முகப்பு

vendredi 19 février 2016

nilai


moli


koli


thanimai


illa


mlo


urimai


vali


illa


samedi 13 février 2016

சாப்பாட்டு தத்துவம்

Photo de Jayaraman Venu.


    இது சாப்பாட்டு நேரம் !.... அதனால சாப்பாட்டு தத்துவம் !.. #
    "தோல்வி என்பது பெருங்காயம் போல... தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும !
    # ஒரு குக்கரைப் போல இருங்கள்.... பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!
    ...
    # லட்சியமும் முட்டையும் ஒன்று .... தவற விட்டால் உடைந்து விடும்!!!
    # சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல.... கிள்ளி எறிந்து விட வேண்டும்!!!
    வாழ்க்கை சிக்கலான இடியாப்பம்தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப்பாலைக் கலந்தால் சுவைக்கும்!
    # பொய், நூடுல்ஸ் போல் தற்காலிகமானது: உண்மை இட்லி போல நிரந்தரமானது!!
    # கோபத்தை உப்பைப் போல பயன்டுத்துங்கள் அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது!!!
    ‪#‎தலைக்கனம்‬ என்பது வெந்நீர் போன்றது...அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள் நம் மீதே சிந்திவிடும்.
    ‪#‎தன்னம்பிக்கைச்‬ சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிப்பி போல ...சமைப்பது உங்கள் கையில்தான்!
    ‪#‎வெற்றி‬ என்பது இட்லியை போல வேகுவது தெரியாது...
    வெந்தபின் தான் தெரியும்...
    # வெற்றி என்ற இட்லியை தனியே உண்ண முடியாது...
    நட்பு என்ற சட்னி வேண்டும்..

mercredi 10 février 2016

பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டுமா என்ன ?



நாம செய்ய வேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னு தான் நாம கடமைய மட்டும் தான் செய்யனும் அடுத்தவங்க விஷயங்கள் தெரியாம, புரியாம மூக்க நுழைக்க கூடாது

காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி.

அவர் தவத்தின் போது கண் திறக்காமல், தினமும் ஒரு முறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர்.
ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார்.

மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான்.

மகரிஷியும் அதை வாயில் போட்டு விழுங்கி விட்டார்.

மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய்விட்டான்.

மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், ‘மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா? அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உனக்கு உண்ண வைப்பார்கள். அதற்கு தயாராக இரு!’ என்று கூறி விட்டு போய்விட்டார்.

இதைக் கேட்ட மன்னன் நடுநடுங்கி விட்டான்.

தான் விளையாட்டாக செய்த தவறை எண்ணி வருந்தினான். தான தர்மங்கள் செய்து, தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினான்.

அரண்மனை ஆடம்பர சுகத்தை மறந்தான். தன் நாட்டிலுள்ள இளம் பெண்களை குடிலுக்கு வரவழைத்து, அவர்களது திருமணத்துக்கு தேவையான நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக் கூறி அனுப்பிவைத்தான்.

இது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.

அரசனின் இந்த தினசரி வழக்கத்தை, அந்த நாட்டில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டி விட்டனர். ‘மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் குடிலுக்கு வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்’ என்று திரித்துக் கூறினர்.

இப்படியாக பல விமர்சனங்கள் வந்த வண்ணமிருந்தன. ஒருநாள் கற்புக்கரசியான பெண் ஒருத்தி, பார்வையற்ற தன் கணவருடன், அரசனின் குடில் முன்பாக நின்று யாசகம் கேட்டாள்.

அந்த கணவன், ‘நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்?’ எனக் கேட்டான்.

‘அரசன் அமைத்திருக்கும் குடில் முன்பு’ என்று பதிலளித்தாள் அந்தப் பெண்.

அதற்கு அவளது கணவன், ‘ஓ! தானம் கொடுப்ப தாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா?’ என்றான்.

அந்தப் பெண் பதறிப்போய் உடனடியாக அவனது வாயைப் பொத்தினாள்.

பின் மெதுவாக தன் கணவனிடம் கூறத் தொடங்கினாள். ‘சுவாமி! என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான்.

அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்பதற்காக தயாரானது. அவ்விஷயம் மன்னனுக்குத் தெரியவரவே, அந்த பாவ மலையை கரைக்கும் பொருட்டு, கன்னியருக்கு தானதர்மம் செய்து நற்போதனைகளைச் செய்து வருகிறான்.

