முகப்பு

vendredi 30 mars 2012

மறந்துவிடுகிறேன்

 
உன் பெண்மை என்னும் அலை மோதியே...
என் மென்மை இதயம் சிலை ஆனதே....
உன் பின்னால் தாவணி போல் மிதந்து வருகிறேன்....
சேலையில் உனைப் பார்த்தால் என்னையே மறந்துவிடுகிறேன்!
 

உணர்ந்தோம்.


அன்னையாய் தாய்மண்ணை அனைதோம். தந்தையாய் தமிழ்மொழியை சுவைத்தோம். கடவுளாய் தங்கத்தலைவரை நினைத்தோம். உறவாய்.... அன்னையாய் தாய்மண்ணை அனைதோம். தந்தையாய் தமிழ்மொழியை சுவைத்தோம். கடவுளாய் தங்கத்தலைவரை நினைத்தோம். உறவாய்.... தமிழினத்தையே... உணர்ந்தோம்.யே... உணர்ந்தோம்.

mardi 27 mars 2012

கவளம்!






"தாயே!
உன்பொருட்டு தர
உலகில் மதிப்பானது எதுவுமில்லை!
உனது அன்பை உலக பொருட்கள்
எதை கொண்டும் ஈடாக்க வழியில்லை!
உன் கையால் இன்னுமொரு கவளம்!
அதுவே என்னால் முடிந்த கைம்மாறு!"

முதல் கடவுள்


கல்லில் செருக்கிய கடவுளை விட

கருவறையில் சுமந்த அம்மா முதல் கடவுள் !!

அம்மா!!!!



அ - அன்பு என்றால் அம்மா

ஆ - ஆறுதல் தருபவள் அம்மா

இ - இரத்தத்தை பாலாக்கி தந்தவள் அம்மா
ஈ - ஈகை விளக்கியவள் அம்மா...

உ - உயிரைக் கொடுப்பவள் அம்மா

ஊ - ஊழ் உரைத்தவள் அம்மா

எ - என்னைப் பெற்றவள் அம்மா

ஏ - ஏணியாய் இருந்தவள் அம்மா

ஐ - ஐயம் நீக்கியவள் அம்மா

உலகில் இல்லே


அம்மா என்னை
 இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவள்
என் முதல் தோழியும் கூட...
என் செல்ல குறும்புகளை
செல்லமாய் திட்டியபடி ரசிப்பவள்.
அம்மாவின் அன்புக்கு
இணை என்றுமே
 உலகில் இல்லே...

அவள் முகம்


மழலையாய் அவள் முகம்
எனக்கு அன்பு காட்டியது!
விடலையாய் அவள் முகம்
என் வழியை காட்டியது!
பருவமாய் அவள் முகம்
உருவம் காட்டியது
முதுமையில் அவள் முகம்
என்னை காட்டுகிறது!


என் அம்மா



என்னை கருவில் சுமந்த தாயே .............
எனை பல கற்பனைகலுடன் சுமந்தாயா -
உன் கருவறை தொட்டிலில் ......?
கல்லில் செதுக்கிய கடவுளை விட
என்னை கருவறையில் சுமந்த நீ
என் கடவுள் அம்மா .............
சொர்க்கம் கூட நரகம்தான்
நீ இல்லையென்றால் ...................
உயிரோடு கலந்து விட்ட
உறவம்மா -
என் அம்மா ......... 

jeudi 22 mars 2012

நல்ல வார்த்தைகள்

Borg

உயிர்களை ஆதரிக்கும் இல்லங்களில் நல்ல வார்த்தைகள் வரும், அதேவேளை உயிர்களை கொன்று விற்கும் கறிக்கடையில் ஏன் காதுகளால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள் வருகின்றன என்று எண்ணிப்பார். கெட்ட வார்த்தையும், கொலையும் எப்போதுமே பக்கம் பக்கமாக இருக்கும்.

வார்த்தை


Rose de Noel

அம்புபோலவே வார்த்தைகளும் அவை எதற்காக எய்யப்பட்டனவோ அந்த இலக்கைத் தொடும். மலரை சொரிவதும் வார்த்தைகள் மனிதனை மாய்ப்பதும் வார்த்தைகள். சரியான வார்த்தை என்பது ஒரு மகத்தான சக்தி. ஆகவே எய்யும்போது கவனமாக எய்..!

