முகப்பு

mardi 31 janvier 2012

இதயம்

இதயத்தை இரும்பாக தான் வைத்து இருந்தேன் …
யாருக்கு தெரியும் அவள் காந்தமாக இருப்பால் என்று ...!

lundi 30 janvier 2012

"இதயத்தில் என் நண்பன்/தோழி நீ"

"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ"

அலைகின்றார்


கஷ்டப் படாமல் வாழ வேண்டும் எண்பதற்காக
கஷ்டப்பட்டு வேலை செய்கின்றார்...

நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக வீடு கட்டி நித்திரையின்றி திரிகின்றார்

... படித்தால் வேலை கிடைக்கும் என்று படித்துவிட்டு வேலையின்றி திரிகின்றார்

அலங்காரமாக வாழ வென்று ஆபரணம் வாங்கி
லொக்கரில் வைத்து விட்டு அலங்காரமின்றி அலைகின்றார்

அவசர தேவைக்கு வாகனம் வாங்கி
அவசியமற்ற தேவைக்கும் பயணிக்கின்றார்

முடியும் முடியும் என்றவர்கள் முடிந்தவர்களையும்
முடியாமல் இருக்க செய்கின்றார்

மறக்காதே..வெறுக்காதே..ஏமாற்றாதே...


* உனக்கு உதவி செய்தவரை மறக்காதே..!! - கீதை

* உன்னை நேசித்தவரை வெறுக்காதே..!! - பைபிள்

* உன்னை நம்பியவரை ஏமாற்றாதே..!! - குரான்

திருப்பி வராது


வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்
நீ பிறருக்கு உதவும் வரை......
வாழ்க்கை ஒரு புனித ஸ்தலம்
மற்றவர் உன்னை விரும்பும் வரை.....
வாழ்க்கை ஒரு சுதந்திர பறவை
நீ வாழ விரும்பும் பொழுது.......
வாழ்க்கை ஒரு இனிய பயணம்
நீ வாழ புறப்படும் நேரம்.......
வாழ்ந்து பார் நண்பனே(பியே) வாழ்க்கை
ஒரு வராகடன் - சென்றால்
திருப்பி வராது...........

dimanche 29 janvier 2012



மேலே ஒரு கை உங்களை வழி நடாத்தும்.

 
நம்பிக்கை இருக்குமிடத்தில் வீரம், மனோபலம், விடா முயற்சி, வலிமை எல்லாமே இருக்கும். கடவுள் நம்மோடு இருந்தால் எவரால் நம்மை எதிர்க்க முடியும் ?
நம்பிக்கையே வாழ்வின் பிரச்சனைகள் ஏமாற்றங்களை கடந்து மேலேறும் தைரியத்தைத் தருகிறது. அது தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டாக நினைக்குமே அல்லாது அதை ஏற்றுக் கொள்ளாது.
தெளிவுடன், தன்னம்பிக்கையுடன் நடந்து செல்லுங்கள், மேலே ஒரு கை உங்களை வழி நடாத்தும்.
எல்லையற்ற வானில் நீங்கள் பறந்து செல்ல வழி நடாத்துபவன்தான், தனித்தே செல்லும் உன் நீண்ட பாதைக்கும் வழியைக் காட்டுகிறான் கவலைப்படாமல் நட…

பிறவிஇருந்து என்ன பயன் ?


