முகப்பு

dimanche 30 septembre 2012

தன்னம்பிக்கையை

 
 
 
குழந்தையிடம் ஒரு டம்ளர் நிறைய நீரைக் கொடுத்து, சிந்தாமல் எடுத்துப் போ என்று உறுக்கிக் கூறுங்கள்.. அதன் கைகள் நடுங்கி நீர் நிலத்தில் கொட்டுப்பட்டுவிடும். நீரை எடுத்துச் செல் என்று சர்வசாதாரணமாக சொல்லுங்கள் நீர் சிந்தவே வழியில்லை.
எந்தச் சொல்லும் நம்மில் உயிர்ப்பை, வளர்ச்சியை தோற்றுவிக்க வேண்டும். உறங்கிக் கிடக்கும் தன்னம்பிக்கையை தூசு தட்டி எழுப்ப வேண்டும்

உன் நிழல்

 
 
மகிழ்ச்சியில் நீ
இருக்கையில்
உன்னுடன் சிரிக்க
ஓராயிரம் உறவுகள் வரும் ..
துன்பத்தில் நீ அழுகையில்
உன்னுடன் அழ
உன் நிழல் மட்டுமே வரும்


நட்பு.

 
 
நட்புக்கு இல்லை
எதிர்பார்ப்பு .
காலம் போனாலும்
நட்பின் நினைப்பு ,
நம்மோடு இருக்கும்
நட்பு.


உண்மையான நட்பு

 
 
நினைவில் வைத்து
கனவில் காண்பதல்ல நட்பு !.
மனதில் புதைத்து மரணம்
வரை தொடர்வதுதான்
உண்மையான நட்பு !!.

jeudi 27 septembre 2012

இயல்பை மாற்றவில்லை

 
 
கரும்பு – மிளகாய் – மலர்ச்செடி இந்த மூன்றையும் அருகருகாக நட்டு நீரை ஊற்றி வளர்த்தான் ஒருவன். ஊற்றியது ஒரே கிணற்றின் நீர்தான் ஆனால் மிளகாய் உறைத்தது, கரும்பு இனித்தது, பூ வாசமாக இருந்தது.. காரணம் இவை மூன்றும் ஒரே நீரை உண்டு வளர்ந்தாலும் தத்த...
மது இயல்பை மாற்றவில்லை.
கரும்பு, மிளகாய், பூமரம் ஆகிய மூன்றும் மற்றவருக்காக தமது இயல்பை மாற்றவில்லை. மற்றவருக்கு பயந்து வாழ்ந்தால் மிளகாய் இனிக்னும் கரும்பு உறைக்கும். கடைசியில் இரண்டுமே சந்தையில் செல்லாக்காசாகப் போய்விடும். மற்றவர்களுக்கு பயந்து தமது இயல்பை மாற்றுவோர் செல்லாக்காசுகளாகவும், நடைப்பிணங்களாகவும் வாழ்வது இதனால்தான்.

 

வேண்டும்.

 
 
 
குழந்தையிடம் ஒரு டம்ளர் நிறைய நீரைக் கொடுத்து, சிந்தாமல் எடுத்துப் போ என்று உறுக்கிக் கூறுங்கள்.. அதன் கைகள் நடுங்கி நீர் நிலத்தில் கொட்டுப்பட்டுவிடும். நீரை எடுத்துச் செல் என்று சர்வசாதாரணமாக சொல்லுங்கள் நீர் சிந்தவே வழியில்லை.
எந்தச் சொல்லும் நம்மில் உயிர்ப்பை, வளர்ச்சியை தோற்றுவிக்க வேண்டும். உறங்கிக் கிடக்கும் தன்னம்பிக்கையை தூசு தட்டி எழுப்ப வேண்டும். 

lundi 24 septembre 2012

மாரடைப்பை தவிர்க்க

 
மாரடைப்பை தவிர்க்க ..

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ??

மாலை மணி 6:30, வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் .
...
அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது.

நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள்.

உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மைல் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்.. !

உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும்.

ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது. இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..
பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..

இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள் -


நட்பு!!

