முகப்பு

vendredi 2 mars 2012

உழைத்து வாழ்வதால்


நிலா
தேய்வதால்
வானம் வருத்தப்படுவதில்லை…
பூக்கள்
உதிர்வதால் செடிகள்
புலம்புவதுமில்லை…
மழையில் நனைவதால்
மரங்கள் குடை
பிடிப்பதுவுமில்லை…
மதங்கள்
வேறுபடுவதால் மனிதம்
மாறுவதுமில்லை…
நம்பிக்கை தொடர்வதால்
தோல்வி வெற்றியின்
வேரறுப்பதுமில்லை..
உழைத்து வாழ்வதால்
வாழ்வில் வறுமை
வீசுவதுவுமில்லை..!


Aucun commentaire:

Enregistrer un commentaire