உணர்ந்து கொள்

 Viaduc de Millau.

நெஞ்சில் சுமக்காத எண்ணங்கள் ஒரு போதும் நிஜமாக செயற்படப்போவதில்லை. முன்னேற்றத்தை முனைப்பாக நெஞ்சில் நிறுத்தாத எவரும் இறுதி வெற்றி பெறமாட்டார்கள். கெட்ட வார்த்தைகளை உன் நெஞ்சில் பாதுகாத்தால் அவை உன் நெஞ்சை அந்த வார்தைகள் போலவே அழுக்காக்கும் என்பதை உணர்ந்து கொள்.

உண்மை இல்லாததை சொல்லாதே

Romeo & Julia

கேட்பதற்கு பிரியமாக இருந்தாலும் உண்மை இல்லாததை சொல்லாதே. அதேவேளை அன்பாக சொல்..! இல்லாவிட்டால் சொல்ல வேண்டாம்.

mercredi 21 mars 2012

காதலோ….




உன் விழிகளுக்குள்
என் விழிகளை
நான் காணும் போது
வாழ்ந்த வலி மறையுதடி…
வாழும் வழி தெரியுதடி..
இதன் பெயர் தான் காதலோ….

உயிராக‌



நேசிக்க‌ தெரிந்த‌ ம‌ன‌ம் ஒரு நாள் ம‌ற‌க்க‌வும் செய்யும்,
ஆனால் சுவாசிக்க‌ ம‌ற‌க்குமா,
நான் உன்னை நேசிக்க‌வில்லை சுவாசிக்கிறேன் உயிராக‌..


பாச‌ம்


நான் நேசிப்ப‌து ம‌ல‌ரையும்
உன் ந‌ட்பும் தான்
ஏன் என்றால் ம‌ல‌ருக்கு வாச‌ம் அதிக‌ம்
உன் ந‌ட்புக்கு பாச‌ம் அதிக‌ம்…


lundi 19 mars 2012

இசை


காற்றலையில் வந்த உன்குரல் கேட்டு, நான் கண்ணுறக்கம் தொலைத்து விட்டேன் நேற்று வரை குயிலோசை ரசித்த மனதுக்கு, இன்றுமுதல் உன்குரலே இசையாகிவிட்டதுவே 

மனசும் இசைக்கிறது



ஒருமுறை உன்னை
பார்த்தேனே -என்
இதயம் உடைந்ததடி
மறுமுறை உன்னை
ரசித்தேனே -என்
இளமை கொல்லுதடி
நீ முத்தம் சிந்தவில்லை - ஆனால்
இதமாய் இனிக்கிறது
நீ கவிதை பேசவில்லை -ஆனால்
மனசும் இசைக்கிறது


முயற்சி செய்


முயற்சி செய்.. முயற்சி செய்.. மீண்டும் முயற்சி செய்.. முதல்முறை நீ தோல்வியடைந்தாலும் முயற்சி செய்.. முயற்சி செய்.. மீண்டும் முயற்சி செய்..
 தைரியம் இல்லாதவன் தைரியம் இருப்பது போல நடிக்கும்போது நடிப்பு தொடர்ந்தால் இயல்பாகவே தைரியம் வந்துவிடும்.
 துயரமுள்ளவன் சிரித்து மகிழும்போது அவனை அறியாமலே துயரம் ஓடி, மகிழ்வு வந்துவிடும் : இதையே பாவனா யோகம் என்பார்கள்.
 சிரிக்கத் தெரியாதவனுக்கு துயரமான மனமே இருக்கும். அவன் வீட்டிற்குள் இருளில்தான் மூழ்கிக் கிடக்க வேண்டும். அவனுக்கு பகல் என்பதே இல்லை என்கிறார் வள்ளுவர்.
 துயரம் ஓட ஆடி மகிழ வேண்டும், கோபம் ஒழிய அமைதி காக்க வேண்டும். நோய் தீர நோய் பற்றிய எண்ணங்களை விரட்ட வேண்டும்.
கோபம் வருகிறதா அமைதி பற்றி சிந்தி.. துன்பம் வருகிறதா மகிழ்ச்சி பற்றி சிந்தி.. நோய் வந்தால் உடல் நலத்தை சிந்தி.. பயம் வந்தால் தைரியத்தை சிந்தி..