 
 
இருதிணை, ஐம்பால், மூவிடத்திற்கு
உட்படாத ஓர் உன்னத உணர்வு
நட்பு!!

உண்மையான நட்பு

 
 
நினைவில் வைத்து
கனவில் காண்பதல்ல நட்பு !.
மனதில் புதைத்து மரணம்
வரை தொடர்வதுதான்
உண்மையான நட்பு !!.

மிக மிக கடினம்

 
 
ஒருவரை புரிந்துகொள்வது ரொம்ப கடினம் !.
புரிந்துகொண்டபின் பிரிந்துசெல்வது மிக மிக கடினம் !!.


அன்பின் அர்த்தம்

 
 
நீ நேசிக்கும் இதயத்தில்
பல ஆண்டுகள் வாழ்வதைவிட....
உன்னை நேசிக்கும் இதயத்தில்
சில நொடிகள் வாழ்ந்து பார்...
அன்பின் அர்த்தம் புரியும் !.


உன்னை தேடி வரும்

 
 
நீ ஒரு உயிரை நேசிப்பது உண்மையென்றால்
அதை பறவை போல பறக்கவிடு
அது உன்னை நேசிப்பது உண்மையென்றால்
மீண்டும் உன்னை தேடி வரும்


dimanche 23 septembre 2012

நல்ல நண்பர்கள்

 
 
நல்ல நண்பர்கள் என்றும் பிரிவதில்லை..
காரணம் அவர்கள் உறவுகள் அல்ல உணர்வுகள்..."


பூக்கள்

 
ஒரு செடியில் பூக்கள் என்பது ,
பூத்துக்கொண்டே இருக்கும் .
அதுபோல், என் இதயத்தில் ,
உங்கள் மீதான நட்பு , என்றும்
உங்களை தொடர்ந்து கொண்டே இருக்கும் .
நான் மண்ணுக்குள் புதையும் வரை


நண்பன்

 
 
நண்பனையும் நேசி... எதிரியையும் நேசி...
நண்பன் உன் வெற்றிக்கு துணையாய் இருப்பான்.
எதிரி உன் வெற்றிக்கு காரணமாய் இருப்பான்.


யாரு மில்லாத போது!!!

 
 
என்னிடம் பிடித்த‌தை
பிறரிடம் சொல்
நானி ல்லாத போது!!!
என்னிடம் பிடிக்காததை
என்னிடம் சொல்
யாரு மில்லாத போது!!!


நட்பின் அழகு

 
 
நிலவின் அழகு விடியும் வரை
பறவையின் அழகு பறக்கும் வரை
காதலின் அழகு கல்யாணம் வரை
நட்பின் அழகு உனக்குள் நான் இருக்கும் வரை


மனிதர்களுக்கு எங்கே?''

 
 
''திருமணங்கள்
இந்துக்களுக்கு கோவிலில் நடக்கிறது.
முஸ்லீம்களுக்கு பள்ளியில் நடக்கிறது.
கிறித்தவர்களுக்கு தேவாலயத்தில் நடக்கிறது.
மனிதர்களுக்கு எங்கே?''


வேண்டும்

 
 
நண்பரை கூட்டல் வேண்டும்
பகைவரை கழித்தல் வேண்டும்
இன்பங்களை பெருக்கல் வேண்டும்
துன்பங்களை வகுத்தல் வேண்டும்


