முகப்பு

vendredi 29 janvier 2016

படித்து அறிந்தது #



படித்து அறிந்தது #

ஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்... பூனைக்

இதனின் ௨ட்பொருள். ஆனையைப் பிரித்தால் ஆ + நெய். அதாவது ' ஆ ' என்பதற்கு பசு என்று பொருள் ௨ண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிபடியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து ௨டலில் சோ்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது...

பூனைக்கு என்பதை, பூ + நெய் என்று பிரித்துப் பார்க்கும் போது, பூவில் இருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யை சுருக்கி தேனை ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் அா்த்தமாகும். தேன் எளிதில் ஜீரணமாகும் ௨ணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.

பழமொழியின் பொருள்:

நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல்... தேனையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம், ஆயுளும் வளரும்
கு (பூ+நெய்) ஒரு காலம் வரும்...இது ஒரு பழமொழி... ஆனால்... இது ஒரு மருத்துவக் குறிப்பு.

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?



    ஒரு பெண் எப்போதெல்லாம்
    அழகாகிறாள்?
    1.அதிகாலை பனியில்
    நனைந்த படியே கோலம்
    போடும் போது....
    2.தாவணிக் கோலத்தில்
    சுபநிகழ்ச்சிகளில் அங்கும்
    இங்கும் வலம் வரும்போது.
    3.பேச்சில் ஆங்கிலம்
    கலக்காமல் ,
    படிக்காதவர்களிடம்
    அவர்களுக்கு புரியும்
    விதத்தில் தெளிவாக பேசும்
    போது.
    4.அழகை திமிராக
    காட்டாமல், ஆண்களை
    மதித்து நடக்கும் போது.
    5.யார் மனதையும்
    புண்படுத்தாமல் , தன்
    மனதில் இருப்பவனின் கை
    பிடிக்க எவ்வளவு நாள்?
    என்றுக் கேள்வியே
    கேட்காமல் காத்திருக்கும்
    போது.
    6.அச்சப் பட வேண்டிய
    இடங்களில் மட்டும்
    அச்சப்பட்டு கம்பீரமாய்
    இருக்க வேண்டிய
    இடங்களில் கம்பீரமாய்
    இருக்கும் போது.
    7.காதில் இருக்கும் கம்மல்
    தன் பேச்சுக்கு தாளம்
    போடும் படி, தலையை
    ஆட்டி ஆட்டி பேசும் போது.
    8.தம்பி தங்கைகளுக்கு
    இன்னொரு தாயாய் இருக்கும்
    போது.
    9.தந்தையின் குடும்ப
    கஷ்டத்தில் பங்கெடுத்துக்
    கொள்ளும் போது.
    10.ஆபாசமில்லாத
    உடையணிந்து அழகை
    எப்போதும் மறைத்தே
    வைத்திருக்கும் போது.
    11.ஆண்கள் கூட்டத்தை
    கடக்கும் போது,நம்மை
    ஏதேனும் சொல்லி
    கிண்டலடித்து
    விடுவார்களோ என்று
    மனதில் ஆயிரம்
    கேள்விகளை சுமந்த படியே
    செல்லும் போது.
    12.சமைக்கத் தெரியாது
    என்பதை பெருமையாக
    சொல்லாமல்,
    அன்னமிடுவதில்
    அன்னையாய் இருக்கும்
    போது.
    தன்னலமில்லாத ,
    செயற்கைத் தனமில்லாத
    எல்லா பெண்களுமே அழகு
    தான்sountha

lundi 25 janvier 2016

தனி மரம் தோப்பாகாது



தனி மரம் தோப்பாகாது; தனி மனிதன் சமூகமாக மாட்டான். உணர்வு, எண்ணம், அறிவு ஆகியவற்றை பரிமாறிக் கொள்வதால் பயன் கிடைக்கிறது. நல்லது – கெட்டது, சுகம் – துக்கம், அறிவு – அறியாமை, தெளிவு – குழப்பம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் போதுதான், அவை அர்த்தம் பெறுகின்றன. தோன்றியதை சொல்ல சக மனிதன் தேவைப்படுகிறான். இப்படி பரிமாறிக் கொள்வதால், ஆதாயம் மற்றும் இழப்பு ஆகியவை இரு சாராருக்கும் கிடைக்கிறது. பலனை பொறுத்து, உறவு நிற்கும் அல்லது நீர்த்துப் போகும். 
மனிதன், தனக்காக வாழலாம்; ஆனால், தானாக வாழ முடியாது. இது, உலக நியதி. அதனால்தான், ‘யாருக்காக வாழ்கிறோம்’ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதைப் பொறுத்து தான், வாழ்க்கையில் ஈடுபாடு ஏற்படுகிறது. உயிர் உள்ளது, உயிர் அற்றது என்று, உலகில் உள்ளவற்றை பிரிக்கலாம். உயிர் உள்ள அனைத்தும், உணர்வை வெளிப்படுத்துகின்றன. உணர்வுகளை வெளிப்படுத்துவதால் உறவுகள் ஏற்படுகின்றன. அடுத்த கட்டமாக, உணர்வுகளை பகிர்ந்து கொள்வதும் அவசியமாகிறது. இப்படித் தான், அறிவு மற்றும் எண்ணங்கள் பரிமாறப்படுகின்றன.

சங்கடப்படும் போதுதான் ஆதரவும், துணையும் அதிகமாக தேவைப்படும். அதுபோல் சந்தோஷமாக இருக்கும்போது, அதை பகிர்ந்து கொள்ளவும், நமக்கு உறவுகள் தேவைப்படுகின்றன. எனவே உறவை சார்ந்திருங்கள்.

மாற்றம் ஒன்றே மாறாதது



இரவு பகலாகிறது; பகல் இரவாகிறது. கோடை போய் குளிர் வருகிறது; வறட்சி போய் வெள்ளம் வருகிறது. பூ காயாகிறது; காய் கனியாகிறது; கனி செடியாகிறது. குழந்தை பெண்ணாகிறாள்; பெண் தாயாகிறாள். இளமை மாறி முதுமை ஆட்சி செய்கிறது. இதைத்தான் மாற்றம் ஒன்றே மாறாதது என்கிறோம்.
மாற்றம் மட்டும்தான் நிரந்தரம். அனைத்து உயிரினங்களும், அவற்றுக்கே உரித்தான குணங்கள் மற்றும் பண்புகளை உள்ளடக்கியிருக்கின்றன. அவை நிலையானது என, நம்பப்படுகிறது

.
ஆனால், அனுபவத்தில் என்ன காண்கிறோம்? அன்பு வெறுப்பாகிறது; வெறுப்பு பாசமாகிறது; கோபம், சாந்தமாகிறது; சாந்தத்தை கோபம் காலி செய்கிறது. அதாவது மனிதனின் குணம் மாறி கொண்டே இருக்கிறது.
ஏன்? தேவை, வசதி, வாய்ப்பு, சூழ்நிலைக்கு ஏற்ப, ஆபத்தை தவிர்த்து, நன்மை கருதி, குணம் மாறுபடுகிறது; மாற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகிறது. இதைத்தான் மாற்றம் ஒன்றே மாறாதது; மாற்றம் மட்டும்தான் நிலைத்திருக்கும் என்கிறோம்.
மாற்றம் வரும்போது, அதை மனிதன் ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். இதை புரிந்து கொண்டால், மாற்றத்தை சந்திக்கும் போது, ஏமாற்றம் அடைய வேண்டி இருக்காது. 

samedi 23 janvier 2016

முதல் வணக்கம் இடும்பனுக்கே



முதல் வணக்கம் இடும்பனுக்கே




-
தைப்பூசம் என்றாலே, பழநியும், காவடியாட்டமும் தான் நினைவுக்கு வரும். இந்தக் காவடியை, முதன்முதலாக முருகனுக்கு காணிக்கை செலுத்தியவன், இடும்பன். முருகனால் அழிக்கப்பட்ட சூரபத்மன், பானுகோபன், கஜமுகாசுரன் மற்றும் சிங்கமுகன் போன்ற அசுரர்களுக்கு, வில்லாசிரியனாகத் திகழ்ந்தவன் இடும்பன். இவனும், இவனது மனைவி இடும்பியும் சிறந்த சிவபக்தர்கள்.
-
சிவசக்தி சொரூபங்களாக விளங்கிய சிவமலை மற்றும் சக்திமலையை, தன் பூஜைக்காக முருகப் பெருமானிடம் கேட்டார் அகத்தியர். முருகப் பெருமானும் அவற்றைக் கொடுக்க, கேதார்நாத்தில் உள்ள பூர்ச்சவனம் என்னும் இடத்தில் அம்மலைகளை வைத்து, வணங்கி வந்தார் அகத்தியர். இந்நிலையில், அவர் பொதிகை மலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அங்கு சென்று விட்டார்.
-
பொதிகையில் வன சஞ்சாரம் செய்து வந்த இடும்பன், அகத்தியரைக் கண்டான். அவரிடம் முருகப் பெருமானின் தரிசனம் பெற விரும்புவதாகக் கூறினான். அசுரர்களின் குருவாயினும், அவனது பக்தியை அறிந்த அகத்தியர், 'கேதார்நாத்திலுள்ள சிவமலை மற்றும் சக்தி மலையை பொதிகைக்கு கொண்டு வந்தால், முருகனின் தரிசனம் கிடைக்கும்...' என்றார்.
-
இதனால், இடும்பனும், அவன் மனைவியும் கேதார்நாத் சென்று, மலைகளை தூக்குவதற்கான சக்தி வேண்டி, சிவனை நோக்கி தவமிருந்தனர். அப்போது, பிரமதண்டமும் (கம்பு), எட்டு ராட்ஷச நாகங்களும் அங்கே தோன்றின. பாம்புகளை கயிறாக்கி, மலைகளை பிரம தண்டத்தின் இருபுறமும் காவடி போல் கட்டி, அதைச் சுமந்தபடி, பொதிகை மலை நோக்கி நடந்தான் இடும்பன். பாரம் அதிகமாகவே, பழநியின் அன்றைய புராணப் பெயரான திருவாவினன்குடியில் இறக்கி வைத்தான்.
-
பின், மீண்டும் தூக்க முயன்ற போது, அவனால் முடியவில்லை. அப்போது, சிவமலையின் மீது, சிறுவன் ஒருவன் விளையாடுவதைப் பார்த்து, அவனை மலையில் இருந்து இறங்கும்படி சொன்னான் இடும்பன். சிறுவன் மறுத்ததுடன், 'இது நான் தங்கப் போகும் மலை...' என்று வாதிட்டான்.
-
இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, தன் கையில் இருந்த தண்டத்தால், இடும்பனை லேசாகத் தட்டினான் சிறுவன். அந்த அடியைத் தாங்க முடியாமல், கீழே விழுந்து இறந்தான் இடும்பன். அதைப் பார்த்து அழுது புலம்பிய இடும்பி, சிறுவனின் காலில் விழுந்தாள்.
-
அச்சிறுவன், முருகனாக காட்சி தந்து, இடும்பனை எழுப்பி, 'இடும்பா... இம்மலையின் இடையில் நீ நிற்க வேண்டும். பக்தர்கள் எனக்குரிய வழிபாட்டு பொருட்களை, உன்னைப் போன்று காவடி தூக்கி எடுத்து வருவதுடன், உன்னை வழிபட்ட பின்னரே, என்னை வழிபட வேண்டும்; உன்னை வணங்கியவர்கள், என்னை வணங்கிய பலனைப் பெறுவர்...' என்று கூறி அருள்பாலித்தார்.
-
கடந்த, 2000ம் ஆண்டில் பழநிமலை எதிரிலுள்ள மலையில், இடும்பனுக்கு தனிக்கோவில் அமைக்கப்பட்டது. 13 அடி உயரத்தில், இடும்பன் காவடி தூக்கி வருவது போன்ற சிலை, பிரதிஷ்டை செய்யப்பட்டது. 540 படிகள் ஏறினால் தான், இடும்பனை தரிசிக்க முடியும்.
-
பகவானை விட, பக்தனே உயர்ந்தவன் என்று தன் நிலையை விட்டுக் கொடுத்த அருள் தெய்வம் முருகன். பழநி சென்றால், இடும்பன் மலைக்கு செல்ல தவறாதீர்கள்!.

கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது




உருகி உருகி நான் பிராத்திக்கும் கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது

நான் : கடவுளே நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா?

கடவுள் : தாரளமாக கேள்

நான் : பொறுமையா கோபப்படாமல் பதில் சொல்வீர்களா?

கடவுள் : சத்தியமாக!

நான் : இன்னைக்கு ஏன் எனக்கு இப்படி ஒரு மோசமான நாளை கொடுத்தீங்க?

கடவுள் : என்னப்பா சொல்லுற நீ?

நான் : எப்பவும் சரியா எழுந்திருக்கிற நான் இன்னைக்கு எழுந்திரிச்சதே லேட்

கடவுள் : ஆமாம்! அவசரத்துல என்னை கூட கும்பிடாம ஆபீஸ்க்கு புறப்பட்டாய்.

நான் : கிளம்பினதே லேட் இதுல என் பைக் வேற பஞ்சர் ஆகியிருந்தது.

கடவுள் : ஆமாம் எனக்கு தெரியும்.

நான் : சரி! பஸ்ல போலாம்னு பஸ்ஸை பிடிச்சா வழியில ஏதோ ஆக்சிடெண்ட் போல ஒரே டிராஃபிக் ஜாம். ஆபீஸ்க்கு ஒரு மணிநேரம் லேட்.

கடவுள் : ஆமாம்! தெரியும்.

நான் : மதியம் சாப்பிட கொஞ்சம் லேட் ஆகிடிச்சு அதுக்குள்ளே கேண்டீன்ல சாப்பாடு காலியாயிடுச்சு கடைசீயில பசிக்கு ஏதோ கிடைச்சதை அரைகுறையா சாப்பிட்டுட்டு வந்தேன்.

கடவுள் : ஆமாம் அதுவும் தெரியும்.

நான் : வங்கியில் பர்சனல் லோன் அப்ளை பண்ணியிருந்தேன். அது விஷயமா ஒருத்தர் கிட்டே ஃபோனை எதிர்பார்த்திருந்தேன். சாயந்திரம் வீட்டுக்கு திரும்பும்போது அவர் கிட்டேயிருந்து எனக்கு கால் வந்தது. பேட்டரியில சார்ஜ் இல்லாம மொபைல் அந்த நேரம் பார்த்து ஆஃப் ஆயிடிச்சு.

கடவுள் : ஆமாம் தெரியும்.

நான் : அதை பிடிச்சி! இதை பிடிச்சி! முட்டி மோதி வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் ரூம்ல ஏ.சி.யில உட்கார்ந்து டி.வி.யை பார்த்து ரிலாக்ஸ் பண்ணலாம்னா ஏ.சி. ரிப்பேர் ஆகி வேலை செய்யல

இன்னைக்கு எனக்கு எதுவுமே சரியில்லையே ஒரு நாள் உங்களை கும்பிட மறந்ததுக்கு இவ்ளோ கஷ்டங்களா?

(கடவுள் பலமாக சிரிக்கிறார். சில வினாடிகள் கழித்து! பேச ஆரம்பிக்கிறார்)

கடவுள் : இன்னைக்கு உன் கர்மாவின் படி மிகவும் மோசமான நாள். நீ காலை அசந்து தூங்கிகிட்டிருக்கும்போதே மரணதேவன் உன்னை நோக்கி வந்துட்டான். அவன் கூட வாக்குவாதம் பண்ணி உன்னை காப்பாற்ற வேண்டி உன்னை கொஞ்சம் அதிக நேரம் தூங்க வெச்சேன்.

நான் : (அதிர்ச்சியுடன்) ஓ

கடவுள் : உன் பைக்கை பஞ்சராக்கினேன். ஏன்னா! நீ ஆபீஸ் போகும்போது நீ போற ரூட்ல பிரேக் பிடிக்காம தாறுமாறா ஓடுற வேன் ஒன்னு உன் மேல இடிக்கிறதா இருந்தது. அந்த வேன் ஆக்சிடெண்ட்டாகி தான் டிராபிக் ஆச்சு. நீ பைக்ல போயிருந்தா அந்த வேன் மரணதேவன் கணக்குப்படி உன் மேல இடிச்சிருக்கும்.

நான் : (அடக்கத்துடன்) ஓ

கடவுள் : மதியம் உனக்கு சாப்பாடு கிடைக்காம போனதுக்கு காரணம் கடைசீயா மிச்சமிருந்த குழம்புல எலிக்கு வெச்சிருந்த எலி பாஷாணம் எப்படியோ தவறி விழுந்துடிச்சு! யாரும் அதை கவனிக்கல அதை நீ சாப்பிட்டிருந்தா என்னாகியிருக்கும்?

நான் : (கண்கலங்கியபடி) ம்ம்

கடவுள் : சாயந்திரம் உன் அலைபேசி சுவிச் ஆப் ஆனதுக்கு காரணம்! அந்த நபர் உனக்கு தவறான வாக்குறுதிகள் கொடுத்து இக்கட்டில் மாட்டிவிட இருந்தார். எனவே அதிலிருந்து காப்பாற்ற வேண்டி உன் ஃபோனை செயலிழக்கச் செய்துவிட்டேன்.

நான் : ம்ம்

கடவுள் : அப்புறம் அந்த ஏ.சி. மெஷின் எர்த் கோளாறு ஏற்பட்டு அதில் முறையற்ற முறையில் கரண்ட் வந்துகொண்டிருந்தது. ஒருவேளை முகம் கழுவிக்கொண்டு ஈர கைகளுடன் எப்போதும் போல நீ சுவிச்சை தொட்டிருந்தால் அந்த கணமே தூக்கி எறியப்பட்டிருப்பாய், ஆகையால் அதை செயலிழக்கச் செய்தேன்.

என்னை வணங்க மறந்ததால் அன்று முழுதும் நீ சோதனையை சந்தித்தாய் என்று என்னை தவறாக நினைத்துகொண்டாய். ஆனால் அனுதினமும் நீ என்னை வணங்கி வந்த காரணத்தால் நீ என்னை மறந்த அன்றும் கூட நான் உன்னை காக்க மறக்கவில்லை.

நான் : இப்போ புரிகிறது இறைவா! என் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பும் அக்கறையும். இது புரியாமல் உங்களை ரொம்பவும் நிந்தித்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்.

கடவுள் : மன்னிப்பு கேட்காதே! என்னை நம்பு, எப்போதும் எந்த சூழ்நிலையிலும். அது போதும்!

நான் : நிச்சயமாக

கடவுள் : நீ திட்டமிடுவதை விட உனக்காக நான் திட்டமிடுவது எப்போதும் சரியாகவே இருக்கும்.

நான் : இனி நிச்சயம் உங்களை சந்தேகப்படமாட்டேன். உங்கள் அருளை சந்தேகப்படமட்டேன். கண்ணை இமை காப்பது போல ஒவ்வொரு கணமும் நீங்கள் என்னை காப்பதை புரிந்துகொண்டேன்.

கடவுள் : என்னை நம்பியிருப்பவர்களை நான் என்றும் கைவிடுவதில்லை!

mara



கிட்டாதாயின் வெட்டென மற:
காதலியைப் பிரிந்து போர்க்களத்தில் இருந்த ஒரு ராணுவ வீரனுக்கு அவன் காதலியிடமிருந்து ஒரு கடிதம். ‘நீ சென்ற பிறகு எனக்கு ஒரு BoyFriend கிடைத்தான். அவனைத்தான் நான் மணக்கப் போகிறேன். அதனால், உன்னிடம் உள்ள என் புகைப்படத்தை திருப்பி அனுப்பிவிடு’ என்று அதில் எழுதியிருந்தது.
அவளுக்கு பதிலடி கொடுக்க நினைத்த அவன், சக வீரர்களின் காதலி, தோழிகள் என்று பல பெண்களின் புகைப்படங்களையும் சேகரித்து, அவற்றோடு அந்தக் காதலியின் புகைப்படத்தையும் சேர்த்து அனுப்பினான். கூடவே, ஒ...ரு கடிதம்… ‘உங்கள் கடிதம் கிடைத்தது. எவ்வளவு யோசித்தும் உங்கள் முகம் எனக்கு ஞாபகம் வரவேயில்லை. அதனால் நான் இதுவரை சந்தித்த எல்லா பெண்களின் புகைப்படத்தையும் அனுப்பி உள்ளேன். உங்கள் படத்தை எடுத்துக் கொண்டு, மற்றதை திருப்பி அனுப்பி விடவும்!’’
நம்மைப் புறக்கணிப்பவர்களுக்கு சரியான தண்டனை நாம் அவர்களைப் புறக்கணிப்பதுதான். அவன் நல்லவனோ… கெட்டவனோ, கெட்டவன் என்று நினைத்துக் கொள்வதுதான் நமக்கு நல்லது.

mum



என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த 'முதியோர் இல்லத்தில்' இருந்து கடிதம் வந்திருக்கு . "உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க"...!!!என்ற மனைவியை திரும்பிப் பார்த்தான் அவன் ஏன் என்னவாம் ...? இப்ப தானே போன மாசம் போய் பார்த்துட்டு வந்தேன் என்றவனிடம்…
"இந்தாங்க கடிதத்தை வாசித்துவிட்டு போய் என்னனுதான் பாத்துட்டு வாங்க"...? நீங்க பாட்டுக்கும் இது 'தான் சாக்குன்னு' இப்பவே கூட்டிகிட்டு வந்துடாதீங்க...! இங்க ஏற்கனவே ஏகப்பட்ட செலவு இருக்கு..! இதுக்கு நடுவுலே அவங்களை வேற பாக்க முடியாது. 'பொண்...ணு படிப்புச்' செலவுக்கே இங்க 'முழி' பிதுங்குது, இதுலே உங்க அம்மா 'வைத்திய செலவு' வேற செய்யமுடியாது பார்த்துக்கங்க'...என்றாள்
சரி... சரி... விடு நான் பார்த்துக்கறேன் என்ற அவன் மனதிலும் அம்மாவை பற்றிய இனம் புரியாத பயமும், அதே நேரம் மனைவி மீது கோபம் கோபமாய் வந்தது. மறுநாள் காலை அம்மாவை பார்க்க'முதியோர் இல்லம்' சென்ற சந்துரு அங்கிருந்த மேடத்திடம் விபரம் கேட்க,
அவங்க அம்மா கொடுக்க சொன்னதாக அவர்கள் அவன் கையில் 'ஒரு கவரை' கொடுத்தாங்க. அதை பிரித்த பார்த்த போது அவன் பெயருக்கு '2 லட்ச ரூபாய்க்கான டி.டி யும்', ஒரு கடிதமும் இருந்தது.
படித்த அவன் அதிர்ந்து போனான் அதில்
அன்பு மகனுக்கு, உன் தந்தை இறந்தபோது 'உன்னை நான் சுமையாக' அப்போது நினைக்கவில்லை. இப்போதும் உனக்கு 'நான் சுமையாக' இருக்க விரும்பவில்லை.
உன் மனைவி எதிர்பார்ப்பது போல் என்னால் 'உடல் உழைப்பை தர முடியவில்லை. நீ கஷ்ட படுவதை பார்க்க என்னால் முடியவில்லை.
இந்த நிலையில் என்னால் என்ன செய்யமுடியும் ?
ஆனாலும் உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று ஏங்கிக்கொண்டிருந்தபோது செல்வந்தர் ஒருவருக்கு அவசரமாக கிட்னி தேவைப்பட்டது. அதனால் எனது "கிட்னீயை" விற்று அந்தப்பணத்தை உனக்கு கொடுத்திருக்கிறேன்.
கடனையெல்லாம் அடைத்து விட்டு என் 'பேத்தியை' நன்கு படிக்க வை..!.
அவள் நாளை 'உன்னை உன் மனைவியை' காப்பாத்துவா.! பாத்துக்க எல்லாத்தையும்,
நீங்க எல்லாம் 'நல்லாருக்க' நான் அந்த கடவுள் கிட்ட வேண்டிகிறேன்...! நான் போகிறேன்...? அன்பு அம்மா ...!
அவன் அப்படியே 'இடிந்து' போய் விட்டான். இன்றுவரை 'மனதிற்குள் சொல்லி'... சொல்லி... 'அழுது' கொண்டுதான் இருக்கிறான்...!
நண்பா...! இது ஒரு "கதையல்ல நிஜம்"...!
நீதி: 'அன்பு' என்பது 'அன்னையிடம்' மட்டுமே எல்லா காலங்களிலும் 'அமுதமாய்' கிடைக்கும்.
"தாயின் அன்பை யாருக்காகவும் தள்ளி வைக்காதீர்கள்"...!

