முகப்பு

mardi 5 avril 2011

ஒரு நாள் உன் தாய் நாட்டைக் காண்பாய் !




 அவனுக்கு முன்னால் கரையற்ற கடல்..
நம்பி வந்தவர்கள் நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்தனர்..
வெளுத்து களைத்த மாலுமிகள் பிரேதம் போல ஆனார்கள்..
பயங்கரமான அந்தக் கடலில் இருந்து கடவுளும் விலகிவிட்டார்..
நம்பிக்கை போனால் நாம் என்ன செய்வது ?
பயணம் செய் ! பயணம் செய் ! பயணம் செய் !
அந்த இரவோ இரவுகளில் எல்லாம் இருண்டது !
பிறகு ஓர் ஒளி !
வெளிச்சம் ! வெளிச்சம் ! வெளிச்சம் !
கொலம்பஸ் அன்று உலகை வென்றான்
உலகுக்கு ஒரு பாடம் சொன்னான்..
பயணம் செல் தொடர்ந்து பயணம் செல்..
ஈழத் தமிழா நீயும் கலங்கிவிடாதே
பயணம் செல்..! தொடர்ந்து பயணம் செல்..!
நீயும் கொலம்பஸ்போல சுதந்திர மாலையுடன்
ஒரு நாள் உன் தாய் நாட்டைக் காண்பாய் !

Aucun commentaire:

Enregistrer un commentaire