முகப்பு

lundi 31 août 2015

thappu




செய்யும் வரை...!



நமக்கு வரும்வரை, வலி புரிவதில்லை
ஒருமுறை செல்வந்தர் ஒருவரின் வீட்டின் தொலைபேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது.
'நான் நம்ம வீட்டு தொலைபேசியை பயன்படுத்துவதே இல்லை. எல்லாவற்றிற்கும் அலுவலத் தொலைபேசியைத்தான் பயன்படுத்துவேன். ஆனாலும் இவ்வளவு தொகை வந்திருக்கு. யார் இதற்கு காரணம்?' என்று யோசித்துக் கொண்டு தன் மனைவியிடம் கேட்டார் குடும்பத் தலைவர்.
'நானும் அலுவலகத் தொலைபேசியை மட்டுமே பயன்படுத்துகிறேன். எனக்குத் தெரியாது' என்று அவர் மனைவியும் கூறிவிட்டு, மகனிடம் கேட்குமாறு கூறினார்.
’நான் வீட்டு தொலைபேசியைத் தொடுவதே இல்லை. எனக்கு அலுவலகம் கொடுத்திருக்கும் கைத்தொலைபேசியில்தான், நண்பர்களிடம்கூட பேசுவேன் என்றார் மகன்.
‘நாம் யாரும் பயன்படுத்தலைன்னா எப்படி இவ்வளவு கட்டணம் வந்துள்ளது’ என தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அந்த வீட்டு வேலைக்காரரோ, 'ஐயா, நானும் உங்களைப்போல் எப்போதும் நான் வேலை செய்யும் இடத்திலுள்ள என்னோட அலுவலகத் தொலைபேசி மட்டுமே பயன்படுத்துகிறேன்' என்றார்.
அந்தக் குடும்ப உறுப்பினர்கள் செய்வதைத்தான் அவரும் செய்திருக்கிறார்.
சில நேரங்களில் நாம் செய்யும் தவறு நமக்குப் புரிவதே இல்லை, வேறொருவர் நமக்கு அதை செய்யும் வரை...!

jeudi 27 août 2015

ஏதும் விசேஷம் உண்டா…?

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டை காட்டி ” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.
… கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.
பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள். அனைவரும் கையைத் தூக்கினர்.
அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார் அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.
அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப்படும் போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.
இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும். ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்” என்றார்.

என்னடா முனியா நான் ஊர்ல இல்லாதப்ப ஏதும் விசேஷம் உண்டா…?
பெருசா ஒன்னும் இல்லீங்க நம்ம நாய் செத்துப்போச்சு.­..
அடக்கடவுளே எப்படிடா திடீர்ன்னுசெத்துச்சு…?
கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடுச்சுங்க­….
மாட்டுக்கறி எங்கடா கிடைச்சது அதுக்கு…?
நம்ம வீட்ல தாங்க…
நாம தான் மாட்டுக்கறி திங்கிறதில்லையே ­…!!?
நெருப்புல அவிஞ்சி போன மாடு மூணு நாலா கிடந்து கெட்டுப்போச்சுங்க. அதைத்தான் நாய் தின்னிடுச்சு…­.
நம்ம மாடா…?
ஆமாங்க…
அய்யய்யோ….!! எப்படிடா எரிஞ்சி போச்சு..!?
நம்ம வீடு எறியும் பொது நெருப்பு பறந்து மாட்டுக்கொட்டகை யில் விழுந்துரிச்சு. ­…
வீடு எப்படிடா எரிஞ்சது….?
குத்து விளக்கு விழுந்து தீ பரவிடிச்சுங்க..­..
குத்து விளக்கு ஏத்துற பழக்கமே நம்ம வீட்டுல கிடையாதேடா…!
அதுக்காக… செத்தவங்க தலைக்கு விளக்கு வைய்க்காம இருக்க முடியுமா…?
யார்ரா செத்தது…?
உங்க அம்மா…
எப்படிடா செத்தாங்க…?
தூக்கு போட்டுக்கிட்டு. ­..
ஏன்டா…?
அவமானத்தில்தான் ­…
என்னடா அவமானம்…?
வீட்டுல இருக்குற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித்துப்பாதா.­..?
ஓடிப்போனது யாருடா…?
உங்க பொண்டாட்டிதான்.­.

kathavu


varumai


tamil


lundi 24 août 2015

வாழ்க்கையில் ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடத்தை புரியவைக்கும்,


வாழ்க்கையில் ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடத்தை புரியவைக்கும்,
உனக்குள் உள்ள உனது பலத்தை உனக்கு புரியவைக்கும்
உனது பலவீனத்தை உனக்கு தெரியவைக்கும்…
நல்ல அனுபவம் கிடைக்கும் போது பரவசப்படனும்…
மோசமான அனுபவம் கிடைக்கும் போது பக்குவப்படனும்…(sountha manuel)

நேசிப்பது இல்லை



உன் அருகில் இருப்பவர்கள் எல்லோரும் உன்னை நேசிப்பது இல்லை..
உன்னை நேசிப்பவர்கள் எல்லோரும் உன் அருகில் இருப்பது இல்லைsountha manuel

தேங்காய்



தேங்காய் உடைக்கிறார்கள் வாழ்க்கை சிதறிப் போகமலிருக்க!
தேங்காய் பொறுக்குகிறார்கள்… வாழ்க்கையில் சிதறிப் போனவர்கள்.....sountha

lundi 17 août 2015

மனிதனை பற்றிய சில உண்மைகள்




* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது
மாதத்திலிருந்துஉரு வாகின்றன.
* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல்பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள்ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.
* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும்40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.
* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.
* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால்அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.
* 60 வயதாகும்போது நாக்கின் சுவைமொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.
* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.
* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.
* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.
* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.
* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.
* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.
* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.
* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.
* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.
நமக்குள் நடக்கும் 18 அதிசியங்கள்!
1. வளர்ந்த மனித உடலில் 600 தசைகள். நூற்றுக்கும் மேலான இணைப்புகள். ஒரு லட்சம் கிலோமீட்டர் நீளம் உள்ள இரத்தக் குழாய்கள் 13000 மில்லியன் உயிரணுக் களும் உள்ளன.
2. மனிதனுக்குள்ள 206 எலும்பு களில் பெரும்பாலானவை கைகளிலும் கால்களிலும் உள்ளன.
3. ஆண்களில் விந்துவை உண்டாக்கும் விரை (விந்தகம்) நாள் ஒன்றுக்கு 10 மில்லியன்வரை விந்து உயிரணுக்களை உற்பத்தி செய்யும். இவை அப்படியே உயிருடன் ஆறு மாத காலம் இருந்தால் மற்றொரு உலக ஜனத்தொகையை உருவாக்கக்கூடும்.
4. மனித இதயம் ஒரு இயல்பான வாழ்நாளில் 2000 மில்லியன் முறை துடிக்கும். இந்த கால கட்டத்தில் 500 மில்லியன் இரத்தத்தை பம்ப் செய்யும். மனிதன் தூங்கும்போது கூட இதயம் ஒரு மணி நேரத்தில் சுமார் 340 லிட்டர் இரத்தத்தை பம்ப் செய்யும். ஒரு நாளைக்கு 1 லட்சம் முறைதுடிக்கும்.
5. இளைஞனின் நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 70 லிருந்து 72 முறை. ஆனால் இளம் பெண்ணின் நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 78 லிருந்து 82 முறைஇருக்கும்.
6. மனிதனின் சிறுநீரகத்தில் ஒரு மில்லியன் வடி கட்டிகள் இருக்கின்றன. அவை ஒரு நிமிடத் திற்கு 1.3 லிட்டர் இரத்தத்தை வடிகட்டுகின்றன. அந்த வடிப்பில் ஏற்பட்ட கழிச்சலை சிறுநீரகம் வெறியேற்றுகின்றன.
7. மனித உடலில் உள்ள இரத்தத்தை நிமிடத்திற்கு 4.5 லிட்டர் விகிதம் நுரையீரலில் சுத்தப் படுத்தும்.
8. மனித உடலில் சிவப்பணுக்களை எலும்புச் சோறு (எலும்பின் மச்சை) தயாரிக்கிறது. அந்த அணுக்கள் 100லிருந்து 120 நாட்கள் வாழ்கின்றன. மனித வாழ்வில் சுமார் அரை டண் சிகப்பணுக்கள் தயாராகும்.
9. ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் 50 டண் உணவை சாப்பிடுகிறான். 50 ஆயிரம் லிட்டர் திரவத்தை குடிக்கிறான்.
10. நாம் தினமும் கண் இமை களை திறக்கவும் மூடவும் செய்கிறோம் அல்லவா? இந்த செயல் 6 வினாடிக்கு கொருமுறை நடக்கிறது. அதன்படி இந்த சிமிட்டலை நாம் நம்முடைய வாழ் நாளில் 250 மில்லியன் முறை (25 கோடிமுறை) செய்கிறோம்.
11. மனிதனுக்கு 15 வயது வரையில்தான் மூளை வளரும்.
12. சாதாரண மனிதனின் தலையில் 10 ஆயிரம் ரோமங்கள் உள்ளன.
13. ஒரு விஞ்ஞானி, மனிதனின் மரணத்திற்கு சில நொடிகளுக்கு முன்பு இருந்த எடையும் மரணமடைந்த உடனே இருந்த எடையும் ஒப்பிட்டு பார்த்து 21 கிராம் குறைவாக இருந்ததை அறிந்து அதன்மூலமாக ஜீவான்மாவின் எடை 21 கிராம் என்று நிரூபித்தார்.
14. நாம் ஒரு நிமிடத்திற்கு சுமார் 25 முறை கண் இமை களை மூடி திறக்கிறோம்.
15. ஒரு ஆரோக்கியமான மனிதன் ஒரு நாளில் (24 மணிகளில்) 23000 முறை மூச்சிழுப்பான்.
16.பெரும்பாலோர் இரவுத் தூக்கத்தில் 40 முறை அப்படியும் இப்படியும் புரளுவார்கள்.
17. மனித உடலில் உள்ள அனைத்து இரத்தக் குழாய்களை வரிசையாக இணைத்தால் மொத்தம் ஒரு லடசம் கி.மீ நீளத்திற்கு சேரும். அந்த நீளம் பூமத்திய ரேகையை நான்கு தடவை சுற்றிவரக்கூடும்.
18. மனிதன் மனமார சிரிக்கும் பொழுது 17 தசை களும், கோபப்படும்பொழுது 43 தசைகளும் சுருக்கமடைகின்றன.