ஆனால் சிலர் மன்னனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. தற்போது மன்னனைப் பற்றி தவறாகப் பேசியதன் காரணமாக, அந்த கடைசிக் கவளத்தை தாங்கள் எடுத்துக் கொண்டீர்கள்.

மேலும் அடுத்த பிறவியிலும் கூட தாங்கள் பார்வையற்றவராகவே பிறப்பீர்கள்’ என்று கூறினாள்.

அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அவளது கணவன். தவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது.

அவர்களை தவறாக விமர்சித்தால், அவர் செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும். உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல், காலத்துக்கும் வம்பு பேசிக் கொண்டு மற்றவர்களின் பாவத்தை சிலர் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அந்த தவறை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது.

நாம் செய்த பாவத்தை சுமக்கவே, நமக்கு இந்த ஒரு பிறவி போதுமா என்பது தெரியாத நிலையில், தேவையில்லாமல் புறம்பேசி அடுத்தவரின் பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டுமா என்ன ?

mardi 9 février 2016

மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவித


மாங்கல்யம் தந்துநாநேந மம
ஜீவித
ஹேதுநா | கண்டே பத்நாமி
ஸூபகே ஸஜீவ ஸரதஸ்ஸதம் ||
இது இது மணமகன் சார்பாக சொல்வதாக
அமைந்த மந்திரம். மந்திரத்தை அய்யர் எடுத்துக்கூற மணமகனும் அக்கினி சாட்டியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். கிருத்தவத்தில் குருவானவர் சொன்னதை 'I do' என்று சொல்லி ஏற்றுக்கொள்வதைப் போலவே இதுவும்..
‘‘உன்னோடு நான்
நீடுழி வாழ வேண்டி இந்த
மங்கல
நாணை உன் அழகிய கழுத்தில்
அணிவிக்கிறேன். எல்லாப்
பேறுகளும் பெற்று நீ
நூறாண்டு
நிறைவான வாழ்க்கை வாழ
இறைவன் அருள் புரியட்டும்!’’ ||ஸோம ப்ரதமோ விவிதே
கந்தர்வ
விவிதா: உத்ட்ராஹ
த்ரியோ அஹ்னித்தெபிதீஹ||
துரியஷ்டெமனுஷ்யஜஹ :
ஷோம ததத் கந்தர்வ கந்தர்வ த த்தயன; .
யே ரயின்ஷப்பூதரம் ஸ்காதத்
அக்னிர்மஹைமதோ இமாம்.

-★. இதன் பொருள்:★

"முதலில் சோமன் (சந்திரன்)
உன்னை
பாதுகாத்தான
பின் கந்தர்வன்
உன்னை பாதுகாத்தான் மூன்றாவதாக அக்னி
உன்னை
பாதுகாத்தான்
நான்காவதாக
மனிதனாகிய நான் உன்
பாதுகாவலன் ஆகிறேன்" இதன் உட்பொருள்:
1. ஒரு பெண் குழந்தை
பிறந்து
தானாக ஆடைகளை
அணியும் பருவம் (4 - 5 வயது)
வரை சந்திர ஒளியின் மென்மை, குளிர்மையை
ஒத்த
குணங்களை பெற்று
வளர்கிறது.
ஆகவே இப்பருவம் சந்திரனின்
ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பருவம்
எனப்படுகிறது .

2. கந்தர்வன் என்பது
இசைக்கும்,
கேளிக்கைக்கும்
அழகியலுக்கும்
அதிபதியாக சொல்லப்படும்
தேவதை. ஒரு பெண்குழந்தையின் 5 - 11
வயது காலம் என்பது
குறும்பும், அழகும் நிரம்பி
வழிய, கள்ளம் கபடம் இல்லாமல்
துள்ளி திரியும் காலம்.
ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில்
(பாதுகாவலில்) இருக்கும்
பருவம் எனப்படுகிறது.