உலகில் உயிருடன் வலம்வரும் அனைவரும் பூமிக்கு அடியில் உறங்குவோருடன் ஒப்பிட்டால் மிகவும் ஒரு சிலர்தான். இயற்கையின் போதனையை அமைதியாகக் கேட்டால் இந்த உண்மை உங்களுக்கு அழகாக விளங்கும்.
 இயற்கையின் விதிப்படி உங்கள் குறுகிய வாழ்வை கழியுங்கள். பழுத்த ஆலிவ் இலை தன்னை சுமந்து நின்ற கிளையை வாழ்த்தி, அதற்கு உயிர் கொடுத்த மரத்திற்கு நன்றி கூறிவிட்டு உதிர்வதைப்போல பயணத்தின் முடிவுக்கு சாந்தத்துடன் நன்றி கூறுங்கள்.
பயமின்றி இந்தப் பூமியில் வாழுங்கள். மரணத்தை எண்ணி அஞ்ச வேண்டாம். அவன் ஒரு நண்பன்தான் எவனும் குறித்த நேரத்திற்கு முன் இறப்பதில்லை.
 இந்தப்பிறவியில் நம்மை நேசிப்பவரை அறிந்து அன்பு செய்யாவிட்டால் நமக்கு இன்னொரு பிறவி இருந்து என்ன பயன் ?

ஓடும் நேரத்தை கோட்டைவிட்டுவிடாதே.


வாழ்வு முழுவதும் சோகம் என்றாலும் கலங்காதே. உன் துக்கத்தினால் காலை உதயம் தன் அழகை இழந்துவிடாது. நேரம் ஒருபோதும் நிற்காது, உன் துக்கத்திற்காக அது தாமதிக்காது. உன் துக்கத்தினால் ஓடும் நேரத்தை கோட்டைவிட்டுவிடாதே.

vendredi 27 janvier 2012

உன் மேல்


வண்டுக்கும் காதல் உண்டு
மலர்களின் மேல்!
நண்பர்களுக்கும் காதல் உண்டு
நட்பின் மேல்!
எனக்கும் காதல் உண்டு
தமிழ்த்தாயே உன் மேல்!

jeudi 26 janvier 2012

நட்பு


ஒரு செடியில் பூக்கள் என்பது ,
பூத்துக்கொண்டே இருக்கும் .
அதுபோல், என் இதயத்தில் ,
உங்கள் மீதான நட்பு , என்றும்
உங்களை தொடர்ந்து கொண்டே இருக்கும் .
நான் மண்ணுக்குள் புதையும் வரை ~~~~~

நம் நட்பின் வாசம்


"இறைவன் நினைத்தாலும் மாறாதது, மாற்ற முடியாதது, நம் நட்பினை" !
"பூவின் வாசம் இந்த உலகில், ஒரு நாள் மட்டுமே வீசும்"
"ஆனால், நாம் இறந்தாலும் நம் நட்பின் வாசம், இந்த உலகில் என்றும் வீசும்" !!

பாசம்


பிரியும் வரை தெரியாது
பாசம் எவ்வளவு ஆழம் என்று

mercredi 25 janvier 2012

நட்பு


இருந்தால் வருவேன் என்றது காதல்
பணம் இருந்தல் வருவேன் என்றது சொந்தம்
எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன்
என்றது நட்பு

நட்பு என்பது


நண்பர்கள் என்றவர்கள்
காதலர்களாகியிருக்கிறார்கள்
எனக்குத் தெரிய அண்ணன் தங்கை
என்று ஆரம்பித்தவர்களே
கணவன் மனைவியாகவும்
ஆகியிருக்கிறார்கள்
ஆனாலும் சொல்கிறேன்
நட்பு என்பது நம்மைப்போல் என்றும்
நட்பாகவே இருப்பதுதான்

lundi 23 janvier 2012

முதல் கவிதை


அம்மா
நான் சொன்ன
முதல் வார்த்தை..
எல்லோரும் சொல்லும்
முதல் வார்த்தை...
..மா அம்மா
நாங்கள் அன்றே
சொன்ன முதல் கவிதை அம்மா..!

என் இதயம்


உன் இமைகள் அசைவின் ஒலியை
என் இதயம் கேட்பது எப்படி ?

dimanche 22 janvier 2012

இதயம்


உன் இதயம் துடிக்கும்
ஒவ்வொரு நொடியும்
நான் ரசித்து கொண்டிருப்பேன் ,
ஏன் என்றால் துடிப்பது
உன் இதயம் என்றாலும்
இருப்பது என்னிடம் என்பதால்

vendredi 20 janvier 2012

என் அன்னையின் அன்புக்கு......!!