dimanche 16 août 2015

ஓடிப்போனது யாருடா…?



என்னடா முனியா நான் ஊர்ல இல்லாதப்ப ஏதும் விசேஷம் உண்டா…?
பெருசா ஒன்னும் இல்லீங்க நம்ம நாய் செத்துப்போச்சு.­..
அடக்கடவுளே எப்படிடா திடீர்ன்னுசெத்துச்சு…?
கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடுச்சுங்க­….
மாட்டுக்கறி எங்கடா கிடைச்சது அதுக்கு…?
நம்ம வீட்ல தாங்க…
நாம தான் மாட்டுக்கறி திங்கிறதில்லையே ­…!!?
நெருப்புல அவிஞ்சி போன மாடு மூணு நாலா கிடந்து கெட்டுப்போச்சுங்க. அதைத்தான் நாய் தின்னிடுச்சு…­.
நம்ம மாடா…?
ஆமாங்க…
அய்யய்யோ….!! எப்படிடா எரிஞ்சி போச்சு..!?
நம்ம வீடு எறியும் பொது நெருப்பு பறந்து மாட்டுக்கொட்டகை யில் விழுந்துரிச்சு. ­…
வீடு எப்படிடா எரிஞ்சது….?
குத்து விளக்கு விழுந்து தீ பரவிடிச்சுங்க..­..
குத்து விளக்கு ஏத்துற பழக்கமே நம்ம வீட்டுல கிடையாதேடா…!
அதுக்காக… செத்தவங்க தலைக்கு விளக்கு வைய்க்காம இருக்க முடியுமா…?
யார்ரா செத்தது…?
உங்க அம்மா…
எப்படிடா செத்தாங்க…?
தூக்கு போட்டுக்கிட்டு. ­..
ஏன்டா…?
அவமானத்தில்தான் ­…
என்னடா அவமானம்…?
வீட்டுல இருக்குற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித்துப்பாதா.­..?
ஓடிப்போனது யாருடா…?
உங்க பொண்டாட்டிதான்.­.

ஏன் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லை….?


ஏன் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள்
பெறுவதில்லை….?
அது மாணவர்களின் தவறு கிடையாது,
அவர்களுக்கு படிப்பதற்கு நேரமே கிடைப்பதில்லை..
வருடத்தில் 365 நாட்கள் மட்டுமே உள்ளது ஒரு பெரிய
குறை..
உதாரணத்திற்கு ஒரு மாணவனின் ஒரு கல்வி ஆண்டை எடுத்துக்கொள்வோம்..
1.ஒரு வருடத்திற்கு 52 ஞாயிற்றுகிழமைகள்..
மற்ற நாள்கள் 313 (365-52=313)
2.கோடை விடுமுறை 50. ரொம்ப வெப்பமான காலம் என்பதால் படிப்பது கஸ்டம்.
மீதி 263 நாள்கள் (313-50=263).
3. தினமும் 8 மணி நேரம் தூங்கும் நேரம் என்பதால்
(கூட்டினால் 122 நாட்கள் வருகிறது).
மீதி 141 நாட்கள் (263-122=141).
4. 1 மணி நேரம் விளையாட்டு நேரம் வளரும் பசங்களுக்கு நல்லது. நாள் கணக்கு படி 15 நாள்.
மீதி 126 நாட்கள் (141-15=126).
5. 2 மணி நேரம் சாப்பாட்டு நேரம் . நன்றாக மென்று சாப்பிடு என்று அறிவுறுத்தப்படுவதால் 30 நாள்கள்.
மீதி 96 நாட்கள் (126-30=96).
6. 1 மணி நேரம் பேசியே கழிக்கிறோம்.
நிறைய பேசினால் நிறைய கத்துகலாம். 15 நாள் வருகிறது.
மீதி 81 நாட்கள் (96-15=81).
7. ஒரு வருடத்திற்கு 35 நாட்கள் தேர்வு எழுதியே கழிப்பதால் , மீதி 46 நாட்கள்
(81-35=46).
8. காலாண்டு,அரையாண்டு, பண்டிகை தினம் விடுமுறைகள் 40 நாட்கள்..
மீதி 6 நாட்கள்(46-40=6).
9. உடம்பு சரியில்லாமல் எடுக்கும் விடுப்பு குறைத்தது
3 நாட்கள். மீதி 3 நாட்கள் (6-3=3).
10. சினிமா, உறவினர் திருமணம்,விழாக்கு 2
நாள் போய்விடும். மீதி ஒரு நாள்
(3-2=1).
11. அந்த ஒரு நாளும் அந்த பையன் பிறந்த நாள்..
பின்ன எப்படி தேர்வில் அதிக மதிப்பெண்கள்
பெறமுடியும்….?

தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்”


200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டை காட்டி ” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.
… கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.
பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள். அனைவரும் கையைத் தூக்கினர்.
அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார் அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.
அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப்படும் போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.
இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும். ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்” என்றார்.

தகுதிக்கேற்ப செயல்படுங்கள்

தகுதிக்கேற்ப செயல்படுங்கள்
ஒரு காட்டுப்பன்றி தற்பெருமை மிக்கதாக இருந்தது. காட்டிலுள்ள மரங்களைப் பார்த்த அந்தப் பன்றி, “”இந்த மரங்கள் எவ்வளவு உயரமாக இருக்கின்றன. இவற்றைப் போல என்னால் வளர்வதென்பது முடியாத காரியம். ஆனால், இந்த மரங்களை என்னளவுக்கு குறுக்கி விட்டால் என்ன என்று கணக்குப் போட்டது. ஒவ்வொரு மரத்தின் மீதும் தாவிக்குதித்து மேலே ஏறி, கிளைகளின் மீது நின்று அவற்றை ஒடித்துத்தள்ள முயன்றது.
கிளைகள் வளைந்ததே தவிர ஒடியவில்லை. பன்றிக்கோ கடும் கோபம். இந்த மரங்கள் இங்கே நின்றால் தானே உயரம் பற்றிய கவலை! இவற்றின் மீது முட்டி மோதினால் மொத்த மரங்களும் சாய்ந்து போகுமே என்று முட்ட ஆரம்பித்தது. மரம் சாயுமா என்ன! பன்றிக்கு தான் உடம்பெல்லாம் காயம். ரத்தம் வழிந்தது.
ஒரு கட்டத்தில், தன் முயற்சியில் தோல்வியுற்று, ரத்தம் அதிகமாக வெளியேறி பன்றி இறந்தே போனது. இது மாதிரி தான், யாரைப் பார்த்தாலும் அவர்கள் கருத்துக்கு எதிர்கருத்து பேசி, தங்கள் மூக்கை உடைத்துக் கொள்பவர்களாய் இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும், யாரைப் பார்த்தாலும் மோதல் என்ற போக்கை கைவிடுங்கள்.
அவர்களைப் போல உயர வேண்டும் என்பதற்காக பொறாமையுடன், நீங்களும் செய்ய முயலாதீர்கள். கடவுள் நமக்கு என்ன தகுதியைக் கொடுத்திருக்கிறானோ, அதற்கேற்ப செயல்படுவதே வெற்றியளிக்கும்.

