முகப்பு

jeudi 23 décembre 2010


மார்கழிக் குளிரில் மாட்டுத்தொழுவத்திலே

மாமரி மடியினிலே மங்கையர் வயிற்றினிலே

மன்னவன் பிறந்திட்டான்

மண்ணில் வேந்தனாய் மக்கள் மத்தியில்

மானிடர் பாவம் போக்க மமதையை மறந்திட

மலர்ந்திடும் சமாதானத்தை தந்திடவே

மன்னவன் பிறந்திட்டான்

மணம் வீசும் தூபத்துடன் மன்னர்கள் சூழ்ந்திடவே

மண்ணுலகில் ஒளி பிறந்திடவே

மானிடர் அனைவரும் சந்தோசத்தில் திழைத்திடவே

மன்னவன் பிறந்திட்டான்

மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி ஊட்டும் செய்தியொன்றாம்

மண்ணின் வேந்தன் விண்ணில் ராஜன்

மனுக்குலத்தை மீட்டெடுக்க மாபரன் இயேசு பாலன்

மாமரி மடியில் பிறந்திட்டான்

Aucun commentaire:

Enregistrer un commentaire