ros



ஒரு ஊரில் ஒரு பெரியவர் இருந்தார், அவர் ஆசையாக ஒரு ரோஜா செடியை அவர் வீட்டு வாசலில் வைத்து வளர்த்து வந்தார்.. அந்த செடி அழகாக பூத்து குலுங்கியது..அந்த செடி வளர்ந்து வரும் வேளையில் அந்த பக்கமாக வரும் ஆடு, மாடு கோழி போன்றவை அந்த செடியை மிதிப்பதும், கடிப்பதுமாக நாசம் செய்து கொன்டிருந்தன.. இதை கண்ட அந்த பெரியவர் அந்த செடியை பாதுகாக்க என்னி அந்த ரோஜா செடியை சுற்றிலும் சில முள் வேலிகளை போட்டு வைத்தார்.. ரோஜா செடியை சுற்றிலும் முள் வேலிகள் இருந்ததால் அந்த செடி பாதுகாப்பாக வளர்ந்து வந்தது.. இப்போது ஆடு, மாடு, கோழிகளால அந்த செடிக்கு ஆபத்து இல்லை.. சிறிது காலம் சென்றது அந்த பெரியவர் இறந்து விட்டார்..
பிறகு அவருடைய மகன் வந்தான், அந்த செடியை பார்த்தான் தன் தந்தை ஆசையாக வளர்த்த செடி ஆயிற்றே என்று அவனும் ஆசையாக தன்னீர் ஊற்றி வளர்த்து வந்தான்.. சிறிது காலத்தில் அவனும் இறந்து விட்டான் பிறகு அவனுடைய மகன் வந்து இது, என் தாத்தாவும் தந்தையும் வளர்த்த செடி நானும் வளர்க்க வேண்டும் என்று அவனும் தண்ணீர் ஊற்றி வளர்க்க ஆரம்பித்தான்.. இப்படியே ஒவ்வொரு தலைமுறையும் அந்த செடியை வளர்த்து வருகிறோம்.. ஆனால் உண்மையில் நடந்தது அந்த ரோஜா செடி பெரியவர் காலத்திலேயே பட்டுப்போய் விட்டது, இப்போது அவர்கள் செடி என்று வளர்ப்பதெல்லாம் அதை சுற்றி இருந்த முள் வேலிகளையே..
இதே போலத்தான் பெரியவர்கள் மதம் என்று ஒன்று உருவாக்கியது மனிதனை செழுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே, அந்த மதம் அழியாமல் இருக்க முள் வேலி போன்று மதத்திற்க்கு சில சம்பிரதாய சடங்குகளை விதித்தனர்.. ஆதியில் மதத்தை கடைபிடித்த மனிதன் இப்போது ஒவ்வொரு மதத்திலும் இருக்கும் சம்பிரதாய சடங்குகளையே மதம் என்று என்னி கடைபிடிக்க ஆரம்பித்து விட்டான்.. இன்று ஒவ்வொரு மதத்திலும் இருக்கும் உண்மையை பின்பற்றுவோர் வெகுசிலரே..

mardi 19 janvier 2016

ஆருகிட்ட...



வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவன் இந்தியா முழுவதும் சுற்றிப்பார்க்கிறான். ஒவ்வொரு மாநிலமாக சுற்றும் அவன் டெல்லிக்கு போகிறான்.

அங்கு பாராளுமன்றத்தை பார்த்து "அட....அழகா இருக்கே....இது என்ன?" என்று டாக்சி டிரைவரிடம் கேட்க, அதற்க்கு டிரைவர்" இது எங்க நாட்டு பாராளு மன்றம்" என்றான். "இது எவ்வளவு நாளில் கட்டியது?" என்று பயணி கேட்க "தெரியல....ஒரு அஞ்சாறு வருஷம் கட்டியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்" ன்னு பதிலளித்தான் டிரைவர்.

"அஞ்சாறு வருஷமா? எங்க நாடா இருந்தால் அஞ்சு மாசத்துல கட்டியிருப்போம்" ன்னு பீத்திக்கிட்டான.

அடுத்து இந்தியா கேட்....
"இது என்ன?"
இது இந்தியா கேட்."
"இதை கட்டி முடிக்க எத்தனை நாளாச்சு?"
"தெரியல....ஒரு வருஷம் இருக்கலாம்"
"ஒரு வருஷமா? எங்க நாடா இருந்தா...ஒரு மாசத்துல கட்டியிருப்போம்" மறுபடியும் பீத்திக்கிட்டான் வெளிநாட்டான்.

டாக்சி டிரைவர் கடுப்பாகிட்டன் இருந்தாலும் காட்டிக்கல....

அடுத்து தாஜ் மஹால்
"ஓ.....இதான் தாஜ்மஹாலா? அருமையா இருக்கே....இதை கட்டி முடிக்க எவ்வளவு வருஷமாச்சு?"

இதை கட்டிமுடிக்க இருபது வருஷமாவது ஆகிருக்கும்ன்னு சொன்னா....உடனே இவன் எங்க நாட்டுக்காரங்க இருபது மாசத்துல கட்டியிருப்போம்ன்னு பீத்திக்குவான் ன்னு மனசுல நினைச்சுக்கு.....கொஞ்ச நேரம் யோசிப்பது போல நடித்துவிட்டு டாக்சி டிரைவர் பதிலளித்தான்.

"தெரியல சார். நான் போன வாரம் இந்தப்பக்கம் வரும்போது இது இங்கே இல்லை. எப்படி அதுக்கிடையில கட்டி முடிச்சாங்கன்னு ஆச்சயமா இருக்கு"ன்னு போட்டான் பாருங்க ஒரு போடு....

அதோடு வெளிநாட்டான் வாயே திறக்கல.....

ஆருகிட்ட...

தீப்பற்றிக் கொண்டால்...



தீப்பற்றிக் கொண்டால்...

பல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொண்டால் ஆபத்துதான். தீ விபத்துகளால் ஏற்படும் சேதங்கள் இன்னும் ஏராளம். இந்த ஆபத்துகளில் இருந்து உங்கள் உடமை, உயிர், உறவினர்கள் யாவரையும் காப்பாற்ற அவசியம் அறிய வேண்டிய முதலுதவி முறைகள்....
  • நீங்கள் அறிந்து எங்காவது தீப்பற்றிக் கொண்டால் உடனே தீயணைப்புத் துறைக்கு (போன் எண் 101) தகவல் தெரிவியுங்கள்.
  • எண்ணை மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீவிபத்துகளை நீரூற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள்.
  • விபத்தின்போது தீப்பிடித்து எரியும் நபரின் அருகில் நீங்கள் இருந்தால் உடனே அவரை கீழே தள்ளி கம்பளம் - போர்வை, கோணி இதில் ஏதாவது ஒன்றினால் அவரை இறுகச் சுற்றினால் தீ பரவாமல் அணைந்து விடும்.
  • ஆடையில் தீப்பற்றி விட்டால் பயந்து ஓடக்கூடாது. ஓடினால் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பற்றி எரியும். அதனால் தீப்பற்றியவர் கீழே படுத்துக் கொள்ள வேண்டும்.
  • சூடான பாத்திரங்களை தொடுவதனாலோ, கொதிக்கும் சூடான எண்ணெய் தெறித்து விழுவதினாலோ, சூடான பொருள் உடலின் மீது விழுவதனாலோ ஏற்படும் சிறு புண்கள், கொப்புளங்களை கையினால் தேய்ப்பதோ, நகத்தால் கிள்ளுவதோ கூடாது. அப்படி செய்தால் விஷக் கிருமிகள் உள்ளே சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். அந்தக் கொப்புளங்களின் மீது `ஆன்டிசெப்டிக்' மருந்துகளை வைத்து லேசாக கட்டுப்போட வேண்டும்.
  • தீக்காயங்களுக்கு தேன் மிகவும் பயன்தரும். தேனை காயத்தின் மீது தடவலாம். முட்டையின் வெள்ளைக் கருவை புண்ணின் மீது தடவினால் எரிச்சல் குறையும்.
  • கடுமையான தீக்காயங்களுக்கு அதன் மீது காற்றுப்படாமல் மூட வேண்டும். இது வலியை குறைக்கும்.
  • தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை அகற்றக் கூடாது.
  • இரண்டு கரண்டி சமையல் சோடாவை நீரில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பானதும் சுத்தமான துணியை அந்த நீரில் நனைத்து தீப்புண்ணை மூடலாம். துணி காய்ந்துபோனால் மீண்டும் அந்த நீரை சொட்டு சொட்டாக விட்டு நனைக்கலாம்.
  • தீக்காயம் பட்டவருக்கு அடிக்கடி உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு கலந்த நீர், வெந்நீர் இவற்றைக் கொடுக்கலாம்.
  • தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

நிறம் தரும் பலன்


நிறம் தரும் பலன்

காதலர் தினத்தில் ஒவ்வொருவரும் அணியும் உடைக்கு ஒரு சங்கேத மொழி இருக்கிறது. தங்கள் உடை மூலம் அதை தெரியப்படுத்துவார்கள். அதேபோல் உங்களுக்கு பிடித்த கலரை சொன்னால் அதை வைத்து ஒரு ஜோதிடமே சொல்கிறார்கள்.

வெள்ளை
நிறத்தை விரும்புகிறவர்கள், இளமை விரும்பிகள். எல்லா செயலிலும் முழுமையாக எதிர்பார்பார்கள். ஆனால் அது நடக்காது. ஆழம் பார்த்து காலை விடுபவர்கள். அதனால் சாமான்யத்தில் ஏமாற மாட்டார்கள்.

சிவப்பு நிற விரும்பிகள் எப்போதும் ஆக்டீவாகவே இருப்பார்கள். வேகமாக செயல்படுவார்கள். இந்த கலர் பிடித்தவர்களுக்கு ஒரே வித வாழ்க்கை என்றால் கசப்பு. அதனால் துணைகளை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் உண்டு. இவர்களுக்கு அதிகமான மனவலிமை இருக்கும். அதுதான் இவர்களின் பலமும் பலவீனமும்.

பிங்க் நிறம் பிடித்தவர்கள் சரியான சுயநலவாதிகள். எப்போதும் தன்னை யாரவது கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்பவர்கள். இதற்காக பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு பரிதாபமாக நடிப்பார்கள்.