vendredi 21 septembre 2012

நாற்பதாவது ஆண்டு

நாற்பதாவது ஆண்டு குருத்துவ நிiwT
மயிலிட்டி, பலாலி, ஊறணி, பேசாலை, முருங்கன் பங்கு மக்கள் இணைந்து நடாத்தும்
அருட்திரு தேவராஜன் அவர்களின் நாற்பதாவது ஆண்டு குருத்துவவாழ்வின் நிiwT தினம்.எமது முன்னாள் பங்குத்தந்தையை நன்றியுடன் வாழ்த்த உங்கள் அனைவரையும் அழைக்கின்றோம்
fhyk;; : 20,10,2012
,lk; :
பாரிஸ் புனித சூசையப்பர் ஆலயம்
161 Rue Saint Maur
75011 PARIS ( Metro: Goncourd )
FRANCE.
காலை 11:00 மணிக்கு நன்றித்திருப்பலி ஆரம்பமாகும்.
(
குறிப்பிட்ட நேரத்தில் திருப்பலி ஆரம்பமாகும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்).
தொடர்ந்து உணவுப்பரிமாறலுடன், கலைநிகழ்வுகளும், நினைவுகள் பரிமாற்றமும், இடம் பெறும்.
இந்நிகழ்வின்போது எம்மோடு je;ijயார் வாழ்ந்த காலங்களை பதிவாக்க இருப்பதால் உங்கள் ஆக்கங்களை எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு அல்லது எங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
ஆக்கங்கள் ஒக்டோபர் 6ஆம் திகதிக்கு முன்பு எங்களுக்கு mDg;gp itf;Fk; tz;zk; Nfl;Lf;nfhs;fpNwhk;
மேலும் அடிகளார் எமது நாட்டில் கண்பார்வையற்றோர் விதவைகள் அனாதைகள் போன்ற யாருமற்றோர்க்கு தனது சேவைகளை செய்து கொண்டிருப்ப்பதால் இந்நிகழ்வின் நினைவாக அவரவர்கள் தாங்கள் விரும்பும் md;gspg;ig அவருக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
soundararjah manuel (kapypl;b ghyhyp gq;F) Tel:0160791274 : sountha@live.fr
www.sounthyen.com
Hentry (Cwzp gq;F)
Tel : 0952008445 : philip_rajkumar2000@yahoo.com
J.Ratnarajah (Norway-urany)
Tlf : 004721697899/90086841 : jvratna@gmail.com
www.urany.com
Rony : 06,19,96,41,90 (KUq;fd; Ngrhiy gq;F)
Nkyjpf njhlh;Gfl;F: rTe;jh 01,60,79,12,74 , 06,51,57,54,28,






lundi 17 septembre 2012

மனம் ஏங்காது

 
 
மின்னுவதெல்லாம் பொன்னல்ல எண்ணுவதெல்லாம் நடப்பதல்ல, இந்த உண்மையை புரிந்து கொண்டால் நடக்காத ஒன்றுக்காக மனம் ஏங்காது.

vendredi 14 septembre 2012

நட்பு போல

 

மொட்டுகளின் இதழ்களாய்

இணைந்திருந்தோம் ....

.இன்று பூத்துவிட்டோம்....

பிரிந்த இதழ்களின் மேல்

பனித்துளி அல்ல கண்ணீர் துளி...

இதழ்கள் பிரிந்தாலும் வாசம்

மாறாது நம் நட்பு போல..




