முகப்பு

jeudi 3 janvier 2013

நிம்மதி

 
 
பெண்ணை மலரென்றான் கவிஞன்.
அதே பெண்ணை முள்ளென்றான் சந்நியாசி.
மலரைப் பார்த்தக் கவிஞன்
முள்ளை மறந்துவிட்டான்.
முள்ளைப் பார்த்த சந்நியாசி
மலரை மறந்துவிட்டான்.
நான் இரண்டையும் பார்த்தேன்.
அதனால்,
நிம்மதியை மறந்துவிட்டேன்.


Aucun commentaire:

Enregistrer un commentaire