திரும்பப் பெற முடியாது


எய்த அம்பு..
வீணாகக் கழித்த காலம்..
 தப்பான சொற்கள்
ஆகிய மூன்றும் திரும்பி
வர முடியாதவை.
இவை மூன்றும்;
அம்பு போன்றவை,
 எய்துவிட்டால்
திரும்பப் பெற முடியாது. 

சொல்ல வேண்டாம்


கேட்பதற்கு பிரியமாக இருந்தாலும் உண்மை இல்லாததை சொல்லாதே. அதேவேளை அன்பாக சொல்..! இல்லாவிட்டால் சொல்ல வேண்டாம்.

மேலானவன் !

*
பந்தலுக்கு வரும்
பந்தங்களை விட
துன்பத்தில் கூட
வரும் நண்பன்
என் ரத்தத்திற்கும்
மேலானவன் !

samedi 17 mars 2012

காதல் பூப் பூக்கிறது

 
மொழி தெரியாது
இனம் தெரியாது
மதம் தெரியாது
இவைகளெல்லாம்
தெரியாமலே
... காதல் பூப் பூக்கிறது
என்னமோ தெரியல்ல
காதலில் மட்டும்
பேதங்கள் தோன்றுவதில்லை
காதல் பூப் பூத்து விட்டாலே
செடியில் உள்ள முட்கள்
கண்களுக்குத் தோன்றுவதே இல்லை.


பொக்கிஷம்

 
 
தொட்டுத் தொட்டுப்
பார்க்கிறேன்
நீ விட்டுப் போன
நினைவுகளை

... குட்டிக் குட்டியாய்
கவிதைகள்
நீ வெட்டி ஒட்டிய
கடதாசிப்பூக்கள்

கட்டி அணைத்த
புகைப்படங்கள்
நீ நட்டு வைத்த
ரோஜாக்கள்

அத்தனையும்
இங்கே விட்டு
நான் கட்டிக் காத்த
பொக்கிஷம்
நீ மட்டும் கை விட்டுப்
போனதெங்கே??
— by  Rose Spellman


vendredi 16 mars 2012

நட்பின் பூங்காவில்


உன்னிடம் பேசும் வரை என் மனம் என்னிடம்
உன்னிடம் பேசியபின் என் மனம் எவ்விடம் ..??
தேடினேன்… தேடினேன்…
கண்டேன் அதை உன் நட்பின் பூங்காவில்..!!!


நட்பு ,


ஒரு செடியில் பூக்கள் என்பது ,
பூத்துக்கொண்டே இருக்கும் .
அதுபோல், என் இதயத்தில் ,
உங்கள் மீதான நட்பு , என்றும்
உங்களை தொடர்ந்து கொண்டே இருக்கும் .
நான் மண்ணுக்குள் புதையும் வரை ~~~~~


காதலிக்கு


கல்யாண விருந்து தான்… – ஆனால்,
கை நனைக்க முடியவில்லை,,,
கண்கள் தான் நனைந்தது… – காரணம்
கல்யாணம் என் காதலிக்கு….!!!

தோல்வி


அவளுக்காக
கவிதை எழுதினேன்
“அன்று”…
அவளால்
கவிதை எழுதுகிறேன்
“இன்று”…
“காதல் தோல்வி”


முதல் குரு


காணாத
கவலையையும்
காணவைத்தாள்…
வாழாத
வாழ்க்கையையும்
வாழவைத்தாள்…
வாழ்க்கை என்றால்
என்ன என்று
கற்றுத்தந்தாள்…
ஏன்.
ஏமாற்றத்தை கூட
நான் உணரவேண்டி
என்னை ஏமாற்றிசென்றவள்…
இப்பொழுதாவது சொல்லுங்கள்
என் முதல் குரு அவள் தானே..

மலர்ந்து கொண்டே இருக்கிறாய்?


    1. எல்லா மலர்களும் மாலையில் வாடிவிடும் நீ மட்டும் எப்படி எந்த வேளையிலும் மலர்ந்து கொண்டே இருக்கிறாய்?

உயிர் உள்ள வரை நிலைக்கும்..!!


  1. உருவம் கண்டு பழகாதே
    உள்ளம் கண்டு பழகு
    பருவம் கண்டு பழகாதே
    பண்பு கண்டு பழகு
    முகம் கண்டு பழகாதே
    அகம் கண்டு பழகு
    ... அன்பு நட்பு காதல் உறவு எதிலும்
    உண்மை இருப்பதே சிறக்கும்
    உயிர் உள்ள வரை நிலைக்கும்..!!