பகற் கனவு – அதிகாலைக் கனவு



பகற் கனவு – அதிகாலைக் கனவு
கனவு வருவதைப் பொறுத்து அதனைப் பகற்கனவு, அதிகாலைக் கனவு என்று வகைப்படுத்திக் கூறுவர். பெரும்பாலும் அனைவரும் கனவு காண்பர். சிலர் விழித்துக் கொண்டிருக்கும்போது கனவு கண்டு கொண்டிருப்பர். அவர்களைப் பகற் கனவு காண்பவர்கள் என்று குறிப்பிடலாம்.இவர்கள் எப்போதும் தங்களைப் பற்றியும் நடக்க முடியாத செயல்களைக் கறித்தும் கனவு கண்டு கொண்டே இருப்பர். இவர்கள் காணும் கனவுலகிலேயே சஞ்சரித்துக் கொண்டிருப்பர்.
இவர்களைச் சோம்பேறிகள் என்றும் மணற்கோட்டை கட்டுபவர்கள் என்றும் கூறுவர். கனவினைக் கண்டுகொண்டே இப்பண்புடையவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். அதோடுமட்டுமல்லாது இவர்கள் எப்போதும் தாங்கள் கண்ட கனவினைத் தம் நண்பர்களிடம் கூறிப் பெருமையடித்துக் கொள்வர். நண்பர்கள்,
‘‘பகற்கனவு பலிக்காது’’ பார்த்துக்கொள்ளப்பா!
என்று இகழ்ச்சியாகக் கூறுவர். தேவையின்றி கனவு கண்டுகொண்டிருக்காது கடினமாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற வாழ்க்கை நெறியை இப்பழமொழி தெளிவுறுத்துகிறது.
அதேபோன்று அதிகாலையில் காணும்கனவு பலிக்கும் என்பர். கண்ணகியும், கோப்பெருந்தேவியும் அதிகாலையில் கனவு காண்டிதால் அக்கனவு பலித்தது. அது காப்பியக் கனவு ஆகும். மக்களின் வாழ்க்கையில் நீண்ட காலமாக நிலவி வரும் இத்தகைய நம்பிக்கையை,
‘‘அதிகாலையில் காணும் கனவு பலிக்கும்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. இஃது மக்களின் நம்பிக்கை சார்ந்த பழமொழியாகும்.
ஊமையும் – கனவும்
வாய்பேச இயலாதவர்களை மூங்கையர், ஊமை என்று கூறுவர். இவர்களால் எதைக் கண்டாலும், கேட்டாலும் வாய்திறந்து மறுமொழி கூறமுடியாது. ஆனாலும் செய்கையில் கூறுவர். அதுபோன்று அவர்கள் கனவு கண்டாலும் அதனைப் பற்றிக் கூற முடியாது. இத்தகைய மாற்றுத்திறனாளியின் இயல்பினை,
‘‘ஊமை கனவு கண்டால் ஒருத்தருக்கிட்டேயும் செல்லாதாம்’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.
வாய் பேச இயலாதவர்கள் தங்களது உள்ளக்கிடக்கையைக்கூட கூற இயலாத நிலையில் உள்ளனர். அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கு நாம் மதிப்பளித்தல் வேண்டும் என்ற பண்பாட்டு நெறிமுறையையும் இப்பழமொழைி நமக்கு எடுத்துரைக்கின்றது.
நினைத்தல்
நினைத்தலை நெனப்பு, நினைப்பு என்றும் வழக்கில் கூறுவர். ஒருவன் மனதில் எண்ணும் எண்ணங்களையே நினைத்தல் என்பர். ஒரு பொருள் மனிதன், அல்லது தன்னைப் பற்றி ஒருவன் நினைக்கலாம். இந்நினைப்பு அதிகரித்துத் தலைக்கனமாக மாறிவிடக் கூடாது. மேலும் இந்நினைத்தல் தவறானதாக அமைதல் கூடாது. அங்ஙனம் தவறாக அமைந்திடில் வாழ்வில் பிரச்சனைகள் ஏற்பட்டு துன்புற நேரிடும். நம்முடைய வேலையையே கெடுத்துவிடும் தன்மை உடையது. அதனால் தான் நமது முன்னோர்கள்,
‘‘நெனப்புப் பொழைப்பைக் கெடுத்துவிடும்’’
என்று கூறினர்.
தகுதிக்கேற்ப நினைத்தல் வேண்டும். தகுதிக்கு மீறி இருந்தால் அது வாழ்க்கையை அழித்துவிடும். பிறருக்குத் தீங்கு செய்வதைப்பற்றி நாம் நினைத்தால் அது பிறருக்குத் துன்பத்தைத் தரும். அதனால் நல்லனவற்றை நினைத்து நல்லனவற்றைச் செய்தல் வேண்டும். நற் சிந்தனையை மனதிற்குள் வளரவிட வேண்டும் என்ற வாழ்வியலறத்தை இப்பழமொழி நமக்கு வழங்குகிறது.
நற்கனவுகண்டு, நல்லனவற்றை மட்டும நினைத்து நாமும் பிறரும் வாழ்வில் உயர வேண்டும். நல்லெண்ணங்கள் நமக்கும் பிறருக்கும் உன்னதமான வாழ்வைத் தரும். பலிதமாகும் கனவினைக் கண்டு பயன்தரும் கருத்துக்களை நினைத்துப் பயனுறு வாழ்க்கை வாழ்வோம் வாழ்வில் வசந்தம் வரும்.
 

