முகப்பு

jeudi 23 décembre 2010

மகஜர்


மாட்டுத் தொழுவத்தில் பிறந்த மாபரனுக்கு

யான் எழுதும் மகஜர்

மகஜர் எழுதவெனப் பேனாவை எடுத்தேன்

எதை எழுதுவேன் எனும் சிந்தையில் ஆழ்ந்தேன்

காதைப் பிளக்கும் குண்டு மழையைப் பற்றியா?

கோரத் தாண்டவமாடும் இயற்கை அனர்த்தம் பற்றியா?

தொடர்ந்துகொண்டே செல்லும் படுகொலைகளையா?

நீண்டு செல்லும் காணாமலாக்கப்பட்டோர் பட்டியலையா?

எதைப்பற்றித் தான் எழுதுவேன்?



உறவுகளைப் பிரிந்து அவ தைப்படும் உள்ளங்களையா?

பொருளாதாரத் தடைபற்றியா?

பொருட்களின் விலையேற்றம் பற்றியா?

அலரி விதைக்குப் பலியாகிய கொடுமையையா?

அழிவுப் பாதையில் செல்லும் கல்வி நிலை பற்றியா?

முடக்கப்படும் உரிமைக்குரல்கள் பற்றியா?

மறைமுகமான அச்சுறுத்தல் பற்றியா?

மொத்தத்தில் தொலைந்து போகும் மனிதத்தையா?

எதை எழுதுவேன் என் மாபரனுக்கு



Aucun commentaire:

Enregistrer un commentaire