3. அதன் பின் 11 - 16 வயது
பருவ
காலம், உடலில்
ஹோமோன்களின்
மாற்றத்தால் உடலமைப்பு
மெல்ல மாற உஷ்ண அழுத்த
மாற்றங்கள்
ஏற்பட்டு பூப்படையும்
பருவம்.
காமவெப்பம் மெல்ல உடலில்
தொற்றிக்கொள்ளும் மங்கை பருவம். ஆகவே இது
அக்னி
(வெப்பம்) யின் ஆதிக்கத்தின்
கீழ் வரும் பருவம்
எனப்படுகிறது
இப்படி ஒவ்வொரு பருவத்திலும்
ஒவ்வொரு தேவதைகளின்
அருளால்
பெண்மைக்குரிய
அம்சங்களை
எல்லாம் பெற்று மங்கையாய் அமர்ந்திருக்கும்
உனக்கு குறைவிலா நலமே
தர
இப்போது மானிடன் நான்
உன்
பாதுகாவலன்்ஆகிறேன். இது தான் இந்த
வேதமந்திரத்தின்
உட்பொருள். பசுபதி ..... பசு
என்றால்
ஆன்மா பதி என்றால்
காப்பவன். இதுவே திருமண
மந்திரத்திற்கான விளக்கம்.

உருவத்தை பார்த்து யாரும் யாரையும் எடைபோடாதீர்கள்.



படித்த போதே என்னை கண்கலங்க வைத்த. அழகான குட்டி உன்மை கதை படிக்கும் போது பாருங்கள் . உங்களை கூட உணர்ச்சிவச பட வைக்கும்.}
24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"
மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!" அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார்.
ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்.
மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.
"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்.
இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம் "நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்" அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார். "நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்.
என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான்அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."
அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம். சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.
'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடைபோடாதீர்கள்.

lundi 8 février 2016

கர்மவினை


கர்மவினை
"""""""""""""""""
ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானமளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக பிராமணர்களுக்குஅன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன்!!
ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான்.அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்து கொண்டிருந்தது!! மன்னன் உணவளிக்கும் பாத்திரத்தைக் கடந்த நேரத்தில் கழுகின் அலகிலிருந்த செத்த பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி கடுமையான விஷம் அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவுக்குள் விழுந்தது!! சரியாக அந்த விஷம் இருந்த உணவைப் பெற்று உண்ட ஒரு பிராமணன் அதனால் இறந்து போனான்.
இறந்த பிராமணன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான். சித்திரகுப்தனுக்கு அந்த அந்தணன் இறந்ததற்கான கர்மவினையை யார்மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை! பாம்பின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது தன் உணவை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது. சரி அடுத்தது மன்னன். மன்னன் தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன்! அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல்தானே அதை அந்தணனுக்கு வழங்கினான். அப்படியானால் அந்தப் பாவம் மன்னனை எப்படி சேரும்??
குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின் "சித்திரகுப்தா இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே ! இந்தக் கர்ம வினையின் தண்டனையை யாருக்கு வழங்கவேண்டுமென்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும்" என்றான்!! சரி என்று சித்திரகுப்தனும் திரும்பினான்.
அதே நாடு நான்கு அந்தணர்கள் அரண்மனையைத் தேடி வந்து கொண்டிருந்தனர். வழி தெரியாமல் தேடினர். அங்கு பானை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர். அந்தப் பெண்ணும் சரியான வழியை விரலைநீட்டிக் காட்டினாள். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை ! அவள் அந்த அந்தணர்களிடம் " கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த மன்னன் அந்தணர்களை சாகடிப்பது போலத் தெரிகிறது" என்றும் சொன்னாள் !!
அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன் தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து அந்த பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான்.
நீதி: உனக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பற்றி, உனக்கு துன்பம் இழைக்காதவரைப் பற்றி, சரியான உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் புரளி பேசாதே!!

வீட்டு பூஜை குறிப்புகள் - 20


Photo
வீட்டு பூஜை குறிப்புகள் - 20

1. தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கட...வுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.

2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.

3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும்.

அதனால் எந்தவித நோயும் வராது.

விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது.

தூய்மையான காற்றும் கிடைக்கும்.

4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள்.

இது இறை சக்தியைக் குறைக்கும்.

அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது.

மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.

6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும்.
மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும்.

அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும்.

7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும்.

இது துவாதசன தரிசனம் எனப்படும்.

8. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

9. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.

10. பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல் பூஜை செய்யக்கூடாது.

11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது.

இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.

12. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது.

மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம்.

13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் சூடக்கூடாது.

14. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும்.

இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.

15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.

16. அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும்.

எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.

17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.

18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.

19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது.

தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும்.

20. ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.

அர்ச்சனை பொருட்களும், அவற்றின் அர்த்தங்களும்...

Photo


அர்ச்சனை பொருட்களும், அவற்றின் அர்த்தங்களும்....

நாம் அனைவரும் கோயிலுக்கு செல்லும்போது, தெய்வத்திற்கு அபிஷேகத்திற்காகவும், அர்ச்சனை செய்யவும் பூஜை பொருட்கள் வாங்கிசெல்வோம்.

ஆனால் நாம் வாங்கி செல்லும் பூஜை பொருட்கள், எதற்காக வாங்குகின்றோம் அதன் அர்த்தமும், தத்துவமும் என்னவென்று நம்மில் பலருக்கு தெரியாது.

சில பூஜை பொருட்களுக்கான அர்த்தத்தையும், தத்துவத்தையும் பார்க்கலாம்.

தேங்காய் :

தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும், கடினமாகவும் இருக்கும்.

அதை இரண்டாக உடைக்கும்போது வெண்மையான தேங்காய் பருப்பும், இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது.

அதுபோல் அகம்பாவம் என்னும் ஓட்டை உடைக்கும்பொழுது வெண்மையான மனமும், அதிலிருந்து உருவாகும் எண்ணங்கள் இனிமையாகவும், அன்பாகவும் இருக்கும்.

விபூதி(திருநீரு) :

சாம்பலின் மறுபெயரே விபூதி ஆகும்.

நாமும் இதுபோல் ஒரு நாளைக்கு சாம்பல் ஆகப்போகிறோம்.

ஆதலால் நான் என்ற அகம்பாவமும், சுயநலம், பொறாமை இருக்ககூடாது என்ற எண்ணத்தையும், சிந்தனையும் நமக்கு உணர்த்தவே, விபூதியை நெற்றியிலும், உடம்பிலும் பூசிக்கொள்கிறோம்.

வாழைப்பழம் :

வாழைப்பழத்தின் நடுவே கருப்பு கலரில் மிகச்சிறியதாக விதைகள் இருக்கும்.

ஆனால் முளைக்காது. ஏனென்றால் உலகத்தில் உள்ள எந்த வாழைப்பழ விதையும் பெரும்பாலும் முளைக்காது.

ஆதலால் எனக்கு இந்த பிறவியிலேயே முக்தியை கொடு வேறு பிறவி வேண்டாம் என அருள் பெறவே வாழப்பழத்தை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறோம்.

அகல் விளக்கு :

ஒரு மின்சார விளக்கினால் மற்றொரு மின்சார விளக்கை ஒளிர வைக்கமுடியாது.

ஆனால் ஒரு அகல் விளக்கினால் மற்றொரு அகல் விளக்கை ஒளிர வைக்கமுடியும்.

அதுபோல் நாம் வாழ்ந்தால் மட்டும் போதாது, அடுத்தவரையும் வாழ வைக்கவேண்டும் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவே அகல் விளக்கை ஏற்றுகின்றோம்.