நட்பு

 
 
வலுவான நட்பு விலகிநிற்குமா.....
பிரியமான நட்பு பிரியத்துணியுமா.....
உண்மை நட்பென்றும்
ஊமையாகிப்போகாது........
உயிர் விலகும்வரை
நட்பைவிட்டு விலகாது


முடியாது

 
 
எனக்கென்று உள்ளதை எவரும் தடுக்க முடியாது....
எனக்கென்று இல்லாததை எவரும் கெடுக்க முடியாது


நல்லவனாக

 
 
நல்லவனாக பிறப்பது சந்தர்ப்பத்தினால்
நல்லவனாக வாழ்வது முயற்சியினால்


jeudi 13 septembre 2012

மனமே

 
மனமே..!
நிலையற்ற
வாழ்வை
நிலையென
நினைக்காதே..!

காகத்திடமிருந்து

 
 
காகத்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய சிறப்பான குணங்கள்:-

1. ஒற்றுமை.
2. அதிகாலையில் விழித்தல்.
3. உணவைப் பகிர்ந்து உண்ணுதல்.
4. குளித்து விட்டு மனை கூடுதல்..

ஒற்றுமைக்கு

 
 
ஒற்றுமைக்கு..........காகம்.
அமைதிக்கு..............புறா
உழைப்புக்கு............எறும்பு
தன்மானத்திற்கு.....கவரிமான்
சுறுசுறுப்புக்கு.........தேனீ
..
தந்திரத்திற்கு..........நரி
பேச்சுக்கு.................கிளி
பாட்டுக்கு...............குயில்
ஆடலுக்கு...............மயில்
 
 

mercredi 12 septembre 2012

விசயங்களை

 
 
நீ புரிந்துகொண்ட விசயங்களை தெரிந்து கொள்ள நினைக்காதே! நீ தெரிந்து கொண்ட விசயங்களை புரிந்து கொள்ளாமல் இருக்காதே!..........

நட்பைவிட்டு விலகாது

 
வலுவான நட்பு விலகிநிற்குமா..... பிரியமான நட்பு பிரியத்துணியுமா..... உண்மை நட்பென்றும் ஊமையாகிப்போகாது........ உயிர் விலகும்வரை நட்பைவிட்டு விலகாது........

வரைபடம்

 
"நட்பு ஒரு
பிறப்பல்ல. அழகிய அவதாரம். ஆண்டவன் வரைந்த வரைபடம் நட்பு".


அடிமைகள்

 
இடர்களை எதிர் கொள்ளத்
துணிந்தவன் மட்டுமே உண்மையில் சுதந்திர மனிதனாகும். இடர்களை எதிர் கொள்ள
தயங்குவோர் விலங்கு பூட்டிய அடிமைகள்........


jeudi 6 septembre 2012

போதும்

 
மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.
உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.


lundi 3 septembre 2012

நாள்

 
ஆயிரம் கனவுகளை நனவாக்கப் புறப்பட்ட இன்றைய நாளைவிட வேறு எந்த நாள்தான் சிறந்தது

சொல்லாதே

.
 பாவம் என்று ஒன்று உண்டு என்றால் அது நான் பலவீனமானவன் என்று சொல்வதே.. நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய். ஆகவே என்னால் இயலாது என்று ஒரு போதும் சொல்லாதே.

நெப்போலியன்

.
 
எனக்குத் தெரியாது, என்னால் முடியாது, சாத்தியமில்லாதது, பிடிக்காதது, நாளைக்குப் பார்க்கலாம் என்ற வார்த்தைகளை நெப்போலியன் வெறுத்தான். சாத்தியமில்லாதது என்ற சொல்லை தனது அகராதியில் இருந்து அகற்றிவிட்டான்

சாதிக்க முடியும்

 
தெரியவில்லை என்று சொல்லாதே கற்றுக்கொள், என்னால் முடியாது என்று சொல்லாதே செய்யத் தொடங்கு, கடுமையாக உழை நாளை என்று நகராதே.. இப்போதே தொடங்கு, பிடிக்காது என்று விலகாதே.. விரும்பிச் செய்.
என்னால் முடியும் என்னால் முடியும் – எதையும் செய்ய என்னால் முடியும்
சாதிக்க முடியும் சாதிக்க முடியும் எதையும் என்னால் சாதிக்க முடியும் என்று தினசரி கூறுங்கள்.