கல்யாணமான புதுசு.

கல்யாணமான புதுசு.
மாமியார் வீட்டுக்கு விருந்துக்குப் போயிருந்தப்போ,
“மாமா”
“என்ன மாப்ளே…?” என்றார் என் மாமனார்.
“இல்லை…உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும்” என இழுத்தேன் நான்.
“அட எதுக்கு வெட்கப்படுறீங்க…சும்மா கேளுங்க”
“இல்லை… நான் இருக்குற வீட்ல இருந்து ஆபிஸ் ரொம்ப தூரம்…ஒரு பைக் வாங்கிக் கொடுத்தீங்கன்னா……”
“அதுக்கென்ன வாங்கி கொடுத்துட்டா போச்சி…இதை கேக்குறதுக்கா தயங்குனீங்க?”
“இன்னொன்னும் பண்ணனும்”
“இன்னொண்ணா…சொல்லுங்க”
“பெட்ரோல் போடுறதுகு மாசம் ஒரு 1500 ரூபாயும் கொடுத்தீங்கன்னா…..”
கடகட வென சிரித்துவிட்டு சொன்னார் என் மாமனார்,
“அதுக்கென்ன மாப்பிள்ளே…கொடுத்துட்டாப் போச்சு…” என்றவர்,
“நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்கவா?” என்றார்.
கேட்டது கிடைத்துவிட்ட சந்தோசத்தில்,
“சொல்லுங்க மாம” என நான் சொல்ல,
அவர் சொன்னார்,
“வண்டி ஓட்டி நீங்க எதுக்கு கஷ்டப்படணும் … அதையும் நானே ஓட்டிக்கிறேனே”

கெஞ்சறார்”

பக்கத்து வீட்டு பொண்ணுக்கு சமீபத்துல தான் கல்யாணம் ஆச்சு.
ஒரே பொண்ணு …
பொண்ணுக்கு நகை நட்டு, சீர் செனத்தின்னு பணத்தை தண்ணியா செலவழிச்சி கல்யாணத்தை நடத்துனாங்க.
நேற்று அந்தப் பெண்ணின் தகப்பனாருடன் பேசிக்கொண்டிருந்த போது,
“உங்க பொண்ணுக்கு ரொம்ப பிரமாண்டமா கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க … மொத்தம் எவ்வளவு செலவு பண்ணியிருப்பீங்க?” என்று கேட்டேன்.
“30 லட்ச ரூபாய் வரைக்கும் செலவு ஆகிடுச்சி தம்பி” என்றார் அவர்.
“பொண்ணு மாப்பிள்ளையெல்லாம் சந்தோசமா இருக்காங்களா? … மாப்பிள்ளைக்கு நீங்க செஞ்சதெல்லாம் திருப்தியா இருக்காமா? … அது வேணும் இது வேணும்னு வேற எதுவும் கேட்கலியே?”
“எம் பொண்ணு எதுவும் கேட்கல … மாப்பிள்ளைதான் ஒண்ணே ஒண்ணு கேட்டிருக்கார்”
“என்னது??”
“50 லட்ச ரூபாய் தர்றேன்… என்னைக் காப்பாத்துங்க மாமான்னு …கெஞ்சறார்”

என் மனைவி என்னிடம் சொன்னாள்,

பேசிக்கொண்டிருந்த போது என் மனைவி என்னிடம் சொன்னாள்,
“நீங்க நடக்கும்போது ஒரு கம்பீரம் தெரிகிறது!
சாப்பிடும்போது அழகு தெரிகிறது!
நிற்கும்போது அமைதி தெரிகிறது!
நீங்க ஓடும்போது வேகம் தெரிகிறது!”
எனக்கு அப்படியே புல்லரிச்சிப் போச்சி….
“அப்புறம்….?” என நான் கேட்க,
அவள் சொன்னாள்,
“உங்களையெல்லாம் படம் பிடிச்சி ஏன் டிஸ்கவரி சேனல்ல போட மாட்டேங்குறாங்க?(Joke sountha.....)

கொஞ்சம் பாரு


ஒரு பெரிய மனிதரின் இறுதிச் சடங்கு…,
சவப்பெட்டி இறுதி யாத்திரைக்கு தயாராக இருக்க,
அங்கு வந்திருந்த மந்திரி தன் நண்பரின் நற்குணங்களைப் பற்றி சிறு உரை நிகழ்த்தினார்..
“மறைந்த நண்பர் கற்பில் ராமன்!
எவ்வித தீயப் பழக்கங்களும் அண்டாமல் நெருப்பாய் வாழ்ந்தவர்!
ஒரு மனிதன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாய் வாழ்ந்து உயிர் நீத்தவர்… “
இறந்தவரின் மனைவி தன் மகனை அழைத்து,
” ராஜா, சவப் பெட்டிக்குள்ள இருக்கறது உங்க அப்பாவா இல்ல வேற யாராவதான்னு கொஞ்சம் பாரு..”.sounthaaa

உணவு விடயத்தில் தமிழர்களின் ரசனையே தனி.

தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.

உணவு விடயத்தில் தமிழர்களின் ரசனையே தனி. பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உனவுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
1 . அருந்துதல் — மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது.
2 . உண்ணல் — பசி தீர சாப்பிடுவது.
3 . உறிஞ்சுதல் — நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்.
4 . குடித்தல் — நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.
5 . தின்றல் — பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல்.
6 . துய்த்தல் — உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.
7 . நக்கல் — நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல்.
8 . பருகல் — நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.
9 . மாந்தல் — ரொம்பப் பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்.
10 . கடித்தல் — கடினமான உனவுப் பொருளை கடித்தே உண்ணுதல்.
11. விழுங்கல் — வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது.
12. முழுங்கல் — முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது.

samedi 15 août 2015

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது
1.விமானத்தை மிகச் சாதாரணமாகவும்..
வண்ணத்துப் பூச்சியை
ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப்
பிள்ளைகள்.!
2. வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான
வாய்ப்பு,
சிலருக்கு படிக்கட்டாகவும்,
சிலருக்கு எஸ்கலேட்டராகவும்,
சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது..
3. பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு
கடந்து செல்லும்
ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.!
4. தோற்றுப்போய் வீடு திரும்புகையில்,
தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால்
போதும்,
வாழ்க்கையை ஜெயித்துவிடலாம்.
5. முதியோர் இல்லத்திற்கு
பணம் கொடுங்க,
பொருள் கொடுங்க,
உணவு கொடுங்க,
உடை கொடுங்க..
ஆனா உங்க பெற்றோரை மட்டும்
கொடுத்துடாதீங்க..
6. 20 வயசு வரைக்கும்தான் வேளா
வேளைக்கு சோறு..
அதுக்கு மேல வேலைக்கு போனால் தான்
சோறு..
7. டாக்டரை மறந்து விட்டு
நர்சுகளை ஞாபகம் வைத்திருக்கும்
விசித்திரமான உலகம் இது.!
8.ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள
விட,
ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான்
பெரும்பாலும் முதியோர் இல்லத்துல
இருக்காங்க.!
9. கடவுள் சிற்பத்தை ‘கல்’ என ஒத்துக்கொள்பவர்
கள்,
பணத்தை ‘காகிதம்’ என ஒத்துக்கொள்வதில்லை..
10. கடவுளாக வாழ கல்லாயிருந்தால்
போதும்..
மனிதனாக வாழத்தான் அதிகம் மெனக்கிட
வேண்டியிருக்கிறது.!
11.மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு
யுக்திகளைக் கையாளுகிறார்கள்..
ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை
எழுதுகிறார்கள்..
மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு
விடுகிறார்கள்..
12. மழைக்காக விடப்பட்ட விடுமுறையில்
ஒருபோதும் மழை பெய்வது இல்லை..
அவை குழந்தைகள் மீதான கடவுளின்
மனிதாபிமானம்..
13. ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத
நாம்தான்,
சாலையோரத்து ஏழை வியாபாரியிடம்
வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம்..

