முகப்பு

samedi 19 mars 2016

சிந்திக்க


    சிந்திக்க....
    நீதிபதி:
    உங்கள் கடையில் இரட்டை டம்ளர் முறை உள்ளதா?
    ...
    கடைக்காரர்:
    நிறைய டம்ளர் இருக்குங்கய்யா.
    நீதிபதி:
    அதில்லை தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு என தனியாகவும் ஆதிக்கசக்தி மக்களுக்கும் என தனி தனி டம்ளர்ல கொடுப்பீங்களா?
    கடைகாரர்:
    ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் வந்தா தனித்தனியா டம்ளர்லாதான் கொடுப்பேங்க.
    நீதிபதி:
    அது தீண்டாமை சட்டப்படி குற்றம்னு தெரியாதா?
    கடைக்காரர்:
    அய்யா ஒரே டம்ளரில் ரண்டு பேருக்கும் கொடுத்தா எப்படிங்கையா குடிப்பாங்க?
    நீதிபதி:
    வேண்டுமென்றே குழப்புகிறீர்கள்.
    தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி டம்ளர் வச்சிருக்கீரீர்களா?
    கடைகாரர்:
    அய்யா நான் சொந்தமா முதல் போட்டு கடைவச்சிருக்கேன்.என் கடையில் வியாபாரம் எப்படி பண்ணுவது என்பது என் விருப்பம்.நான் வித்தியாசமா ரண்டு டம்ளர்ல கொடுக்கரது அவங்களுக்கு அவமானம்னா வேறகடைக்கு போலாமே, என்னை இப்படித்தான் கொடுக்கனும்னு சொல்ல இவங்க யாரு?
    நீதிபதி:
    குற்றத்தை ஒப்புக்கொண்டதால் தண்டனை விதிக்கிறேன்.
    கடைக்காரர்:
    சரிங்கையா,
    எனக்கு அவசரமா பாத்ரூம் போகனும் உங்க பாத் ரூம்க்கு போகட்டுங்களா?
    நீதிபதி:
    அங்கெல்லாம் போகக்கூடாது.
    public னு தனியா இருக்கு அங்கதான் போகனும்.
    கடைக்காரர்:
    இங்க மட்டும் எதுக்கு ரண்டு பாத் ரூம்.
    அப்ப நாங்க தீண்ட தகாதவங்களா?
    போலீஸ்காரய்யா நீதிபதிமேல கேஸ் போடுங்க.

Aucun commentaire:

Enregistrer un commentaire