முகப்பு

jeudi 17 novembre 2011

அவன் பின்னால்



தொலைத்தலும் இழத்தலும்

என் வாழ்வின் வழமையாய்...

எல்லாம் இருந்தும்

எதுவுமே இல்லாதவளாய்...

வெறுமையாய்

என்னையே வெறுத்து

நின்ற வேளை

ஒளி தந்து

விழிதந்தவனாய் ஒருவன்.

இருளுக்குத்

தத்துவம் சொல்லி

வெளிச்சத்தை

அறிமுகம் செய்தவன் அவன்.

அதனாலேயே

என் பயணம்

இன்னும் தொடர்கிறது

அவன் பின்னால்.

Aucun commentaire:

Enregistrer un commentaire