முகப்பு

vendredi 30 octobre 2015

1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)



 
1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)
5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி தமிழ் மொழியாகும்.
இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது
உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze
இணையத்தளம் ...
வரிசைப்படுத்தியிருக்கிறது.
உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்
Top 10 Oldest Languages in the World
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன.
இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன.
எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது.
10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin) ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது.
அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.
9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian) இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.
8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian) கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew)
இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.
6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic)
அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள்.
இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.
5 வது இடத்தில் சீன மொழி (Chinese)
சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.
4 வது இடத்தில் கிரீக் (Greek)
கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.
3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian) ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.
2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit) இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது.
ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது.
இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.
1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)
5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி தமிழ் மொழியாகும்.
இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளதுsountha manuel, evry> FRANCE

jeudi 29 octobre 2015

நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம்


அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக
வைக்கும் உண்மை சம்பவம் இது.

பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம்.
அந்த தேசத்தில் ஒரு பெண்
தனது ஒரேயொரு மகனுடன்
வாழ்ந்து வந்தாள். அவளிற்கு ஒரு கண்
இல்லை. தன் மற்றொறு
கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய
நிலை. கணவரின்
இறப்பிற்கு பின் அவளது சுவாசத்தின்
ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால
வாழ்வு பற்றியதாகவே இருந்தது.
தன்னிடம் இருந்த சொத்துக்களில்
ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல
தரமிக்க பாடசாலையில் சேர்த்தாள்.
மீதி சொத்தை தனது மகனின்
கல்வி தொடர்பான செலவிற்கு தயார்
செய்திருந்தாள்.
நல்ல ஒழுக்கமிக்க மகன். இரக்கமானவன்.
புத்திசாலி. ஊரில் எல்லோரும் புகழும்
வண்ணம் அவன் செயல்பாடுகள் இருந்தன.
பாடசாலையில் முதல்
மாணவணாக வருபவன் அவன். காலங்கள்
உருண்டன. தனது பள்ளிப்படிப்பு தேர்வில் அவன் மிகச்சிறந்த மதிப்பெண்களை பெற்று
அந்தபிரதேசத்திற்கும் , அவனது பாடசாலைக்கும்
பெருமை சேர்த்தான்.
இந்த செய்தியை அறிந்த உடனேயே அவனது
தாய் ஆவலுடன்
பாடசாலையை நோக்கி ஓடினாள். மகனின்
வகுப்பறை எது என
அறிந்து அங்கு சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள்.

இறைவனை புகழ்ந்தாள். சந்தோஷத்துடன்
வீடு வந்து அவனிற்கு பிடித்தமான
உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.

மகனின் வரவை எதிர்பார்த்து வழி மேல்
விழி வைத்து காத்திருந்த தாய் மகன்
வந்தவுடன் பாசத்துடன் அருகில்
சென்றாள். ஆனால் மகன்
முகத்தை திருப்பி கொண்டான். தாயுடன்
பேசவில்லை. நேராக அறைக்குள்
சென்று படுத்து விட்டான்.
அத்தாயிற்கு ஒன்றும் புரியவில்லை.
பதற்றத்துடன்
ஓடிச்சென்று என்னவென்றாள்
கவலையுடன்.

மகன் சொன்னான், " நீ ஏன்
என் பாடசாலைக்கு வந்தாய்?.

அங்கு அழகான பணக்காரர்கள்
மட்டுமே வருவார்கள். நீயோ குருடி. என்
நண்பர்கள் என்னை குருடியின் மகன் என
கூப்பிடுகின்றனர். இது பெரிய அவமானம். வெட்கம். இதன் பின்னர் நீ என் பாடசாலை பக்கமே வராதே" என கத்தினான்
கோபமாக.

அதிர்ந்து போனாள் தாய்.
ஆனாலும் மகனின் சந்தோஷம் கருதி இனி அவ்வாறு நடக்காது என
சத்தியம் செய்தாள்.

இப்போது அவனது சுபாவம் மேலும் மாறுபட ஆரம்பித்தது. தன்னை தேடி வரும் நண்பர்கள் முன் வர வேண்டாம் என தாயை எச்சரித்தான். அவள் கண்கலங்க சரி என்றாள். பின்னர் சில நாட்கள் சென்ற
பின், தனக்கு குருடியுடன்
இருப்பது வெட்கம் என்றும், தான் ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக சொன்னான்.
ஒரு நாள் வீட்டை விட்டே சென்று விட்டான்.

தாய் கதறி துடித்தாள், தினமும் தன்
மகனை நினைத்து அழது புலம்பினால்.

இறுதி பரீட்சையில் தேர்வாகி, மருத்துவ
கல்லூரிக்கு மகன்
தேர்வானது தாயிற்கு தெரியவந்தது.தலைநகர் சென்று படிக்க வேண்டும்.
நிறைய செலவாகும். தனது மிதமிருந்த அனைத்து சொத்துக்களையும்
விற்று மகனிற்கு அனுப்பி வைத்தாள். 5ஆண்டுகள் பறந்து சென்றன.
இப்போது அவளது மகன் ஒரு மருத்துவன்.ஆம் தலைச்சிறந்த மருத்துவன்.
அவனை பார்க்க அவள் பல
முயற்ச்சிகளை மேற்கொண்டும் எதுவும்
பயனற்று போயின.

ஒரு கடிதம் மகனிடம்
இருந்து வந்தது. அதில், " அம்மா நான் இப்போது இந்த நாட்டில் உள்ள சிறந்த
மருத்துவர்களில் ஒருவன். குருடியின் மகன் வைத்தியன் என்பது தெரிந்தால் எனது கொளரவம் பாதிப்படையும். ஆதலால் நான் இந்த நாட்டை விட்டும் உன்
பார்வையை விட்டும் கண்காணாத தேசம்
செல்கிறேன்". இது தான் அந்த கடிதத்தின்
வரிகள். துடித்து போனாள் தாய்.

சில வருடங்கள் கடந்தன. முதுமையும், வறுமையும்,
அவளது ஒற்றை கண்ணுமே அவளிடம் எஞ்சியிருந்த சொத்துக்கள். பசி கொடுமையின் காரணமாக
ஒரு பணக்கார வீட்டில் ஆயாவாக தினமும்
வேலை செய்து வந்தாள் அந்த தாய்.

அந்த வீட்டின் எஜமானி இளவயதுடையவல்.
நல்ல இளகிய குணம் படைத்தவள்.
இறைபக்திமிக்கவள். அவளும் ஒரு மருத்துவராகவே இருந்தாள். இந்த
தாயை தனது தாயக
நேசித்து போதித்து வந்தாள்.
எல்லாம் நன்றாகவே நடந்தன. அவளது கணவன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தான்.

