முகப்பு

vendredi 22 octobre 2010

வாசித்த கவிதைகளில்...

பாடும் குயிலோ
அவள் மொழி
ஆடும் மயிலோ
அவளின் நடை
சிரிக்கும் ஆறோ
அவளது பேச்சு
சிங்கார மீனோ
அவள் கண் வீச்சு
பூக்களின் குத்தகையோ
அவளது புன்னகை
அவள்
இளமைத் தடாகத்தில்
நீர்க்குமிழியோ
என் இதயம்...
***************

உயிரே
உன்னோடு நானில்லை
உன் நினைவோடு நானுண்டு
உன் கண்களில் நானில்லை
என் கனவுகளில் நீயுண்டு
நீ உயிர் வாழும் வரை
உன் உறவு வேரொருவனோடு
நான் உயிர் வாழும் வரை
என் உறவு உன்னோடு
*************************

Aucun commentaire:

Enregistrer un commentaire