samedi 6 février 2016

ஒரு கவளம் சோறு,,,,,

    ஒரு கவளம் சோறு,,,,,
    ====================
    காலையில இருந்தே நிறைய வேலை,,,
    உடம்புக்கு வேறே எதோ சரில்லை லக்ஷ்மி க்கு
    ...
    லக்ஷ்மி,,,,ன்னு வீட்டு காரங்க கூப்ட
    குரல் கேட்டு,,,,இதோ வந்துட்டேங்க,,,ன்னு
    சரியாய் நடக்க கூட முடியாத அளவுக்கு,,,,உடம்பு வேதனை,,,என்ன செய்ய,,,ரெண்டும் பொம்பள
    புள்ளைங்க ஆய்டுச்சு,,,,
    முழுசா நாலு வீட்ல வேலை செஞ்சாத்தான்,,,
    ஒரு வேளை கஞ்சி வைத்துக்கும்,,,,
    புள்ளைகளுக்கு பாலும் ரொட்டியும்
    வாங்கி தர முடியும் ரெண்டு வேளை,,,,
    ஏனோ,,அந்த வாரமே,,,,வருமானம்,,ரொம்ப கம்மியா போயிடுச்சி,,,,
    அவளுக்கும்,,கஞ்சிக்கில்லாமே,,
    போனதோட புள்ளைகளுக்கும்,,,
    அறை வயிறா போச்சு,,,,
    சின்ன புள்ளைக்கு பால் கொடுத்து,,,
    பசியடங்க வச்சாலும்,,,,பெரிய புள்ள,,,
    ஒரு வேளை வச்ச கஞ்சியையும்
    குடிக்க மாட்டேங்குது,,,
    ,,,,கடையிலேர்ந்து கடனா வாங்கியாந்த
    ரொட்டியயும் சாப்பிடமாட்டேங்குது,,,
    ஒரு வாரமாவே எதையோ,,,எழந்தமாதிரி,,
    பாத்து யோசிக்குது,,,,உடம்புக்கு எதோ
    வெசனமோ ன்னு யோசிச்சப்பத்தா,,,
    பக்கத்து வீட்டு மேரியக்கா சொன்னாக,,,,
    புள்ளைகள,,பாக்கற வைத்தியரு டவுனுல
    யாரோ புதுசா யெலவச மருத்துவம் பாக்கறாகன்னு,,,
    அப்பனில்லாத புள்ளைகள வளத்து
    கரை சேக்கறதுகுள்ள அவளுக்கும் யெதுவும் ஆயிடக்கூடாதுங்குற ரோசனையுங்கூட,,,
    நல்ல வெய்யிலு,,
    வேலை விட்டு பாதியிலேயே ஓடியாந்து,,,
    புள்ளைகள கூட்டிகிட்டு பஸ் ஹ புடிச்சி,
    ஒரு வழியா ஆஸ்பத்திரிக்கு போயி சேருறப்போ ,,,மணி,,,சாயங்காலம்,,,நால,,,
    தொட்டுடிச்சி,,,,
    வரசையில நின்னு டோக்கன வாங்கியாந்து
    புள்ளைய டாக்டராண்டாம் காமிக்கும்போது
    மணி எழ தாண்டிருச்சி,,,
    லக்ஷ்மி டாக்டரிடம்
    டாக்டர் அய்யா ,,,,,இது என்னோட மூத்த பொண்ணு,,,,,
    எதிலேயுமே ஒரு ஆர்வம் இல்லாமே இருக்கா,,,
    கடந்த ஒரு வாரமா என்ன கொடுத்தாலும் சரியா சாப்பிடமாட்டேங்கறா எதையோ எழந்த மேனிக்கு யோசிக்கிறா,,ன்னு சொல்ல,,,
    டாக்டர் அந்த குழந்தையை பரிசோதனை
    பண்ணி பார்த்துட்டு,,
    லக்ஷ்மி,,கிட்டே,,,
    பசிக்கிறதுக்கு இதுல மருந்து எழுதிருக்கேன்,,
    அதுகூட ஊசியும் எழுதிருக்கேன்,,
    கொஞ்சம் மருந்து கடையில இருந்து
    வாங்கிட்டு வாங்க
    ஊசி போட்டுட்டு பின்ன மருந்து சாப்டான்னா பசியெடுக்கும்
    அப்புறம்,,நல்லா சாப்பிடுவான்னு சொன்னதை கேட்டு,,,
    லக்ஷ்மி மருந்து வாங்கி வர கடைக்கு போன தருணம்,,,
    ,,,,,அக்குழந்தை,,டாக்டரிடம் கேட்டது,,,
    "டாக்டர் பசிக்காம இருக்க மருந்து எதாச்சும்,,இருக்கா டாக்டர்,,,",,என்று கேட்ட அப்பெண்ணை,,,
    அதிசயத்துடன்,,உற்று பார்த்தபடியே
    புரிந்து கொண்டார் அவர்களின்,,
    வறுமை நிலையினை,,,,,,,,
    "ஒரு கவளம்,,சோறு கூட இல்லாத நிலையில் தன் பிள்ளைகளுக்கு பாலுட்டிய தாயானவள் தன் வயிற்றில் கட்டினாள் ஈரத்துணி"
    அதை புரிந்த அந்த மகவு,,,,இறைவனிடம் இறைஞ்சினாள் வறுமையிலும் கொடுமையான வரமொன்றை ,,அதுவே பசியின்மை என்னும் சாபம்,,,," 