மெரூன் நிறம் பிடித்தவர்கள் மெச்சூரிட்டி தெரிந்தவர்கள், வாழ்க்கையில் அடிபட்டு, படிக்கட்டில் ஏறி வந்தவர்களுக்கு மெரூன் பிடிக்கும். தனக்கு உதவி கிடைக்காததால் அனுபவித்த கஷ்டங்களை மற்றவர்களும் படக்கூடாது என்பதற்காக சுற்றி இருப்பவர்களுக்கு உதவி செய்வார்கள்.

ஆரஞ்சு நிறம் விரும்பிகள் சுகவாசிகள். அவர்களுக்கு எப்போதும் சந்தோசம் வேண்டும். சந்தோஷத்துக்காக நிலை இல்லாமல் அலைவார்கள்.

மஞ்சள் நிறம் பிடித்தவர்கள் புத்திசாலிகளாகவும் கற்பனை வளம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். சுதந்திரமாக செயல்பட்டால் சாதனை புரிவார்கள்.

பச்சை நிறம் பிடித்தவர்கள் மென்மையானவர்கள். அதே வேளையில் எப்போதும் நேர்மை தவற மாட்டார்கள். அன்பு தான் இவர்களின் ஆயுதம். அன்பு தான் இவர்களின் சாய்ஸ். அதனால் சுற்றிலும் இருப்பவர்கள் எப்போதும் துரோகம் செய்து கொண்டே இருப்பார்கள்.

கறுப்பு நிறம் பிடித்தவர்கள் மரியாதை கொடுத்து மரியாதை பெறுவார்கள். மற்றவர்களை சுலபமாக நண்பர்கள் ஆக்கிக் கொள்வார்கள். மரியாதை என்பது இவர்களுக்கு மரணம் போல அவர்கள் விரும்பாவிட்டாலும் தேடி வரும்.

லேவண்டர் நிறம் பிடித்தவர்கள் கலாச்சாரக் காவலர்கள். பழமை விரும்பிகள். புதுமையை ரசிக்க முடியாதவர்கள். ஏற்றுக் கொள்ள முடியாமல் தயங்குபவர்கள். கட்டம் போட்ட பேண்ட் இவர்களுக்கு அலர்ஜி. எண்ணம் எல்லாமே உயர்வாக இருக்கும். ஆனால் வேலை என்று வந்து விட்டால் விழுந்தடித்து ஓடுவார்கள். ஓடிப்போய் குறட்டை விட்டு தூங்குவார்கள். வேலைக்கும் இவர்களுக்கும் ஆகாது

இப்படி நிறங்களை வைத்து ஒருவரின் கேரக்டரை சொல்லி விட முடியும். கேரக்டருக்கு ஏற்றார் போல் மனித மனம் அந்த கலரை விரும்பும். வாழ்க்கை முழுவதும் ஒரே கலர்தான் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. அவ்வபோது பிடித்த கலர்களின் பட்டியல் மாறும். அதற்கு ஏற்றாற்போல் அவர்களின் கேரக்டர்களும் மாறும் என்று அடித்துச் சொல்கிறார்கள், நிற ஜோதிடர்கள்.                    

மன்னிப்பு மகத்துவமானது!


மன்னிப்பு மகத்துவமானது!

வீல் சேரில் அமர்ந்திருந்தாள் அந்த ஐந்து வயதுச் சிறுமி கேய் லீ ஹேரியட்.

இடம் அமெரிக்காவின் பாஸ்டன் நகர நீதிமன்றம்.

2003-ம் ஆண்டில் அவளுக்கு மூன்று வயதாக இருக்கும்போதுதான் அந்தத் துயரம் நடந்தது.

ஒரு நாள் கேய் தனது சகோதரியுடன் உற்சாகமாய்ப் பாட்டுப் பாடிக்கொண்டிருந்தபோது மூன்று இரக்கமற்ற துப்பாக்கிக் குண்டுகள் எங்கிருந்தோ பறந்து வந்தன. அவளுடைய முதுகெலும்பை உடைத்தன. உற்சாகப் பறவைக்கு வீல் சேர் வாழ்க்கையானது.

நீதிமன்றத்தில் அவளுக்கு முன்னால் நின்றிருந்தான் இருபத்து ஒன்பது வயதான ஆண்டனி வாரன். நீதிமன்றம் அவனைக் குற்றவாளி என தீர்ப்பிட்டது.

சிறுமி கேய் அவனருகில் சென்றாள். திடீரென தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். பார்த்தவர்களெல்லாம் கலங்கினார்கள். பின் சிறுமி அவனிடம் சொன்னாள், 'நீங்கள் செய்தது தவறு. ஆனாலும் உங்களை நான் மன்னிக்கிறேன்.'

ஐந்து வயதுச் சிறுமியின் அச்செயல் அந்த நீதிமன்றத்தையே நிலைகுலைய வைத்தது. பார்த்துக் கொண்டிருந்தவர்களெல்லாம் நெகிழ்ந்தார்கள். அதுவரை சுட்டவன் மீது கொடும் பகையுடன் இருந்த அவளுடைய தாயும் உடனடியாக அந்த நபரை மன்னித்தார்!

இந்த நிகழ்வு அமெரிக்காவின் அனைத்துத் தொலைக் காட்சிகளிலும் ஒளிபரப்பாகி பலரையும் தொட்டது.

மன்னிப்பு எனும் வார்த்தை மனிதகுலத்துக்கே உரிய மகத்துவமானது. மிகவும் எளிதாகச் செய்யக் கூடிய இந்தச் செயலைச் செய்வதில்தான் இன்று பலருக்கும் உலக மகா தயக்கம். அதனால்தான் நமது வாழ்க்கை சண்டை, அடிதடி, வெறுப்பு, கோபம், நோய்கள் என துயரத்தின் தெருக்களில் நொண்டியடிக்கிறது.

ஒருவர் உங்களைப் பற்றி ஏதோ தவறாகச் சொல்லி விட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நபர் மீது நீங்கள் கோபம் கொள்ளும் போது உங்களுடைய மனதில் ஒரு கல்லை வைக்கிறீர்கள். அது கனக்கிறது. அந்தக் கோபத்தை மீண்டும் மீண்டும் நினைக்க நினைக்க ஒவ்வொரு கல்லாய் அடுக்குகிறீர்கள். பாரம் கூடுகிறது, உடல் நிலை பாதிக்கிறது. ரத்த அழுத்தம் எகிறுகிறது. எல்லை மீறினால் மாரடைப்பே வந்து விடுகிறது.

ஆனால் இந்த நிகழ்வின் துவக்கத்திலேயே நீங்கள் அந்த நபரை மன்னித்துவிட்டால் அத்துடன் சிக்கல்கள் எல்லாம் முடிந்து விடும்.

மன்னிக்கத் தெரிந்த மனிதர்கள் ஈகோ எனும் எல்லைக்கு வெளியே நின்று வாழ்க்கையை அதன் அழகியலில் லயிப்பவர்கள். மனிதத்தின் புனிதமான பாதைகளில் பயணிக்கும் பாதங்கள் அவர்களுடையவை.

மன்னிப்பது கோழைகளின் செயல் என பலரும் நினைக்கிறார்கள். 'எதிரி நாட்டு மன்னனைப் போரிட்டு அழிக்கும் பரம்பரை நாம்' என மீசை முறுக்குகிறார்கள். உண்மையில் மன்னிப்பது தான் போரை விட வீரமானது. போர் உடல்களைத்தான் வெற்றி கொள்ளும், மன்னிப்பு மனதையே வெற்றி கொள்ளும். இதைத்தான் மகாத்மா சொன்னார், 'மன்னிப்பு பலவான்களின் செயல், பலவீனர்களால் மன்னிக்க முடியாது.'

நீங்கள் ஒரு நபரைப் பார்த்துக் கத்தியால் குத்தினால் அவருக்குக் காயம் ஏற்படும். ஆனால் ஒரு நபர் மீது கோபமாய் இருக்கிறீர்களென்றால் அவருக்கு எதுவும் நேராது. மாறாக அந்தக் கோபம் உங்களுக்குத்தான் கெடுதல் உண்டாக்கும். நீங்கள் யார் மீது கோபமாய் இருக்கிறீர்களோ அவர் இதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் தனது வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பார். எனவே மன்னிப்பு என்பது முதலில் உங்களுக்கு நீங்கள் செய்யும் நல்ல செயல் என்பதை உணருங்கள்.

பல வேளைகளில் தவறிழைக்கும் நபர்கள் தவறை உணர்ந்து தட்டுத் தடுமாறி மன்னிப்புக் கேட்பதுண்டு. அப்படிப்பட்டவர்களை நிபந்தனையற்று மன்னியுங்கள். 'சே... இதுல மன்னிப்பு கேக்க என்ன இருக்கு' என்பது போன்ற வார்த்தைகள் நட்பையும், உறவையும் பலமடங்கு இறுக்கமாக்கும்.

சிலர் மன்னிப்புக் கேட்க தயங்குவார்கள். அப்படிப்பட்டவர்களுடன் பழகும்போது எந்த வித்தியாசமும் இல்லாமல் பழகுங்கள். அவர்களை மனதார மன்னித்துவிட்டதைச் செயல்களில் காட்டுங்கள். மன்னிப்புக் கேட்கும் முன்னாலேயே மன்னிப்பது உயர்ந்த நிலை!

இன்றைய மனித உறவின் பலவீனங்கள் பலவேளைகளில் திடுக்கிட வைக்கின்றன. பெற்றோரை மன்னிக்க மறுக்கும் பிள்ளைகள், பிள்ளைகள் மீது வெறுப்பு வளர்க்கும் பெற்றோர், அரிவாளுடன் அலையும் சகோதரர்கள், வன்மத்துடன் திரியும் தம்பதியர்!

இவை எல்லாவற்றுக்குமான சர்வ ரோக நிவாரணி மன்னிப்பு என்பதை உணர்கிறீர்களா?

தவறே செய்யாத மனிதர்கள் இருந்தால், அவர்கள் மன்னிப்பு வழங்கத் தேவையில்லை. நாம் தவறும் இயல்புடையவர்கள் எனும் உணர்வு நமக்கு இருந்தால் மன்னிப்பு வழங்க மறுப்பதில் அர்த்தமில்லை!

மன்னிப்புக் கேட்கும் போதும் அடுத்தவரைக் குற்றம் சாட்டும் மனநிலையுடனோ, பழி போடும் மனநிலையுடனோ, ரொம்பவே தற்காப்பு மனநிலையுடனோ பேசாதீர்கள். 'செய்தது தவறு... வருந்துகிறேன்...' எனும் நேர்மையுடன் பேசுங்கள். உடனடியாக மன்னிப்புக் கிடைக்கவில்லையேல் பதட்டப்படாதீர்கள். சில ஈகோ பார்ட்டிகள் மன்னிப்பு வழங்க நேரம் எடுத்துக் கொள்வார்கள் என்பதை மனதில் இருத்துங்கள்.

மன்னிப்பைப் பற்றி மருத்துவம் சொல்வது கதிகலங்க வைக்கிறது. 'நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது. உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது. அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது. அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும்' என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

'மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.

'கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச்' சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.

ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் தனது 'லேர்ன் டு பர்கிவ்' (மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார்.

மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கின்றன ஏல் மெடிக்கல் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகள். மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இதுவே காரணமாம்.

இந்தியா மதங்களின் நாடு. மதங்கள் எல்லாமே மன்னிப்பைப் பேசுகின்றன. `ஒரு மனிதன் தேவ நிலையை அடையவேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்' என்கிறது பகவத் கீதை.

இஸ்லாம் கடவுளை 'அல் கபிர்' என்கிறது, முழுமையாய் மன்னிப்பவர் என்பது அதன் அர்த்தம்.

'மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்ல முடியாது' என்கிறது கிறிஸ்தவம்.

ஆனால் மதங்களைப் பின்பற்றும் நமது நாட்டில் மன்னிப்பு எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கிறது?

விடை தெரிய வேண்டுமெனில் தினசரியைப் புரட்டினாலே போதும்!

மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை. மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது. மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால் பெற்றோர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள் மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள். குழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும்போது எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்துவிடும்.

அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும். குறிப்பாக கணவன் மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்குகள், எரிச்சல்கள், வெறுப்புகள் போன்றவையெல்லாம் கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும்.

பலவேளைகளில் நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம். கோபம் என்பது வீரத்தின் அடையாளம் என்று போலியாக கற்பனை செய்து கொள்கிறோம். எதிர் நபர் மன்னிப்புக்குத் தகுதியற்றவர் என்று முடிவு கட்டி விடுகிறோம். அப்படி நினைப்பதன் மூலம் நாம் பெரியவர்களாக முயலும் உளவியல் சிக்கலே இது.

மன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது. ஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும். வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல. அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது.

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளைவிடும்.

மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள்.

மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள்.

உயிரில் உலவும் உள்ளன்பு
மலர்ந்து வருதல் மன்னிப்பு!

வாழ்வின் கிழக்கு புலரட்டும்!



'நட்பு என்பது இரண்டு உடல்களில் உலவும் ஒற்றை ஆன்மா' என்கிறார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில்.

நட்பின் பிணைப்பையும், இணக்கத்தையும் சொல்லும் ஓர் அசத்தலான வாசகமாய் இதைக் கொள்ளலாம்.

நட்பு இல்லாத மனிதன் இருக்க முடியாது. எல்லோருக்கும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். சில நண்பர்கள் ஆரம்ப கால அரை டவுசர் வாழ்க்கையோடு விடைபெறுகிறார்கள். சிலர் கல்லூரி கால வாழ்க்கையுடன் நின்று போய் விடுகிறார்கள். சிலர் அலுவலக வட்டத்துக்குள்ளேயே ஓடி ஓடி ஓய்ந்து விடுகிறார்கள்.

வெகு சில நண்பர்களே இந்த எல்லைகளை எல்லாம் தாண்டி நமது இதயத்தின் மேடையில் கூடாரமடித்துக் குடியிருக்கிறார்கள். நமது வாழ்க்கையின் பாதையில் நண்பர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. இளம் வயதில் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் நண்பர்களின் குணாதிசயங்கள் நம்மையும் தொற்றிக் கொண்டுவிடுகிறது.

ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாய் இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

நல்ல நண்பர்கள் எப்படி நம்மை உயரப் பறக்கவிடுவார்களோ, அதே போல தீய நண்பர்கள் நம்மை உயரத்திலிருந்து இழுத்து பள்ளத்தில் போட்டு விடுவார்கள். சரியான பாதையில் கப்பலைச் செலுத்தும் ஒரு மாலுமியைப் போல இருக்க வேண்டும் நல்ல நண்பன். 'கூடா நட்பு கேடாய் முடியும்' என வள்ளுவர் அந்தக் காலத்திலேயே அழுத்தமாய்ச் சொன்னதன் காரணம் அதுதான்.

இன்றைய இளைஞர்கள் பலரும் இந்த 'நட்புத் தேர்வு' ஏரியாவில் தவறி விடுகிறார்கள்.

'வாடா... தண்ணியடிக்கலாம்' என்று அழைப்பதுதான் உண்மை நட்பின் அடையாளமென நினைத்து விடுகிறார்கள்.

உண்மையான நண்பன் உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவான்... உங்களுடைய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவான்... உங்களைத் தீய வழியில் இழுக்க மாட்டான்... என்பதை மனதில் அழுத்தமாய் எழுதுங்கள்.
ஒருவேளை நீங்கள் புகை, மது போன்ற பழக்கங்களில் இருந்தால் உங்களை அதில் இருந்து வெளியே கொண்டு வருவதுதான் உண்மையான நண்பனின் பண்பு. அதை உற்சாகப்படுத்துவது அல்ல.
நல்ல நண்பன் உங்கள் தவறுகளைக் கடிந்து கொள்வான். உங்கள் மனம் கோணாமல் எப்போதும் நல்ல விஷயங்களையே சொல்லிக் கொண்டிருப்பவன் ஆத்மார்த்த நண்பன் அல்ல. நல்ல நண்பன் நாளைய வாழ்வில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் எனும் ஆர்வம் கொள்பவன். அப்படிப்பட்டவர்கள் உங்கள் குறைகளை உங்களிடம் சுட்டிக் காட்டத் தயங்க மாட்டார்கள். அதற்காத நட்பே போனால் கூட கவலைப்பட மாட்டார்கள்.

'நான் தண்ணியடிக்கிற விஷயத்தை அப்பாகிட்டே சொல்லாதே' என்பது போன்ற சத்தியங்களை நல்ல நண்பன் கண்டு கொள்வதில்லை. சில நேரங்களில் சத்தியம் கூட மீறப்படலாம் என்பது உண்மைத் தோழனுக்குத் தெரியும்.

உங்களுடைய லட்சியங்களை உங்கள் நண்பன் ஆதரிக்கிறானா? அல்லது அவனுடைய செயல்பாடுகள் உங்களுடைய லட்சியத்துக்குத் தடைக்கல்லாய் இருக்கிறதா? என்பதைப் பாருங்கள். உங்களுடைய லட்சியங்களைக் கிண்டலடிப்பவனோ, அதை நோக்கிய உங்கள் பயணத்தின்போது உங்களுக்கு ஊக்கமளிக்காமல் இருப்பவனோ உங்களுடைய நண்பன் அல்ல.

உண்மையான நண்பன் உங்களுடைய திறமைகளை முழுமையாய்ப் பயன்படுத்த ஊக்குவிப்பான். உதாரணமாக, ஓர் இசைக்கலைஞன் ஆவது உங்கள் லட்சியமெனில், அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் எனும் விஷயங்களில் உங்களுக்கு உதவி செய்வான். உங்களைப் படிப்படியாய் அந்தப் பாதையில் நடத்துவான். வெறுமனே உங்களுடைய வெற்றிகளில் வந்து கை குலுக்கிவிட்டுப் போகும் மனிதனாக அவன் இருப்பதில்லை.

மற்ற நண்பர்களைப்பற்றி உங்களிடம் தரக்குறைவாக விமர்சிக்கும் நண்பர்களிடம் கொஞ்சம் உஷாராய் இருங்கள். உங்களைப் பற்றி அவர்கள் வேறு நண்பர்களிடமும் அதே போலப் பேசித் திரியும் வாய்ப்பு உண்டு. நீங்கள் எந்த நண்பனுடன் இருக்கும்போது அடுத்தவர்களைப் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்களை அவிழ்க்கிறீர்கள் என யோசியுங்கள். அந்த நண்பன் நல்ல நண்பன் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உண்மை நண்பர்கள் உங்களுடைய சந்தோஷத்தின்போது காணாமல் போனாலும், உங்களுடைய துயர வேளையில் நிச்சயம் உங்களோடு இருப்பார்கள். தங்களைப் பற்றிய தம்பட்டங்களை ஒதுக்கி வைத்து விட்டு உங்களுடைய உரையாடலைக் கவனமுடனும், ஈடுபாட்டுடனும் கேட்பது நல்ல நண்பனின் அடையாளம்.

'மனசுக்கு கஷ்டமாயிருக்கு, பணக் கஷ்டமாயிருக்கு, உதவி தேவையிருக்கு' என கஷ்டம் என்றால் மட்டுமே உங்களிடம் வரும் நண்பர்கள் சிலர் இருப்பார்கள். நட்பின் முக்கியத் தேவையே உதவுவதில்தான் இருக்கிறது. ஆனால் அத்தகைய சூழல்களில் 'மட்டுமே' உங்களைத் தேடி வரும் நண்பர்கள் சுயநலத்தின் சின்னங்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

சில நண்பர்கள் அவர்கள் சொல்வதற்கெல்லாம் தஞ்சாவூர் பொம்மை போலத் தலையாட்டும் நண்பர்களே வேண்டுமென்பார்கள். அவர்கள் உண்மையான நண்பர்கள் அல்ல. அவர்களுடைய நட்பில் வீசுவதும் சுயநல வாசமே.

'தப்பான' ஒரு செயலைச் செய்ய உங்களை ஊக்கப்படுத்துபவன் உங்கள் நண்பனல்ல என்பதை நான் சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்டவர்களை நீங்கள் முளையிலேயே கிள்ளி எறியலாம். போதை, திருட்டு, பாலியல், சமூக விரோதச் செயல் போன்ற பல தவறுகளுக்கு இளைஞர்களை இட்டுச் செல்வதில் பெரும்பாலான பங்கு நண்பர்களையே சாரும். அத்தகைய ஒழுக்கத்தை மீறிய செயல்களுக்குள் உங்களை இழுப்பவர்கள் உங்கள் எதிரிகளே, நண்பர்கள் அல்ல.

நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவனே உண்மை நண்பன். 'எனக்குப் பிடித்த மாதிரி மாறினால் தான் உன்னோடு நட்பாய் இருப்பேன்' என நிபந்தனைகள் விதிப்பவர்களின் நட்பை விலக்கி விடுங்கள்.

உங்கள் நண்பர்களுடன் பேசும்போது உங்களுடைய மனம் நேர் சிந்தனைகளில் நிறைகிறதா? எதிர் சிந்தனைகளில் நிரம்புகிறதா? என்று பாருங்கள். எதிர் சிந்தனைகளே வளர்கிறதெனில் அந்த நட்பு தப்பானது என்பதைக் கண்டு கொள்ளுங்கள்.

சில நண்பர்களோடு பழகும்போது உங்களுடைய நல்ல குணாதிசயங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும். அத்தகைய நண்பர்களை எப்போதுமே அருகில் வைத்திருங்கள்.

உங்களுடைய நெருங்கிய நண்பர்களில் நான்குபேரை நினையுங்கள். அவர்கள் நல்லவர்களா, மோசமானவர்களா என இப்போது அளவிடுங்கள். தீய நண்பர்களெனில் ஒதுக்குங்கள். தீய நண்பனோடு பழகுவதை விட நண்பனே இல்லாமல் வாழ்வது சாலச் சிறந்தது.

கடைசியாக ஒன்று. நல்ல நட்பை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே அடுத்தவர்களும் எதிர்பார்ப்பார்கள். எனவே நீங்களும் பிறருக்கு எப்போதும் ஒரு நல்ல நண்பனாகவே இருங்கள்!

