முகப்பு

vendredi 21 décembre 2012

வந்து பாரும் இயேசுவே! வந்து பாரும்

 
 
மண்ணுலகில் மாந்தர் பாவம் போக்கிடவே
மனித அவதாரம் எடுத்து இம்மண்ணில்
பிறக்கத் திருவுளம் கொண்ட இயேசுவே
மண் மீதினில் மாந்தர் படும் அவலநிலையை
வந்து பாரும் இயேசுவே! வந்து பாரும்

... பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகள்!
பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்
மற்றும் உற்றார் உறவினரின் பரிதாப வாழ்வால்
நாடும் வீடும் சாவீடாய்ப்போன நிலையை
வந்து பாரும் இயேசுவே! வந்து பாரும்

நியாயம் கேட்போரும் நீதி தேடுவோரும்
அடக்கு முறையில் அடைபட்டுக் கிடக்கும்
அநியாய சிறை வாழ்க்கை நிலையை
வந்து பாரும் இயேசுவே! வந்து பாரும்

வயிற்றுப் பசியினால் ஒரு வேளை உணவிற்காக
ஏங்கி வாடும் குழந்தைகளையும்
முவேளையும் நன்றாக உண்டுவிட்டு
அரக்கர் போல ஆணவத்துடன் அலைமோதும்
ஆட்சியாளரின் அட்டகாச நிலையையும்
வந்து பாரும இயேசுவே! வந்து பாரும்

சமாதானம் சமாதானம் என ஏங்கி
தவிப்போரின் ஏக்க நிலையையும்
சமாதானம் வந்தால் உழைக்க முடியாது என
பெருமுச்சுவிடும் பித்தர்களின் நிலையையும்
வந்து பாரும் இயேசுவே! வந்து பாரும்
 

Aucun commentaire:

Enregistrer un commentaire