முகப்பு

vendredi 18 février 2011

காலப் புயல்!


உயிரிலே பின்னி

உறவில் கலந்து

பயிர்போல வாழ்ந்தோமே

தயிர்திரிந்து

கெட்டதுபோல் நம்

காதல் கெட்டழிந்து

மண்மீது

சட்டென

மாண்டதே சாய்ந்து!

எரிந்த மெழுகாய்

இதயம் உருகிப்

பிரிவை நினைத்துப் பிதற்ற

கரித்துண்டாய்

ஆனதடி நெஞ்சு;

அதிலே நெருப்பிட்டுப்

போனதடி காலப் புயல்!

Aucun commentaire:

Enregistrer un commentaire