முகப்பு

jeudi 3 janvier 2013

கற்றோரை மதி

 
 
மன்னித்துவிடு
மகானாவாய்
மறந்துவிடு
மகத்துவம் பெறுவாய்
சிந்தித்துவிடு
சிகரம் தொடுவாய்

மண்ணை காப்பாற்று
வீரனாவாய்
கொள்கையை செயல்படுத்து
அரசனாவாய்
வலிகளை தாங்கு
மனஉறுதி அடைவாய்

முயற்சி செய்
முன்னேற்றம் காண்பாய்
சாதித்துகாட்டு
சரித்திரம் படைப்பாய்
பெற்றோரை வணங்கு
நல்ல மனிதனாவாய்

தமிழ்மொழியை சுவாசி
தமிழனாவாய்
தாய்நாட்டை நேசி
நல்ல குடிமகனாவாய்
நம்பியோரை கைவிடாதே !
கடவுளாவாய்

கற்றோரை மதி
நல்ல மாணவனாவாய்


Aucun commentaire:

Enregistrer un commentaire