முகப்பு

vendredi 22 octobre 2010

இதய குடத்தில்.......

என்னவளே
உன்னை நான் பார்க்க நினைக்கையில்
பகலாய்...
உன்னுடன் பேச நினைக்கையில்
நிலவாய்...
உன்னுடன் உறங்க நினைக்கையில்
கனவாய்.....
உன்னை நான் தொட நினைக்கையில்
தென்றலாக மாறுகிறாய்
என் காலமெல்லாம் நீ
வருவாயா?
என் இல்லத்தரசியாய்......


*************************



அன்பே
என் கவிதை வரிகள்
வசீகரமானது  உணமையானால்
எனது முயற்சி
மகுடம் சூட்டியது உண்மையானால்
என் இதயம் உன்னால்
ஒளிபெற்றது உண்மையானால்
நீ மட்டும் போதும்
என் இதயத்துக்கு
நினைத்ததெல்லாம் சாதிக்க

-------------------------



என் இனிய கண்ணே
உன் நினைவலைகள்
என் இதய குடத்தில்
நிரம்பி வழிகிறது
அதன் மிச்சம் தான்
குளத்தில் விழுந்ததால்
தாமரையாக மலர்கிறது
காற்றுடன் கலந்ததால
தென்றல் ஆகிறது
காகிதத்தில் விழுந்ததால்
கவிதையாகிறது!!!!!!!!!


***********************


நேற்றைய நினைத்தால்
கவலை பிறக்கும்
இன்றைய நினைத்தால்
இன்பம் சுரக்கும்
நாளைய நினைத்தால்
நடுக்கம் கொடுக்கும்
நேற்றைய இறப்பையும்
நாளைய பிறப்பையும் விட
நமக்குத் தேவையெல்லாம்
நட்பு வாழ்க்கை தானே.....
***********************

Aucun commentaire:

Enregistrer un commentaire