முகப்பு

lundi 20 décembre 2010

தெரியாது


ஒருவனுடைய செருப்பு அறுந்துவிட்டது. அவன் அதை மறைக்க ஓர் உயாயம் செய்தான். அறுந்த செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டே, டே..! உன்னை விடமாட்டேன்டா ! என்றபடி வேகமாக ஓடினான். அவன் யாரை விரட்டுகிறான் என்பதைப் பார்க்க சிலர் அவன் பின்னால் ஓடினார்கள். அவர்கள் பின்னால் ஓடாவிட்டால் நம்மைக் குறை நினைப்பார்களே என்று எஞ்சியவரும் ஓடினார்கள். கடைசியில் செருப்பு அறுந்தவனுக்குப் பின்னால் ஊரே ஓடியது. இப்படி ஏன் ஓடுகிறோமெனத் தெரியாது செருப்பறுந்தவனுக்கு பின்னால் ஓடும் கூட்டமே நம்மில் அதிகம்.






Aucun commentaire:

Enregistrer un commentaire