தமிழர் நாட்டுப்புறக் கலைகள்


தெருக்கூத்து-thamil.co.uk
தெருக்கூத்து
தமிழகத்தின் மிகப்பழமையான அரங்கக் கலை வடிவம் தெருக்கூத்து ஆகும். தெருக்களையே ஆடுகளமாகக் கொண்டு நிகழ்த்தப்படுவதால் தெருக்கூத்து எனப்பெயர் பெற்றது.  ஒரு கதையைப் பாடியும் ஆடியும் உரையாடியும் நடித்தும் நிகழ்த்தப்படும் கலையாக இது விளங்குகிறது.
சிலபகுதிகளில் தெருக்கூத்து நடிகர்கள் தலைக்கிரீடம், புஜக்கட்டை இவற்றை ஒப்பனைப் பொருளாக அணிவதால் கட்டைக் கூத்து எனவும் வழங்கப்படுகின்றது. சில பகுதிகளில் இத்தகைய ஒப்பனை இல்லாமலும் தெருக்கூத்து நிகழ்த்தப்படுவதுண்டு.
தெருக்கூத்தில் எடுத்துரைக்கப்படும் கதைப் பொருளிற்கேற்ப ஒப்பனைகள் மேற்கொள்ளப் படுகின்றன. ஆண்களே பெண் வேடமிட்டு நடிக்கின்றனர். கட்டியக்காரன் என்ற நகைச்சுவைப் பாத்திரம் தெருக்கூத்தில் மிகவும் குறிப்பிடத் தக்கதாகும்.
வடார்க்காடு, தென்னார்க்காடு, செங்கல்பட்டு, வேலூர் மாவட்டப் பகுதிகளில் நடைபெறும் திரௌபதையம்மன் விழாக்களின் போது வழிபாட்டுச் சடங்கின் ஒரு பகுதியாகத் தெருக்கூத்து இடம்பெற்று வருகிறது. இதில் பெரும்பாலும் மகாபாரதக் கதைச் சம்பவங்களே கூத்தாக நிகழ்த்திக் காட்டப்படுகின்றன.
பகல் வேடம்பகல் வேடம்
புராணக் கதை மாந்தர்களைப்போல வேடமிட்டுப் பகல் நேரங்களில் வீடுவீடாகச் சென்று பாடல்பாடி உரையாடி நிகழ்த்தப்படும் கலையாகப் பகல் வேடம் விளங்குகிறது. பகலில் வேடமிட்டு நிகழ்த்தப் படுவதால் இது பகல் வேடம் என்று பெயர் பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் கதை எடுத்துரைக்கப் படாமல் செல்லும் இடமெல்லாம் உதிரியாகப் பாடல்களைப் பாடிச் செல்லும் நடமாடும்  நிகழ் கலையாக இது உள்ளது.
கிருஷ்ணர், இராமர், சீதை, அனுமராக வேடம் புனைந்து இராமாயணம், மகாபாரதக் கதைச் சம்பவங்களைப் பாடியும் உரையாடியும் நடித்தும் எடுத்துரைத்துச் செல்வர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட குல்லுக்கவர நாயுடு என்ற  இனத்தாரே இக்கலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலாவணி-thamil.co.ukஇலாவணி
தஞ்சை மராட்டியர் ஆட்சிக்காலத்தில் மராட்டிய மாநிலத்திலிருந்து தமிழகம் வந்த கலைவடிவம் இலாவணி ஆகும். இலாவணி என்றால் நடுதல் என்ற பொருள். மராட்டியத்தில் நாற்று நடும்போது காமச்சுவை ததும்பப் பாடப்படும் பாடல்களை இலாவணி என்று அழைப்பதுண்டு. அதுவே தமிழ்ப் பெயராகவும் நிலைத்து விட்டது.
தமிழகத்தில் காமன் கோயில் வழிபாட்டோடு தொடர்புடையதாக இலாவணி நிகழ்த்தப்படுகிறது. மன்மதன் எரிந்தான் என ஒரு கட்சியினரும், மன்மதன் எரியவில்லை என ஒரு கட்சியினரும் வாதிடுவதாக இலாவணிப்பாடல் அமைந்திருக்கும். டேப் என்ற தோலிசைக் கருவியினை இசைத்துக்கொண்டு ஒரு பிரிவினர் தங்களது வாதத்தினைப் பாடலாகப்பாட, அடுத்த பிரிவினர் அதற்குப் பாடலிலேயே பதில் கூறுவதாக இலாவணி நிகழ்ச்சி அமையும். இவ்வாறு வினாவிடைப் பாணியில் இலாவணி நிகழ்ச்சி விடியவிடியத் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
திருச்சி, தஞ்சை மாவட்டப் பகுதிகளிலேயே இலாவணி நிகழ்த்திக் காட்டப்படுகின்றது. மன்மதன் கதை மட்டுமே இலாவணியில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். இக்கலை இன்றைய நிலையில் மறைந்துகொண்டு வருகின்றது.
உடுக்கைப்பாட்டு-thamil.co.ukஉடுக்கைப்பாட்டு
உடுக்கை என்னும் இசைக்கருவியை இசைத்துக் கொண்டு ஒரு கதையைப் பாட்டாக எடுத்துரைப்பது உடுக்கைப்பாட்டு எனப்படும். கொங்குமண்டலப் பகுதிகளில் உள்ள கோயில் விழாக்களில், குறிப்பாக அண்ணமார்சாமி வழிபாட்டில், உடுக்கைப்பாட்டு சிறப்பிடம் பெறுகிறது. இறந்தோருக்காவும் ஆவிவயப்பட்டோரைக் குணப்படுத்துவதுற்கும் கூட உடுக்கைப்பாட்டுப் பாடும் வழக்கம் தமிழகத்தில் பரவலாக உள்ளது.
தலைமைப்பாடகர் உடுக்கினை இசைத்துக்கொண்டு பாட, இருவர் பின்பாட்டுப் பாடுவர். சில பகுதிகளில் ஆண்கள் பெண் வேடமிட்டு உடுக்கைப் பாட்டிற்கேற்ப ஆடுவதும் உண்டு.
கணியான் கூத்துகணியான் கூத்து
கணியான் என்னும் இனத்தாரால் மட்டுமே இக்கூத்து நிகழ்த்தப்படுவதால் கணியான் கூத்து என வழங்கப்படுகிறது. கணியான் கூத்தில் மகுடம் என்னும் தோலிசைக் கருவி சிறப்பிடம் பெறுவதால் மகுடாட்டம், மகுடக்கச்சேரி எனவும் சுட்டப்படுவதுண்டு.
தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுடலைமாடன் கோயில் வழிபாடுகளில் சடங்குக் கலையாகக் கணியான் கூத்து நிகழ்த்தப்படுகிறது.
மகுடச்சத்தம் கேட்டாலொழிய மாடன்பூசை கொள்வானோ என்ற வழக்காறு சுடலைமாடன் வழிபாட்டிற்கும் கணியான் கூத்திற்கும் உள்ள உறவை உணர்த்தும்.
தலைமைப்பாடகர் ஒருவர் (அண்ணாவி என அழைக்கப்படுவார்). மகுடம் வாசிப்போர் இருவர், ஆட்டம் ஆடும் பெண்கள் இருவர் (ஆண்களே பெண் வேடமிட்டு ஆடுவர்), ஒரு பின்பாட்டுக்காரர் என்று ஆறுபேர் கணியான் கூத்தில் இடம்பெறுவர்.
அம்மன் கூத்து-thamil.co.ukஅம்மன் கூத்து
அம்மன் கூத்து என்பது, அம்மனைப் போல் வேடம் புனைந்து ஆடுவதாலும், அம்மன் கோவில்களில் ஆடுவதாலும் அம்மன் கூத்து எனப் பெயர்பெற்றதோர் கூத்தாகும். இக்கூத்து கணியான் கூத்திற்கு, துணை ஆட்டமாகவும் கருதப்படுகிறது. இக்கூத்து பல மாவட்டங்களில் பெரிதும் விரும்பப்படுகிறது. இக்கலை, சடங்கு சார்ந்ததாகவும், அம்மனின் அருளைக் காட்டுவதாகவும் அமையும் ஒன்றாகும். அம்மன் கூத்து, இன்றும் நடைமுறையில் நிகழ்த்தப்படுவதாகும்.
வில்லுப்பாட்டு-thamil.co.ukவில்லுப்பாட்டு
வில் என்ற இசைக்கருவியைக் கோலால் அடித்து ஒலி எழுப்பிப் பாடியும் உரையாடியும் நிகழ்த்தப்படும் கலை வில்லுப்பாட்டு ஆகும். வில்லிசை, வில்லடிச்சான் பாட்டு என்றும் இது வழங்கப்படும். தமிழகத்தின் தென்மாவட்டங்களில் உள்ள சிறு தெய்வக் கோயில்களின் வழிபாட்டில் வில்லுப்பாட்டு தவறாமல் இடம்பெறும்.
தலைமைப்பாடகர், பின்பாட்டுக்காரர், இசைக்கருவி வாசிப்போர் என்று வில்லுப்பாட்டுக் குழுவில் ஆறுபேர் இடம்பெறுவர்.
வில்லுப்பாட்டில் முதன்மை இசைக்கருவியாக விளங்குவது வில் ஆகும். நீளமாக அமையும் இந்த வில்லின் இருபுறமும் மணிகள் கட்டப்பட்டிருக்கும். தலைமைப்பாடகர் கையிலுள்ள கோல்களினால் வில்லினை அடிக்க இனிய இசை எழும்பும். வில்லுப்பாட்டில் மற்றொரு முக்கிய இசைக்கருவி உடுக்கை ஆகும். வெண்கலத்தாலான சிறிய உடுக்கையே வில்லுப்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது. அடுத்துச் சிறப்பிடம் பெறுவன குடம் அல்லது பானைத்தாளம், ஆர்மோனியம், வில்லுப்பாட்டில் இடம்பெறும் பாடல்களும் அதற்கேற்ப அமையும் இசையும் கேட்போரை வெகுவாகக் கவரும்.