என்றும் பூக்கும் வண்ண மொழி

 
காதல் சொல்ல ஒரு மொழி
கவிதை சொல்ல ஒரு மொழி
அன்பை சொல்ல ஒரு மொழி

இயற்கையின் கவி மொழி
இறைவன் வரைந்த வண்ண மொழி
... அவன் எண்ணம் போல் மணக்கும் மொழி

நாளும் பூக்கும் புது மொழி
நன்றி சொல்ல ஒரு மொழி
நானும், நீயும் நட்பாக ஒரு மொழி

அன்பை,அஞ்சலியை
அர்பணிக்க ஒரு மொழி
அழகான வண்ண மொழி

யாரும் கண்டு மலரும் மொழி
யாவரும் கொண்டு மயங்கும் மொழி
மண் மணக்கும், மனம் மயக்கும் ஒரு மொழி

உலகின் பொது மொழி
எல்லோரும் அறிந்த மொழி -அது
என்றும் பூக்கும் வண்ண மொழி
....... ...... ...... .... ..... பூக்கள்!!!( by pertheepan)


மெளனம்


பாசத்தின் உறைவிடத்தையும்
கோபத்தின் பிறப்பிடத்தையும்
உணர்ந்தேன் உன் பார்வையில்...
மெளனம் என்னும் மொழியில்......

jeudi 15 mars 2012

என் இதயத் துடிப்பிற்கு



உன் தோள் சாய துடிக்கும்
என் இதயத் துடிப்பிற்கு
எப்படி புரிய வைப்பேன் :
உன் தோள் மட்டும் அல்ல
உன் நிழல் கூட எனக்கு
சொந்தமில்லை என்பதை ….

 

ஆழம்



விடியும் வரை தெரியாது
கண்டது கனவு என்று !
பிரியும் வரை தெரியாது
பாசம் எவ்வளவு ஆழம் என்று ! 

mardi 13 mars 2012

காதல்! 2



நீயின்றி நானில்லை
என்பதல்ல காதல்…
எது இல்லையென்றாலும்
நான் இருக்கிறேன்
என்பதுதான் காதல்!

காதல்




கட்டுப்படுத்த முடியாத
ஆசையின் மீது
கட்டுப்படுத்த முடியாத
ஆசை வைப்பதே
காதல்

samedi 10 mars 2012

உள்ளத்தைத் தொட்ட பொன்மொழிகள்

  • ஓய்வு வாழ்க்கைக்கு அவசியம். ஓய்வின் மூலம் அடுத்த பணிக்கு நீங்கள் தயாராகலாம், அதற்காக உள்ளம் விரும்பாத ஓய்வை வலுக்கட்டாயமாக எடுத்தல் கூடாது.
  • இன்பமும் துன்பமும் வாழ்க்கைச் சக்கரம். மேலும் கீழுமாக மாறி வரும்.
  • மனச்சாட்சிக்கு அடங்கி நடந்தால் எளிதில் தீங்கு செய்ய முடியாது.
  • செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம்.
  • உதவி செய்யமுடியாத அளவுக்கு யாரும் ஏழையல்ல, உதவி தேவைப்படாத அளவுக்கு யாரும் பணக்காரருமல்ல.
  • மனிதனுக்கு மட்டும்தான் சிரிக்கத் தெரியும், அதுபோல பிறர் சிரிக்கும்படி வாழவும் மனிதனுக்கு மட்டும்தான் தெரியும்.
  • எண்ணங்களை ஏலத்தில் விடுங்கள், ஏழைகளின் கண்ணீரைத் துடையுங்கள்.
  • வாழ்வில் தன்னம்பிக்கை, அடுத்து கடின உழைப்பு இரண்டும் இருந்தால் ஒரு நல்ல நிலையைக் கட்டாயம் அடையலாம்.
  • "என் சிறந்த தகுதி, என் தகுதிக்குறைவை நான் உணர்ந்திருப்பதுதான்".
  • கடின உழைப்பு என்ற மதிப்பு மிக்க சொத்தைத் தொடர்ந்து சளைக்காமல் செலவழியுங்கள். இதைத் தவிர வெற்றிக்கு உத்தரவாதம் தருவது வேறு எதுவும் அல்ல.