நட்பில் உண்மை நிலவட்டும்
வாழ்வின் கிழக்கு புலரட்டும்

அழிந்(த்)து வரும் பண்டைய தமிழர்களின் ஆடற்கலைகள்



அழிந்(த்)து வரும் பண்டைய தமிழர்களின் ஆடற்கலைகள்

பண்டைய தமிழர்கள் எத்த‍னை விதமான ஆடற்கலைகள் நமக்கு கொடுத்து சென்றிருக்கிறார்கள் தெரியுமா? ஆனால் அந்த அரிய வகையான பாரம்பரியமான இந்த ஆடற்கலைகள் இன்று அழிந்து வருகின்றன என்று நினைக்கும்போது, மனம் வேதனை அடைகிறது. சிறு வீட்டிலும் விசேஷ நாட்க ளில் குஜராத்தியர்கள் தங்களது பாரம்பரியமான தாண்டியா ஆட்ட‍த் தை ஆடிமகிழ்கிறார்கள். ஆனால் நம்ம‍ளோட பாரம்பரியமான ஆடற்கலைகள் ஆடி மகிழ நாம் வெட்கப்படுகிறோமே!? நமது பாரம் பரிய கலைகளை ஆடுவது வெட்கமல்ல‍, இதுபோன்ற கலைகளை ஆடமாட்டோம் என்று கூறுவதுதான் வெட்கக்கேடானது

ந‌மது பழம்பெரும் தமிழர்கள் நமக்காக விட்டுச்சென்ற, (நம்மால் அழிந்துகொண்டிருக்கும்) ஆடற்கலைகளை விதை2விருட்சம் இணையம் வாயிலாக உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

01) அம்மன் கூத்து
02) அன்னக்கொடி விழாக்கூத்து
03) அனுமன் ஆட்டம்
04) ஆலி ஆட்டம்
05) இருளர் இனமக்களின் ஆட்டம்
06) இலாவணி
07) எக்காளக் கூத்து
08) ஒயிலாட்டம்
09) கரகாட்டம்
10) கரடியாட்டம்
11) கழியலாட்டம்
12) கணியான் கூத்து
13) காவடியாட்டம்
14) குறவன் குறத்தி ஆட்டம்
15) குரவை, துணங்கை, தழூஉ – ஆட்டங்கள்
16) கோணங்கியாட்டம்
17) கொக்கலிக்கட்டை ஆட்டம்
18) கோலாட்டம்
19) கும்மியாட்டம்
20) சக்கை குச்சி ஆட்டம்
21) சக்கையாட்டம்
22) சலங்கையாட்டம்
23) சிலம்பாட்டம்
24) சேவயாட்டம்
25) துடும்பாட்டம்
26) தெருக்கூத்து
27) தேவராட்டம்
28) பரதநாட்டியம்
29) பறைமேளக் கூத்து
30) பறையாட்டம்
31) பாவைக்கூத்து
32) பாம்பாட்டம்
33) பெரியமேளம்
34) புலி ஆட்டம்
35) பொம்மலாட்டம்
36) பொய்க்கால் குதிரை ஆட்டம்
37) மகுடிக் கூத்து
38) மயில் ஆட்டம்
39) மரக்காலாட்டம்
40) மாடாட்டம்
41) ராஜா ராணி ஆட்டம்
42) ஜிக்காட்டம்

lundi 18 janvier 2016

ஆண்டொன்று போனால்.......



    “ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் அதற்கு முன்னாலே வா வா” என்று காதலில் விழுந்தவர்கள் வேண்டுமானால் பாடி அவசரப்பட்டுக் கொள்ளலாம். வருடா வருடம் புத்தாண்டுச் சபதமெடுக்கிறவர்களும், அத்தனை தீர்மானங்களையும் வரிசை குலையாமல் அதே தீவிரம் குறையாமல் இந்த வருசத்துக்கும் ஒருமுறை சங்கல்பம் செய்துகொள்ளலாம். சங்கல்பம் எல்லாம் செய்துகொள்ளத் திராணியற்றவர்களும், வருசம் பிறந்தாலாவது புதுசாய் நல்லதொரு வழி பிறக்காதா என்று நம்பப் பழகிக்கொண்டுவிட்ட அந்த வழக்கத்தினடிப்படையில் ஒரு புது எதிர்பார்ப்பின் ...பூரிப்பை வெளியிட்டுக் கொள்ளலாம்.
    ஆனால், அதே மனங்களும், அதே வீம்புகளும், அதே வெறுப்புகளும், பிறரைத் தம் மனதுக்குள் அண்டவிடாத அகந்தையும், பன்மைத்துவ வாழ்வு குறித்து எந்தப் பான்மையற்றவராயும் மனிதர்கள் இருக்கையில் எல்லா ஆண்டும் மற்றொரு ஆண்டே!
    மனித குலத்தின் நீண்ட நெடும் பயணத்தில் மேலும் ஒரு ஆண்டு. எத்தனையோ நூற்றாண்டுகளைக் கடந்து, எவ்வளவோ அறிவு வளர்ச்சிகளை அடைந்து, எத்தனையெத்தனையோ மாற்றங்களில் வியப்புகளில் பயணித்து மேலே மேலே ஏறி வந்துவிட்டோம். உயர உயரப் பறந்தது எல்லாம் ஒரு பள்ளத்தாக்கின் உள்ளேதானா?
    இன்னும் வாழும் வழி தெரியவில்லை. மனிதரை மனிதர் நோகச் செய்யும் வழக்கம் ஒழியவில்லை. எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை, எல்லோர்க்கும் ஒரே நீதி, எல்லோர்க்கும் இந்த பூமி என்கிற மனிதகுல லட்சியத்தை எட்ட முடியவில்லை. மனிதப் பொது விருப்பமெல்லாம் இன்னும் கனவாகவே தொடர்கிறது.

நட்பின் மூலம் உலகை ஒன்றாக்குவோம்.



குடும்ப உறவுகளில் உயர்வு, தாழ்வு உண்டு. பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு உண்டு. ஆனால் உண்மையான நட்பில், நட்பு மட்டுமே உண்டு.

ஒருவன் நல்ல இடத்தில் வந்து விட்டால், அவனை நண்பன் என்று சொல்லிக் கொண்டு வரும் பெரிய கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. நல்ல நண்பர்களையும், நண்பன் என்ற பெயரில் ஏமாற்ற நினைப்பவர்களையும் நாம் அடையாளம் கண்டு வாழ்வது மிகவும் அவசியம்.

ஒரு குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன. அந்தக் குளத்தின் நீரைப் பயிருக்குப் பயன்படுத்தியதால் நாளுக்கு நாள் நீரின் அளவு குறைந்து கொண்டிருந்தது.

ஒரு கொக்கு அந்தக் குளத்தின் கரையில் சோகமாக நின்று கொண்டிருக்க, மீன்கள் அதன் கவலையின் காரணம் கேட்டன.

'இந்தக் குளத்தில் நீர் எல்லாம் வற்றிப் போனால் நீங்கள் செத்துப் போவீர்களே?'என்றது கொக்கு.

'நாங்கள் பிறந்தது முதல் இந்தக் குளத்தைத் தவிர வேறொன்றும் தெரியாது. நீங்கள் தான் பல இடங்களுக்குப் பறந்து சென்று வந்துள்ளீர்கள். நீங்கள் தான் எங்களுக்கு நல்ல வழி சொல்ல வேண்டும்' என்றன மீன்கள்.

'நண்பர்களே, இங்கிருந்து கொஞ்ச தூரத்தில் ஒரு குளம் உள்ளது. அங்கே நீர் எப்பொழுதும் வற்றாது' என்றது கொக்கு.

இதைக் கேட்ட மீன்களின் முகத்தில் மகிழ்ச்சி. ஆனால் எப்படி அங்கே போவது என்ற கவலை.

'நான் ஒவ்வொருவராக வாயில் ஏந்தி, பறந்து சென்று, அந்தக் குளத்தில் விட்டு விடுகிறேன். நீங்கள் அங்கே பிழைத்துக் கொள்ளுங்கள்' என்றது கொக்கு.

நன்றியுள்ள மீன்களும் உடனே சம்மதித்தன. ஒவ்வொரு நாளும் கொக்கு மீனை வேறு குளத்துக்கு எடுத்துச் செல்வதாகச் சொல்லி, அருகில் உள்ள பாறையில் வைத்துக் கொன்று தின்றது.

ஒரு நாள் ஒரு நண்டு தன்னையும் அந்தக் குளத்தில் கொண்டு போய் விடுமாறு கேட்டது. கொக்கும் தன் கழுத்தில் மெதுவாகக் கடித்து தொங்கிக் கொண்டு வருமாறு சொல்ல, நண்டும் அவ்வாறே செய்ய, கொக்கு நண்டைத் தூக்கிச் சென்றது.

கொஞ்ச தூரம் பறந்து பாறை அருகே கொக்கு இறங்கி வரும் போது, கொக்கால் ஏமாற்றப்பட்டு கொக்குக்கு உணவான மீன்களின் மீதி எலும்புகள் இன்னொரு பாறை போலக் குவிந்து கிடப்பதை நண்டு பார்த்தது. கொக்கின் வஞ்சம் புரிந்து விட்டது நண்டுக்கு.

தன் கூரான பற்களால் கொக்கின் கழுத்தை நண்டு நறுக்க, கொக்கு பதறியது, துள்ளியது. பின் ரத்தம் கொட்டி இறந்தது.

நடந்து கொண்டே மீண்டும் குளத்துக்கு வந்த நண்டை மீன்கள் ஆச்சரியத்துடன் பார்த்தன. நண்டும் நடந்ததைக் கூற, நண்பன் எனச் சொல்லி ஏமாற்றிய தீய கொக்கைக் கொன்று தம்மைக் காத்த நல்ல நண்பன் நண்டுக்கு நன்றி சொன்னன.

கூடா நட்பினால் கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி, படிப்பையும், வாழ்க்கை இழந்ததையும் காணலாம். எனவே, கவனமாகவும் இருக்க வேண்டும்.

பேனா நண்பர்கள் என முன்பு வெவ்வேறு நகரங்களிலும் நாடுகளிலும் இருந்தார்கள். முன்பின் தெரியாதவர்களுக்கு எழுதுவதிலும் அவர் களைப்பற்றித் தெரிந்து கொள்வதிலும் சிறுவர் முதல் பெரியவர் வரை பலர் ஆர்வம் காட்டினார்கள்.

இன்று இணைய தளத்தில், சமூக வலைத் தளங்களில், முகநூல் போன்ற தளங்கள் உள்ளன. எல்லா நாடுகளிலிருந்தும் நண்பர்கள் சேர உதவியாக இருக்கின்றன.

முகநூலைப் போன்ற இணைய தளங்களில் பல குழுக்கள் உள்ளன. உதாரணத்துக்கு 'உணவுப் பிரியர்கள்' என்ற குழுவில் புலம் பெயர்ந்து பல நாடுகளுக்குச் சென்றவர்கள் தம் நாட்டின் உணவுப் பழக்கங்களையும், அன்றைய உணவைப் பற்றிய செய்திகளையும் பகிர்ந்து கொள்வது நன்றாக உள்ளது.

ஆனால் நண்பர்களைப் போலவே, இணையதளத்திலும் நல்லது எது கெட்டது எது என்று தெரிந்த பெரியவர்களிடம் அறிந்து கொள்ளவேண்டும்.

நண்பர்களைப் பெறுவது எப்படி? நீ ஒரு நல்ல நண்பனாக இரு, நிறைய நண்பர்கள் தானாகக் கிடைப்பார்கள். உன்னைப் பற்றி பேசுவதை விட மற்றவர்கள் பேசுவதைக் கேள். அது நட்புக்கு நல்ல உரமாகும்.

கண்ணீரைத் துடைப்பது உறவு என்றால், கண்ணீரைத் தடுப்பது நட்பு ஆகும்.

நட்பின் மூலம் உலகை ஒன்றாக்குவோம்.

சுயநலமற்ற அன்பு தாயன்பு போல தூய்மையானது!




'பிறருக்குக் கொடுத்து வாழ்பவர்களை ஆனந்தம் நிழல் போல தொடரும், எப்போதுமே நீங்காது'  சுயநலம் துறந்தால் கர்வம் நம்மை விட்டுக் கடந்து போய்விடுகிறது!

சுயநலமற்ற அன்பு தாயன்பு போல தூய்மையானது!

உணவு பற்றாத போது 'என்னமோ தெரியலை இன்னிக்குப் பசிக்கல' என பொய் சொல்லிவிட்டுப் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டும் அன்பு தாயன்பு!

தனக்குக் கிடைக்கும் ஒரே ஒரு சாக்லேட்டையும் குழந்தைக்குக் கொடுத்து மகிழும் அன்பு தாயன்பு!

தன்னிடமிருக்கும் கடைசிச் சொட்டு வலிமையையும், வசதியையும் பிள்ளைகளுக்குத் தாரை வார்க்கும் தாயன்பு.

இதைவிட புனிதமான ஒரு உதாரணத்தை சுயநலமற்ற அன்புக்காய் காட்ட முடியுமா?