சிறுதெய்வக் கதைகள், இராமாயணம், சிலப்பதிகாரம், நாயன்மார் கதைகள், காந்திமகான் கதை போன்றவை வில்லுப்பாட்டில் எடுத்துரைக்கப் படுகின்றன. அரசின் திட்டங்கள், விழிப்புணர்வுக் கருத்துகள் போன்றவற்றை மக்களிடையே பரப்பும் பணியில் வில்லுப்பாட்டு முக்கிய பங்காற்றி வருகின்றது.
ஒயிலாட்டம்-thamil.co.ukஒயிலாட்டம்
கிராமத்து இளைஞர்களால் பாடலுடன் நேர்வரிசையில் ஆடப்படும் ஆட்டம் ஒயிலாட்டம் ஆகும். ஒயில்கும்மி, இராமாயணக் கும்மி என்ற பெயர்களில் இது அழைக்கப்படுகின்றது. பெண்கள் ஆடும் வட்டக் கும்மியிலிருந்து ஒயில்கும்மி வேறுபட்டதாகும். ஒயில் என்றசொல்லுக்கு ஒய்யாரம், அழகு, நளினம், சாயல், அலங்காரம் என்று  அகராதிகள் பொருள் தருகின்றன. ஒய்யாரம் என்பதற்குக் கம்பீரம், எடுப்பு (Majestic) என்ற பொருளைத் தற்காலத் தமிழ் அகராதி கூறுகிறது. ஒயிலாட்டம் ஆண்கள் ஆடும் ஆட்டமாக இருப்பதால் கம்பீரமும் எடுப்பும் மிக்க ஆட்டமாக விளங்குகிறது.
ஒயிலாட்டத்திற்கென்று தனித்த ஒப்பனை முறைகள் கிடையாது. ஆனால் கையில் வண்ணக் கைக்குட்டை பிடித்திருப்பதும் காலில் கெச்சம் (சலங்கை மணிகள்) அணிவதும் அவசியமாகும். வண்ணக் கைக்குட்டையை வீசிச் சுழற்றி ஆடும்போது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
இத்தனை பேர்தான் ஒயிலாட்டம் ஆடவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. ஆடத்தெரிந்த, ஆடும் விருப்பமுள்ள எவரும் கலந்து கொண்டு ஆடலாம். இராமாயணக் கதையைப் பாடிக்கொண்டு ஒரே வரிசையாகவோ, இரண்டு வரிசையில் நின்றோ ஆடுகின்றனர். ஒயிலாட்டி (ஒயிலாட்ட ஆசிரியர்) பாடலைப்பாட ஆட்டக்காரர்கள் பின்பாட்டுப் பாடிக்கொண்டே முன்னும் பின்னும் சென்று பலவகையான ஆட்டங்களை ஆடுவர், ஆடிக் காட்டுகின்றனர்.
மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மாவட்டச் சிறுதெய்வக் கோயில் விழக்களில் ஒயிலாட்டம் ஆடப்பட்டு வருகின்றது.
சேவையாட்டம்-thamil.co.ukசேவையாட்டம்
கம்பளத்து நாயக்கரால் ஆடப்படும் ஆட்டம் சேவையாட்டம் ஆகும். சேவை என்றால் சேவித்தல், வணங்குதல் என்று பொருள்படும். இறைவனை ஆட்டத்தின் மூலமாக வணங்குவதால் இது சேவையாட்டம் எனப்பட்டது.
இராமாயணக் கதையைப் பாடலாகப் பாடிக்கொண்டு விடியவிடிய இவ்ஆட்டம் ஆடப்படும். தேவதுந்தமி, சேவைப் பலகை, சேமக்கலம் ஆகிய இசைக்கருவிகள் ஆட்டத்தின் போது பயன்படுத்தப்படும்.
சேவையாட்டக் கோமாளி பாடலைப்பாடி  ஆட்டத்தைத் தொடங்க, ஏனைய ஆட்டக்காரர்கள் பின்பாட்டுப்பாடி வட்டமாக ஆடி வருவர். திருமால், பெருமாள், ரெங்கநாதர் ஆகிய தெய்வங்களின் வழிபாட்டில் சேவையாட்டம் தவறாது இடம்பெறாது.
பொம்மலாட்டம்-thamil.co.ukபொம்மலாட்டம்
மரத்தால் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளை இயக்கிக் காட்டி நிகழ்த்தப்படுவது பொம்மலாட்டம் ஆகும். தோற்பாவைக் கூத்திலிருந்து இது வேறுபட்டதாகும். கட்டை பொம்மைக்கூத்து, கட்டை பொம்மை நாடகம் என்ற பெயரிலும் இது வழங்கப்படும். கும்பகோணம், மயிலாடுதுறை, சேலம் ஆகிய பகுதிகளில் பொம்மலாட்ட சபா என்ற பெயரில் பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
பொம்மைகளின் உறுப்புகள் கயிற்றால் தனித்தனியே இணைக்கப்பட்டுக் கலைஞர்களால் உரையாடலுக்கேற்ப இயக்கிக் காட்டப்படுகின்றன. கரகாட்டம், காவடியாட்டம், நெல் குத்துதல், கத்திச்சண்டை போடுதல் போன்றவை பொம்மையைக் கொண்டு செய்துகாட்டும் போது மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளிக்கின்றனர். இராமாயணக் கதைகளே பொம்மலாட்டத்தில் பெரிதும் எடுத்துரைக்கப் படுகின்றன.
திரைப்படம் என்ற சாதனம் வருவதற்கு முன்பு தோற்பாவைக் கூத்தும் பொம்மலாட்டமுமே அரங்கக் கலையாக மக்கள் முன் நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளன. திரைப்படம், தொலைக்காட்சி இவற்றின் தாக்கத்தால் இக்கலைகள் இன்று மறைந்து வருகின்றன.
தோற்பாவைக் கூத்து-thamil.co.ukதோற்பாவைக் கூத்து
பாவைக் கூத்து, தோற்பாவைக் கூத்து, தோற்பாவை நிழற்கூத்து என்ற பெயர்களில் இக்கலை வழங்கப்படுகிறது. தோலினாலான உயிரற்ற பாவைகளை உயிருள்ள மாந்தர்களாய் மாற்றிக் கலைஞர்களால் நிகழ்த்தப்படும் கூத்தாக தோற்பாவைக் கூத்து விளங்குகிறது. மராட்டியைத் தாய்மொழியாகக் கொண்ட ராவ் என்னும் பிரிவினரால், குடும்பக் கலையாக இது நிகழ்த்தப்படுகிறது. திரைகட்டி அதன் பின்னே தோற்பாவைகளை இயங்கச் செய்து இக்கூத்து நிகழ்த்திக் காட்டப்படுகிறது.
தோற்பாவைக் கூத்தில் இராமாயணக் கதைகளே மிகுதியும் நிகழ்த்திக் காட்டப்படுகின்றன. சிறுவர்களை மகி்ழ்விப்பதற்காக உச்சிக்குடும்பன், உழுவத்தலையன் என்ற நகைச்சுவைப் பாத்திரங்களும் கிடாய்ச் சண்டை (ஆட்டுக்கிடாய்கள் சண்டையிடுவது) என்னும் நிகழ்ச்சியும் இடம்பெறுகின்றன. தோற்பாவைக் கூத்து சீனாவில் தோன்றிப் பிறநாடுகளுக்குப் பரவியதாகக் கூறப்படுகிறது.
அனுமன் ஆட்டம்அனுமன் ஆட்டம்
அனுமன் ஆட்டம் என்பது, இராமாயண அனுமனைப் போல் வேடம் புனைந்து ஆடும் ஆட்டமாகும். இது ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டமாகும்.  இவ்வாட்டமானது தமிழகத்தில் பரவலாகவும், தென் மாவட்டங்களில் வைணவ சாதியினர் வாழும் இடங்களில் சிறப்பாகவும் நிகழ்த்தப்படுகிறது. இது ஒரு கலையாகவும், தாளத்திற்கும், இசைக்கும் ஏற்ப ஆடப்படுகிறது.
அன்னக்கொடி விழாக் கூத்து
சிவனடியாரான சிறுத்தொண்டரின் கதையை பக்தி உணர்வுடன் நிகழ்த்தும் கூத்து வடிவிலான கலை அன்னக்கொடி விழாக் கூத்து ஆகும் அன்னம் என்றால் உணவு என்று பொருள். எனவே இவ்விழாவினை உணவு படையல் விழா என்றும் பொருள். சிறுத்தொண்டர் முக்தியடைந்த நாளான சித்திரைத் திங்கள் பரணி நட்சத்திர நாள் இதற்கு சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. இவ்விழா பெரும்பாலும் ஆற்றங்கரை ஏரி குளம் பொது நீர்நிலை போன்ற இடங்களிலேயிருந்தே தொடங்கும். இவ்விழாவினில் பங்கேற்பதன் மூலம் மகப்பேறு கிட்டும். கெட்ட ஆவியோ அல்லது நோயோ அண்டாது என்ற நம்பிக்கை இன்றளவும் மக்கள் மனதில் உள்ளது

பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்!




வீட்டுக் குறிப்புகள்!
1. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.
2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.
3. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.
4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.
5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.
6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.
7. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை அடைபடும்.
9. எப்பொழுதாவது உபயோகிக்கும் “ஷூ”க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு “ஷூ”விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.
10. ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி வாசனையாக் இருக்கும்.
11. பிரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது.
12. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.
13. வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வையுங்கள். வாடாமல் இருக்கும்.
14. பொருட்களை கறையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து தூவி வையுங்கள்.
15. வெள்ளி சாமான்களை பீரோவில் வைக்கும்போது அதற்குள் கற்பூரத்தைப் போட்டு வைப்பது நல்லது.
16. அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க வேண்டும்.
17. இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே இருக்கும்.
18. காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலுமாரியில் வைத்தால் பூச்சிகள் அணுகாது.
19. கடையில் மூக்குப் பொடி வாங்கித் தண்ணீரில் கரைத்து எறும்புப் புற்றின் மேல் தெளித்து விடுங்கள். எறும்புகள் மாயமாய் மறைந்து போகும்.
20. குழந்தைகளுக்கு வெஜிடபிள் சூப் தரும் போது அதில் துருவிய கசுக்கொட்டையை (முந்திரி) பொடியாக நறுக்கிய பிரெட்டை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவித் தந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.
21. புளித்த பாலில் (மோரில்) வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரை மணிநேரம் ஊறப் போட்டுப் பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.
22. வெள்ளை நிற வாஸ்பேஷன், பாத்ரூம், டைல்ஸ் மற்றும் சிங்ககை க்ளீனிங் பவுடர்களைக் கொண்டு சுத்தம் செய்த பின், சொட்டு நீலம் கலந்த நீரால் அலம்பிவிட்டால் பளபளப்பு மேலும் கூடும்.
23. வீட்டில் ஹோமங்கள் செய்யும் போது ஒரு டேபிள் பானை (Fan) ஜன்னல் ஓரமாக வெளிப்பக்கம் பார்த்து வைத்துவிட்டால் புகை உள்ளே பரவாது.
24. வெண்ணெயில் உப்பைத் தூவி விட்டால் அது நாட்பட்டாலும் கெடாமல் இருக்கும்.
25. வெயில் காலத்தில் எங்கு நோக்கினும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். வீட்டைக் கழுவும் போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின்பு கழுவுங்கள்.காய்ந்த பின் அறையில் ஈக்கள் வராது.
26. காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.
27. பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.
28. பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.
29. கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
30. இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும் குளியலறையிலும் தூவி விட்டு அப்படியே விட்டு விட வேண்டும். கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது.
31. நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.
32. தேங்காய் முடியை தண்ணீரில் வைத்தால் அல்லது முடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.
33. நகைகளை பஞ்சில் சுத்தி வைத்தால் புது பொலிவுடன் இருக்கும்.
34. வீட்டு ஜன்னல்களுக்கு கரும் பச்சை, கருநீலத்தினால் ஆன திரைச் சீலைகளைப் பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளே வராது.
35. சமைக்கும் போது எரிபொருள் சிக்கனம் செய்ய வேண்டும். கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வையுங்கள்.
36. மொசைக் தரையில் அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்க, வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சாக்பீஸ் தூள் மற்றும் சலவை சோடா கலந்து ஸ்பாஞ்சை வைத்து துடைத்து, பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும் ஒரு முறை துடைக்க வேண்டும்.
37. சமையலறையிலுள்ள பாத்திரம் கழுவும் தொட்டியைச் சுத்தப்படுத்த, பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.
38. கத்தியைச் சூடாக்கி ரொட்டியை வெட்டினால் பிசிறு இல்லாமல் நினைத்த படி வெட்டலாம்.
39. மீன் பாத்திரத்தில் மீன் வாடை இருந்தால் சீயக்காய்த் தூளையும், புளியையும் சேர்த்துப் பாத்திரத்தைத் துலக்கினால் மீன் வாடை போய்விடும்.
40. எலுமிச்சம்பழம் உலர்ந்து விட்டால் கொதிநீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.
41. மழை நீரில் பருப்பு வகைகளை வேக வைத்தால் ஒரு கொதியில் வெந்து விடும். ருசியும் அதிகரிக்கும்.
42. ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை உபயோகிக்க வேண்டும்.
43. தயிர், மோர் பாத்திரங்களைச் சுத்தம் செய்து வெயிலில் காய வைத்தால் அந்த பாத்திரத்தில் உள்ள வாடை நீங்கி விடும்.
44. பிளாஸ்க்கில் உள்ள துர்நாற்றம் அகல வினிகர் போட்டு கழுவலாம்.
45. கறிவேப்பிலை காயாமல் இருக்க வேண்டுமானால் அதன் மீது ஓர் அலுமினியப் பாத்திரத்தை மூடி வைத்தால் அது காயாமல் இருக்கும்.
46. சின்ன வெங்காயத்தை வாங்கி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்திருந்தால் ஒரு மாதம் வரை கெடாமல் முளை வராமல் இருக்கும்.
47. எலுமிச்சம் பழத்தை நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்திருந்தால் ஒரு வாரம் வரை வாடாமலும் கெட்டுப் போகாமலும் இருக்கும்.
48. இஞ்சியை ஈர மணலில் புதைத்து வைக்க வேண்டும்.
49. வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
50. வெண்டைக்காயின் காம்பையும், தலைப்பாகத்தையும் நறுக்கி விட்டு வைத்தால் மறுநாள் சமைப்பதற்குள் முற்றிப் போகாமல் இருக்கும்.
51. கடலை எண்ணெய் கெடாமல் இருக்க சிறிது புளியை போட்டு வைக்க வேண்டும்.
52. எரிந்து கொண்டிருக்கும் பல்பின் மேல் இரண்டு சொட்டு சென்டைத் தெளியுங்கள். அறை முழுக்க கமகமவென்று வாசனை பரவும்.
53. நைலான் துணியை தைக்கும் போது ஊசி லேசில் இறங்காது ஊசியை அடிக்கடி சோப்பில் குத்தி எடுத்து நைலானைத் தைத்தால் சுலபமாக ஊசி இறங்கும்.
54. டூத் பேஸ்டை கடைசி வரை எடுக்க அதனை வெந்நீரில் போட்டுச் சிறிது நேரம் கழித்துப் பின் அழுத்த மிச்சம் மீதி பேஸ்டும் வந்துவிடும்.
55. உப்புக் கரைந்த குளிர்ந்த நீரில் ரத்தக்கறை பட்ட துணிகளைக் கொஞ்ச நேரம் ஊறவைத்து பின் எடுத்துச் சுத்தம் செய்யுங்கள். கறை போய்விடும்.
56. மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் வராமல் நீண்ட நாள் இருக்கும். கெட்டுப் போகாது.
57. வெள்ளைத்துணி பளிச்சிட வெள்ளைத் துணிகளைத் துவைக்கும் போது தண்ணீரில் சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக் கொண்டால் துணிகள் வெள்ளை வெளேர் என்று இருக்கும்.
58. முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது தேயிலையினால் துடைத்தால் அழுக்கு நீங்கிக் கண்ணாடி பளபளவென்று இருக்கும்.
59. பச்சை கொத்தமல்லியையும் கறிவேப்பிலையையும் வதக்கக் கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால் தான் சத்து அதிகமாக இருக்கும்.
60. கிழங்கு வகைகளை கறி செய்யும் போது அதிகமாக எண்ணெய் விட்டு வறுக்கக் கூடாது. எளிதில் ஜீரணமாகாது.
61. மின்சாரம் தடைப்பட்டிருக்கும் போது மெழுகுவர்த்தியை ஏற்றுவோம். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அதிகரிக்க மெழுகுவர்த்திக்கு பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்கவும். இரு மடங்கு வெளிச்சம் கிடைக்கும்.
62. வெல்லம் சேர்த்து செய்யும் பொருட்களுக்கு நெய் ஊற்றுவதால் சுவையும் மணமும் கூடும்.
63. கேரட், பீட்ரூட் வாடி போனால் அதை நறுக்குவது கடினம். உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் புதியது ஆகி விடும். வெட்டவும் எளிதாகிவிடும்.
64. சிறிது வெதுவெதுப்பான நீரில் அழுக்குத் துணிகளை ஊறவைத்து பிறகு சோப்பு போட்டு துவைத்தால் சுலபமாக வெளுக்கும்.
65. ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையை தூவி அதனுள் பிஸ்கட்டை வையுங்கள். பிஸ்கட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
66. அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் அதனை செடிகளுக்கு கொட்டினால் செடிகள் செழிப்பாய் வளரும்.
67. மிளகாய் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமானால் அதன் காம்பை எடுத்துவிட்டு பேப்பரில் சுற்றி ப்ரிட்ஜில் வையுங்கள். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
68. உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் ஜொலிக்கும்.
69. வீட்டில் புகை அதிகமாக காணப்படுகிறதா? அறையில் ஈரத் துணியை தொங்க விட்டால் புகை காணாமல் போய் விடும்.
Must Visit & Like our page : fb.com/OurErode
70. அலுமினிய பாத்திரங்களில் அடிப்பிடிப்புக் கறையை நீக்க உப்பு காகிதத்தால் தேய்த்தால் பாத்திரம் புதுப்பொலிவுடன் இருக்கும்.
71. சமையல் மேடையில் கேஸ் ஸ்டவ்வைத் துடைக்க தேங்காய் எண்ணெய், கெரசின் இரண்டையும் சம அளவு கலந்து பயன்படுத்தினால் கிச்சன் பளிச்சென்று இருக்கும்.
72. ப்ரிட்ஜ், ஸ்டோர் ரூம், பாத்ரூம் இவற்றில் கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால் ஆஸ்பிரின் மாத்திரைகளை ஆங்காங்கே வைத்தால் கரப்பான் தொல்லை இருக்காது.
73. பச்சை வெங்காயம் சாப்பிட்ட நாற்றத்தை போக்க உப்பு கலந்த நீரில் வெங்காயத்தை ஊற வைத்து எடுத்து சாப்பிட்டால் காரம், நாற்றம் இருக்காது.
74. மிதியடிக்கு அடியில் அதே சைசில் பழைய நியூஸ் பேப்பரை வெட்டி வைத்துவிட்டால் மிதியடிகள் அழுக்கு எல்லாம் பேப்பரில் சேர்ந்திருக்கும்.
75. வாழைப்பழம் சீக்கிரம் கறுத்துவிடாமல் இருக்க ஈரத் துணியால் சுத்தி வைத்தால் பிரஷ்ஷாக இருக்கும்.
76. ப்ரிட்ஜில் ஆப்பிள், கேரட் இரண்டையும் ஒரே கம்பார்ட்மெண்டில் வைக்காதீர்கள். ஆப்பிளில் இருந்து வெளிவரும் ஒரு வித வாயு கேரட்டைக் கசக்கச் செய்துவிடும்.
77. பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
78. லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது.
79. உணவில் அதிக அளவு உப்பு சேர்ந்துவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே உணவில் போட்டு விடுங்கள். உணவில் அதிகமாக இருந்த உப்பு குறைந்துவிடும்.
80. சாப்பிட்ட பிறகு, சிறிது வினிகரும், பேரபின் எண்ணெயும் கலந்து மேஜையை துடைத்துவிட்டால் மேஜை பளபளப்பாக இருக்கும். நாற்றம் இருக்காது.
81. கொஞ்சம் நீரில் கடுகு எண்ணெய் கலந்து மிருதுவான துணியில் நனைத்து மரச் சாமான்களை துடைத்தால் வார்னீஷ் செய்தது போல் இருக்கும்.
82. பழைய புத்தகங்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்க புத்தக அலமாரியில் சிறிதளவு புகையிலையை தூவினால் பூச்சி அரிப்பு இருக்காது.
83. வேக வைத்த உருளைக்கிழங்கு தோலை வீணாக்காமல் அந்த தோலைக் கொண்டு கண்ணாடிகளை துடைத்தால் பளிச்சென்று மின்னும்.
84. முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க முட்டை கூட்டின் மீது சிறிது அளவு ரீஃபைண்ட் ஆயில் தேய்த்தால் கெடாது.
85. உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.
86. சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் எறும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது.
87. குழந்தைகள் போடும் சாக்ஸ் லூஸாகி விட்டால், சாக்ஸ் ஓரத்தில் அதன் சுற்றளவுக்கு ஏற்றபடி ரப்பர் பேண்டை வைத்து உருட்டி தைத்துவிட்டால் ஓரம் தொய்ந்து போகாமல் காலை அழுத்தமாக பிடித்துக் கொள்ளும்.
88. வாசனை கம்மியான ஊதுவத்திகள் மீது சிறிது யூபிகோலனைத் தடவிய பின் ஏற்றி வைத்தால் வீடு முழுவதும் வாசனை தூக்கும்.
89. மிக்ஸியில் அரைக்கப் போடும் பொருள்கள் ரொம்பக் கொஞ்சமாக இருந்தால், தட்டினால் மூடிவிட்டு அரைத்தால் நன்றாக அரைபடும்.
90. வெள்ளைக் கலர் டெலிபோன் அழுக்கு ஏறி இருந்தால் நெயில் பாலீஷ் ரிமூவரால் அழுந்தத் துடைத்தால் பளிச்சென்று ஆகும்.
91. பிளாஸ்டிக் குடம் வீணாகிப் போனால் பாதிக்கு மேல் வெட்டி (மேல் பாகத்தை) விட்டு குப்பைக் கூடையாக அல்லது செடி வளர்க்க உபயோகிக்கலாம்.
92. சோப்புத் தண்ணீர் கொண்டு கேஸ் அடுப்பைத் துடைக்கும் போது டியூபையும் துடையுங்கள். இதனால் டியூப் நெடுநாள் உழைக்கும். சுத்தமாகவும் இருக்கும்.
93. வீட்டில் மரச் சாமான்களுக்கு உபயோகிக்கும் பெயிண்டை முறத்தில் தடவி காய வைத்தால் நீண்ட நாட்கள் முறம் புதுசு போல இருக்கும். பூச்சிகளும் அரிக்காது.
94. டூல் பாக்ஸில் ஒரு சாக்பீஸ் கட்டி அல்லது கரித் துண்டை போட்டால், அது ஈரப் பசையை உறிஞ்சி டூல்ஸ் துருப்பிடிக்காமல் இருக்க உதவும்.
95. செருப்பின் மேல் பாகத்துத் தோலின் அடிப்பாகத்தில் மெழுகுவர்த்தியை நன்றாகத் தேய்த்து, பிறகு அணிந்து கொண்டால் செருப்பு கடிக்கவே கடிக்காது.
96. துணி பீரோவை சுத்தம் செய்யும்போது முதலில் பீரோ தட்டுகளில், பயன்படுத்திய கொசுமேட்டை ஐந்தாறு பரப்பி அதன் மேல் பேப்பர் போட்டுத் துணியை அடுக்கினால் ஒரு வருடம் வரை பூச்சிகள் நெருங்காது.
97. கொசு தொல்லைக்காகப் போடப்பட்டுள்ள நெட்லானில் சிறிய துளைகள் ஏற்பட்டு விட்டால், செலோடேப் கட் பண்ணி ஒட்டலாம்.
