முகப்பு

samedi 19 mars 2016

குதிரை



    ஒருத்தர் மத்தியான வேளையில் மிக வேகமாக நடுந்து போய் கொண்டிருந்தார். அதற்கு காரணம் அவன் காலில செருப்பு இல்லை. வெயில் வேறு மிக அதிகம். அதனால அவனால கால் சூடு தாங்க முடியலை. எனவே நடந்தும் ஓடியுமாய் சென்றான்.
    அந்த வழியாக ஒருவன் குதிரையில் சென்று கொண்டிருந்தான். உடனே அந்த குதிரைக்கரனிடம்,
    ஐயா!! நீங்களோ குதிரையில் போறிங்க. நான் வெறும் காலோடு நடந்து செல்கிறேன்.
    ...
    ஆகையால் எனக்கு உங்க செருப்பை கொடுத்து உதவலாமே என்றான்.
    அந்த குதிரைக்கரனுக்கு இது நியாயமானதாக தோன்றியது. எனவே செருப்பை கழட்டி அவனிடம் கொடுத்துவிட்டு புறப்பட தயாரானான்.
    மீண்டும் அவன் குதிரைகக்ரனிடம் ஐயா !! செருப்பு கொடுத்ததுக்கு நன்றி. ஆனாலும் நீங்க குதிரையில் போறதால சீக்கிரமே போக வேண்டிய இடத்தக்கு போய் சேர்ந்துவிடுவீர்கள் ஆகையால் எனக்கு அந்த குடையையும் கொடுத்து உதவலாமே என்றான்..
    அந்த குதிரைக்கரனுக்கு இதுவும் நியாயமானதாக தோன்றியது. எனவே குடையையும் அவனிடம் கொடுத்துவிட்டு புறப்பட தயாரானான்.
    மீண்டும் அவன் குதிரைகக்ரனிடம் ஐயா !! செருப்பு, குடைகொடுத்ததுக்கு நன்றி. அந்த குதிரையும் எனக்கு கொடுக்க முடிமா? என்றான்.
    உடனே அந்த குதிரைக்கரனுக்கு கோபம் வந்து விட்டது. குதிரையை விட்டு கீழே இறங்கி அவனை சட்டையை கொண்டு அடி அடி என அடிதான். பிறகு கோபத்துடன் குதிரையில் ஏறி புறப்பட தயாரானான். அப்பொழுது அவன் சிரித்து கொடிருப்பதை பார்த்து ஆச்சர்யமாணன்.
    அவனை நோக்கி இவ்வளவு அடி வாங்கியும் இப்படி சிரிக்கிறாயே? என்ன காரணம் என்றான் அதட்டலுடன்.
    அதற்க்கு அவன் ஐயா நீங்க என்னை அடித்ததால் என்னுடைய பேராசைக்கும் ஒரு எல்லை உண்டுஎன்பதை புரிய வைத்துள்ளீர்!! இல்லை என்றால் என் காலம் முழுதும் நான் ஒருவேளை அந்த குதிரையும் கேட்ட கிடைச்சிருக்குமோன்னு நினச்சிட்டே இருந்திருப்பேன். ஆனா இப்போஎனக்கு தெளிவா நீங்க புரிய வைசிட்டுங்க!! ஆசைக்கும் அளவு உண்டு என!! இனிமேல் நான் நிம்மதியா நடந்தே என் ஊருக்கு போயிருவேன் என்றான்.. குதிரைக்காரனும் நானும் கோபத்தால் உங்களை அடித்து விட்டேன். மன்னித்து கொள்ளுங்கள் என்று கூறி வீட்டு புறப்பட்டு சென்றான்.

Aucun commentaire:

Enregistrer un commentaire