங்கள். 
அவமானமும், துரோகமும், ஏமாற்றமும் 
நம்முடைய பலத்தை நாமே 
தெரிந்து கொள்ள உதவும் மந்திரங்கள்.

நல்வழி


வாழ்க்கையின் ஆறாத காயங்களில்தான் இறைவனின் தீராத கருணை இருக்கிறது.
கடவுள் நடாத்தும் நாடகத்தில் கொடுத்த வேஷத்தைப் போடுகிற பொறுப்பு மட்டும்தான் நமக்கு, போடுங்கள் அவரே நல்வழி காட்டுவார்.