முகப்பு

mardi 22 janvier 2013

அணைத்துவிடாதீர்கள்.

 
 
கலங்கரை விளக்கத்தை பார்க்கும் பணிக்காக பெண்ணொருத்தி கணவனுடன் புதிய இடத்திற்கு வந்தாள். அதையே இரவு பகலாகப் பார்த்த கணவன் நோயுற்று இறந்தான். அவனை அந்த இடத்தில் புதைத்தார்கள். இறக்கும் போது அவன் விளக்கை பார்த்துக் கொள் என்றுவிட்டு இறந்தான். அவ...ள் அவன் சொன்னபடியே கலங்கரை விளக்கத்தை கவனமாக பார்த்துக் கொண்டே, அவன் கல்லறையையும் பார்த்தாள். விளக்கைப் பார்த்துக் கொள் என்ற குரல் தினசரி அவளுக்குக் கேட்கும். சில நாட்களில் கவலைகள் மறந்து இயல்பான பெண்ணாக அவள் மாறிவிட்டாள். ஆம் கையில் இருக்கும் வாழ்க்கை விளக்குப் போன்றதாகும். அதை கவனமாக பாருங்கள், இறந்தவர்களை நினைத்து அழுது விளக்கை அணைத்துவிடாதீர்கள்.

 

Aucun commentaire:

Enregistrer un commentaire