முகப்பு

vendredi 21 décembre 2012

மாமரி மடியில் பிறந்திட்டான்

 
 
மார்கழிக் குளிரில் மாட்டுத்தொழுவத்திலே
மாமரி மடியினிலே மங்கையர் வயிற்றினிலே
மன்னவன் பிறந்திட்டான்

மண்ணில் வேந்தனாய் மக்கள் மத்தியில்
மானிடர் பாவம் போக்க மமதையை மறந்திட
... மலர்ந்திடும் சமாதானத்தை தந்திடவே
மன்னவன் பிறந்திட்டான்

மணம் வீசும் தூபத்துடன் மன்னர்கள் சூழ்ந்திடவே
மண்ணுலகில் ஒளி பிறந்திடவே
மானிடர் அனைவரும் சந்தோசத்தில் திழைத்திடவே
மன்னவன் பிறந்திட்டான்

மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி ஊட்டும் செய்தியொன்றாம்
மண்ணின் வேந்தன் விண்ணில் ராஜன்
மனுக்குலத்தை மீட்டெடுக்க மாபரன் இயேசு பாலன்
மாமரி மடியில் பிறந்திட்டான்
 

Aucun commentaire:

Enregistrer un commentaire