தனது எஜமானியின் கணவர் வருகிறார் என்பதனால் வாய்க்கு ருசியாக நல்ல
உணவுகளை தயார்படுத்தி வைத்திருந்தாள்
அந்த குருட்டுத் தாய்.

வீடு வந்த அவளது கணவன், சிலநாளிகைகளின் பின்னர் சாப்பிடஅமர்ந்தான். உணவை ஆசையாக வாயில் அள்ளி திணித்தான். திடீரென அவன் முகம் மாறியது. கருமை அவன் முகத்தில் சூழ்ந்து கொண்டது. சடாரென
தனது மனைவியின்
முகத்தை பார்த்து கேட்டான், "இதனை நீ
தான் சமைத்தாயா?" என்று.

மனைவி குழப்பத்துடன்
இல்லையே என்றாள். " அப்படியானால் யார்
சமைத்தது" இது அவனது இரண்டாம் கேள்வி.
வீட்டு வேலைக்காரி சமைத்தாள் என்றாள் மனைவி. உடன் எழுந்த அவன் அடுப்படிக்கு சென்று எட்டி பார்த்தான்.
உள்ளே அவனது குருட்டு தாய். அதிர்ந்து போனார்கள் இருவரும். இவள்
இன்னும் இங்கேயா இருக்கிறால் எனும் ஆத்திரமும்,
வெறுப்பும் அவன்
மூளையை ஆட்டுவித்தது. என் மருமகளா என் எஜமானி என்ற சந்தோஷமும்,
மகிழ்ச்சியும் அந்த தாயின்
இதயத்தை நிரப்பின. உணற்ச்சிகளால்
இருவருமே பேசவில்லை.

மீண்டும் சாப்பாட்டு அறைக்கு வந்த
மகன் சொன்னான் தன்
மனைவியை பார்த்து, "இந்த
குருடியை உடனடியாக
கொண்டு சென்று வேறு எங்காவது கண்காணாத இடத்தில் விட்டு விடு."என கத்தினான்.

அவன் போட்ட சத்தம் அடுப்படியில் நின்ற அந்த அபலை தாயின் இதயத்தில்
முட்டி மோதி நின்றது.
துவண்டு போனாள்.
வாழ்க்கையை இதற்கு பிறகும் வாழ
வேண்டுமா? என எண்ணி கதறி அழுதாள்.

தனது கணவனின் பிடிவாதமும், கோபமும்,
ஆவேசமும் எல்லை மீறி செல்லவே அவனது மனைவியான அந்த பெண்(மருமகள்)
வேறு வழியின்றி அத்தாயிற்கு போதுமான
பணத்தினை வழங்கி பல நூறு கிலோ மீட்டர்
தூரத்தில் முன்பு அவள் வாழ்ந்து வந்த
இடத்திற்கே மீண்டும் அனுப்பி வைத்தாள்
அழுகையுடன்.

காலம் மீண்டும் வேகமாக ஓடியது இப்போது அந்த மருத்துவனின்
தலை மயிர்கள் பழுக்க
ஆரம்பித்து விட்டன. உடல் பலம் சற்று சோர்ந்தும் போய்விட்டது. கணவனின்
தொடரான சுயநலன், நன்றி மறத்தல் போன்ற
காரணங்களினால் கருத்து மோதல் ஏற்பட்டு அந்த மருத்துவனின் மனைவியும்
இவரை விவாகரத்து செய்து விட்டு இன்னாரு மறுமணம்
புரிந்து கொண்டாள்.

இப்போது வைத்தியரிடம் பணத்தை தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.
தனி மரமாக, எதிர்காலங்கள் சூனியமான சூழ்நிலையில், ஆறுதலிற்கு கூட தலை வருட யாரும் இன்றி தனி மரமாக நின்றான்.

மெல்ல மெல்ல தான் தன் தாயிற்கு செய்த
துரோகங்கள், அநியாயங்கள்,
நோகடிப்புக்கள் அவன்
உள்ளத்ததை உலுக்க ஆரம்பித்தன.

ஒரு முறை நடுநிசியில்
எழும்பி அம்மா என கத்தி ஓவென அழும் அளவிற்கு அவனிற்கு தனது பாவங்களின்
பாரம் புரிந்து போனது.

ஒரு நாள் காலை அவன்
தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது.
அவனது தூரத்து உறவினர் ஒருவர்பேசினார்.

"உன் தாய் தள்ளாத வயதில்
மரணிக்கும் தறுவாயில்
இருக்கிறாள்" என்பதே அந்த
செய்தி.

உடனடியாகவே அவன்
தனது காரில் கிளம்பி தாயிருக்கம்
இடத்திற்கு சென்றான். அவன் சென்ற போது,
அவளது உயிர் பிரிந்து விட்டது.

உயிர் போன நிலையில் அவளை கட்டிலில்
கிடத்தி வைத்திருந்தனர். இப்போது "அம்மா"
என கதறி அழதான். கண்ணீர் விட்டான்.
தனது தாயின் உயிரற்ற உடலை நல்ல முறையில் அடக்கம் செய்ய உதவினான்.


இப்போது ஒரு கடிதத்தை அவனது உறவுக்காரர்
கொடுத்தார். தான் மறைந்த பின்னர், மகன் வருவானாக இருந்தால் மட்டும் இக்கடிதத்தை
கொடுக்குமாறும், இல்லையெனில்
எரித்து விடுமாறும் தயார்
கடைசி தருவாயில் வேண்க்கொண்டதாகவும்
அவர் சொன்னார். பிரித்து படித்தான்.

அவன் கண்களில் இருந்த வழிந்த கண்ணீர் அந்த பாலைவனத்தையே சகதியாக மாற்றியது.

அதில் இருந்த வரிகள் இதுதான்....
"அன்பின் மகனே!..

எனக்கு தெரியும், என்
உருவத்தை பார்ப்பது உனக்கு ஒரு போதும்
பிடிக்காது என்று. அதனாலேயே,
எனது மரணத்திற்கு பின்னர் நீ வந்தால் மட்டும் இதனை கொடுக்கும்படி சொன்னேன்.
மற்றபடி உன்மீது எனது அன்பு என்றும் மாறாதது.
அது இறைவனிற்கு மட்டுமே தெரிந்த
விஷயம். மகனே நான் குருடிதான். உனக்கு குருடி தாய் இருந்திருக்க
கூடாது தான். எனக்கு உன் உள்ளம் புரிகிறது.
உனது உள்ளத்து உணர்வுகளை நான்
பெரிதும் மதிக்கின்றேன்.