'அடுத்தவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என நாம் நினைக்கும் எதுவும் நமக்குக் கிடைக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது' 

சுயநலமற்ற ஒவ்வோர் செயலும் இன்னொரு நபருடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தையும், உற்சாகத்தையும் கொண்டு வரும். அந்த செயல் பல்கிப் பெருகி பூமியை நிரப்பும்.

ஒவ்வொரு செயலைச் செய்யும் போதும், 'இது எனது சுயநல எண்ணத்தின் வெளிப்பாடா?' எனும் ஒரு கேள்வியைக் கேட்டாலே போதும். உங்களுடைய செயல்களிலிருந்து சுயநலம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியேறத் துவங்கும்.

உழைப்பின் உன்னதத்தை உணர்த்துகின்ற கதை-



ஓர் அழகான கதை. உழைப்பின் உன்னதத்தை உணர்த்துகின்ற கதை-
____________________________________
கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் கடற்குருவி ஒன்று கூடு கட்டியது. அதனுள் நாலைந்து முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது. ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.
ஒரு நாள் பெரும் காற்று வீசியது. பெரிய அலைகள் பொங்கி எழுந்தன. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது. குருவிகள் மனம் பதறிக் கதறின. கடல் நீரில் விழுந்து கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தன.
பெண் குருவி மனம் உடைந்து சொல்லியது. எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும். இல்லையேல் நான் உயிர் வாழ மாட்டேன் என்றது .
ஆண் குருவி சொன்னது. அவசரப்படாதே ஒரு வழி இருக்கிறது. நமது கூடு கரையின் ஓரமாகத் தான் விழுந்துள்ளது. கூட்டுடன் சேர்ந்து முட்டைகள் விழுந்ததால் நிச்சயம் உடைந்திருக்காது. அதனால் இந்த கடலிலுள்ள தண்ணீரை வற்றவைத்து விட்டால் போதும். முட்டைகளை நாம் மீட்டுவிடலாம்.என்று பெண் குருவிக்கு தன்னம்பிக்கை ஊட்டியது .
கடலை எப்படி வற்றவைப்பது?
முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம். எனவே நாம் இடைவிடாமல் சில நாட்கள் முயல வேண்டும். நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துக் கொண்டு பறந்து சென்று தொலைவில் கொட்டுவோம். மறுபடியும் திரும்பி வந்து மீண்டும் நீரை நிரப்பிக் கொண்டு போய் தொலைவில் உமிழ்வோம். இப்படியே இடைவிடாமல் செய்து கடல் நீரை வேறு இடத்தில் ஊற்றினால் கடல் நீர் மட்டம் குறைந்து தரை தெரியும். நமது முட்டைகள் வெளிப்படும்.
இதையடுத்து இரண்டு குருவிகளும் தன்னம்பிக்கையுடன் ஊக்கத்துடன் செயலில் இறங்கின. விர்ரென்று பறந்து போய் தங்களது சிறிய அலகில் இரண்டு விழுங்கு நீரை நிரப்பிக் கொண்டன. பறந்து சென்று தொலைவில் போய் உமிழ்ந்தன. மீண்டும் பறந்து வந்து இரண்டு வாய் தண்ணீரை அள்ளின. கொண்டுபோய் தொலைவில் கக்கின.
இப்படியே இரவு பகல் நாள் முழுவதும் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது, இவற்றின் நீர் அகற்றும் படலம்.
அப்போது அந்தக் கடற்கரை ஓரமாக முனிவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். மகா சக்திகள் நிறைந்த மகான் அவர். ஆளில்லாத அந்தப் பகுதியில் கீச் கீச் என்ற சப்தம் கேட்கவும் அவர் திரும்பிப் பார்த்தார். இரண்டு குருவிகள் பறந்து போவது கண்டு சிரித்தபடி மேலே நடந்தார்.
மீண்டும் கீச் கீச் என்ற சப்தம். குருவிகள் கடலுக்கு மேல் பறந்தன. எதையோ அள்ளின. மீண்டும் பறந்தன. இப்படி பலமுறை நடைபெறவும், முனிவருக்கு வியப்பு. கடலில் இருக்கும் எதைக் கொத்துகின்றன இவை? அங்கு இரை ஏதும் இல்லையே என்று நினைத்தார் அவர்.
உடனே அந்த மகான் கண்களை மூடினார். உள்ளுக்குள் அமிழ்ந்தார். மறுகணம் அவர் மனதில் எல்லா நிகழ்ச்சிகளும் படம்போல் ஓடின. அவர் மனம் உருகியது. முட்டைகளை இழந்த தாயின் தவிப்பும் கடலையே வற்ற வைத்தாவது முட்டைகளை மீட்க வேண்டும் என்ற அதன் துடிப்பும் அவரது உள்ளத்தை நெகிழச் செய்தன.
உடனே தனது தவ பலத்தை ஒன்று திரட்டிய முனிவர் கையை உயர்த்தினார். மறுகணம் கடல் சில அடிகள் பின் வாங்கியது. அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன. குருவிகள் அதைப் பார்த்து குதூகலத்துடன் கீச்சிட்டன. ஆளுக்கொன்றாக முட்டைகளை பற்றிக் கொண்டு போய் வேறிடத்தில் சேர்த்தன.
நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா? நமது ஒரு நாள் உழைப்பில் கடல் நீரை குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம் பார்த்தாயா? என்றது ஆண் குருவி பெருமிதமாக.
முனிவர் சிரித்தபடி தொடர்ந்து நடந்தார். இங்கே குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா? இல்லை. முனிவரின் அருளால். ஆனால் அந்தக் குருவிகளுக்கு முனிவர் என்ற ஒருவரைப் பற்றியோ தவ வலிமை என்றால் என்ன என்பது பற்றியோ, எதுவுமே தெரியாது.ஆனால் தன்னம்பிக்கையுடன் கடல் நீரை அள்ளின .
அதே சமயம் குருவிகள் மட்டுமே கடல் நீரை மொண்டு சென்று ஊற்றிக் கொண்டிருக்காவிட்டால் முனிவர் தம் வழியே போயிருப்பார்.
அவரை மனம் நெகிழ வைத்தது எது? அவற்றின் உழைப்பும் முயற்சியும்தான். ஆக இங்கே முட்டைகள் மீட்கப்பட்டது, குருவிகளாலும் தான். முனிவராலும் தான். முனிவரின் ஆற்றல் அவற்றுக்குப் பக்க பலமாக வந்து சேர்ந்தது. குருவிகளின் உழைப்புத்தான் அதற்கு அடிப்படையாக அமைந்தது.
அன்பு நண்பர்களே .
எல்லையில்லா ஆற்றல் பெற்றவர்களே இளமைப் பருவம் வாழ்வின் இன்றியமையாப் பருவம்.
பருவத்தே பயிர் செய் என்பார்களே. இளமையில் வியர்வை சிந்தாவிட்டால் முதுமையில் கண்ணீர் சிந்த வேண்டி இருக்கும்.
எனவே விழித்திருக்கும் நேரமெல்லாம் உழைத்துக் கொண்டிருங்கள். வாழ்வில் எல்லா நேரமும் நல்ல நேரம்தான். உழைக்காத நேரம்தான் ராகு காலம். திட்டமிடுங்கள். ஒவ்வொன்றையும் திட்டமிட்டு உழைத்திடுங்கள் .
இந்த கதை பாலகுமாரன் அய்யாவின் கடலோர குருவிகள் நாவல் புத்தகத்தில் படித்தவை .

வாழ்வைப் பற்றிய ஒரு கருத்துப் பரிமாற்றம்



    வாழ்வைப் பற்றிய ஒரு கருத்துப் பரிமாற்றம்...
    ஒரு கடற்கரைக் கிராமம். அங்குள்ள ஒரு மீனவ இளைஞனைப் பார்த்து வேறு ஒருவர் கேட்கிறார், "கடல் ஆபத்தான இடமாயிற்றே... எப்படி நீ துணிச்சலுடன் மீன் பிடிக்கப் போகிறாய்?''
    இளைஞன் சொல்கிறான், "என்ன செய்வது... நான் மீன் பிடித்தால்தான் உணவு உண்ண முடியும்.''
    ...
    கேட்டவர், சட்டென்று கேள்வியின் திசைகளை மாற்றுகின்றார்-
    "அது சரி... உன் தந்தை எப்படி இறந்தார்?''
    "அவர் மீன் பிடிக்கச் செல்லும்போது புயலில் சிக்கி இறந்தார்.''
    "உன் தாத்தா?''
    "என் தாத்தா ஒருமுறை அலையில் மாட்டிக் கொண்டு கடலலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு அவரும் கடலுக்கு இரையானார்.''
    "இவ்வளவு நடந்து முடிந்தபிறகும் எப்படி உன்னால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல முடிகிறது?''
    இப்போது அந்த இளைஞன் கேட்டவரைப் பார்த்து, "உங்கள் தந்தை எப்படி இறந்தார்?'' என்று கேட்டான்.
    "நோய்வாய்ப்பட்டு இறந்தார்.''
    "உங்க தாத்தா..?''
    "அவரும் படுக்கையில் நோயில் கிடந்து பாடையாகிப் போனார்.''
    "இப்படி உங்கள் பரம்பரையே படுக்கையில் கிடந்து இறந்து போயிருக்கிறார்கள். அப்புறம் எப்படித் தினமும் நீங்கள் தைரியமாகப் படுக்கப் போகிறீர்கள்?'' என்று பதிலுக்குக் கேட்டான்.
    பதிலின்றி மவுனமானார் அவர். வாழ்க்கை, ஆபத்துகளும், துக்கங்களும், துயரங்களும் நிறைந்ததுதான். அதை நினைத்துக் கொண்டிருந்தால் வாழ முடியுமா? புறநானூற்றுப் புலவன் சொல்வானே, `நீர் வழிப்படும் புனைபோல' என்று. அதாவது ஆற்றின் ஓட்டத்தில் செல்லும் படகானது அதன் ஓட்டத்தோடு செல்வதைப் போல வாழ்க்கையும் சென்று கொண்டே இருக்க வேண்டும். அந்தப் படகை வழிநடத்திச் செல்கிற ஆற்றைப் போல பிறருக்குப் பயன்படுகிற விதத்தில் இருக்க வேண்டும். யாரும் இங்கே வீணாகி விடக் கூடாது.