vendredi 9 mars 2012

தினம் ஒரு தகவல்

கெட்டுப்போகாத உணவுப்பொருள் தேன்
நத்தை தொடர்ந்து மூன்று வருடங்கள் தூங்கலாம்
பட்டாம்பூச்சிகள் தங்கள் பாதங்களினால் சுவைக்கின்றன.
கிளியும் முயலும் தங்கள் பின்னால் இருப்பதை தலை திருப்பாமல் காணமுடியும்.
நீர் யானை மனிதனை விட மிகப்பெரியது, ஆனால் அது மனிதனை விட வேகமாக ஓடும்.
கண் இமைகளில் மனிதனுக்கு 550 முடி இருக்கின்றது.
அண்டார்டிகா கண்டத்தில் மட்டும் நிலங்கள் கடல் மட்டத்திற்கு கீழே எங்கும் இல்லை.எல்லா இடமும் கடல் மட்டத்திற்கு மேல் தான் உள்ளது.
வாத்தின் குவாக் குவாக் சத்தத்தை கேட்டிருக்கின்றீர்கள் அல்லவா? அதன் ஒலி மட்டும் எதிரொலிப்பதே இல்லை. இதுவரை ஏன் என்று தெரியவில்லை.
டைப் ரைட்டரில் முதன் முதலாக தட்டச்சப்பட்ட நாவல் டாம் சாயர்
தங்க மீனை இருட்டு அறையில் வைத்திருந்தால் அது வெண்மையாக மாறிவிடுமாம்.
பனிக்கரடிகள் ஒரே அமர்வில் 86 பென்குயின்களை விழுங்குமாம்.
டான்பின்கள் ஒரு கண்னை திறந்து வைத்தபடியே உறங்குகின்றன.
மாடுகளை மாடிப்படிகள் ஏறவைக்கலாம், இறங்க வைக்க முடியாது.
மனிதனின் மூக்கும் காதும் வளர்ந்துகொண்டே போகும், ஆனால் கண்கள் வளராது.
வயிறு நிறைய உண்ட பிறகு, சற்று நேரம் கேட்கும திறன் குறையும்.


சிறந்தது.



விவாதம் செய்வதை விட அனுசரித்துப்போவது சிறந்தது.

பக்தன்.

 
பிரகாரம் நுழைந்தவுடன்

தீர்த்தமாகி விடுகிறது
தண்ணீர்…

... கனியாகி விடுகிறது
எலுமிச்சை…

பிரசாதமாகி விடுகிறது
திருநீறும் பொட்டும்…

எந்த மாற்றம்மின்றி
வெளியேறுகிறான்

பக்தன்.


jeudi 8 mars 2012

நடந்து கொள்ளுங்கள்



மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதேபோல மற்றவர்களிடம் நீங்கள் நடந்து கொள்ளுங்கள்.


mercredi 7 mars 2012



உடல் எடையை குறைக்கும் தயிர்

உடல் எடையை குறைக்கும் தயிர்


தினமும் மூன்று வேளை தயிரை உட்கொண்டால் உடல் பருமன் குறைந்து அழகாக தோற்றமளிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தயிருக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு, தயிர் பலவகை இரைப்பை மற்றும் குடல் சம்பந்தபட்ட நோய்க்கிருமியை அழிக்கிறது, வயிற்றுப்போக்கினை தடுக்கும் ஆற்றலும் கொண்டதாகும்.
தயிரானது புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், உயிர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்ததாகும். பாலைவிட அதிகமான ஊட்டச்சத்துகள் தயிரிலிருந்து கிடைக்கிறது.
மிதமான லாக்டோஸ் இருப்பதனால் சகிப்புத்தன்மை இல்லாத மக்கள் தயிரை பாதகமில்லாமல் உட்கொள்ளலாம். ஏனென்றால் பாலின் உட்பொருளான லேக்டோசு என்ற முன்பொருள் பண்பாட்டு வளர்ப்பு காரணமாக லாக்டிக் அமிலமாக மாறிவிடுவது தான் இதற்கு காரணம்.
இன்டர்நேஷனல் ஜெர்னல் ஆஃப் ஒபெசிட்டி என்ற சஞ்சிகையில் வெளிவந்த ஆய்வறிக்கையில், குறைந்த கொழுப்புச்சத்துள்ள தயிர் எடை குறைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் பருமான நபர்களுக்கு தினமும் மூன்று வேளை குறைந்து கொழுப்பு சத்து கொண்ட தயிர் கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர்களை ஆய்வு செய்ததில் 22 சதவிகித அளவுக்கு உடல் எடை குறைந்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் முன்பு இருந்ததை விட அழகாக தோற்றமளித்தனர்.

மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் பால்

<>
மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் பால்
ஒவ்வொரு மனிதனுக்கும் மூளை வளர்ச்சியை அதிகரிக்க பால் மிகுந்த அவசியம் என புதிய ஆய்வறிக்கை ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் இணைந்து இளமைப்பருவம் உடைய 1000 பேரை வைத்து மேற்கொண்ட இந்த ஆய்வின் போது தொடர்ச்சியாக பால், சீஸ், யோகட் போன்ற பாலுணவுகளை உள்ளெடுப்பதனால் சிறந்த மனநிலைக்கு துணையாக இருப்பதுடன் சிறந்த மூளைவளர்ச்சிக்கும் பயன் தருவதாக கண்டறிந்துள்ளனர்.
இதே போன்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட பிறிதொரு ஆய்வின் மூலம் கொழுப்பு அதிகரிப்பதனால் அல்சீமர் நோயினால் அவதிப்பட நேரிடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதற்காக 104 வயதானவர்களை பயன்படுத்திய குறித்த ஆராய்ச்சியாளர்கள் குழு கொழுப்பினால் தீமைகள் காணப்படுகின்ற போதிலும் ஒமேகா - 3 வகையை சேர்ந்த கொழுப்பு அவசியமானது, உடல் ஆரோக்கியத்திற்கு அவசிமானது எனவும், இது மீன் உணவுகளில் அதிகம் காணப்படுவதாகவும் பரிந்துரைத்துள்ளனர்.


mardi 6 mars 2012

அகத்தின் அழகு


அகத்தின் அழகு அனைவருக்கும் முகத்தில் தெரிவதில்லை.
அழகாய் இருக்கும் அனைவரும் அகத்தில் அழகாய் இருப்பதில்லை.

உன் கையில் உள்ளது


வாழ்கை
ஒரு காகிதம்
போன்றது அதில்
கவிதை
எழுதவதும்
கசக்கி எறிவதும்
உன் கையில் உள்ளது

lundi 5 mars 2012

முடியாது

 

வாழ்க்கையில் சிலரை
மறக்க முடியாது!
சிலரை
பிரிய முடியாது!
மறக்காமல்
நீ இரு!
பிரியாமல்
நான் இருப்பேன்!



இயற்கை அழகு !!


இயற்கை அழகு !!
சுட்டெரிக்கும் சூரியனும்
அந்தியில் அழகு !
தேய்ந்து போகுமென்றாலும்
பால் நிலா அழகு !
வீழ்கின்ற போதிலும்
மலை அருவி அழகு !
ஓயாமல் ஓசை எழுப்பினாலும்
அலைகடல் அழகு !
வளைந்து நெளிந்து போனாலும்
நதி நீர் அழகு !
கருத்து போய் இருந்தாலும்
மழை மேகம் அழகு !
இயற்கை அழகை
ரசிப்பதோடு பாதுகாத்தல்
மனிதனுக்கு அழகு


samedi 3 mars 2012

தீய வார்த்தைகளை


அறிஞர்களை பார்த்து நீ தீய வார்த்தைகளை பேசினால் அவர்கள் உனக்கு பதில் கூறாது அமைதியாக போவது ஏன் என்று கேட்கிறாயா..? தீய வார்த்தைகளை திருப்பி எய்து வீழ்ச்சியடைய எந்த அறிஞனும் விரும்பமாட்டான்.

பக்கம் பக்கமாக இருக்கும்



உயிர்களை ஆதரிக்கும் இல்லங்களில் நல்ல வார்த்தைகள் வரும், அதேவேளை உயிர்களை கொன்று விற்கும் கறிக்கடையில் ஏன் காதுகளால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள் வருகின்றன என்று எண்ணிப்பார். கெட்ட வார்த்தையும், கொலையும் எப்போதுமே பக்கம் பக்கமாக இருக்கும்.