நான் உன்னை சபித்தது கிடையாது. ஏன்
கோபப்பட்டது கூட கிடையாது.
எனக்கு ஒரு வாழ்க்கை வேண்டும்
என்றிருந்தால் நான் இன்னொரு திருமணம்
முடித்து நன்றாக வாழ்ந்திருப்பேன்.!ஆனால்
உனக்காகவே நான் வாழ்ந்தேன். அதை நீ
புரிந்து கொள்ளாமல் போய் விட்டாய்!
மகனே உனக்கு தெரியுமா? நான் ஏன்
குருடியானேன் என்று!

அப்போது உனக்கு சிறு வயது.சாலையில் நின்று நீ விளையாடிக்
கொண்டிருந்தாய். ஏதோ ஒரு பொருள் உன் கண்களில்பட்டு உன் ஒரு கண் குருடாகி விட்டது.
பார்க்காத மருத்துவர்கள் இல்லை.

இறுதியாக மருத்துவர்கள் இன்னொருவர் கண்
இருந்தால் மட்டுமே உன்
பார்வையை மீண்டும் கிடைக்க வைக்கலாம்
என்றனர். என்ன
செய்வதென்று எனக்கு தெரியவில்லை. நேரமும்
போதாது.
அதனால்....
என் ஒரு கண்ணை உடனடியகாவே தானம்
செய்து உனக்கு பார்வை கிடைக்கசெய்தேன்.

எனது கண்மணியே என்னுடைய குருட்டு கண்ணே இன்று உன்
கண்களாக இருக்கிறது. நீ இந்த உலகத்தை,
வாழ்க்கையை பார்ப்பதும் அந்த கண்களாளேயே!...
உனக்கு இதுவும் அவமானம் என்றால் உனது வலது கண்ணை பிடுங்கி எறிந்து விடு. ஏனென்றால் அது ஓர் குருடியின் கண்ணல்லாவா? இல்லை மனமிருந்தால்
அப்படியே விட்டு விடு. அந்த கண்களால்
நான் உன்னை தினமும் பார்த்துகொண்டிருப்பேன்."


இப்படிக்கு,
அன்புள்ள,
உன் குருட்டு அம்மா.😭😭😭😭😭😭

தோல்வி என்றால்...என்ன ?



    தோல்வி என்றால்...என்ன ?
    தோல்வி
    என்றால் நீங்கள் தோற்றவர் என்று
    பொருள் அல்ல. நீங்கள் இன்னும்...
    வெற்றி பெறவில்லை என்று
    பொருள்.

    தோல்வி
    என்றால் நீங்கள் எதையுமே
    சாதிக்கவில்லை என்று
    பொருள் அல்ல. சில
    பாடங்களைக் கற்றுக்கொண்டு
    இருக்கின்றீர்கள் என்று
    பொருள்.
    தோல்வி
    என்றால் நீங்கள் அவமானப்பட்டு
    விட்டதாக பொருள் இல்லை.
    முயன்று பார்க்கும் துணிவு
    உங்களிடம் உள்ளது என்று
    பொருள்.
    தோல்வி
    என்றால் வாழ்க்கை வீணாகி
    விட்டதாகப் பொருள் இல்லை.
    மீண்டும் ஆரம்பிக்க ஒரு
    வாய்ப்புக் கிடைத்துள்ளது
    என்று பொருள்.
    தோல்வி
    என்றால் விட்டு விட
    வேண்டும் என்று பொருள்
    அல்ல இன்னும் செம்மையாக
    உழைக்க வேண்டும் என்று
    பொருள்.
    தோல்வி
    என்றால் உங்களால் அடைய
    முடியாது என்று பொருள்
    அல்ல அடைய கொஞ்சம் காலம்
    தாமதமாகலாம் என்று பொருள்.
    தோல்வி
    என்றால் கடவுள் உங்களைக் கை
    விட்டு விட்டார் என்று
    பொருள் இல்லை. உங்களுக்கு
    வேறு நல்ல எதிர்காலத்தை
    நிர்ணயம் செய்து வைத்து
    இருக்கிறார் என்று பொருள்..
    முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்குங்கள்!sountha

yen


ganpagam


date


poo


ulaipu


udal


anpu


mercredi 28 octobre 2015

அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !!



    அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !!
    பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!!
    உன் வயது தான் வளர அதனுடன் சேர்ந்து குறையதுடிக்கிறது என் வயது !!!
    தாலாட்டு பாட தாய் இருந்தும் உன் செவிகள் என் குரலினை கேட்க ஏங்கினேன்!!!
    நீ தூங்கும் தலையணையாய் என் மார்பு மட்டுமே இருக்க துடிக்கிறேன் !!! ...
    நீ பிறந்த நாள் முதல் நீ என் மகள் என்று உரைக்க பொறாமையும் வளர்கிறது என்னுள்ளே விண்மீன்கள் மின்னும் தொட்டிலில் நீ தவழ விரும்பினேன்!!!!
    என் மகள் நீ என்று சொல்லாமல் உன் தந்தை நான் என்று சொல்ல கர்வம் கொள்கிறேன் சப்தம் இன்றி மாற்றம் ஏதும் இன்றி மாறினேன் தாயாய் உன்னை பார்கையில்!!!!
    வருந்தினேன் மகளே உன்னை என் வயிற்றில் சுமக்காமல் ஒரு ஆணாய் பிறந்ததை எண்ணி அவ்வலியை போக்கி தாய் ஸ்தானம் அடைந்தேன் அப்பா என்றழைத்து என் மார்பில் நீ துங்கும் தருணம்!!!!!
    இல்லை என்னும் சொல்லை நீ அறியாமல் வழிநடத்த விரும்பினேன் மகளே , உன் வாழ்கையை ஒரு நல்ல தகப்பனாய்!!!

உலகின் முதல் மொழி தமிழ்!



    உலகின் முதல் மொழி தமிழ்!
    ஆங்கிலம் கூட தமிழிலிருந்துதான் வந்தது !!!
    ஆதாரம் இதோ...........
    W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language ...இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
    எடுத்துகாட்டுகள் :
    Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
    கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
    Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
    Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
    Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
    இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
    ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.

