முகப்பு

mercredi 30 mai 2012

ஏனோ பிடித்திருக்கின்றது எனக்கு


 
 
தினமும் கேட்கும் இசை பிடிக்கவில்லை
கூவும் குயிலின் ஓசையும் பிடிக்கவில்லை
ப்ச்சை வயல்களும் பிடிக்கவில்லை
யுத்தம் புரியும் இந்நாடும் பிடிக்கவில்லை
விரும்பி எழுதும் கவிதை பிடிக்கவில்லை
சிரிக்கும் குழந்தைமுகம் காண பிடிக்கவில்லை
... அழகான என் காதலும் பிடிக்கவில்லை
கலகலப்பான நட்பும் பிடிக்கவில்லை
விளையாட்டு பொம்மை பிடிக்கவில்லை
வளைந்து ஓடும் நதியும் பிடிக்கவில்லை
இரவில்வரும் நிலவும் பிடிக்கவில்லை
சுட்டெரிக்கும் சூரியனும் பிடிக்கவில்லை
சினிமாவும் பிடிக்கவில்லை
தனிமையும் பிடிக்கவில்லை
இனிக்கும் "சொக்ளேட்" பிடிக்கவில்லை
சிணுங்கும் "செல்போன்" பிடிக்கவில்லை
வாசம் தரும் பூக்கள் பிடிக்கவில்லை
வீசிப் போகும் தென்றலும் பிடிக்கவில்லை
சுவாசிக்கவும் பிடிக்கவில்லை
நேசிக்கும் உறவுகளையும் பிடிக்கவில்லை
என்னை விரும்பும் உன்னை பிடிக்கவில்லை
உனக்கு பிடித்த என்னையும் பிடிக்கவில்லை
நாம் ரசித்த எதுவுமே பிடிக்கவில்லை
உனக்கு பிடிக்காத மரணத்தை மட்டும்
ஏனோ பிடித்திருக்கின்றது எனக்கு.


Aucun commentaire:

Enregistrer un commentaire