முகப்பு

samedi 26 janvier 2013

கண் கலங்காது எடுத்தவர் யாருமில்லை

 

 

தன்னை புரிந்து கொண்டவன் மனிதன்
மனிதனின் வலியேய் புரிந்துகொண்டவன்
மாமனிதன்

வெற்றிடம் என்பவன் முட்டாள்
காற்று நிறைந்திருக்கிறது என்பான்
அறிவாளி

மாற்றுக்கருத்தே மருந்தாகும்
மதயானை சமுதாயத்திற்கு .
மதிப்பெண்ணோ மதுபானை மாணவனுக்கு

ஆயிரம் பொய்களுக்கு
ஒரு உண்மை இணையாகாது
என்பதை உணர்ந்தவன் பகுத்தறிவாளன்

இருப்பதை கொடுப்பவன் கொடையாளி
திருடியதை கொடுப்பவன் சுயநலவாதி
அனைவரும் அறியார்

காலமறிந்து மாற்றிக்கொள்பவன்
திறமைசாலி
காலத்தை குறை கூறுபவன் கிணற்றுத் தவளை

பிறப்பை உணர்ந்தவன் என்றும்
இறப்பை தேடி வீதியில் அலையும்
உல்லாச பறவை .

இமையில் விழுந்த தூசியேய்
கண் கலங்காது எடுத்தவர் யாருமில்லை என
அறிவான் சாணக்கியன்




Aucun commentaire:

Enregistrer un commentaire