    ========================
    தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,
    உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
    உலக நாகரீகங்களின் ஊற்று ,
    உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !
    The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !
    தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .
    S + பேசு = speach
    S + பஞ்சு = sponge
    S + மெது = smooth
    S + பரவி = spray
    S + உடன் = sudden
    S + நாகம் = snake
    S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..
    உருளை = roll
    (கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )கற்குவியல் = Calculation ; calculatrice .
    கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )
    " பொத்தல் " ல இருந்து பொத்தான் = Button
    உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .
    ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
    ஆங்கிலத்தின் தாய் மொழியான :
    லத்தீன் , கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .
    2015 ஆய்வுகளின் படி :
    ( Germany-ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள். Germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் (Europe-ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் கூறுகிறார்கள்).
    லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் கண்ட எழுத்து மொழி.
    ("நிறைமொழி" மாந்தர் ஆணையில் கிளர்ந்த "மறைமொழி" தானே மந்திரம் என்ப) என்கிறது தொல்காப்பியம்.
    நிறைமொழி - தமிழ்
    மறைமொழி - சமஸ்கிரதம்
    - சமஸ்கிரதம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
    - இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி)
    சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
    சம = சமைத்தல் = செய்
    கிரதம் = பாஷை = மொழி .
    இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
    இயற் = இயற்கை
    கிரதம் = பாஷை = மொழி
    மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .
    கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
    அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
    அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .
    தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் .
    1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !
    " ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
    1500 வருடங்களுக்கு முன் தெளுகு என்ற ஒரு தனி மொழி இல்லை!
    தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய தெளுகு.
    'தெள்ளு தமிழ் பாடி தெளிவோனே" என்று முருகனை புகழ்கிறது திருப்புகழ்.
    1000 வருடங்களுக்கு முன் கன்னடம் என்ற ஒரு தனி மொழி இல்லை!
    தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய கன்னடம்.
    700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை!
    தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .
    அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .
    தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :
    கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான். மரத்தை கட்டுவதால் கட்டு மரம். இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் "கட்டு மரம்" தான்.
    தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .
    இன்று இருக்கும் பழமையான நூல்களில், யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் "தோரா" (கி.முன் 2000 ஆண்டுகள்) ஒன்று மட்டுமே உள்ளது.
    தமிழ் மொழியில் உள்ள தொன்மையான பல நூல்கள்:
    கி.முன் 1000 ஆண்டுகள் - திருக்குறள்
    கி.முன் 2000 ஆண்டுகள் - தொல்காப்பியம்
    கி. முன் 3000 ஆண்டுகள் திருமந்திரம்
    கி.முன் 5000 பரிபாடல்;
    கி. முன் 7000 அகத்தியம் போன்ற நூல்கள் உள்ளன.

காற்றுக்கு பெயர்கள் !!!



    காற்றுக்கு பெயர்கள் !!!
    தெற்கிலிருந்து வீசினால் --தென்றல்
    வடக்கிலிருந்து வீசினால் --வாடை
    கிழக்கிலிருந்துவீசினால் ---கொண்டல்
    மேற்கிலிருந்து வந்தால் ---மேலை...
    திசை பொருத்து காற்றின் பெயர்கள்:
    (1) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
    (2) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
    (3) கிழக்கிலிருந்துவீசுவது கொண்டல்க் காற்று
    (4) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று
    காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்:
    (1) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று"
    (2) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்"
    (3) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல்"
    (4) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று"
    (5) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற்று"
    (6) 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று "கடுங்காற்று"
    (7) 101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புயற்காற்று"
    (8) 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று "சூறாவளிக் காற்று"

      இலங்கையில் வடக்கில் இருந்து வீசும் காற்றை வாடை,தெற்கில் இருந்து வீசும் காற்றைச் சோழகம், கிழக்கில் இருந்து வீசும் காற்றைக் கொண்டல், மேற்கில் இருந்து வீசும் காற்றை கச்சான் எனவும் எந்தப்பக்கம் இருந்து வீசினாலும் மென்மையாக காற்றைத் தென்றல் எனவும் அதே காற்று பலமாக அடிக்கும் போது புயல் எனவும் சுழட்டி அடித்தால் சூறாவளி எனவும் குறிப்பிடுவர்.

ஒரு குடும்பம் நல்ல குடும்பமாக திகழ சில அவசியமான அறிவுரைகள் :



    ஒரு குடும்பம் நல்ல குடும்பமாக திகழ சில அவசியமான
    அறிவுரைகள் :
    1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.
    ...
    2. கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.
    3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்தநிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.
    4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியை சீர்குலைக்கும்.
    5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது, பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம். சிலர் குறைவாக சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது, கவர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.
    6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம் தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக்கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது.
    7. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகியனவற்றையும் கடைப்பிடித்து வரவேண்டும்.
    8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும்.
    9. தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.
    10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி அவசியம்..

பேய், ஆவி குறித்த தகவல்கள்...!!



    பேய், ஆவி குறித்த தகவல்கள்...!!
    1.பேய்கள் உறங்குவதில்லை..தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும்.
    .

    2 பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும்..எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.
    .
    3 பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும்.. உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்.
    .
    4 பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே முயற்சி செய்யும்.
    .
    5 விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.
    .
    6 பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள்தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்கள்.
    .
    7 பேய்கள் அல்லது ஆவிகள் குளிர்மையானவை. அதனால் தான் அவைகளை நீங்கள் சந்திக்கின்ற பொழுது மிக குளிர்மையை உணர்வீர்கள்.
    8 பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும்.
    .
    9 நல்ல பேய்கள் அல்லது ஆவிகள் பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக கொடூரமானதாக இருக்கும்.
    .
    10 பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது..எப்பவுமே கோவில்கள்/சர்ச்சுகளை வழிபாடு தலங்களை அண்டியே சுற்றியபடி இருக்கும்.
    .
    11 பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings)உண்டு..ஆனால் உணர (sense) முடியாது.
    .
    12 பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக்கொள்ள முயற்சிக்கும்.
    .
    13 பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட] கொலைசெய்ய முடியாது.. ஆனால் ஒருவன் தன்னை தானே கொலைசெய்யும் அளவுக்கு தூண்டிவிடும் சக்தி உண்டு.
    .
    14 பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல..எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும்.
    15 பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்.
    .
    16 பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும்.
    .
    17 பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு.
    .
    18 பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood Group) 'O' + or - ஆக இருக்கும்..
    மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்..

    ங்கொய்யால ஒரு பய தூங்க கூடாது.......

நள்ளிரவு நேரம்.