நெஞ்சைத் தொட்ட கதை

        இது ‘சுட்ட’ கதை!! நெஞ்சைத் தொட்ட கதையும்கூட!!!
        அது பெரிய இடத்து மனிதர்களுக்கான ஒயின் கடை.
        நேரம், நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது.
        ...
        கப்பல் மாதிரியான ஒரு காரில் வந்திறங்கினார் ஒரு தொழிலதிபர்; தனக்குத் தோதான இடத்தில் அமர்ந்தார். தனக்குத் தேவையானதை ஆர்டர் செய்துவிட்டுத் தற்செயலாகத் திரும்பியவர் திடுக்கிட்டார். காரணம்.....
        நான்கு இருக்கைகள் தள்ளி ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தவர் கடவுள்! வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவராக இருந்தார் அவர்.
        கடவுள்கூட இங்கெல்லாம் வருவாரா என்று ஆச்சரியப்பட்டார் தொழிலதிபர்; அவருக்குக் காணிக்கையாக ஏதாவது செலுத்திப் புண்ணியம் தேடிக்கொள்ள விரும்பினார்; பணியாளரைக் கூப்பிட்டு, “அதோ அங்கே அமர்ந்திருக்கும் கடவுளுக்கு ஒரு கோப்பை மது கொடு. பில்லை என் கணக்கில் சேர்த்துவிடு” என்றார். பணியாளரும் அப்படியே செய்தார்.
        சிறிது நேரத்தில், இன்னொரு பெரிய மனிதர் வந்தார். அவரும் கடவுளை அடையாளம் கண்டுகொண்டு, பணியாளரிடம், “கடவுளுக்கு அரை பாட்டில் மதுவைக் கொடுத்துவிட்டுப் பில்லை என் கணக்கில் சேர்த்துக்கொள்” என்றார்.
        அடுத்து, ஒரு பெரிய அரசு அதிகாரி அங்கு வந்தார்; மற்ற இருவரைப் போல அவரும் கடவுளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, “கடவுளுக்கு என் கணக்கில் ஒரு முழு பாட்டில் மதுவைக் கொடு” என்று பணியாளரிடம் சொன்னார்.
        நடந்தவற்றைக் கவனித்துக்கொண்டிருந்த கடவுள் இவர்களை அணுக, மூன்று பேரும் எழுந்து நின்று பவ்வியமாகக் கடவுளை வணங்கினார்கள்.
        ஒரு கோப்பை மதுவைத் தன் கணக்கில் கொடுத்த தொழிலதிபரின் தலையில் கை வைத்துக் கடவுள் ஆசீர்வாதம் செய்தார்.
        “ஆண்டவா, என்னே உன் கருணை! வருடக் கணக்கில் எனக்கிருந்த ஒற்றைத் தலைவலி பறந்துவிட்டது” என்று மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடினார் அவர்.
        அடுத்ததாக, அரை பாட்டில் மதுவை அளித்த பெரிய மனிதரின் தோள்களில் ஆண்டவன் தம் கைகளை வைக்க, “தேவனே, பிறந்ததிலிருந்து விளங்காமலிருந்த என் ஒரு கை தங்களின் திருக்கரங்கள் பட்டதும் செயல்பட ஆரம்பித்துவிட்டது. என்னே உங்கள் கிருபை!” என்று மேனி சிலிர்த்தார்.
        கடவுள் மூன்றாமவருக்கு அருள்பாலிக்கத் தம் கையை உயர்த்தியபோது, “பகவானே, வேண்டாம். தயவு செய்து எனக்கு அருள்பாலிக்க வேண்டாம். நான் ஓர் அரசு அதிகாரி. உயர் பதவியில் இருப்பவன். உடல் ஊனமுற்றவர் கோட்டாவில் எனக்கு வேலை கிடைத்தது. தங்கள் கருணையால் என் கால் ஊனம் சரியாகிவிட்டால் என் வேலை போய்விடும்” என்று சொல்லி எகிறிக் குதித்து ஓடிவிட்டார் அவர்.
        “சே, நான் எல்லாம் அறிந்தவன் என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன். அது எவ்வளவு பெரிய தவறு” என்று முணுமுணுத்துக்கொண்டே இடத்தைக் காலி செய்தார் கடவுள்!