தன்உயிரை எனக்கு தந்து ,
உயிர் கொடுத்தவள் !!
தன் ரத்தத்தை பாலாய் தந்து ,
பாசத்தை ஊட்டியவள் !!
மசக்கையிலும்,வாந்தியாலும் ,
தான் துவண்டலும் !!
மனதாலும்,வார்த்தைகளாலும் ,
மற்றவர்களை சந்தோஷபடுத்தியவள் !!
நான் உதைத்த உதைகளை
வயிற்றுக்குள் வாங்கி
நெஞ்சத்தில் மகிழ்ந்தவள் !!
நான் அழுத நொடி ,
அவள் கண்ணீர் விட்டவள் !!
நான் சிரித்த நொடியிலும் ,
அவள் கண்ணீர் விட்டவள் !!
ஆனந்த கண்ணீராக...
வளர்ந்துதான் இருக்கிறேன்
உடலளவில்,
நானும் குழந்தைதான் மனதளவில்,
பாசத்துடன் தலை கோதும்
என் அன்னையின் அன்புக்கு......!!

காத்தி௫க்கின்றோம்



அன்பு காட்ட அம்மா இல்லை....
அறிவு புகட்ட அப்பா இல்லை....
அன்பே என்று அரவணைக்க ...யா௫மில்லை....
மகனே என்று மடிசாய்க்க யா௫மில்லை....
கண்ணே என்று கட்டியணைக்க யா௫மில்லை...
முத்தே என்று முத்தமிட யா௫மில்லை.....

அப்படியென்றால் நாங்கள் யார்?
அனாதை என்னும் சிறப்பு பட்டம் பெற்ற
பட்டதாரிகளா நாங்கள்...?

எங்களது பிறந்தநாள் என்னவென்று
தெரியாதபோதும்
பணக்காரரின் பிறந்தநாளுக்காக
காத்தி௫க்கின்றோம்
 

jeudi 19 janvier 2012

வெண் குஸ்டத்திற்கான புதிய மருந்து கண்டுபிடிப்பு

<>
வெண் குஸ்டத்திற்கான புதிய மருந்து கண்டுபிடிப்பு
இந்தியாவின் ராணுவ விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான நிறுவனம், லியூகோடெர்மா என்றும், விடிலிகோ என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வெண்குஷ்ட நோய்க்கு ஆயுர்வேத மருந்து ஒன்றை கண்டுபிடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக இந்திய ராணுவ தேவைகளுக்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் இந்த நிறுவனம், அவ்வப்போது புதிய மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வுகளையும் செய்துவருகின்றது.
இதன் ஒரு பகுதியாக, மனிதர்களின் உடல் தோலின் நிறம் சில இடங்களில் உருமாறி வெள்ளைத்தழும்புகளாக பரவிப்படறும் வெண்குஷ்டநோய்க்கு மூலிகை அடிப்படையிலான புதிய மருந்து ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஒன்றுக்கும் மேற்பட்ட மூலிகைகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய மருந்து, பக்கவிளைவுகள் இல்லாதது என்றும், ஆரம்பகட்ட வெண்குஷ்டநோயை இந்த மருந்து மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும் என்றும், இந்த மருந்து தயாரிப்பிற்கான ஆய்வில் ஈடுபட்ட இந்த நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி செல்வ மூர்த்தி தெரிவித்துள்ளார்.

mercredi 18 janvier 2012

அம்மா என்ற மூன்றெழுத்து


அம்மா என்ற மூன்றெழுத்து ,
மனம் என்ற மூன்றில் பிறந்து,
உயிர் என்ற மூன்றில் கலந்து,
தாய்மை என்ற மூன்றில்
முடிசூடிக்கொள்கிறது,
இவ்வுலக உறவுகளிடம்...!

ஆயிரம்கோடி எழுத்துக்கள் இருந்தும்
வர்ணிக்க முடியாத வார்த்தைகளால்
வேயப்பட்ட ஓர் அன்புக்கூரை,
அம்மா...!