    நள்ளிரவு நேரம்......
    கடலில் ஒரு படகு போய்க் கொண்டிருந்தது அதில் மூன்று பேர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.
    திடீரென்று ஒருபேய் படகில் வந்து குதித்தது. மூன்று பெரும் நடுங்கி போனார்கள். பேய் தன் கோரமான பல் வரிசையை காட்டி சிரித்தது.
    ...
    "உங்கள் மூன்று பேர்களையும் சாப்பிட போகிறேன்" என்றது.மூன்று பெரும் தங்களுடைய உயிர்களை காப்பாற்றிக் கொள்ள பேயிடம் கெஞ்சினார்கள்.
    ஆனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது."உங்களில் ஒருவனாவது புத்திசாலியாக இருந்தால் உயிர் பிச்சை கொடுப்பேன்.
    அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை. நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில் எதையாவது தூக்கி போடவேண்டும். அதை நான் எடுத்து வந்து விட்டால் நீங்கள் தோற்று போனதாய் அர்த்தம்.
    "மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர்.
    முதலாவது நபர் தன் கையில் போட்டிருந்த மோதிரத்தை எடுத்து கடலில் வீசினான். பேய் உடனே கடலில் குதித்து அதைத் தேடி எடுத்து வந்தது.
    இரண்டாவது நபர் தன் கழுத்தில் இருந்த செயினை கழற்றி கடலில் வீசினான். பேய் அதையும் தேடி பிடித்து கொண்டு வந்து கொடுத்தது.
    பேய் சிரித்தது.
    "இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி இருப்பது நீ மட்டும் தான். நீ எதை வீசப் போகிறாய்..?"
    உடன ே மூன்றாவது நபர் தன்னிடம் இருந்த குடி தண்ணீர் பாட்டிலை எடுத்து, அந்த கடலில் கொட்டி விட்டு ...
    "இந்த தண்ணீரை கொண்டு வா !"
    என்றான்....பேய் திகைத்தது. ஓட்டம் பிடித்தது.
    நீதி :-
    இந்த கதையின் நீதி என்னவென்றால் பேய்'க்கே தண்ணி காட்டுபவர்களும்இந்த உலகத்தில் இருக்கிறார்கள்..! என்பது தான்.!

முயன்று பாருங்கள்



முயன்று பாருங்கள்
🌺ஒரு குடும்பத்தின் வறுமையைப்
போக்க நினைத்தால், அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைக்கு, சிறந்த கல்வியைக் கொடுங்கள்.
...
🌺ஒரு குற்றவாளி உருவாவதைத் தடுக்க நினைத்தால் வறியவரோ, எளியவரோ, வலியவரோ பசி என்று வரும் வேளையில் வயிற்றுக்குச் சோறிடுங்கள்.
🌺பஞ்சத்தை ஒழிக்க நினைத்தால்
பூமியில் வாழ்நாளில் ஒரு மரத்தையேனும் வளர்த்து விடுங்கள்.
🌺ஊழலை ஒழிக்க நினைத்தால்
உங்கள் ஓட்டுரிமையை சரியாய் பயன்படுத்துங்கள், உங்கள் வேலைகளில்/தொழிலில் நேர்மையைக் கடைபிடியுங்கள்.
🌺மனிதாபிமானம் தழைக்க விரும்பினால், குழந்தைகளிடம் வன்முறையைக் காட்டாதீர்கள்
அன்பையையும் அரவணைப்பையும் நீங்கள் அங்கே தர அது விருட்சமாகும்.
🌺பிறரின் துயர் துடைக்க நினைத்தால், தானம் செய்யுங்கள்,
டாட்டா, பிர்லா, அம்பானி என்று ஆனபிறகு தான் தானம் செய்வேன் என்றால் அதற்குள் ஒரு தலைமுறை கருகிப் போகும், இல்லை வன்முறை ஏகும்.
🌺மன்னிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.
🌺மகிழ்ச்சியாக இருக்க நினைத்தால்,
உங்கள் துயரங்களை உங்களுக்குள்ளும், மகிழ்ச்சியை, பந்தியிலும் வையுங்கள், பகிர ஆத்மார்த்தமான ஒரு மனம் இல்லையென்றால், துயரங்களை கடக்கப் பழகுங்கள்.
🌺இங்கே பெரும்பாலும் அவரவர்க்கு வரும்போதோ, இல்லை
ஒருவர் மரணித்தப்பின்னரோ தான் துயரம் புரியும்.... அதுவும் சில காலமே! முகாரி வேண்டாம், சிரித்துக்கொண்டே வாழ்ந்து விட்டுப் போங்கள், வாழ்க்கையும் சின்னது, மனித மனமும் சின்னது!
🌺இறுதியாக, நாம் எடுத்துப் போகப்போவது, ஏதுமில்லை என்றாலும் ஒரு சுதந்திர பூமியையும், சுத்தமானக் காற்றையும் , காழ்ப்பற்ற ஒரு பூமியையும் விட்டுச் செல்வோம்!

mardi 27 octobre 2015

ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பா படிக்க வேண்டிய பயனுள்ள விடயங்கள்! ! ! !




ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பா படிக்க வேண்டிய பயனுள்ள விடயங்கள்! ! ! !

1. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

3. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ,அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

23. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!

குடும்பம் நல்ல குடும்பமாக திகழ



ஒரு குடும்பம் நல்ல குடும்பமாக திகழ சில அவசியமான
அறிவுரைகள் :
1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.
...
2. கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.
3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்தநிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.
4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியை சீர்குலைக்கும்.
5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது, பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம். சிலர் குறைவாக சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது, கவர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.
6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம் தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக்கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது.
7. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகியனவற்றையும் கடைப்பிடித்து வரவேண்டும்.
8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும்.
9. தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.
10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி அவசியம்..

சிந்தனைகள் அருமையாகும்


உலகின் முதல் மொழி தமிழ்!


 
உலகின் முதல் மொழி தமிழ்!
ஆங்கிலம் கூட தமிழிலிருந்துதான் வந்தது !!!
ஆதாரம் இதோ...........
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.
========================
தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !
The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !
தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .
S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..
உருளை = roll
(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )கற்குவியல் = Calculation ; calculatrice .
கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )
" பொத்தல் " ல இருந்து பொத்தான் = Button
உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .
ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .
2015 ஆய்வுகளின் படி :
( Germany-ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள். Germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் (Europe-ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் கூறுகிறார்கள்).
லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் கண்ட எழுத்து மொழி.
("நிறைமொழி" மாந்தர் ஆணையில் கிளர்ந்த "மறைமொழி" தானே மந்திரம் என்ப) என்கிறது தொல்காப்பியம்.
நிறைமொழி - தமிழ்
மறைமொழி - சமஸ்கிரதம்
- சமஸ்கிரதம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி)
சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி .
இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி
மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .
கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .
தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் .
1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !
" ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
1500 வருடங்களுக்கு முன் தெளுகு என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய தெளுகு.
'தெள்ளு தமிழ் பாடி தெளிவோனே" என்று முருகனை புகழ்கிறது திருப்புகழ்.
1000 வருடங்களுக்கு முன் கன்னடம் என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய கன்னடம்.
700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .
அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .
தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான். மரத்தை கட்டுவதால் கட்டு மரம். இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் "கட்டு மரம்" தான்.
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .
இன்று இருக்கும் பழமையான நூல்களில், யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் "தோரா" (கி.முன் 2000 ஆண்டுகள்) ஒன்று மட்டுமே உள்ளது.
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான பல நூல்கள்:
கி.முன் 1000 ஆண்டுகள் - திருக்குறள்
கி.முன் 2000 ஆண்டுகள் - தொல்காப்பியம்
கி. முன் 3000 ஆண்டுகள் திருமந்திரம்
கி.முன் 5000 பரிபாடல்;
கி. முன் 7000 அகத்தியம் போன்ற நூல்கள் உள்ளன.

