முகப்பு

samedi 19 mars 2016

யார்..கடவுளா?



    "உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்தது யார்..கடவுளா?"
    வகுப்பு மாணவர்களைப் பார்த்து ஆசிரியர் கேட்ட கேள்வி இது! வகுப்பறையே நிசப்தத்தில் மூழ்கியிருக்க.. ஒரு மாணவன் துணிச்சலுடன் எழுந்து நின்று “ஆமாம்” என பதில் அளிக்கிறான்.
    ஆசிரியர்: அப்படியெனில், சாத்தானை படைத்ததும் கடவுள் தானா? இப்போது அந்த மாணவன் அமைதி காக்கிறான். சிறிது நேரம் கழித்து ஆசிரியரை உற்றுப் பார்த்து "நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா?" என்கிறான். ஆசிரியரும் அனுமதி அளிக்கிறார்.
    மாணவன்: 'குளிர்நிலை' என்று ஏதேனும் இரு...க்கிறதா?
    ஆசிரியர்: ஆமாம் இருக்கிறது. குளிரை நீ எப்போதுமே உணர்ந்தது இல்லையா?
    மாணவன்: மன்னிக்கவும்...தங்கள் பதில் தவறு. குளிர் என்ற ஒன்று இல்லவே இல்லை. அது வெப்பத்தின் பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் நாம் குளிர் என்கிறோம். அது சரி.. இருள் என்ற ஒன்று இருக்கிறதா?
    ஆசிரியர்: ஆம், இருக்கிறது.
    மாணவன்: மன்னிக்கவும்... மீண்டும் தவறான பதிலினையே தந்துள்ளீர்கள். இருள் என்ற ஒன்றே கிடையாது. ஒளியின் பற்றாக்குறையைதான் நாம் இருள் என்றழைக்கிறோம். உண்மையில் ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம் அதிகம் படிக்கிறோம். குளிரையும் இருளையும் அல்ல. அதே போல், சாத்தான் என்று இவ்வுலகில் எதுவுமில்லை. உண்மையில் அது கடவுளின் மீது நாம் செலுத்தும் அன்பின் குறைபாடு, அவர் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையின் பாற்றாக்குறை என்று ஆணித்தரமாக பதிலளித்தான்.

Aucun commentaire:

Enregistrer un commentaire