முகப்பு

samedi 19 novembre 2011

அன்பு காணிக்கை


உந்தன் மெளனத்தில்.

எந்தன் வார்த்தை கலந்திருக்கும்...

உந்தன் இதயத்தில்.

என் நினைவுகள் நிறைந்திருக்கும்...

உந்தன் உறவில்.

எந்தன் பாசம் நிறைந்திருக்கும்...

உந்தன் உயிரில்.

என் நேசம் மலர்ந்திருக்கும்...

என்றும் உந்தன் கனவுகளை

என் நெஞ்சம் சுமந்திருக்கும்...

உந்தன் அன்புக்காக..!!

என் இனிய அன்பு காணிக்கை

. ராஜி.

Aucun commentaire:

Enregistrer un commentaire