எதிர்மறை எண்ணம்

    ஒருநாள் ஒரு குழந்தை, குளத்தில் தவறி விழுந்து விட்டது. ஒரு மாலுமி அதைக் கேள்விப்பட்டு ஓடோடி வந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றினார். மிகப் பெரிய போராட்டத்துக்குப் பின் குழந்தையைக் காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்.
    மாலுமிக்குக் குழந்தையைக் காப்பாற்றியதில் மிகப் பெரிய மகிழ்ச்சி. சிறிதுநேரத்தில் அந்தக் குழந்தையின் தந்தையும் தகவலறிந்து வந்து சேர்ந்தார்.
    "யார் என் குழந்தையைக் காப்பாற்றியது?'' என்று பரபரப்புடன் கேட்டார். தனக்கு வெகுமதி கிடைக்கப் போகிறது என்று நினைத்து ...அந்த மாலுமி, "நான்தான்'' என்று பெருமிதத்துடன் சொன்னார்.
    "என் குழந்தை அணிந்திருந்த தொப்பி எங்கே?'' என்று கேட்டார், அந்த தந்தை.
    மாலுமி திகைத்துப் போனார்.
    சர்ச்சில் கூறிய இந்தக் கதையைப் போன்ற சம்பவம் நம்முடைய வாழ்விலும் சில நேரங்களில் நிகழ்ந்திருக்கும். நாம் ஒன்றை நினைத்திருப்போம். நடந்தது வேறு ஒன்றாக இருந்திருக்கும்.
    பாராட்டை எதிர்பார்த்திருப்போம். அவமானம்தான் மிச்சமாக இருக்கும்.
    நல்ல விருந்தை எதிர்பார்த்துப் போயிருப்போம், கடைசியில் பட்டினியோடு திரும்பியிருப்போம்.
    வழக்கமாக எடுத்துச் செல்கிற குடையை ஒருநாள் வீட்டில் வைத்துவிட்டுப் போயிருப்போம். அன்றைக்குப் பார்த்து மழை கொட்டி இருக்கும்.
    பேருந்துக்காக நாம் போகிற திசையை நோக்கிக் காத்திருப்போம். எதிர் திசையில் வரிசை வரிசையாய் பேருந்து வந்து கொண்டே இருக்கும்.
    திருமண நிகழ்ச்சிக்காகப் போயிருப்போம். வரவேற்பில், `எங்க சார்... அவங்க வரவில்லையா?' என்று கேட்பார்கள். இத்தனை பேர் வந்திருப்பது அவர்களுக்குத் தெரியாது. வராதவர்களைத்தான் கேட்பார்கள்.
    இப்படித்தான் பலநேரங்களில் எதிர்மறையான நிகழ்வுகளும், எண்ணங்களும் மனதில் சலனங்களை ஏற்படுத்தும். மனம், மற்றவர்களிடமிருந்து தான் வித்தியாசமானவன் என்ற உணர்வை மற்றவர்களுக்கு ஏற்படுத்த முயன்று கொண்டே இருக்கும். ஒருமுறை அத்தகைய உணர்வு ஒருவருடைய மனதில் புகுந்து விட்டால் அதன் பிறகு அவ்வளவு சுலபத்தில் அதிலிருந்து மீண்டு விட முடியாது. மனம் உடனே நம்மைச் சுற்றி ஒரு கோட்டையை எழுப்பிவிடும். பின்னர் அதைத் தாண்டி எதுவும் நம் உள்ளத்திற்குள் நுழைய முடியாது.
    படிப்பு சில நேரங்களில் சிலருக்கு எதிர்மறை எண்ணங்களைக் கொண்டு வருகிறது, குறுக்கு வழிகளைத் தேடச் சொல்கிறது. இந்த மாதிரியான தருணங்களில்தான் மனதை சரியாக வைத்திருக்கப் பழக்கப்படுத்த வேண்டும்.
    எதை எடுத்தாலும் குற்றம் காண்கிற மனப்போக்கு இன்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. மன அழுத்தம் அதிகமாவதற்கு இது காரணமாக அமைகின்றது. அடுத்தவன் நம்மை விட நன்றாக வாழ்கிறானே என்கிற எதிர்மறை எண்ணம்.

samedi 16 janvier 2016

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"



பாலைவனத்தில் பயணம்
செய்து கொண்டிருந்த ஒருவன்
குடிக்கத் தண்ணீர் இல்லாமல்
மயங்கி விழும்
நிலைக்கு வந்து விட்டான்.
தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த
போது தூரத்தில்
ஒரு குடிசை போல
ஏதோ ஒன்று தெரிந்தது. மிகவும்
கஷ்டப்பட்டு அவன் அந்த
இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஒரு கையால்
அடித்து இயக்கும் பம்ப்பும், அதன்
அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும்
இருந்தன. ஒரு அட்டையில்
யாரோ எழுதி வைத்திருந்தார்கள்.
"ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால்
தண்ணீர் வரும்.
குடித்து விட்டு மறுபடியும்
ஜக்கில்
தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச்
செல்லவும்." அந்தப் பம்ப்போ மிகவும்
பழையதாக இருந்தது.
அது இயங்குமா, தண்ணீர்
வருமா என்பது சந்தேகமாக
இருந்தது. அது இயங்கா விட்டால்
அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத்
தண்ணீரைக் குடித்து விட்டால்
தாகமும் தணியும், உயிர்
பிழைப்பதற்கு உத்திரவாதமும்
உள்ளது. அவன் யோசித்தான். தண்ணீரைக்
குடித்து விடுவதே புத்திசாலித்தனம
் என்று அறிவு கூறியது.
ஒரு வேளை அதில்
எழுதி வைத்திருப்பது போல்
அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான
அந்தத் தண்ணீரைக்
குடித்து விட்டால், இனி தன்னைப்
போலத்
தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல்
போகத் தானே காரணமாகி விடுவோம்
என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல்
யோசிக்கவில்லை.
ஆனது ஆகட்டும் என்று அந்தப்
பம்பில் அந்தத்
தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க
ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய
அளவு தண்ணீர்
குடித்து விட்டு அந்த ஜக்கில்
நீரை நிரப்பி விட்டுச் செல்கையில்
அவன் மனம் நிறைந்திருந்தது. நாம் அவசியமான காலத்தில்
அனுபவிப்பதை அடுத்தவருக்கும்
அதே போல
பயன்படும்படி விட்டுப் போக
வேண்டும். எந்த நன்மையும்
நம்முடன் நின்று விடலாகாது. இந்தக் காலக் கட்டத்தில்
பெரும்பாலான மனிதர்களிடம் அந்த
நல்லெண்ணம் இருப்பதில்லை. நம்
வேலை ஆனால் சரி, அடுத்தவர்
எக்கேடு கெட்டால் நமக்கென்ன
என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக
இவ்வையகம்" என்ற மனநிலையில்
ஒவ்வொருவரும் இருந்தால் இந்த
உலகம்
இன்பமயமாகி விடுமல்லவா
?

vendredi 15 janvier 2016

நாணயமான நண்பர்கள்



    என்னிடம் 6 நாணயமான நண்பர்கள் இருக்கின்றனர், அவர்கள்தான் எனக்கு எல்லாம் கற்றுத் தருகின்றனர். அவர்களுடைய பெயர்கள் -
    எங்கே?
    என்ன?
    எப்போது?
    ஏன்? ...
    எப்படி?
    யார்?

urimai



samedi 9 janvier 2016

"மம்மி டாடியோட"



காலை வகுப்பிலே "வீட்டுப்பாடம் செய்யாத பிள்ளைகள் பெஞ்சில் ஏறி நில்லுங்கோ" என்று ஆசிரியர் சொல்ல, செய்யாதவர்கள் எழுந்து நின்றார்கள்.
அதிலே ஒரு குழந்தை மட்டும் கொஞ்சம் பாவமாய் அழுமாப்போல நின்றது.
ஆசிரியர் அந்த குழந்தையை "இங்கே வாம்மா" என்று அழைத்தார்.
"வீட்டுப்பாடம் செய்தியா?"
"இல்ல சார், எனக்கு அது விளங்க இல்ல"
"வீட்டில அம்மாவிடம் கேட்டிருக்கலாமே"
குழந்தை தயங்கியபடியே சொன்னது.
"எனக்கு அம்மா இல்ல"
ஆசிரியர் துணுக்குற்றுபோனார். அடடா அவசரப்பட்டு பெஞ்சில்ஏற்றிவிட்டோமோ என்று வருந்தினார்.
"அம்மா இல்லாட்டி அப்பாவிடமாவது கேட்டிருக்கலாமேகண்ணா"
"எனக்கு அப்பாவும் இல்லை சேர்"
குழந்தை பயந்த படியே சொல்ல ஆசிரியருக்கு தூக்கிவாரிப்போட்டது. அம்மாவும் இல்லாமல் அப்பாவும் இல்லாமல் இந்த குழந்தை என்ன பாடுபட்டிருக்கும்? ச்சே எப்படிப்பட்ட்ட கொடுமையை செய்துவிட்டோம் என்று வருந்தினார்.
குழந்தையை பார்க்க பார்க்க ஆசிரியரின் கண்கள் கலங்கிவிட்டது.
"கண்ணம்மா .. இங்க பாரு .. அம்மாவும் அப்பாவும் இல்லையா? .. பரவாயில்ல..நாங்க எல்லாம் இருக்கிறம் தானே .. கவலைப்படாதே. அது சரி, வீட்டில நீ யாரோட இருக்கிறாய்?"
குழந்தை அதே உணர்ச்சியோடு சொன்னது...




"மம்மி டாடியோட"

ஆசிரியர்-?????????????????
.......வாழ்க தமிழ்..!

நினைவுகள்




°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°
நண்பர் இராமன் என்பவர் இறந்து விட்டார்.

அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.

அவரது மனைவி,
9 வயதான மகன்,
பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

அந்த குடும்பத்துக்கே குருஜியாக விளங்கும் அறிஞர் ஒருவர் அப்போது அங்கு வந்தார்.

அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்.

இராமனின் மனைவி சொன்னாள்,

”குருஜி!இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே? நான் என்ன செய்வேன்?
அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்”

குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார் ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை.

கடைசியில் அவர் கேட்டார்

”ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்”தண்ணீர் வந்தது.

அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார்.

பின் சொன்னார்”இராமன் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர்,

இந்தத் தண்ணீரை அருந்தலாம்.

இராமன் திரும்பி வருவார்.

ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்”

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ஆனால் யாரும் முன் வரவில்லை.

அவர் இராமனின் தந்தையைக் கேட்டார்” ஐயா! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா?”

தந்தை சொன்னார்”நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு?அவளுக்காக நான் வாழ வேண்டும்”

தாயைக் கேட்க அவள் சொன்னாள்”அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம்.நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது?”

மனைவி சொன்னாள்”நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது? அவனுக்காக நான் வாழ வேண்டும்”

குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார்”குழந்தாய்,உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா?

அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக்கொண்டு சொன்னாள்

”குருஜி,உங்களுக்கென்ன பைத்தியமா?அவன் ஒரு குழந்தை.இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது.
அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா?”

குருஜி சொன்னார்”உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

அப்படியானால் இராமனுக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது.

எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார்

இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்”

சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்.

ஆம் பிறப்பையும் இறப்பையும் தீர்மானிப்பவன் அவன்.

எந்தப் பூவை எப்போது பறிக்க வேண்டும் என்பது அவன் எடுக்கும் முடிவு.

நாம் யார் அதைக் குறை சொல்ல? கேள்வி கேட்க?

“நாம் ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கிறோம்,
அதில் பச்சை இலைகள் இருக்கும் வரை இலைகள் வாடிப்போய்,
அது உயிரற்ற குச்சியானால் அதை நாம் கவனிக்கப் போவதில்லை. அதனிடம் அன்பு செலுத்தப் போவதில்லை.”

உயிர் இருக்கும் வரையே அன்பு,பாசம் எல்லாம்”“பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே

dimanche 3 janvier 2016

எப்போதெல்லாம் மகள் அழகாய் தெரிவாள் அப்பாக்களுக்கு??


எப்போதெல்லாம் மகள் அழகாய் தெரிவாள் அப்பாக்களுக்கு??

* பிறந்தவுடன் கைகளில் சுமக்கையில் அழகு..

* முகம் பார்த்து சிரிக்கையில் அழகு...

* கை பிடித்து நடக்கையில் அழகு...

* தரை கூட்ட பட்டுப்பாவாடை கட்டி தத்தி தத்தி நடக்கையில் அழகு...

* ரெட்டை சடையிட்டு துள்ளி துள்ளி வருகையில் அழகு...

* தவறு செய்துவிட்டு தன் சிரிப்பால் தவறை மறைக்கையில் அழகு...

* தாவணி கட்டியபோது வந்த நாணத்திலும் அழகு...

* கைகளை சுட்டுக்கொண்டு எனக்காக சமைக்கையில் அழகு...

* என் மகளாய் இருந்து வேறொருவர் மனைவியான போதும் அழகு...

* என் மகள் என்னும் குட்டி தேவதை அவளின் குட்டி தேவதையை பெற்றெடுத்தபோதும் அழகு...

அப்பாக்களுக்கும் மகள்கள் என்றுமே அழகு