98. கருவேப்பிலைச் செடிக்குப் புளித்த தயிர் அல்லது மோர் விட்டால் நன்கு செழிப்பாக வளரும். தயிர் பாத்திரத்தின் உள்ளே தண்ணீர் விட்டுக் குழப்பி அந்நீரையும் விட்டு வரலாம்.
99. குழந்தைகளுக்கு உபயோகித்த சின்ன சைஸ் கொசுவலை துணியில், embroider கைவண்ணம் காட்டி டி.வி. கவராக பயன்படுத்தலாம்.
100. துணிகளில் ஹேர்-டை பட்டால் அந்த கறையை நீக்க, நெயில்பாலிஷ் ரிமூவரால் டை படிந்த பகுதியைத் துடைத்தால் கறை போய்விடும்.
101. ரப்பர் ஸ்டாம்ப் பேட், இங்க் காய்ந்து போய்விட்டால் நீலம் சில சொட்டுகள் விட்டால் அழகாக பதிய வரும்.
102. மாதுளம் பழத் தோல்களின் உள்பாகத்தை எடுத்து பல் தேய்த்தால் பல்லுக்கும் உறுதி, பல்லும் பளிச்சென்று இருக்கும்.
103. தேங்காய் உடைத்த இளநீரை சுண்ணாம்பு பாட்டிலில் சிறிது ஊற்றி வைத்தால் சுண்ணாம்பு சீக்கிரத்தில் காய்ந்து போகாமல் இருக்கும்.
104. மின்விசிறியில் தூசி படிந்து, கறை படிந்து விட்டதா? ஒரு துணியை மண்ணெண்ணையில் நனைத்து மின் விசிறியை அழுத்தித் துடையுங்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு நல்ல துணியால் துடைத்துப் பாருங்கள். பளிச்சென்றாகிவிடும்.
105. அரை வாளி தண்ணீரில், நான்கு மேஜைக்கரண்டி வினீகரை கலந்து ஜீன்ஸ் துணிகளை அலசினால் சாயம் போவதை தடுக்கலாம்.
106. புது வீட்டில் பெயிண்ட் அடித்த வாடை போக மறுக்கிறதா? ஒரு பக்கெட் நிறைய தண்ணீரை நிரப்பி அறைகளில் வையுங்கள். வாடை போய்விடும்.
107. ஆணி அடிக்கும் போது நுனியில் தேங்காய் எண்ணெய் தடவினால் சுவரில் சுலபமாக இறங்கும்.
108. சமையல் அறையில் எண்ணெய் பசையுள்ள இடத்தில் சுண்ணாம்புடன் மண்ணெண்ணெய் கலந்து அடிக்கலாம்.
109. கூர்மையான கத்திகளில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.
110. பால் பாக்கெட் வாங்கி காய்ச்ச நேரமில்லாமல் போனால் அதை தண்ணீருக்குள் போட்டு வைத்துவிட்டால் மூன்று மணி நேரம் கழித்துக் கூட காய்ச்சலாம்.
111. இனிப்பு பலகாரங்கள் உலர்ந்து கெட்டுப் போகாமலிருக்க அதன் மீது சிறிது தேன் பூசி வைக்கலாம்.
112. பால் காய்ச்ச மறந்து போய் விட்டீர்களா? பால் திரிந்து போகுமோ என்ற பயம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். பாலைக் காய்ச்சும் முன் ஒரு சிட்டிகை சமையல் சோடா மாவு கலந்து காய்ச்சினால் பால் திரியாது.
113. காபி பொடியை போடுவதற்கு முன் பில்டரின் அடிப்பாகத்தை தீயில் காட்டி விட்டு பின்பு உபயோகித்தால் டிகாஷன் கலகலவென்று இறங்கும்.
114. நெய் எவ்வளவு நாளானாலும் பிரஷ்ஷாக இருக்க அதோடு ஒரு வெல்லத் துண்டைப் போட்டு வைக்கவும்.
115. தக்காளி, எலுமிச்சைப் பழம் சீக்கிரம் கெடாமலிருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
116. கோதுமை மாவை நன்கு சலித்து சிறிதளவு டேபிள் சால்ட்டை கலந்து வைத்தால் வண்டுகள் வராது.
117. தயிர் புளித்து விடுமோ என்ற பயம் வேண்டாம்.ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் தயிர் புளிக்காது.
118. ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய்ப் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி கலந்து தாளித்துக் கொட்டுங்கள். புதுமையான ஊறுகாய் தயார்.
119. தேங்காயை சரிபாதியாக உடைக்க, தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.
120. கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து சுத்தமாக தண்ணீரில் அலசி காய வைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.
121. குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் காய்கறிகள் அப்போது பறித்தது போல் “பிரஷ்”ஷாக இருக்கும்.
122. உப்பு வைத்திருக்கும் பாத்திரத்தினுள்ளே ஒரு பிளாஸ்டிக் பேப்பரை போட்டு அதன் மீது உப்பைக் கொட்டி வையுங்கள். உப்புக்கல் கசியாமல் அப்படியே இருக்கும்.
123. குடிக்கும் தண்ணீர் மணமா இருக்கணுமா? வாட்டர் பில்டரில் சிறிதளவு துளசியை போட்டு வையுங்கள்.
124. முதல் நாள் சாதம் மீதி இருந்தால் கவலை வேண்டாம். அதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து இரண்டு பிடி கடலை மாவு, பச்சை மிளகாய் துண்டுகள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஒரு கரண்டி தயிர் விட்டு தண்ணீர் சேர்த்து தோசையாக வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
125. சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க, அதை சில்வர் பேப்பரில் சுற்றி வைக்கவும்.
126. மழைக்காலங்களில் தீப்பெட்டியிலுள்ள குச்சிகள் நமத்து போகாமல் இருக்க பெட்டியினுள் நான்கைந்து அரிசியைப் போட்டு ஒரு டப்பாவில் போட்டு மூடிவிட்டால் குச்சிகள் எளிதில் தீப்பற்றும்.
127. உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல, எல்லா காய்கறிகளையும் ஒன்றாக வதக்கி உருட்டி கடலை மாவில் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்க வெஜிடபிள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்களையும் சாப்பிட ஒரு சந்தர்ப்பம்.
128. தானியம் மற்றும் பயறு வகைகளை எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து ஹாட் பேக்கில் போட்டு மூடி மறுநாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியம் தயார். தானியங்களை முளை கட்டுவதற்கு ஒரு எளிய வழி.
129. கோதுமையை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி பின் மிஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.
130. சமையலில் உப்பு சற்று கூடுதலா? கவலை வேண்டாம். பால், க்ரீம், தயிர் இவற்றில் ஏதோ ஒன்றினைச் சேருங்கள். சரியாகிவிடும்.
131. வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கினால் உடனே அவற்றை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதனால் வாழைப்பூ, வாழைத்தண்டின் நிறம் மாறாது. கறை பிடிக்காது. துவர்ப்பு நீங்கும்.
132. துவைத்த துணிகளுக்கு நீலம் போடும் போது நீலம் கரைத்த நீரில் சிறிது வாஷிங் சோடாவையும் கலந்து கொண்டால் துணியில் நீலம் திட்டுத்திட்டாக இல்லாமல் சமமாக இருக்கும்.
133. பாலேடு, தயிரேடுகளை பாட்டிலில் போட்டு குலுக்க வெண்ணெய், மோர் ஒரே சமயத்தில் கிடைக்கும்.
134. கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை வாங்கிய உடன் வாழைப் பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.
135. இட்லிக்கு மாவு அரைக்க அரிசியை ஊறப் போட மறந்து விட்டீர்களா? இதோ ஒரு வழி உடனே சுடு தண்ணீரிலே அரிசியை ஊறப் போடுங்கள். பத்து நிமிடத்தில் ஊறிவிடும்.
136. உங்கள் இஸ்த்திரி பெட்டி நைலான் துணி மீது தேய்த்தால் அடிப்பாகம் வீணாகிவிட்டதா? அப்பெட்டியினை சூடாக்கி பச்சை வாழை இலையின் மீது தேயுங்கள். பெட்டியின் அடிப்பாகம் சரியாகிவிடும்.
137. காபி, டீ கொடுக்கும் பீங்கானில் கறை படிந்து உள்ளதா? ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேயுங்கள். கறைகள் விட்டு விலகும்.
138. பிளாஸ்கில் உள்ள துர்நாற்றம் போக வினிகர் போட்டு கழுவலாம்.