samedi 17 octobre 2015

பகைமை மறப்போம்

    ஒரு நாள் வகுப்பறையில் பாடம் நடத்திகொண்டிருக்கும் போது மாணவர்களிடம் இந்த கேள்வியை கேட்டார்
    ''மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?'' - மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியார்
    வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் 'ஆமாம்... அய்யா' என்றார்கள். ஆசிரியருக்கு மிகுந்த வியப்பு, ஒவ்வொருவராக அழைத்து ''மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?'' என்று கேட்டார். ஒவ்வொருவரும்... ஐந்து, பத்து என்று அடுக்கி கொண்டே சென்றார்கள்
    மாணவர்களுக்கு பழிவாங்கும் எண்ணம் தவறு என்று புரிய வைக்க நினைத்தார். ஒவ்வொரிடமும் ஒரு பையை கொடுத்தார் , வகுப்பறைக்கு ஒரு கூடையில் தக்காளி கொண்டுவரப்பட்டது. யார்மீது எத்தனை பழிவாங்கும் எண்ணம் உள்ளதோ அத்தனை தக்காளிகளை தாங்கள் பையில் எடுத்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
    இந்த தக்காளி பையை எப்போதும் உனக் கூடவே இருக்கவேண்டும், தூங்கும் போதும் அருகிலேயே வைத்திருக்கவேண்டும் என கட்டளையிட்டார். ஒன்றும் அறியாமல் தலையை ஆட்டினார்கள் மாணவர்கள் .
    ஓரிரு நாட்கள் ஒரு குறையும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கின. நாற்றம் அடிக்கும் பையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர். ஒரு கட்டத்தில்... ஆசிரியரிடம் சென்று, பைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர்.
    மெள்ளப் புன்னகைத்த ஆசிரியை, ''நாற்றம் வீசுபவை தக்காளி மட்டுமல்ல அந்த நாற்றத்தைப் போலவே, உங்கள் பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன. ஆகவே, பகை- பழியை மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால், தக்காளி பையை தூக்கி எறியுங்கள்'' என்றார்! அப்போது தான் மாணவர்களுக்கு மனத் தெளிவு பிறந்தது.
    அப்போதே தக்காளி பைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாணவர்கள்,பகை மறந்து ஒருவரையருவர் ஆரத் தழுவி கொண்டு வகுப்பறைக்கு திரும்பினர்.
    நாம் ஒவொருவரும் இப்படி தன பழிவாங்கும் எண்ணத்தோடு காத்திருக்கிறோம் தக்காளி பை நாற்றத்தோடு
    பகைமை மறப்போம் பகுத்தறிவோடு பயில்வோம் நன்றி

mudeyathu


soll


" ஆய்வரங்கு" 10.10.2015 
vdJ ghh;itapy;.
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஒழுங்கமைப்பில், அதன் கீழ் இயங்கும் "இணையக் கல்விக் கழகம்" - பிரான்சால் (தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்) " ஆய்வரங்கு"10.10.2015
njhlf;fj;jpy; te;J fye;J nfhs;s Kbatpy;iy.. ehd; tUk;NghJ திரு. பாலசுந்தரம் அவர்களால் புலம் பெயர் மண்ணில் இளைஞர்களின் கல்வியும், அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களும் gw;wp Ma;T nra;jpUe;jhh;..Mdhy; KOikahf Nfl;f Kbatpy;iy. (ehd; tugpe;jptpl;lJ)
       njhlh;e;J நமது பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான சிந்துபுரக் குதிரைநடனம் அனைவரினதும் கவனத்தை வெகுவாக ஈர்த்துக் கொண்டது இந்நிகழ்வின் சிறப்புக்களில் ஒன்றாக அமைந்திருந்தது.
    தொடர்ந்து, இங்கேயே கல்வி கற்று மருத்துவராகப் பணி புரியும் திருமதி. சாலினி அவர்களால், "உயர்கல்வி கற்கும் மாணவருக்கும், பெற்றோருக்குமான ஆலோசனைகள்" என்ற தலைப்பில் ஒரு ஆய்வு
.. mUikahf ,Ue;jJ. kUj;Jtd; vd;w epiyapy; jpUkjp rhypdp mth;fspd; vz;zq;fs; Vw;gLk; f];lq;fs; Ghpe;J nfhs;sf;$bajhf ,Uf;fpwJ. ,d;Dk; nfhQ;rk; Mokhf vLj;J ,ak;gpapUf;fyhk; vd;gJ vdJ vz;zk;.
    இதனையடுத்து, செல்வி. சகானா சச்சிதானந்தம் அவர்களால், " தகவல் தொழிநுட்பத்தில் தமிழின் வளர்ச்சி" என்னும் தலைப்பில் ஆய்வு ஒன்று செய்யப்பட்டது. இவர் பிரான்சு மண்ணிலே பிறந்த வளர்ந்தவர், இணையக் கல்விக் கழகத்தில் இணைந்து கொண்டு தனது பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறhர். இவரது கன்னி முயற்சிக்கு நமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ளலாம். செல்வி. சகானாவினால் வழங்கப்பட்ட "தகவல் தொழில் நுட்பத்தில் தமிழின் வளர்ச்சி" என்ற ஆய்வானது, மொழித்தோற்றம், தொடர்பாடல் என்று தொடங்கி, தகவல் தொழில் நுட்பத்தில் தமிழின் வளர்ச்சி எப்படி அமைந்துள்ளது என்பதை விளக்கத் தவறி நிறைவுறாத ஒரு ஆய்வாக அமைந்திருந்தது.
    