நான் தான் உனக்கு மகன் அம்மா


நண்பர்களின் சகவாசம் நாம் நலமாக உள்ளவரை,
காதலியின் அகவாசம் நாம் அழகாக உள்ளவரை,
உறவுகளின் உறவாசம் நம் கையில் காசு உள்ளவரை,
அம்மா உன் உயிர்வாசம் என் உயிர் உள்ளவரை.
ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும் நீதான் எனக்கு அம்மா,
மறுபிறவி எடுத்தாலும் நான் தான் உனக்கு மகன் அம்மா

கண்ணதாசனின் அசரிரீ

 


நான்
நிரந்தரமானவன்
அழிவதில்லை..

ஊற்றாயிருந்திருகிறேன்
கவிதைகளை சுரப்பதில்..

ஆற்றுபடுத்தினேன்
உங்களையெல்லாம் நல்லவை நோக்கி..

எக்கருவும்
என்
கவிதைத் தேரில்
பயணிக்கும்..

அர்த்தமுள்ள
இந்து மதத்தில்
இருந்தும்
இயேசு காவியம்
படித்தேன்
எம்மதமும் சம்மதம்...

நான் போதையில்
தடுமாறியிருக்கிறேன்
ஆனால்
பாதையில்
தடம் மாறியதில்லை..

மரணம் நிகழ்ந்தது
என் உடலுக்கு மட்டும்
நான் எண்ணியாங்குபடி..

யாரும் நினையா
அர்த்த ராத்திரியில்..

அந்தரத்தில்
என் விமான பயணத்தில்..

உயிரோடு இருக்கிறது
என் கவிதைகள்
உங்களிடம் பத்திரமாய் ..

நான் நிரந்தரமானவன்
அழிவதில்லை ...

பொங்கல்


மண்ணுக்குப் பொங்கல் உழவும் தொழிலும்
மனதிற்குப் பொங்கல் நீதியும் நேர்மையும்
விண்ணுக்குப் பொங்கல் ஞாயிறும் திங்களும்
வீரனுக்குப் பொங்கல் வெற்றியும் புகழும்

mardi 17 janvier 2012

தோல்வி

 
பூக்கள் உதிர்ந்து விழும்
என்பதற்காக
மரங்கள் வருத்தப்படுவதில்லை.
தென்றல் நின்று போகும்
என்பதற்காக
மலர்கள் வருத்தப்படுவதில்லை.
நிலவு தேய்ந்து விடும்
என்பதற்காக
வானம் வருத்தப்படுவதில்லை.
பிறகு
ஏன் மனிதா!
நீ மட்டும் தோல்வி கண்டு
துவண்டு போகிறாய்?

vendredi 6 janvier 2012

வாழ்வின் இறுதிதான் சிறப்பானது


ஒரு மனிதனின் மதிப்பு அவன் வாழ்ந்த வருடங்களின் எண்ணிக்கையாலோ அல்லது செய்த வேலையாலோ அளக்கப்படுவதில்லை. ஒரு மனிதனின் மதிப்பு அவன் உருவாக்கிய நடத்தையால்தான் அளக்கப்படுகிறது.
வாழ்வின் அந்திம காலத்தை நம்பிக்கையோடும் சந்தோஷத்தோடும் அணுகுங்கள். வாழ்வின் இறுதியை ஆர்வத்தோடு அணுகுங்கள், சோகத்தோடு அல்ல. ஏனெனில் வாழ்வின் இறுதிதான் சிறப்பானது, கடவுளை நம்புங்கள்.

