முகப்பு

jeudi 12 avril 2012

காணாமல் போகிறது விவசாயம்

 
வயலோடும் வரப்போடும்
சேறோடும் சகதியோடும் புரண்டு
மண்வாசனை நுகர்ந்தான் பாட்டன்.....

வரப்பிலிருந்து மண்சாலைக்கு மாறி
களத்து மேட்டில் அமர்ந்து நெல்மணிகளை
... அளந்தான் தந்தை ……

தார்ச்சாலை வழியே வந்து நெல்விற்ற
பணத்தை பெற்றுச் சென்றான் மகன்.....

சேறும் சகதியும் தூர் நாற்றமெடுக்கிறது
மண்வாசனை புரியாத பேரனுக்கு…..

நம் கண்முன்னே
காணாமல் போகிறது விவசாயம்.....


Aucun commentaire:

Enregistrer un commentaire