முகப்பு

lundi 29 octobre 2012

சிறக்கட்டும்…

 
 
உலகமெல்லாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்..
உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்..
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்..
பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்..
கலகங்கள்.. போட்டி, பகை கடந்தாட்சி நடக்கட்டும்..
கல்லாமை, கடன், வறுமை களங்கங்கள் மறையட்டும்..
நல்வாழ்வை அளிக்கும் மெய்ஞான ஒளி வீசட்டும்..
நம்கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்…

Aucun commentaire:

Enregistrer un commentaire