தெளிவுடன், தன்னம்பிக்கையுடன் நடந்து செல்லுங்கள், மேலே ஒரு கை உங்களை வழி நடாத்தும்


அடுத்த வருடம் சிறப்பாக வாழ்க்கை அமைய வேண்டும் என்றால் இந்த வருடம் முழுமையாக, மனத்திருப்தியுடன், சந்தோஷமாக, மன ஈடுபாட்டுடன் வாழ வேண்டும்.
பிரபஞ்சம் ஒரு படைப்பு, ஒரு குழப்பமல்ல. பகல் இரவு போல மனிதனும் பிரபஞ்சத்தில் ஒரு பாகம்தான். நன்றாகத் தேடினால் நீ பெற வேண்டிய அறிவு முழுவதும் இந்தப் பிரபஞ்சத்திலேயே இருப்பதைக் கண்டு கொள்வாய். பிரபஞ்சத்தில் பாடம் கற்க தெரிந்தவனுக்கு பல்கலைக்கழகம் ஏன்..?
நம்பிக்கை இருக்குமிடத்தில் வீரம், மனோபலம், விடா முயற்சி, வலிமை எல்லாமே இருக்கும். கடவுள் நம்மோடு இருந்தால் எவரால் நம்மை எதிர்க்க முடியும் ?
நம்பிக்கையே வாழ்வின் பிரச்சனைகள் ஏமாற்றங்களை கடந்து மேலேறும் தைரியத்தைத் தருகிறது. அது தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டாக நினைக்குமே அல்லாது அதை ஏற்றுக் கொள்ளாது.
தெளிவுடன், தன்னம்பிக்கையுடன் நடந்து செல்லுங்கள், மேலே ஒரு கை உங்களை வழி நடாத்தும்

பிறந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது

ந்த
தகவலை
வாசிக்கும் ஒவ்வொருவரின் பார்வையிலும், இன்றோ அல்லது நேற்றோ பிறந்த
குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம்
பார்த்திருக்கலாம்.
இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால்
பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
சரி அப்படி
எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது காரணங்கள் என்ன? இதோ
தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில்
இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு
மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக்
கொண்டிருக்குமாம்.
இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு
தீடிரென கேட்காமல் போவதால்தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி
விடுகின்றனவாம். அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி
நெஞ்சில் வைத்துக்கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை
உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால்
பார்த்துக்கொள்ளுங்கள்

அன்பின் அர்த்தம்


நீ நேசிக்கும் இதயத்தில்

பல ஆண்டுகள் வாழ்வதைவிட....

உன்னை நேசிக்கும் இதயத்தில்

சில நொடிகள் வாழ்ந்து பார்...

அன்பின் அர்த்தம் புரியும்

நட்பு வேண்டும்...


தேவையின் போது

தோள்களில் சாய

நட்பு வேண்டும்...


துன்பத்தின் போது

கண்ணீர் துடைக்க

நட்பு வேண்டும்...


மகிழ்ச்சியின் போது

மனம் மகிழ

நட்பு வேண்டும்...

mardi 3 janvier 2012

கருக்கலைப்பு


கருக்கலைப்பு

ஜனனங்களுக்காய்
படைக்கப்பட்ட
கருவறைகள்..
இன்றோ
மரணங்களுக்கான
கல்லறையாய
புதிய பரிமாணம்

உயிரணுக்களின்
உயிர்கள்
அணுவணுவாய்
கொல்லப்படுகிறது
மருத்துவச் சித்ரவதைகளுடன்....

தொப்புள்கொடிகளே
தூக்குக்கயிறுகளாகின்றன
இந்தக்கருக்கலைப்பில்....
"பூக்களை தீயிட்டு
எரிப்பதைப்போல"
என்பதை தவிர
வேறெந்த உவமைகளும்
பொருந்தப் போவதில்லை
இந்த அகால மரணங்களுக்கு...

மனிதாபிமானம்
செத்துப்போய்விட்டதை
பகிரங்கமாய் பறைசாற்றுவதற்கா
சிசுக்கொலைகள்...?
உண்டான பிறகு
சிதைப்பதை விட்டுவிட்டு
உண்டாகும் முன்
சிந்தியுங்கள்
ஏனெனில் நீங்கள்
சிதைப்பது உயிர்களை அல்ல

இவ்வுலகின்
நாளைய விடிவை !(பூரணி)