njhlh;e;J செல்வி. தனுசா அவர்களால் " தமிழீழப் போராட்டத்தில் பெண்களின் பங்கு" என்ற தலைப்பில் தனது பார்வையைச் செலுத்தியிருந்தார். தாய்மைக்குள் உள்ள தலைமைப் பண்பை அழகாக விளக்கியது பாராட்டத்தக்கது; ,d;Dk; epiwa $wpapUf;fyhk;. vd;gJ vdJ jho;ikahd fUj;J. ,Ue;Jk; vdJ tho;j;Jf;fs;.
    
njhlh;e;J , இணையக் கல்விக் கழகப் பேராசிரியரான திரு. தனராஜா அவர்கள் " மாவீரன் பண்டாரவன்னியன்" என்ற தலைப்பில், பண்டாரவன்னியன் பற்றிய புதிய தகவல்களை ஆய்வு செய்திருந்தார். திரு. தனராஜா அவர்களின் ஆய்வுரை தலைப்புக்கேற்ற நிறையத் தேடுதலுடன் கூடிய ஆய்வாக அமைந்திருந்தது. தமிழர் வரலாற்றில் பண்டாரவன்னியனின் முக்கியத்துவம் பற்றி விளக்கியிருந்தார். fhf;if td;dpad; vd;nwhU ghj;jpuNk ,y;iy vd;W Ma;T nra;JjJ ghuhl;lj;jf;fJ. ஒளிப்படக் காட்சி விளக்கங்களும் அளிக்கப்பட்டிருந்தன.
பேராசிரியர் ஆறுதலாகப் பேசலாம்.இவரது ஆய்வுக்கு பல வரலாற்றுத் தொல்பொருளியல் சான்றுகளும், வரலாற்று நூல்களும் உதவி புரிந்திருந்தன. அததுடன் பண்டாரவன்னியனின் காதலி எனக் கூறப்படும் குருவிச்சி நாச்சியாரால் பாடப்பட்டதாகச் சொல்லப்படும் பாடலான,
"மேற்புலத்து வெள்ளையனை மேலுலகு அனுப்பச்சென்ற
  கொற்றவனைக் கண்டுள்ளம்.......
என்னும் பாடப்பட்டது கொஞ்சம் ஆய்வுக்கு அழகு சேர்த்தது.
       இதனையடுத்து, திரு. அகிலன் அவர்களால், "காசி   ஆனந்தனின் கவிதைகள்" என்ற தலைப்பில் ஆய்வு செய்யப்பட்டது.
அவரவர் தமக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் ஆய்வுகளை மேற் கொள்ள முயற்சித்தமைக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ளலாம். பாராட்டுக்கs; fhrp Mde;jidg;gw;wp epiwaf;$wyhk;. ,th; tho;e;J nfhz;bUf;Fk; khkdpjh;. vd; kz;zpd; ike;jh;. ,tiug;gw;wp ,d;Dk; Ma;T nra;jpUf;fyhk; vd;gJ thjk;.
    ஆய்வு என்பது ஒரு கேள்வியை அடிப்படையாகக் கொண்டு, தேடுதலினூடாக உண்மைகளையும் புதிய கண்டுபிடிப்புகளையும், புதிய முடிவுகளையும் தரக்கூடிய ஒன்றாகும்.
        
njhlh;e;J gpuGtpd;tha;f;fhy; fiuNahuk; rk fhy tuyhw;W ehty;Ma;Tf;F moF Nrh;j;jJ. gz;Fsj;jpy; fhy; jlk; gjpj;J tay; tuk;gpy; tpisahba vdJ gRikahd mDgtj;ij kPl;nlLj;jhh; tho;j;Jf;fs;. njhl;L njhl;L gy fUj;Jf;fis vLj;J te;jhh;. vy;yhk; nfhQ;rk; jhd; ,d;Dk; nfhQ;rk; Mokhf vLj;J ,ak;gpapUf;fyhk; vd;gJ vdJ vz;zk;. ,Ue;Jk; இவரது கன்னி முயற்சிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்fpNwd;.
    mLj;j Ma;T..(ngah; kwe;J tpl;Nld;;) Vw;fdNt gy Kiw Nfl;l fUj;Jf;fs; jhd;. (தொடர்ந்தும் ஒரே வகையான ஆய்வுகள் சலிப்பைத் தர இடமுண்டு. )
 Gjpa Gjpa jiyg;gpy; Ma;Tfs; ,Uf;f Ntz;Lk;.. $wpa tpilaq;fis kPz;Lk; kPz;Lk; $Wtjhy; Ma;Tf;F moF Vw;glhJ. ,tuJ Kaw;r;rpf;F vdJ tho;j;Jf;fs;.    
,d;Dk; epiwa vjph;ghh;g;GfSld; te;jpUe;Njd;. Mdhy; rw;W Vkhw;wk;jhd;. ,Ug;gpDk; ,e;j Kaw;r;rpf;F vdJ tho;j;Jf;fSk; ghuhl;Lf;fSk;.  vd;id ,e;j epfo;tpw;F mioj;j    jpUkjp .     n[auhjh fp];zuh[h khztp (இணையக் கல்விக் கழகம்" பிரான்]; (தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்) vdJ ed;wpfs;.
அடுத்த தடவை முழுமையான ஒரு ஆய்வுக்களத்தை பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் ஒழுங்கமைக்கும் என்று எதிர்பார்க்கpNwd;. njhlul;Lk; cq;fs; gzp. vdJ tho;j;Jf;fs;.  
                  vd;Wk; ed;wpAld;.. nrse;jh kDty;.

vendredi 16 octobre 2015

மனிதர்களாய் பிறந்த அனைவரும் ஆசைப்படும் ஒன்று பணம், ஆசைப்படாத ஒன்று மரணம்..sountha

    எனக்கு பிடிச்சவங்களுக்கும் என்னை பிடிக்காது,
    எனக்கு பிடிக்காதவங்களுக்கும் என்னை பிடிக்காது.(.பட்டதில் தெரிந்தது.sountha.)
      உனக்கு மரியாதை இல்லாத இடத்தில் அமைதியாக இருந்து விடு,
      தேவை இல்லாத வாக்குவாதத்தில் இருக்கும் மரியாதையும் போய் விடும்..(sountha)
       
      முகத்தில் அழகாய் இருப்பவர்கள் உள்ளத்தில் அழகாய் இருப்பதில்லை உள்ளத்தில் அழகாய் இருப்பவர்கள் முகத்தில் அழகாய் இருப்பதில்லை சில பேர்கள் தவிர
       
      உங்கள் கஷ்டத்தை யாரிடமும் பகிராதீங்கள், கஷ்டங்களுக்கு ஆறுதல் சொல்பவர்களை விட பார்த்து சிரிபவர்களே அதிகம், இன்றைய உலகம்
       
       
      மனிதர்களாய் பிறந்த அனைவரும் ஆசைப்படும் ஒன்று பணம்,
      மனிதர்களாய் பிறந்த அனைவரும் ஆசைப்படும் ஒன்று பணம், ஆசைப்படாத ஒன்று மரணம்..sountha..sountha

nanban


inimai


kurai


iravu


nam


mardi 13 octobre 2015

கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார்.

கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார்.
தமிழ்நாட்டின் மதுபானக் கடைகளில் இவ்வளவு கூட்டம் கூடியிருக்கிறதே... அந்த மதுபானத்தில் அப்படியென்னதான் சுவை இருக்கிறது என்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் தன்னைச் சாதாரண மனிதனைப் போல் மாற்றிக் கொண்டு அங்கிருந்த மது அருந்தும் கூடத்திற்குச் சென்று அமர்ந்தார்.
அங்கிருந்த பணியாளர், “என்ன வேண்டும்?” என்று கேட்டார்.
...
இவர் அருகிலிருந்த மேசையில் ஒருவர் குடித்துக் கொண்டிருந்த பாட்டிலைக் காண்பித்து, அது போல் தனக்கும் ஒன்றைக் கொண்டு வரும்படி கூறினார்.
அந்தப்பணியாளரும் அது போன்ற பாட்டிலைக் கொண்டு வந்து கொடுத்தார்.
அந்தப் பாட்டில் முழுவதையும் குடித்து விட்டு, “அப்படி ஒன்றும் வித்தியாசமாகத் தெரியவில்லையே...” என்றார்.
பணியாளர், “இது போதை குறைவானது. இந்தப் பாட்டிலைக் குடித்துப் பாருங்கள்...” என்று வேறு ஒரு நிறுவனத் தயாரிப்பைக் கொண்டு வந்து கொடுத்தார்.
அதிலும் அவருக்கு வித்தியாசம் எதுவும் தெரியவில்லை.
பணியாளர் அடுத்து மிகவும் போதை தரும் பாட்டிலைக் கொண்டு வந்து கொடுத்தார்.
அதையும் குடித்த கடவுளுக்குள் புதிய மாற்றம் ஏதும் தெரியாததால் அவர் அந்தப் பணியாளரைப் பார்த்து வேறு பாட்டிலைக் கொண்டு வரும்படி கேட்டார்.
பணியாளர், “யாருய்யா நீ? இவ்வளவு குடிச்சும் உனக்குப் போதை ஏறலயா...? மறுபடியும் கேட்கிறே..?” என்றார்.
அதற்கு கடவுள், “நான் தான் உங்களை ஆளும் கடவுள் எனக்கு இந்தப் போதை ஒன்றும் செய்யாது" என்றார்.
அந்தப் பணியாளர், “பாருடா...! இவன் கடவுளாமில்ல... இவனுக்கு இப்போதுதான் போதை ஏறத் தொடங்கியிருக்கு...!” என்றபடி அங்கிருந்து நகர்ந்தான்.
கடவுள் இப்போதும் ஒன்றும் புரியாமல் விழித்தார்.

கன்றுக்குட்டி

கன்றுக்குட்டி ஒன்று அழுதபடியே தாய்ப்பசுவிடம் ஓடி வந்தது.
அதைப் பார்த்த தாய்ப்பசு தனது கன்றை நாக்கினால் நக்கியபடி அதன் அழுகைக்கான காரணத்தை விசாரித்தது.
உடனே அந்த கன்று, "அம்மா, இந்த வீட்டில் என்னைப் போலவே ஆட்டுக்குட்டி ஒன்றும் உள்ளது. என் அழகு அதற்கு இல்லை. கன்னங்கரேலென்று மிகவும் கருப்பாக உள்ளது. என் சுறுசுறுப்பும் அதற்கு இல்லை. ஆனால் இந்த வீட்டில் இருக்கும் முதலாளியின் மகன் என் மீது அன்பு காட்டுவது இல்லை. ஆனால் அந்த ஆட்டுக்குட்டியிடம் மட்டும் விளையாடுகிறான். அதற்கு பசுமைய...ான புல் தருகிறான். அதன் கழுத்தில் அழகான மணி ஒன்று கட்டி அழகு படுத்துகிறான். ஆனால் என்னுடைய நிலையைப் பார். இங்கே கிடக்கும் காய்ந்த வைக்கோலைத்தான் தின்ன வேண்டியிருக்கிறது. என்னிடம் என்னம்மா குறை இருக்கிறது? " என்றபடி மீண்டும் அழத் தொடங்கியது.
"கண்ணே, இதற்காகவா வருத்தப்பட்டு அழுகிறாய்? அதிகமான மரியாதையும், அதிகமான இன்பத்தையும் அனுபவிப்பது மிக்வும் ஆபத்தானது. பிறருக்குக் கிடைக்கும் இன்பத்தைப் பார்த்துப் பொறாமைப் படாதே, அந்த ஆடு பெறும் நலமும் வளமும் அதன் அழிவிற்கே. அதன் நிலையைக் கண்டு இரக்கப்பட வேண்டுமே தவிர பொறாமைப் படாதே." என்றது தாய்ப்பசு.
ஒரு சில மாதங்கள் கடந்தன. அந்த கன்றுக்குட்டி மீண்டும் அழுது கொண்டே வந்தது.
தாய்ப்பசு அழுகையை நிறுத்திக் காரணம் கேட்டது.
"அம்மா, நடந்த கொடுமையை எப்படிச் சொல்வது? அதை நினைத்தாலே எனக்குப் பயமாக இருக்கிறது. இன்று காலையில் அந்த ஆட்டைக் குளிப்பாட்டி மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். அதற்கு சுவையான உணவெல்லாம் கொடுத்தார்கள். சிறிது நேரம் கழித்து ஒருவன் பட்டாக்கத்தியுடன் வந்து அதன் தலையை வெட்டி வீழ்த்தினான். பிறகு அதன் உடலையும் துண்டு துண்டாக வெட்டினார்கள்." என்று சொல்லி மீண்டும் தேம்பித் தேம்பி அழுதது.
"கண்ணே, நான் அன்றே உனக்குச் சொல்லவில்லையா? மாலை மரியாதைகள், புகழ் மொழிகள் இவற்றிற்குப் பின்னால் அழிவு காத்திருக்கிறது. நமக்குக் கிடைப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடைவதே மேலானது. மனிதர்களில் பலரும் இப்படித்தான் புகழ்ச்சியான பேச்சுக்கு மயங்கி அனைத்து உடமைகளையும் இழந்து கடைசியில் அழிந்தும் போய் விடுகிறார்கள்." என்றது தாய்ப்பசு.
உண்மைதானே?