முகப்பு

jeudi 3 janvier 2013

இயேசு கிறித்துவுக்கு தோத்திரம்

 
 
பாவங்கள் போக்கவந்த பாலகர்
பாரினில் பாதிபேர் போற்றுகின்ற நாயகர்
கதை சொல்லி போதனைகள் செய்தார்
கல்லடியும் கசையடியும் பெற்றார்

யோவானிடம் ஞானஸ்தானம் பெற்றார்
அந்த யோவானுக்கே கடவுளாய் ஆனார்
வானம் மண்ணும் போற்றும் தேவ தூதுவர்
வாடுகின்ற மனிதர்க்கு மஹா புருஷர்

வருத்தப் பட்டு பாரம் சுமப்பவர்
கர்த்தரிடம் முறையிட வருவர்
அவர் கருணையே உருவானவர்
எப்போதும் கைதூக்கி விடுபவர் .

கர்த்தருக்கு தோத்திரம்
தேவ குமாரருக்கு தோத்திரம்
மேய்ப்பருக்கு தோத்திரம்
இயேசு கிறித்துவுக்கு தோத்திரம்.


Aucun commentaire:

Enregistrer un commentaire