முகப்பு

dimanche 6 mai 2012

உடல் நலத்திற்கான மந்திர மொழிகளாகும் :


பின்வரும் நான்கு மந்திரங்களையும் தினசரி காலையும் மாலையும் சொல்லி புதிய மனிதராக மாற்றமடைய உங்களை இரு கரம் கூப்பி வாழ்த்துகிறோம் : இவை உடல் நலத்திற்கான மந்திர மொழிகளாகும் :

அ. இறையருளே எனது பலம்..! எனது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லையும் இறையருள் நலமடைய செய்கிறது..! புதுப்பிக்கிறது, வீரியம் பெறச் செய்கிறது..!

ஆ. இறையின் நலமாக்கும் அருளானது என் வாழ்வில் நிறைந்திருக்கிறது. இறையருளால் என் மனம், வாக்கு, உடல் ஆகியன நலமும், பொலிவும், வளமும் பெற்றுள்ளன.

இ. இறையருள், அன்பு, அழகு, ஆற்றல், ஊக்கம், திறன், மகிழ்ச்சி, வலிமை ஆகியவற்றை எனது உடலில் உள்ள எல்லாச் செல்களிலும் நிரப்புகிறது. எனவே எனது உடலில் உள்ள எல்லா உறுப்புக்களும், திசுக்களும், செல்களும் அளப்பரிய தேஜஸ்சையும், ஓஜஸ்சையும், பலத்தையும், வீரியத்தையும், தெய்வீகத்தையும் பெறுகின்றன.

ஈ. இறையன்பு என்னை சூழ்ந்துள்ளதால் அமைதியுடன் வழி நடக்கிறேன். தெய்வீக ஈர்ப்பு, அளப்பரிய ஆர்வம், சுடர்விடும் உடல் நலம் யாவும் என்னிலிருந்து வெளிப்பட்டு பரவுகின்றன.

Aucun commentaire:

Enregistrer un commentaire